Tuesday, November 29, 2022

திருக்குறள் - விறல்ஈனும்

         

 திருக்குறள் - விறல்ஈனும்


நமக்கு ஒரு பொருளோ அல்லது உதவியோ மற்றொருவரிடம் இருந்து வேண்டி இருந்தால், அவர் மனம் கோணாதபடி நடந்து கொள்ள வேண்டும். அவர் சொல்வதைக் கேட்க வேண்டும். அவருக்கு பணிந்து போக வேண்டும். அவர் முட்டாள்தனமாக ஏதாவது சொன்னால் கூட, சரி சரி என்று போக வேண்டும். மாறாக, "இது சரியான முட்டாள்தனம்" என்று சொல்ல முடியாது. எல்லாவற்றையும் உள்ளுக்குள் வைத்து பூட்டி வைத்து விட வேண்டும்.


நேரடியாக ஒரு உதவி வேண்டி நின்றாலே இந்தக் கதி. அவருக்குத் தெரியாமல் அவர் பொருளை கவர்ந்து கொள்ளலாம் என்று நினைத்தால் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டி வரும்?



மாறாக, அவரிடம் இருந்து நமக்கு ஒன்றும் வேண்டாம் என்றால், நாம், நம் மனதில் பட்டதை சொல்லலாம், செய்யலாம். தைரியமாக நெஞ்சு நிமிர்த்தி நடக்கலாம். 


"யாமார்க்கும் குடி அல்லோம்" என்று நாவுக்கரசர் முழங்கியது மாதிரி முழங்கலாம்.


அதைத்தான் இன்றைய குறளில் கூறுகிறார். 



"இறுதியில் வரப் போகும்  துன்பத்தை அறியாமல், பிறன் பொருளை விரும்பினால் அது துன்பத்தைத் தரும். மாறாக, , வெற்றியை, பெருமையைத் தரும் அப்படி வேண்டாம் என்று சொல்லும் பெருமை"



பாடல் 


இறல்ஈனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு


பொருள் 




(please click the above link to continue reading)


இறல் = கெடுதல், துன்பம் 


ஈனும்  = தரும். (என்பதை) 


எண்ணாது  = நினைத்துப் பார்க்காமால் 


வெஃகின் = பிறன் பொருளை விரும்பினால் .
 

விறல்ஈனும்  = வெற்றியைத் தரும் 


வேண்டாமை = பிறன் பொருள் வேண்டாம் 


என்னுஞ்  = என்று சொல்லும் 


செருக்கு = செல்வம், பெருமை 




பயந்து, பயந்து, சகித்து, பணிந்து வாழ வேண்டுமா ?

அல்லது 

தலை நிமிர்ந்து, நெஞ்சு நிமிர்த்தி, தன்னம்பிக்கையோடு வாழ வேண்டுமா?


[

முன்னுரை 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_21.html


நடுவின்றி நன்பொருள் வெஃகின்

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_25.html


நாணுபவர்

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post.html


வெஃகுதல் செய்யார்

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_11.html


அகன்ற அறிவுஎன்னாம்




பொல்லாத சூழக் கெடும்




வேண்டற்க வெஃகியாம் 


அஃகாமை செல்வத்திற்கு யாதெனின்


திரு சேரும் திறனறிந்து  



]


No comments:

Post a Comment