Tuesday, March 9, 2021

இராமாயணம் - விடத்தை அமுது என வேண்டுவான்

 இராமாயணம் - விடத்தை அமுது என வேண்டுவான் 


மனதில் தோன்றும் உணர்ச்சிகளை நம்மால் தயக்கம் இல்லாமல் வெளிப் படுத்த முடிகிறதா? மனதுக்குள்ளேயே வைத்து பூட்டி வைத்துக் கொள்கிறோம். 


அன்பை, காதலை, பாசத்தை வார்த்தைகளால் நாம் அதிகம் வெளிப் படுத்துவது இல்லை என்றே நினைக்கிறேன். 


கோபத்தை, எரிச்சலை, எளிதாக காட்டி விடுகிறோம். 


எத்தனை முறை மனைவியை/கணவனை புகழ்ந்து இருப்போம், உன்னை நேசிக்கிறேன் என்று சொல்லி இருப்போம்? "அதெல்லாம் சொல்லித்தான் தெரியணுமாக்கும்" என்று சொல்லாமலேயே விட்டு விடுகிறோம்.


பயிற்சி இல்லை. நம் பெற்றோர் அப்படி பேசி நாம் கேட்டது இல்லை. நாமும் அப்படி பேசிப் பழகவில்லை. 


சினிமாவில் பார்க்கும் போது உருகிப் போகிறோம். 


நம் இலக்கியங்கள் நமக்கு அதைச் சொல்லித் தருகின்றன. எப்படி மனதில் தோன்றும் எண்ணங்களை வார்த்தைகளாக வெளிப்படுத்துவது என்று. 


சீதை அசோகவனத்தில் இருக்கிறாள். 


இராவணன் அங்கே வருகிறான். தன் காதலை உருகி உருகி வெளிப் படுத்துகிறான்.


பாடல் 


அவ்விடத்து அருகு எய்தி அரக்கன் தான்

‘எவ்விடத்து எனக்கு இன் அருள் ஈவது

நொவ் விடக் குயிலே! நுவல்க ‘என்றனன்

வெவ் விடத்தை அமுது என வேண்டுவான்.


பொருள்  


https://interestingtamilpoems.blogspot.com/2021/03/blog-post.html

pl click the above link to continue reading


அவ்விடத்து = அசோகவனத்துக்கு 

அருகு எய்தி = அருகில் வந்து 

அரக்கன் தான் = இராவணன் 

‘எவ்விடத்து = எந்த இடத்தில் 

எனக்கு = எனக்கு 

இன் அருள் ஈவது = உன் அருளைத் தருவது 

நொவ் விடக் குயிலே!  = வருந்தும் சிறிய இடையை கொண்ட குயிலே 

 நுவல்க ‘என்றனன் = சொல் என்றான் 

வெவ் விடத்தை  = வெம்மையான விஷத்தை 

அமுது என வேண்டுவான். = அமுதம் என்று நினைத்து அதை விரும்பும் இராவணன் 


மேலும் சில பாடல்கள் இருக்கின்றன. 


இராவணன் ஒரு அரக்கன். அவன் மாற்றான் மனைவியை வஞ்சகமாக கவர்ந்து வந்து விட்டான் என்பதெல்லாம் ஒரு பக்கம் தள்ளி வைத்து விடுங்கள். 


அவன் மனதில் தோன்றிய உணர்சிகளை எவ்வளவு அழகாக வார்த்தைகளில் வடிக்கிறான் என்று மட்டும் பாருங்கள். 


பேசப் படிப்போம். 

1 comment:

  1. பேசப் பழகிக் கொடுக்க வேண்டும்

    ReplyDelete