Friday, May 4, 2012

கந்தர் அலங்காரம் - நாலாயிரம் கண்கள்


கந்தர் அலங்காரம் - நாலாயிரம் கண்கள்


கோயில்கள் காலப் பெட்டகங்கள்.

அதன் பிரகாரங்களில் எத்தனையோ பேர் கொட்டிய கவலைகள், கனவுகள், பாவ மன்னிப்புகள் சிதறிக் கிடக்கின்றன.

அங்குள்ள சிற்பங்கள் எத்தனை பேரை பார்த்திருக்கும்.

எத்தனை பிரார்த்தனைகளை, முணுமுணுப்புகளை கேட்டிருக்கும், எத்தனை சந்தோஷங்களை, துக்கங்களை கண்டிருக்கும்.

மனிதனின் கடைசி நம்பிக்கை கோயில்.

'உன் பற்று அன்றி ஒரு பற்றிலேன் இறைவா கச்சியேகம்பனே' என்று எல்லாம் விட்டு அவனே சரண் என்று அடையும் இடம் கோயில்.

திருசெந்தூர் கோயில்.

கடல் அலை தாலாட்டும் கோயில்.

கோயிலுக்கு இரண்டு கிலோ மீட்டர் வரை இங்கே ஒரு கோயில் வரப் போகிறது என்று சொன்னால் நம்ப முடியாது.

அருணகிரி நாதர் திரு செந்தூர் கோயிலில் உள்ள முருகனைப் பார்க்கிறார்.

அழகு அப்படியே அவரை கொள்ளை கொள்கிறது. வைத்த கண்ணை எடுக்க முடியவில்லை.

அப்படி ஒரு அழகு. பார்த்து கொண்டே இருக்கலாம்.

எவ்வளவு பார்த்தாலும் போதவில்லை.

அடடா , இந்த அழகைப் பார்க்க இரண்டு கண்ணுதானே இருக்கு...

இன்னும் கொஞ்சம் கண்கள் இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும் என்று ஆதங்கப் படுகிறார்...

Thursday, May 3, 2012

சிலப்பதிகாரம் - திரும்பி வந்த கோவலன்


சிலப்பதிகாரம் - திரும்பி வந்த கோவலன்


சிலப்பதிகாரத்தில் முக்கியமான இடம், கோவலன் எல்லாம் தொலைத்து மீண்டும் கண்ணகியை காண வரும் நேரம்.

அவன் அவளிடம் எப்படி சொல்கிறான் அதை அவள் எப்படி எடுத்துக் கொள்கிறாள்....

கோடைக் கால மரம் இலையெல்லாம் இழந்து தனித்து நிற்பது போல, தன்னிடம் உள்ள பொருட்களை எல்லாம் தொலைத்து விட்டு திரும்பி வருகிறான் கோவலன்.

வந்தவன் கண்ணகியை வீடெங்கும் தேடுகிறான்.

எங்கும் காணவில்லை. படுக்கை அறைக்குப் போகிறான்.

அங்கே கண்ணகி சோர்ந்து படுத்து இருக்கிறாள்.

கோ: உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்..சொல்லவே வெட்கமா இருக்கு

க: ம்ம்ம்

கோ: கண்ட பெண்கள் பின்னால் சுத்தி, இருந்த செல்வத்தை எல்லாம் அழித்து விட்டேன். கைல காலணா இல்லை....

கண்ணகி அப்பவும் கோவப் படாமல், என் சிலம்பு இருக்கிறது...அதை எடுத்துக் கொள்ளுங்கள் என்றாள்

நீடிய காவலன் போலும்கடைத்தலையான் வந்து-நம்
கோவலன்!’ என்றாள் ஓர் குற்றிளையாள். கோவலனும்
பாடு அமை சேக்கையுள் புக்குதன் பைந்தொடி
வாடிய மேனி வருத்தம் கண்டு, ‘யாவும்
சலம் புணர் கொள்கைச் சலதியொடு ஆடி,
குலம் தரு வான் பொருள்-குன்றம் தொலைந்த;
இலம்பாடு நாணுத் தரும் எனக்கு’ என்ன-

நலம் கேழ் முறுவல் நகை முகம் காட்டி,
சிலம்பு உளகொண்ம்’ என-
------------------------------------------------------------------------------

நீடிய காவலன் போலும் = (உள்ளிருந்த படியே கண்ணகி உணர்கிறாள், வந்திருப்பது கோவலன் என்று.) வந்திருப்பது நம் அரசன் போலும்.

கடைத்தலையான் வந்து =நம் வாசல் வந்து

நம் கோவலன்! என்றாள் = நம்முடைய கோவலன் என்றாள்

ஓர் குற்றிளையாள். = ஒரு சிறிய வேலைகள் செய்யும் இளையவள்

கோவலனும் = கோவலனும்

பாடு அமை = பெருமை உள்ள

சேக்கையுள் புக்கு = படுக்கை அறைக்குள் சென்று

தன் பைந்தொடி = தன் காதலி

வாடிய மேனி வருத்தம் கண்டு = வருந்தி வாடிய மேனியின் வருத்தம் கண்டு

யாவும் = அனைத்தும்

சலம் புணர் கொள்கைச் = தீய கொள்கைகளை உடைய

சலதியொடு ஆடி = பெண்களோடு ஆடி

குலம் தரு வான் பொருள் = நம் மூதாதையர்கள் சேர்த்து வைத்த வானளாவிய பொருட்களை

குன்றம் தொலைந்த = குன்று போல் குவிந்த செல்வத்தை தொலைத்து

இலம்பாடு = ஒன்றும் இல்லாமல் வந்து இருக்கிறேன்

நாணுத் தரும் எனக்கு’ என்ன = எனக்கு சொல்லவே வெட்கமா இருக்கு

நலம் கேழ் முறுவல் நகை முகம் காட்டி = நலம் பயக்கும், சிரித்த முகத்தை காட்டி

சிலம்பு உளகொண்ம்’ என = என் சிலம்பு உள்ளது, கொள்க என்றாள்

உன்னிப்பாக ரசிக்க வேண்டிய சில இடங்கள்.

தமிழில் மலைக்கு வேறு வேறு பெயர்கள் உண்டு.

மலை என்றால் மிகப் பெரியது. இமய மலை

வரை என்றாலும் மலைதான் ஆனால் தொடர்ந்து விரிந்த மலைக்கு வரை என்று பெயர். "வரையினை எடுத்த தோளும்"

அதை விட சின்னது குன்று.

அதை விட சின்னது சிலம்பு

கோவலன் குன்று போன்ற குலம் தரு செல்வத்தை தொலைத்தான்.

கண்ணகி சிலம்பை கொடுத்தாள்.

தமிழ் விளையாடுகிறது

கம்ப இராமாயணம் - குகனின் கோபம்


கம்ப இராமாயணம் - குகனின் கோபம்


அழுத கண்ணும், தொழுத கையுமாய் பரதன் இராமனைக் காண கானகம் வருகிறான்.

தூரத்தில் அவன் வருவதைப் பார்த்த குகன் மிகுந்த சீற்றம் கொள்கிறான்.

அடடா, அரசை வஞ்சனையால் பெற்றதும் அல்லாமல் இராமனை கொல்வதற்கு படை திரட்டிக் கொண்டு வந்து விட்டான் இந்த பரதன், இவனை விடக்கூடாது.

அப்படி விட்டு விட்டால், இந்த உலகம் என்னை தான் ஏசும் என்று கொந்தளிக்கிறான்.

"ஞ்" என்ற எழுத்து மெல்லினம். "நஞ்சமென வஞ்ச மகள் வந்தாள்" என்று சூர்பனகையை வர்ணிக்கும் போது அந்த மெல்லின எழுத்தை உபயோகப் படுத்தினான் கம்பன். 

அது சரி. 

இங்கு, குகன் முரடன், கோவம் இல்லாமலே தீபறக்க பார்ப்பவன் குகன். 

இப்போதோ கோவம் வேறு. கட முட என்று வல்லின எழுத்துக்களை போட்டு எழுதினால் அந்த முரட்டு கோவம் வெளிப்படும். 

கம்பன் இங்கும் 'ஞ்" என்ற மெல்லின எழுத்தில் விளையாடுகிறான்....

Wednesday, May 2, 2012

கம்ப இராமாயணம் - கண்டனன், கண்களால் ?




கம்ப இராமாயணம் - கண்டனன், கண்களால் ?


அந்த காலத்தில் புகை படம் கிடையாது. 

இராமன் கானகத்தில் இருக்கிறான். சீதையை பற்றி அனுமனிடம் அடையாளம் சொல்லி அனுப்ப வேண்டும். என்ன சொல்லுவது ?

யோசித்துப் பாருங்கள். அவ சிவப்பா, உயரமா, அழகா இருப்பா அப்படின்னு சொல்லாலாம். 

இது ஒரு அடையாளமா ? அனுமனும் சென்று சீதையை பார்த்து விட்டு வந்து சொல்கிறான் இராமனிடம். இராமன் எப்படி நம்புவான் ? 

யாரையாவது பார்த்து விட்டு வந்து சீதையை பார்த்ததாக நினைக்கலாம் அல்லவா ? 

பார்த்தது சீதை தான் என்று அனுமனுக்கும் சந்தேகம் வரக் கூடாது, அனுமன் சீதையை தான் பார்த்த்தான் என்று இராமனும் நம்ப வேண்டும். 

தெளிவு படுத்தவது கம்பன். 

சொல்லில் விளையாடுகிறான். 

கண்டனென்கற்பினுக்கு அணியைகண்களால்,
தெண் திரை அலைகடல் இலங்கைத் தென் நகர்;
அண்டர் நாயக !இனிதுறத்திஐயமும்
பண்டு உள துயரும்என்றுஅனுமன் பன்னுவான்;

கண்டனென் = நான் கண்டேன்

கற்பினுக்கு அணியை = கற்புக்கு அணிகலமாய் திகழும் சீதையை

கண்களால் = கண்களால். அது என்ன கண்களால் ? எல்லாரும் 

கண்களால் தான் பார்ப்பார்கள். அது தான் முதல் வார்த்தையிலேயே சொல்லியாச்சே "கண்டெனன்" அப்படின்னு.

சொல்லுவது கம்பன். 

பயனிலாத சொல்லை சொல்லுவானா ? 

அவள் கற்பின் அணி என்பதை அவளுடைய கண்களை கொண்டு நான் கண்டு கொண்டேன் என்று அர்த்தம்.

அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம் 

கண்டெனன் கற்பினுக்கு அணியினை (அவளின்) கண்களால் என்று பொருள் கொள்ள வேண்டும்.

தெண் = தெளிந்த

திரை அலைகடல் = சுருள் சுருளாக அலைகளை கொண்ட கடல்

இலங்கைத் தென் நகர் = இலங்கை என்ற தெற்கில் உள்ள நகரில்

அண்டர் நாயக = தேவர்களின் நாயகனே

இனிதுறத்தி = இனி துறந்துவிடு

ஐயமும் = சந்தேகத்தையும்

பண்டு உள துயரும் = பழைய துயரையும்

என்றுஅனுமன் பன்னுவான்; = என்று அனுமன் சொல்லுவான் 

திருப் புகழ் - அரை நிமிட தியானம்

திருப் புகழ் - அரை நிமிட தியானம்


காற்றில் ஆடும் தீபம் போல மனம் எங்கே ஒரு நொடி அமைதியாய் இருக்கிறது.

மனதை கட்டுப் படுத்த மகான்கள் எல்லாம் ரொம்ப கஷ்டப் பட்டு இருக்கிறார்கள்.

அருணகிரிக்கு முருகன் உபதேசித்தது எல்லாம் இரண்டே வார்த்தை தான்

"சும்மா இரு". அந்த இரண்டு வார்த்தைக்கு பொருள் தெரியாமல் தவிக்கிறார்.


"சும்மா இரு சொல் அர என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே"

எனப்பார் அவர் கந்தர் அனுபூதியில்.

மனதை ஒருமுகப் படுத்தி இறைவனை மனதில் நினைக்க வேண்டும் என்று பெரியவர்கள் சொல்கிறார்கள். எங்க முடியுது ?


கண்ணை மூடினால் அலுவலகம், மனைவி, கணவன், பிள்ளைகள், மாமியார், நாத்தினார், கடன் என்று ஆயிரம் எண்ணங்கள் வருகிறது.


கடவுளை எங்க நினைக்க முடிகிறது ? இந்த பிரச்சனை இல்லறத்தில் இருக்கும் நமக்கு மட்டும் அல்ல, துறவியான அருணகிரிக்கும் இருந்து இருக்கிறது.


Tuesday, May 1, 2012

கம்ப இராமாயணம் - சூர்பனகையின் நளினம்


கம்ப இராமாயணம் - சூர்பனகையின் நளினம்

சூர்பனகை ரொம்ப நளினமானவள்.

இரண்டு பெரிய யானையை பிடித்து, அதன் தும்பிக்கைகளை ஒண்ணோட ஒண்ணா கட்டி முடிச்சு போட்டு, அதை இரண்டையும் அப்படியே தூக்கி கழுத்துல மாலையா போட்டுக்கொண்டு நடக்கிறாள். 

அப்படி நடக்கும் போது அவள் இடை அங்கும் இங்கும் அசைகிறது. அவள் சிரத்தால் இடியும் அஞ்சும் ...எவ்வளவு நளினம்....மேல படியுங்கள்...

திருப்புகழ் - காலன் முதுகில் ஒரு அறை



திருப்புகழ் - காலன் முதுகில் ஒரு அறை

முருகனின் பக்தர்களை காலன் அணுகும் போது, முருகன் அவன் முதுகில் ஒரு அறை வைப்பாராம்.

அதில் அவன் முதுகு இரண்டா விரிந்த மாதிரி ஆயிருமாம்...என்ன ஒரு அழகான கற்பனை.




பாண மலரது தைக்கும் ...... படியாலே
 பாவி யிளமதி கக்குங் ...... கனலாலே
 நாண மழிய வுரைக்குங் ...... குயிலாலே
 நானு மயலி லிளைக்குந் ...... தரமோதான்
 சேணி லரிவை யணைக்குந் ...... திருமார்பா
 தேவர் மகுட மணக்குங் ...... கழல்வீரா
 காண அருணையில் நிற்குங் ...... கதிர்வேலா
 காலன் முதுகை விரிக்கும் ...... பெருமாளே.


பதம் பிரிக்காமல் அருணகிரிநாதரின் பாடல்களை புரிந்து கொள்ளவது எளிதல்ல....


பாண மலர் அது தைக்கும் படியாலே
பாவி இளமதி கக்கும் கனலாலே
நாணம் அழிய உரைக்கும் குயிலாலே
நானும் மையலில் இளைக்கும் தரமேதான்
சேணில் அரிவை அணைக்கும் திரு மார்பா
தேவர் மகுடம் மணக்கும் கழல் வீரா
காண அருணையில் நிற்கும் கதிர் வேலா
காலன் முதுகை விரிக்கும் பெருமாளே




பாண மலர் = மன்மதனின் மலர் அம்புகள் (பாணம் = அம்பு)


அது தைக்கும் படியாலே = அது என் மார்பில் தைக்கும் படியாகவும்


பாவி இளமதி = இரக்கமிலாத அந்த இளைய நிலா

கக்கும் கனலாலே = பொழியும் கனலாலே (வெப்பத்தாலே)

நாணம் அழிய = வெட்கம் போக

உரைக்கும் குயிலாலே = கூவும் குயிலாலே

நானும் = அருணகிரியான நான் (தன்னை ஒரு பெண்ணாக நினைத்து எழுதுகிறார்)

மையலில் இளைக்கும் தரமேதான் =காதலில் இளைக்கும் படியாக

சேணில் அரிவை = சேய்மையில் (விண்ணுலகில்) உள்ள பெண்ணை (தெய்வ நாயகியை) 

அணைக்கும் திரு மார்பா = கட்டி அணைக்கும் திரு மார்பனே

தேவர் மகுடம் = தேவர்களின் மகுடம்

மணக்கும் கழல் வீரா = அவர்கள் எப்போதும் முர்கனின் காலில் விழுந்து வணங்குவதால், 
அவர்கள் மகுடத்தில் உள்ள மணம் (பூ, சந்தனம் போன்ற பொருள்களின் மணம்) முருகனின் காலில் மணக்கிறது

காண = காணக்கூடிய

அருணையில் நிற்கும் கதிர் வேலா = திருவண்ணாமலையில் நிற்கும் கதிர்வேலா

காலன் = காலனின்

முதுகை விரிக்கும் பெருமாளே = முதுகை விரிக்கும் பெருமாளே