Sunday, April 2, 2023

கந்தரனுபூதி - அலையத் தகுமோ

                          

 கந்தரனுபூதி -     அலையத் தகுமோ



(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 


நாள் முழுவதும் ஏதாவது செய்து கொண்டே இருக்கிறோம். 


அவற்றில் சில நல்லதாக இருக்கலாம், சில நல்லது இல்லாததாக இருக்கலாம். 


நல்வினை, தீவினை என்று இரண்டாகப் பிரித்துக் கொள்ளலாம். 


நல்வினை செய்தால் புண்ணியம். 


தீவினை செய்தால் பாவம். 



இந்த வினைகள் எல்லாம் நம் கணக்கில் ஏறிக் கொண்டே இருக்கும். 


நம் வாங்கிக் கணக்கு மாதிரி பணம் போடுவதும் எடுப்பதும் ஒன்றுக்கு ஒன்று சரி செய்து முடிவில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று காண்பிப்பது போல அல்ல இந்த பாவ புண்ணிய கணக்கு. 



பாவம் தனிக் கணக்கு. 


புண்ணியம் தனிக் கணக்கு. 


நிறைய பேர் நினைக்கிறார்கள் எவ்வளவு பாவம் செய்தாலும், கொஞ்சம் தானம், தர்மம், பூஜை, புனஸ்காரம் செய்தால்   செய்த பாவம் எல்லாம் போய் விடும் என்று. 



போகாது என்பது நம் சித்தாந்தம். 


புண்ணியம் செய்தால் புண்ணியக் கணக்கில் சேரும். அவ்வளவுதான். பாவக் கணக்கு குறையாது. 



இப்படி சேர்த்த பாவமும் புண்ணியம் மறு பிறவிகளில் இன்ப, துன்பங்களாக வந்து சேரும். 



ஒரு பிறவியில் எல்லா பாவத்தையும் தீர்த்து விடலாமா என்றால் முடியாது. நம்மால் தாங்க முடியாது. எனவே, ஆண்டவன்   கொஞ்சம் பாவம், கொஞ்சம் புண்ணியம் என்று கலந்து இன்ப துன்பங்களை விரவி நம் வாழக்கையை  வகுக்கிறான். பகுக்கிறான்.  



நான் சாதித்து விட்டேன் என்று குதிப்பதும், ஐயோ எனக்கு இப்படி வந்து சேர்ந்து விட்டதே என்று வருந்துவதும் தேவை இல்லாத ஒன்று.   முன் செய்த வினை இன்று வந்து நிற்கிறது. 



இந்த வாழ்வில் செய்யும் வினைகள் பின்னால் வரும். 


இந்த வாழ்வு நிரந்தரமானது என்று எண்ணி மக்கள் பலவும் செய்கிறார்கள். கால காலத்துக்கு இருக்கப் போவது போல எண்ணிக் கொண்டு  காரியம் செய்கிறார்கள். 



தாங்கள் எல்லாம் முடிவு செய்து காரியங்களை நடத்துவதாக நினைத்துக் கொள்கிறார்கள். 



அருணகிரியார் சொல்கிறார் 



"இந்த வாழ்வை நிரந்தரம் என்று எண்ணி நான் இதன் பின்னே போய்க் கொண்டு இருக்கிறேன். இது நிரந்தரம் அல்ல. ஒரு நாள் சட்டென்று முடிந்துவிடும். இதற்கு நடுவில் அந்த இன்பம், இந்த அனுபவம் என்று அங்காடி நாய் போல் அலைந்து கொண்டு இருக்கிறேன். இது சரியா? என்னை நீ காக்கக் கூடாதா ?" என்று வேண்டுகிறார். 


பாடல் 



மெய்யே யென வெவ்வினை வாழ்வை யுகந்து 

ஐயோ அடியேன் அலையத் தகுமோ 

கையோ அயிலோ கழலோ முழுதுஞ் 

செய்யோய் மயிலேறிய சேவகனே 



பொருள் 




(pl click the above link to continue reading)




மெய்யே யென =மெய் என்று எண்ணி, நிரந்தரமானது என்று எண்ணி 


வெவ்வினை = கொடுமையான வினைகள் சூழ்ந்த 


வாழ்வை = இந்த வாழ்வை 


யுகந்து = விரும்பி 

 
ஐயோ = ஐயோ 


அடியேன் = அடிமையாகிய நான் 


அலையத் தகுமோ = ஒரு குறிக்கோள் இல்லமால் அங்கும் இங்கும் அலையத் தகுமோ? 
 

கையோ = கையோ ?


அயிலோ = இரும்பினாலான, கூர்மையான வேலோ?


கழலோ = திருவடிகளோ ?


முழுதுஞ் = அல்லது உடல் முழுவதுமா? 
 

செய்யோய் = சிவந்த வண்ணமாய் இருப்பது 


மயிலேறிய சேவகனே = மயில் மேல் ஏறி வரும் காவலனே 


 
இந்த வாழ்வும் அதில் உள்ள எதுவும் நிரந்தரமானது அல்ல. 


உறவும், நட்பும், செல்வமும், பொருளும், அனுபவங்களும், ஞாபகங்களும், இளமையும் எதுவும் நிரந்தரம் அல்ல. 


இவை எல்லாம் என்றும் இருக்கப் போவது போல எண்ணிக் கொண்டு வாழக் கூடாது. 


ஒரு நாள் தனித்து நிற்க வேண்டி வரும். 


அப்போது என்ன செய்ய நினைத்தாலும் முடியாது. உடலும், உள்ளமும் தளர்ந்து போய் இருக்கும். 


இப்பவே செய்துவிட வேண்டும். 


 [

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


மெய்யியல் - பகுதி 4


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


மெய்யியல் - பகுதி 5 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html


மெய்யியல் - பகுதி 6 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html


மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html


நின்று தயங்குவதே 


https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html


வள்ளி பதம் பணியும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html


விடுவாய் வினையா வையுமே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post.html


 பரிசென் றொழிவேன் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_7.html



எதிரப் படுவாய்


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா


https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_11.html


அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ



https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_8.html


முருகன் கழல் பெற்று உய்வாய்

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_14.html


என்று அருள்வாய் ? 



பேராசை எனும் பிணியில் பிணிபட்டு






யாமோதிய கல்வியும் பாகம் 1 

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_29.html


 யாமோதிய கல்வியும் பாகம் 2


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_29.html


உதியா மரியா


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post.html


மிடியென் றொரு பாவி

https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_12.html


உபதேசம் உணர்தியவா 


]




No comments:

Post a Comment