Wednesday, May 18, 2022

கம்ப இராமாயணம் - அருள் தூதன் - பாகம் 1

கம்ப இராமாயணம் - அருள் தூதன் - பாகம் 1 



பேசுவது என்பது ஒரு கலை. 


எப்படிப் பேச வேண்டும், என்ன பேச வேண்டும் என்று தெரிந்து பேச வேண்டும். அது மட்டும் அல்ல, கேட்பவர்கள் எதை எதிர்பார்கிரார்களோ அதை அறிந்து பேச வேண்டும். 


கேட்ட கேள்வி ஒன்றாக இருக்கும், சொல்லும் பதில் வேறொன்றாக இருக்கும். 


என் அனுபவத்தில் சில கூறுகின்றேன்....


நேர் முகத் தேர்வில் (interview) வேலைக்கு மனு செய்திருக்கும் நபரைப் பார்த்து "உன்னைப் பற்றி கொஞ்சம் சொல்லேன்" என்போம். 


பெரும்பாலன் சமயங்களில் வரும் பதில் "என் பெயர் இது, நான் இன்னது படித்து இருக்கிறேன், எனக்கு திருமணம் ஆகி விட்டது/ஆக வில்லை, என் மனைவி இன்ன வேலை செய்கிறாள், என் சொந்த ஊர் இது"


என்று கூறுவார்கள். 


அவர் சொல்லியது அனைத்தும் உண்மை. அதில் பிழை இல்லை. ஆனால், கேள்வி கேட்டவர் எதற்கு கேட்டார் என்று புரிந்து கொள்ள வேண்டும். 


இருக்கிற வேலைக்கு இவர் தகுதியானவரா என்று அ அறியத்தான் கேள்வி கேட்டகப் பட்டது. அதற்கு தகுந்த மாதிரி பதில் சொல்ல வேண்டும். 


அதே போல், "இன்று எப்ப வீட்டுக்கு வருவீங்க" என்று மனைவி கேட்டால் "இன்னைக்கு கொஞ்சம் வேலை அதிகம் இருக்கிறது...முடிக்க நேரம் ஆகும்..." என்று சொல்லக் கூடாது. 


அவள் எதற்கு கேட்கிறாள்? ஏதோ வெளியே போக வேண்டும். அதற்குத் தானே கேட்கிறாள். அதற்கு தக்க பதில் சொல்ல வேண்டும். 


எப்ப வருவாய் என்று கேட்டால், கேட்பவர் ஒரு நேரத்தை பதிலாக எதிர் பார்க்கிறார் என்று புரிந்து கொள்ள வேண்டும். 


என்று வருவாய் என்று கேட்டால் கேட்பவர் ஒரு தேதியை பதிலாக் எதிர்பார்க்கிறார் என்று புரிந்து கொள்ள வேண்டும். 


"இன்னிக்கு இரசம் எப்படி இருக்கு" என்று மனைவி கேட்டால்,அதில் ஏதோ புதிதாக செய்து இருக்கிறாள் என்று அர்த்தம், அல்லது ஒரு பாராட்டை எதிர்பார்க்கிறாள் என்று அர்த்தம், அல்லது வேறு ஏதோ பேச தயங்குகிறாள் என்று அர்த்தம்.  


"நல்லா இருக்கு" என்று மொட்டையாக பதில் சொல்லக் கூடாது.  கேட்பவர் மனம் அறிந்து பதில் சொல்லப் பழக வேண்டும். 


கம்பன் அப்படி ஒரு காட்சியைக் காட்டுகிறான். 


அசோகவனத்தில் சீதை சிறை இருக்கிறாள். இராவணன் அடிக்கடி வந்து துன்பம் செய்கிறான். மனம் வெறுத்து தற்கொலைக்கு முயல்கிறாள். அந்த நேரத்தில் அனுமன் அங்கே வந்து சேருகிறான். 


அவர்களுக்குள் நடக்கும் பேச்சு, பேசுக் கலையின் உச்சம் தொட்டு காட்டிகிறான் கம்பன். 


அணு அணுவாக இரசிக்க வேண்டிய இடம். 


உங்கள மனதில் கற்பனை பண்ணிக் கொள்ளுங்கள்....

அசோக வனம். சுற்றிலும் அரக்கியர். குண்டா, கருப்பா, பயங்கர ஆயுதங்களுடன், நடுவில் அழகே உருவான சீதை, இடை இடை தடபுடலாக இராவணன் வந்து மிரட்டி விட்டுப் போகும் காட்சி...அழுது, வெறுத்து, தற்கொலை ஒன்றே தீர்வு என்று பிராட்டி முடிவு செய்து, அங்குள்ள ஒரு கொடியை கழுத்தில் சுருக்கிட்டு கொள்ள நினைக்கும் நேரம்...


இதை மனதில் கற்பனை செய்து கொள்ளுங்கள். 


"அனுமன் சீதை தற்கொலைக்கு முயல்வதை பார்க்கிறான். அதிர்ச்சி அடைகிறான். ஓடிப் போய் சீதையின் கையை பிடித்து தடுத்து நிறுத்தலாம் என்றால் அவனுக்கு கூச்சமாக இருக்கிறது. எப்படி ஒரு பெண்ணைத் தொடுவது என்று. "உலக நாயகன் அருளிய தூதன்" நான் என்று அவள் முன் சென்று கை கூப்பி நிற்கிறான். 


பாடல் 


கண்டனன்அனுமனும்; கருத்தும் எண்ணினான்;

கொண்டனன்துணுக்கம்; மெய் தீண்டக் கூசுவான்,

'அண்டர் நாயகன்அருள் தூதன் யான்' எனா,

தொண்டை வாய்மயிலினைத் தொழுது,


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/1.html


(pl click the above link to continue reading)




கண்டனன் = கண்டான் 


அனுமனும் = அனுமன் 


கருத்தும் எண்ணினான் = மனதில் நினைத்தான் 


கொண்டனன் துணுக்கம் = திடுக்கிட்டான் (அவள் தற்கொலை செய்து கொல்லப் போவதைப் பார்த்து) 


மெய் தீண்டக் கூசுவான், = அவள் கையை பற்றி தடுத்து நிறுத்தக் கூச்சப் பட்டான் (முன்ன பின்ன தெரியாத ஒரு பெண்ணை எப்படி தொடுவது என்று) 


'அண்டர் நாயகன் =உலகுக்கு எல்லாம் நாயகன் 


அருள் தூதன் யான்' = அருளிய தூதன் நான் 


எனா, = என்று 


தொண்டை வாய்  = கோவைப் பழம் போன்ற வாயை உடைய 


மயிலினைத் தொழுது, = மயில் போன்ற சாயலை உடைய சீதையை தொழுது 



"சீதை, கொஞ்சம் பொறு...நான் சொல்வதைக் கேள்" என்று ஆரம்பித்து இருக்கலாம். 


அனுமன் அப்படிச் செய்யவில்லை. எதைச் சொன்னால் அவள் மனம் சாந்தி அடையும், தான் சொல்வதை கேட்ட்பாள் என்று அறிந்து சொல்கிறான் "உலக நாயகனின் தூதன்" என்று. .


இராமனிடம் இருந்து ஏதாவது செய்தி வருமா என்று தானே அவள் தவம் கிடக்கிறாள். அதை அறிந்து அங்கிருந்து ஆரம்பிக்கிறான் அனுமன். 


தொடர்வோம்....



No comments:

Post a Comment