Friday, April 30, 2021

 நல்வழி - தீயவற்றை விடுத்து நல்லவற்றைச் செய்க 


நல்வழி என்பது ஔவையார் அருளிச் செய்த நூல். 


சில சமயம் வாழ்கை மிகவும் சிக்கலாகத் தோன்றும். என்ன இது வாழ்கை, ஏன் இப்படி எல்லாம் நிகழ்கிறது, நாம் ஒன்று நினைக்க வேறு ஒன்று நடக்கிறதே,இதுக்கெல்லாம் காரணம் என்ன, என்னதான் செய்வது என்று ஒரு வெறுப்பும் சலிப்பும் உண்டாகலாம். 



"இங்க வா, என் கிட்ட உக்காரு...உனக்கு என்ன குழப்பம், நான் சரி செய்து தருகிறேன்" ஆறுதலாக பேச யாராவது கிடைக்க மாட்டார்களா என்று ஏங்குவோம். 



அந்த ஏக்கத்தை போக்குவது இந்த நூல். சிக்கலான வாழ்கையை எளிமை படுத்தி காட்டுவது இந்த நூல். 



மிகப் பெரிய உண்மைகளை மிக மிக எளிய முறையில் அப்படி போகிற போக்கில் சொல்லிவிட்டு போகிற நூல். "அட இது இவ்வளவுதானா...இதுக்குத்தானா நான் இவ்வளவு குழம்பினேன் " என்று நம் குழப்பம் தீர்க்கும் நூல். 



அதில் இருந்து சில பாடல்கள். 



நமக்கு நாம் எதிர் பார்க்காத நேரத்தில் துன்பம் வருகிறது. எல்லாம் சரியாகச் செய்தாலும் எங்கோ தவறு நிகழ்ந்து விடுகிறது. என்ன செய்வது என்று குழம்பி என்ன செய்யலாம் என்று நூல்களைப் புரட்டினால் ஒவ்வொரு நூலும் ஒன்று சொல்கிறது. எதைப் படிப்பது, எதை விடுவது, எதை கடைப்பிடிப்பது என்று குழப்பம் இன்னும் கூடுகிறது. 



ஔவை மிக எளிதாக்கித் தருகிறாள் நமக்கு. 



"நாம் செய்யும் நன்மை தீமைகள் , புண்ணியமாகவும், பாவமாகவும் மாறி அடுத்த பிறவியில் நமக்கு இன்ப துன்பங்களாக வந்து சேரும். 


இப்போது துன்பம் வருகிறதா, அது முன் செய்த பாவம். 



இப்போது இன்பம் வருகிறதா, அது முன் செய்த புண்ணியம். 



இனி வரும் நாட்களில் இன்பம் வேண்டுமா, புண்ணியம் செயுங்கள. 


பாவம் செய்தால், இனி வரும் நாட்களில் துன்பம் வரும். 


உலகில் உள்ள அத்தனை சமய நூல்களும் சொல்வது இந்த ஒரு உண்மையைத்தான் "தீமையை விட்டு நல்லதை செய்யுங்கள்". அவ்வளவுதான். 


பாடல் 



புண்ணியம்ஆம் பாவம்போம் போனநாட் செய்தஅவை

மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள்-எண்ணுங்கால்

ஈதொழிய வேறில்லை எச்சமயத் தோர்சொல்லுந்

தீதொழிய நன்மை செயல்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/04/blog-post_49.html


please click the above link to continue reading



புண்ணியம்ஆம் = புண்ணியம் ஆகும் 


பாவம்போம் = பாவம் போகும் 


போனநாட் செய்தஅவை = முன்பு செய்த அவை 


மண்ணில் பிறந்தார்க்கு = மண்ணில் பிறந்தவர்களுக்கு 


வைத்தபொருள் = கிடைத்தவை எல்லாம் 


எண்ணுங்கால் = யோசித்துப் பார்த்தால் 


ஈதொழிய வேறில்லை = இதைத் தவிர வேறு இல்லை 


எச்சமயத் தோர் = எந்த சமயத்தை சேர்ந்தவர்கள் ஆனாலும் 


சொல்லுந் = சொல்லுவது 


தீதொழிய = தீய செயல்களை விடுத்து 


நன்மை செயல். = நன்மை தரும் செயல்களை செய்வது ஒன்றைத்தான் 




No comments:

Post a Comment