Thursday, March 18, 2021

திருக்குறள் - பரிமேலழகர் உரைப்பாயிரம் - வர்ணமும், நிலையும் - பாகம் 1

திருக்குறள் - பரிமேலழகர் உரைப்பாயிரம் - வர்ணமும், நிலையும்  -  பாகம் 1 


அவற்றுள் ஒழுக்கமாவது அந்தணர் முதலிய வருணத்தார் தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரமசரிய முதலிய நிலைகளினின்று அவ்வவற்றிற்கு ஓதிய அறங்களின் வழுவாது ஒழுகுதல்.


இதில் "அந்தணர் முதலிய வர்ணத்தார்" என்றும் "பிரமச்சரிய முதலிய நிலகைளில் இருந்தும்" என்று பரிமேலழகர் எழுதுகிறார். 


அவர் முதலிய என்று கூறியதால், வேறு பலவும் இருக்கின்றன என்று நமக்குப் புலனாகிறது. அவை என்னென்ன என்று சிந்திப்போம். 


ஒரு சமுதயாத்தில் பல தரப்பட்ட மக்கள் இருக்கிறார்கள். ஆண், பெண், குழந்தைகள், பெரியவர்கள், படித்தவர்கள், படிக்காதவர்கள், அரசியல்வாதிகள், மாணவர்கள், திருமணம் ஆனவர்கள், ஆகாதவர்கள், உடல் ஊனமுற்றோர் என்று பலவிதமான மக்கள் இருக்கிறார்கள். 


ஒரு சமுதாயம் சீராக செயல் பட வேண்டும் என்றால் அதற்கு சில சட்ட திட்டங்கள் வேண்டும், ஒழுங்கு முறை வேண்டும். யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று விட்டு விட்டால், அது நாடாக இருக்காது. காடாகி விடும். 


சட்டம் இயற்றுவது என்றால், மக்களை தொகுக்க வேண்டும். ஒன்று பட்ட ஒரு குழுவுக்கு ஒரு    சட்டம் சொல்லலாம். எல்லாருக்கும் ஒரு சட்டம் என்று போட முடியாது. 


ஏன் முடியாது? அப்படி போட்டால் என்ன? எதற்காக மக்களை பிரிக்க வேண்டும் என்ற கேள்வி எழும். 


சரி, சில சட்டங்களை அப்படி போட்டுப் பார்ப்போம்.


https://interestingtamilpoems.blogspot.com/2021/03/1_18.html

(click the above link to read further)


"எல்லோரும் உழைத்து சாப்பிட வேண்டும் " என்று ஒரு சட்டம் போடுவோம். 

அது சரிதானே?


அப்படி என்றால் சிறு பிள்ளைகள் என்ன செய்யும்? வீட்டைப் பார்த்துக் கொள்ளும் பெண்கள் என்ன செய்வார்கள், வயதானவர்கள் என்ன செய்வார்கள்? அவர்களை விலக்க வேண்டும். 


சரி, எத்தனை பேரை விலக்குவது? அப்படி விலக்குவது என்று வந்து விட்டால், அவர்களை ஒரு குழுவாக செய்ய வேண்டும். எனவே, இந்தச் சட்டம் எல்லோருக்கும் பொருந்தாது, ஒரு சிலருக்கு மட்டும் தான் பொருந்தும். 


சரி, இன்னொரு சட்டம் போடுவோம். 


"எல்லோரும் திருமணம் செய்து கொண்டு தான் வாழ வேண்டும்"


சரி. நல்ல சட்டம் தான். நான்கு வயது பையன் எனக்கும் திருமணம் செய்து வை என்று கேட்டால் என்ன செய்வது?


"கொலை செய்வதும், அதை தூண்டுவதும் குற்றம்" என்று ஒரு சட்டம் போட்டால்,  நீதிபதிகள் தூக்கு தண்டனை விதிக்கிறார்கள். கொலை செய்யச் சொல்லி ஆணை இடுகிறார்கள். அவர்களை என்ன செய்வது? மருத்துவர் சிகிச்சை பலன் இன்றி நோயாளி இறந்து போகிறான். மருத்துவர் நோயாளியை கொன்று விட்டார் என்று சொல்ல முடியுமா? 


எனவே, விதி செய்வது என்றால் ஒரு குறிப்பிட்ட குழுவுக்கு, தொகுதிக்குத் தான் விதி செய்ய முடியும். 


எப்படி இந்த சமுதயாத்தை பிரிப்பது? எப்படி பிரித்தால், சரியான படி சட்ட திட்டங்களை வகுக்க முடியும் என்று ஆராய்ந்து உண்டாகியது தான் வர்ணமும், நிலையும் . இதை வட மொழியில் வர்ணாசிரம தர்மம் என்று கூறுவார்கள். 


அது என்ன தர்மம்?



1 comment:

  1. மேலும் தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன். நன்றி

    ReplyDelete