Saturday, March 5, 2022

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - அழிவினை எய்துவான் அறிவு நீங்கினான்

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - அழிவினை எய்துவான் அறிவு நீங்கினான் 


சீதையை விட்டுவிடு என்று வீடணன் எவ்வளவோ சொல்லிப் பார்த்தான். இராவணன் கேட்பதாக இல்லை. சீதை மேல் கொண்ட காமம் ஒரு புறம். தம்பி இப்படிச் சொல்கிறானே என்று அவன் மேல் கோபம் மறுபுறம். காமமும், கோபமும் சேர்ந்தால் கேட்க வேண்டுமா அழிவுக்கு. அறிவு நீங்கி விடும்.


தனக்கு அறிவுரை சொன்ன வீடணன் மேல் கோபம் கொண்டு இராவணன் சொல்கிறான் 


"உன்னை கொன்றால் எனக்கு பழி வரும் என்பதால் உன்னைக் கொல்லாமல் விடுகிறேன். எனக்கு அறிவுரை சொல்வதை நிறுத்திக்கொள். என் கண் முன் நில்லாதே. ஓடி விடு" 


என்று அவனை விரட்டுகிறான் இராவணன். .


பாடல் 



‘பழியினை உணர்ந்து யான் படுக்கிலேன் உனை;

ஒழி சில புகலுதல் : ஒல்லை நீங்குதி;

விழி எதிர் நிற்றியேல் விளிதி “ என்றனன்

அழிவினை எய்துவான் அறிவு நீங்கினான்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post_5.html


((please click the above link to continue reading))


‘பழியினை = என் மேல் பழி வரும் என்று 


உணர்ந்து = உணர்ந்து 


யான் படுக்கிலேன் உனை; = உன்னை நான் கொல்லாமல் விடுகிறேன் 


ஒழி = விட்டு விடு 


சில புகலுதல் = இந்த மாதிரி சில்லறைத் தனமாக எனக்கு அறிவுரை கூறுவதை 


ஒல்லை நீங்குதி; = உடனடியாக ஓடிப் போய் விடு 


விழி எதிர் நிற்றியேல் = என் கண் முன் நின்றால் 


விளிதி “ என்றனன் = இறந்து போவாய் என்றான் 


காமம் மிகுந்தால் அறிவு மங்கும். யார் சொன்னாலும் மண்டையில் ஏறாது. 


கோபம் மிகுந்தாலும், அறிவு மங்கும். கோபம் கண்ணை மறைக்கும். 


தனக்குள்ள அறிவு மங்குவது மட்டும் அல்ல, பிறர் நல்லவை சொன்னாலும் அறிவு அதைப் பற்றாது. 


அது ஒரு புறம் இருக்கட்டும்.


நம்மிடம் யாராவது கோபித்து பேசினால் நமக்கு எப்படி இருக்கும்? நமக்கு பதிலுக்கு கோபம் வருமா வராதா? அது யாராகவும் இருந்துவிட்டு போகட்டும்....பெற்றோர், ஆசிரியர், கணவன், மனைவி, நட்பு, சுற்றம் என்று யார் நம் மேல் கோபம் கொண்டு பேசினாலும், பதிலுக்கு கோபப் படுவது இயற்கைதானே. 


நாம் வார்த்தைகளை அள்ளி வீசாவிட்டாலும், உள்ளுக்குள் கோபம் இருக்கும் தானே. 


இராவணன் இவ்வளவு சொன்ன பின், வீடணன் என்ன செய்தான்? எப்படிச் செய்தான்?


மேலும், சிந்திப்போம். 



No comments:

Post a Comment