தேவாரம் - ஒரு முன்னோட்டம்
தேவாரம் எழுதியது யார் என்று கேட்டால் அப்பர், சுந்தரர், திருஞான சம்பந்தர், மற்றும் மாணிக்க வாசகர் என்று பொதுவாக எல்லோரும் சொல்லுவார்கள்.
அது பிழை.
திரு நாவுக்கரசர் பாடியது மட்டும் தான் தேவாரம்.
சைவ சிந்தாந்தத்தில் திரு முறைகள் பன்னிரண்டு.
1 -2- 3 - திரு முறைகள் திரு ஞான சம்பந்தர் பாடியது. அதற்க்கு திருக் கடை காப்பு என்று பெயர்.
3,- 4,- 5 - திரு முறைகள் திரு நாவுக்கரசர் பாடியது - தேவாரம் என்று பெயர்
தே + ஆரம் = தேவாரம் = இறைவனுக்கு மாலை. சாதாரண பூ மாலை காலையில் போட்டால் மாலைக்குள் வாடிவிடும். நாவுக்கரசர் பாடிய தேவாரம் 1400 ஆண்டுகள் (இவர் ஏழாம் நூற்றாண்டை சேர்ந்தவர். நாம் இருப்பது 21 ஆம் நூற்றாண்டு. 14 நூற்றாண்டுகள் இடையில்) கழித்தும் வாடாமல் இன்றும் மணம் வீசிக் கொண்டு இருக்கிறது.
இவர் சைவ சமயத்தில் பிறந்து, சமண மதத்திற்கு சென்று, பின் மீண்டும் சைவ சமயத்திற்கு வந்தவர்.
இவர் பாடல்கள் மிகுந்த ஆழமும், அழகும் கொண்டவை.
அந்த தேவரத்தில் இருந்து சில பாடல்கள்.....