Showing posts with label பெண்களை நம்பாதே. Show all posts
Showing posts with label பெண்களை நம்பாதே. Show all posts

Monday, June 4, 2012

விவேக சிந்தாமணி - பெண்களை நம்பாதே


விவேக சிந்தாமணி - பெண்களை நம்பாதே


தமிழ் இலக்கியம் ஆண் சார்ந்ததாகவே இருந்து வந்து இருக்கிறது.

மனைவியை சந்தேகித்த இராமனை இந்த நாடு கடவுள் என்றே போற்றுகிறது.

விலை மகள் பின்னால் போய், சொத்தை எல்லாம் அளித்த கோவலனை கோவிக்காமல் ஏற்றுக் கொண்ட கண்ணகியை கற்ப்புக்கு அரசி என்று கொண்டாடுகிறது தமிழ் கூறும் நல் உலகம்.

மனைவியை வைத்து சூதாடிய யுதிஷ்டிரன், தர்ம ராஜா

மனைவியை விற்ற அரிச்சந்திரன், சக்ரவர்த்தி

நாடு கானகத்தில் மனைவியின் சேலை தலைப்பை திருடிக்கொண்டு அவளை தவிக்க விட்டு சென்ற நளன், மகாராஜா

கவி பாட பாரதி, குனிந்து கும்மி அடிக்க நாங்கள் என்று பெண்கள் குரல் கொடுத்தாலும், ஆணாதிக்கம்தான் ஆல மரமாய் விரிந்து கிடக்கிறது தமிழ் இலக்கியம் எங்கும்.

பெண்களை தெய்வம் என்று போற்றிக் கொண்டே, அவர்களை கீழே தள்ளி எட்டி உதைக்கிறது இந்த சமூகம்....

விவேக சிந்தாமணி, பெண்களைப் பற்றி பேசுகிறது இங்கே....