Friday, May 25, 2012

கம்ப இராமாயணம் -மழையின் நீர் வழங்கும் கண்ணான்


கம்ப இராமாயணம் -மழையின் நீர் வழங்கும் கண்ணான்

ஆண்களுக்கு தங்கள் அன்பை வெளிபடுத்துவது அவ்வளவு எளிதாய் இருப்பது இல்லை.

அன்பைச் சொன்னால் அது ஏதோ பலவீனம் என்று நினைப்பார்களோ என்னவோ.

அதுவும் அன்பின் மிகுதியால் அழுவது என்பது அரிதினும் அரிது.

முரடனான கும்பகர்ணன் போர் பாசறையில் இருக்கிறான்.

அவனை பார்க்க விபீஷணன் வருகிறான்.

விபீஷணன் வந்தது கும்பகர்ணனை இராமன் பக்கம் அழைத்துக் கொள்ள.

ஆனால், கும்பகர்ணனோ, விபீஷணன் மனம் மாறி இராவணன் பக்கம் வந்து விட்டதாய் நினைத்து கொண்டான்.

அப்படி வந்து விட்டால், அவனும் இறந்து போவானே என்று அவன் மேல் உள்ள பாசத்தால் அவனை கட்டிப் பிடித்து அழுகிறான்.

அழுகிறான் என்றால் ஏதோ இரண்டு சொட்டு கண்ணீர் விடுவது அல்ல... மழை பொழிவது மாதிரி கண்ணீர் பொழிந்தான்...

பின் சொல்லுவான்...

"ஏண்டா, நீ ஒருவனாவது பிழைத்து இருப்பாய் என்று நினைத்தேன்...இப்படி தனியே வந்து இருக்கிறாயே" என்று வருத்தப் படுகிறான்.


முந்தி வந்து இறைஞ்சினானை  மோந்து உயிர் மூழ்கப் புல்லி
உய்ந்தனை ஒருவன் போனாய் என் மனம் உவக்கின்றேன் என்
சிந்தனை முழுதும் சிந்தித் தெளிவிலார் போல மீள்
வந்தது என் தனியேஎன்றான் மழையின் நீர் வழங்கும் கண்ணான்.

முந்தி வந்து = முன்னால் வந்து

இறைஞ்சினானை = வணங்கிய (விபீஷணனை)

மோந்து = உச்சி முகர்ந்து

உயிர் மூழ்கப் = அன்பின் மிகுதியால் உயிர் நனைய

புல்லி = கட்டி அணைத்து (புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம் கலத்தல் உறுவது கண்டு (திருக்குறள்))

உய்ந்தனை = பிழைத்தாய்

ஒருவன் = ஒருவன்

போனாய் = நீ இராமனிடம் போனாய் என்று

என் மனம் உவக்கின்றேன் = நான் மனம் மகிழ்ந்து இருந்தேன்

என்  சிந்தனை முழுதும் = என் சிந்தனை முழுவதும்

சிந்தித் தெளிவிலார் போல = சிந்தனை தெளிவில்லாதவன் போல் (மனம் குழம்பி)

மீள் வந்தது என் தனியே? = ஏன் மீண்டும் இங்கு தனியாக வந்தாய்

என்றான் = என்றான்

மழையின் நீர் = மழை நீர் போல

வழங்கும் கண்ணான். = கண்ணில் இருந்து நீர் வழியும் கண்ணான்

அந்த முரட்டு உருவத்திற்குள்ளும் ஒரு அன்பு மனம்.


Thursday, May 24, 2012

If you like this blog entries, use these buttons

If you like this blog entries, use these buttons

If you like a particular blog I have written, you can do the following things:

1. Just press the button g+1 at the bottom of the blog. It amounts to saying somebody liked that blog entry. More the people click it, more credit is given and google brings the pages with higher credits in the search result. All you have to do is to just click that button.

2. There is a button named "M" which appears first in the row of buttons (g+1 is the last button). If you want to share the blog with somebody, by pressing M (mail this blog entry), google will open a separate page with the blog entry appended to the bottom. Type your friend's e mail ID in the box provided and press send button. You can send this to your friends that way.

Thanks

திருக்குறள் - பிரிவிலும் ஒரு சுகம்


திருக்குறள் - பிரிவிலும் ஒரு சுகம்


ராட்சசி, என்னமா அழகா இருக்கா....

அப்படியே கடிச்சு சாபிடுரலாம் போல இருக்கு.

கோவிச்சு இருக்கும் போது கூட அழகாதான் இருக்கா ...

அது கூட உண்மையான கோவம் இல்ல..சும்மா ஒரு பாவலா..

என்ன தான் பண்ணுறானு பாப்போம்.

எவ்வளவு சமாதானம் பண்ணாலும் ரொம்ப தான் பிகு பண்ணிக்கிறா...

அவளுக்கும் தெரியும் தப்பு என் மேல இல்லன்னு..

இருந்தாலும் ஒரு முரட்டு பிடிவாதம் ..

sorry சொல்லியாச்சு , இனிமேல் இப்படி ஆகாதுன்னு promise பண்ணியாச்சு ..

ஒண்ணுக்கும் மசிய மாட்டேனு அடம் பிடிக்கிறாள் ..

ஆனது ஆகட்டும்னு போய் பேசிரலாமா?...

வேணாம் அப்புறம் இன்னும் கோவிப்பா ... ம்ம்ம்ம் ... என்ன பண்ணலாம் ?

அட இதுல கூட ஒரு கிக் இருக்கத்தான் செய்யுது

காதலிய அணைப்பது மட்டும் இல்லை, ஊடலில் அவளை விட்டு பிரிந்து இருப்பது கூட ஒரு சுகம் தான்....

அப்படின்னு , வள்ளுவர் சொல்லுறாரு

தவறிலர் ஆயினும் தாம் வீழ்வார் மென் தோள்
அகறலின் ஆங்கொன்று உடைத்து


தவறிலர் ஆயினும் = தன் மேல் தவறு இல்லா விட்டாலும்

தாம் வீழ்வார் = தன் காதலியின்

மென் தோள் = மென்மையான தோள்களை

அகறலின் = அகன்று இருப்பது, தள்ளி இருப்பதில்

ஆங்கொன்று உடைத்து = என்னோவோ ஒரு சுகம், kick , சந்தோஷம் இருக்கு.

வள்ளுவர் "ஏதோ ஒன்று இருக்கு " அப்படின்னு தான் சொல்லி இருக்காரு. அந்த ஒண்ணு என்னவா இருக்கும்.....?


(குறள் 1325 )

நாலாயிர திவ்ய பிரபந்தம் - உண்மை எல்லாம் நான் அறிவேன்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - உண்மை எல்லாம் நான் அறிவேன்


அவள்: எங்க போயிட்டு வர்ற ?

அவன்: அது வந்து...ஒண்ணும் இல்ல... கோடி ஆத்து பொண்ணுக்கு கொஞ்சம் ஒத்தாசை பண்ணிட்டு வர்றேன்

அவள்: என்ன ஒத்தாசை ? அவ கூப்பிட்டா உடனே போயிருவியா ?

அவன்: என்ன பெருசா கேட்டுட்டா ? தயிர் கடஞ்சிகிட்டு இருந்தா....கூட கொஞ்சம் ஒத்தாசை பண்ணினேன்...

அவள்: ஆஹா...உன்னப் பத்தி தெரியாதா, எப்படி உதவி பண்ணி இருப்பேனு? தலையில் உள்ள மயிர் பீலி எல்லாம் கலஞ்சு கிடக்கு, முகம் எல்லாம் முத்து முத்து வேர்த்து இருக்கு, உதடு எல்லாம் துடிக்கிறது...நீ எப்படி ஒத்தாசை பண்ணி இருப்பேனு தெரியறது. உன்ன பத்தி எனக்குத் தெரியாதா ? நீ எப்படி பட்ட கள்ளன் என்று..படவா...


குலசேகர ஆழ்வார் அருளிச் செய்த 699 ஆவது நல்லாயிர திவ்ய பிரபந்த பாசுரம் இது. 

கெண்டையொண் கண்மட வாளொருத்தி கீழை யகத்துத் தயிர்கடையக்
கண்டுஒல்லை நானும் கடைவனென்று கள்ள விழிவிழித் துப்புக்கு
வண்டமர் பூங்குழல் தாழ்ந்துலாவ வாண்முகம் வேர்ப்பச்செவ் வாய்த்துடிப்ப
தண்டயிர் நீகடைந் திட்டவண்ணம் தாமோத ராமெய் யறிவன்நானே

கொஞ்சம் சீர் பிரிப்போம்.


கெண்டை ஒண் கண் மடவாள் ஒருத்தி கீழை அகத்து தயிர் கடைய
கண்டு ஒல்லை நானும் கடையவன் என்று கள்ள விழி விழித்து புக்கு
வண்டு அமர் பூங்குழல் தாழ்ந்து உலாவ வாண் முகம் வேர்ப்ப செவ்வாய் துடிப்ப
தண் தயிர் நீ கடைந்திட்ட வண்ணம் தாமோதரா மெய் அறிவன் நானே



இப்ப பொருள் என்னனு பார்ப்போம்: 

கெண்டை = கெண்டை மீன்

ஒண் கண் = போன்ற கண் உள்ள 

மடவாள் ஒருத்தி = பெண் ஒருத்தி

கீழை அகத்து = தெருக்கோடியில் உள்ள வீட்டில்

தயிர் கடைய = தயிர் கடைய

கண்டு = பார்த்து

ஒல்லை = சீக்கிரம் ("ஐயனை ஒல்லை வா என்று அழைத்ததம்மா" கம்ப இராமாயணம்)

நானும் கடையவன் என்று = நானும் வந்து கூட மாட கடைகிறேன் என்று

கள்ள விழி விழித்து = திருட்டு முழி முழித்து

புக்கு = அந்த வீட்டுக்குள் புகுந்து

வண்டு அமர் பூங்குழல் = வண்டு வந்து அமரும் பூக்களை சூடிய குழல்


தாழ்ந்து உலாவ = அவிழ்ந்து அலை பறக்க

வாண் முகம் = வாண் போன்ற நீல முகம்

வேர்ப்ப = வேர்க்க

செவ்வாய் துடிப்ப = உன் சிவந்த இதழ்கள் துடிக்க

தண் தயிர் = குளிர்ந்த தயிரை

நீ கடைந்திட்ட வண்ணம் = நீ எப்படி அவளோடு கடைந்திருப்பாய் என்று

தாமோதரா = தாமோதரனே

மெய் அறிவன் நானே = அங்க என்ன நடந்திருக்கும் என்ற உண்மையை நான் அறிவேன்

கெண்டை மீன் போன்ற கண் உள்ள பெண் ஒருத்தி


தெருக்கோடியில் உள்ள வீட்டில் தயிர் கடைய

பார்த்து சீக்கிரம் நானும் வந்து கூட மாட கடைகிறேன் என்று


திருட்டு முழி முழித்து

அந்த வீட்டுக்குள் புகுந்து


வண்டு வந்து அமரும் பூக்களை சூடிய குழல்அவிழ்ந்து அலை பறக்க


வாண் போன்ற நீல முகம் வேர்க்க


 உன் சிவந்த இதழ்கள் துடிக்க


குளிர்ந்த தயிரை


 நீ எப்படி அவளோடு கடைந்திருப்பாய் என்று

தாமோதரனே!


 அங்க என்ன நடந்திருக்கும் என்ற உண்மையை நான் அறிவேன்




திருக் குறள் - புன்னகையா ? பொன் நகையா ?


திருக் குறள் - புன்னகையா ? பொன் நகையா ?



அவள்: எனக்கு இந்த செயின் எனக்கு நல்லா இருக்கா ?


அவன்: ம்ம்ம்ம்...


அவள்: நல்லா இல்லையா ?


அவன்: இல்ல நல்லா தான் இருக்கு.


-------------------------------


அவள்: இந்த கம்மல்ல நான் எப்படி இருக்கேன் ? அழகா இருக்கேனா ?


அவன்: ம்ம்ம்ம்


அவள்: ஏண்டா இப்படி ஒரு ரசனை கேட்ட ஜன்மமா இருக்க ? எப்ப 
பார்த்தாலும் ஒரு ம்ம்ம்ம் இதுதான் answer ஆ ?


அவன் : இல்ல நல்லாத்தான் இருக்கு...:)


அவள்: என்ன சிரிப்பு ?


அவன்: ஒண்ணும் இல்ல..உனக்கு இந்த நகை எல்லாம் போட்டாதான் அழகா இருக்கும் அப்படின்னு யாரு சொன்னா ? இந்த நகை எல்லாம் போடாமலேயே நீ எவ்வளவு அழகா இருக்க தெரியுமா ? ஐயோடா..இந்த வெட்கத்து இணையா இன்னொரு நகை இருக்கா என்ன ?


அவள்: போடா...அப்படி பார்க்காத....


-----------------------------
பிணையேர் மடநோக்கு நாணு முடையாட்
கணியெவனோ வேதில தந்து
---------------------------------


சொன்ன நம்பணும்......இது திருக் குறள் தான்...

பிணை ஏர் மட நோக்கு நாணமும் உடையாளுக்கு
அணி எவனோ ஏதில தந்து


பிணை = ஜோடி



ஏர்= அழகான, எழுச்சி உள்ள. பிணை ஏர் என்பது அழகான பெண் மான் என்று 
வழங்குவது மரபு. 


மட நோக்கு = மருண்ட பார்வையும்



நாணமும் = நாணமும், வெட்கமும்



உடையாளுக்கு = உடையவளுக்கு



அணி = அணிகலன்கள், நகைகள்



எவனோ = யார்



ஏதில = சம்பந்தா சம்பந்தம் இல்லாமல், ஒரு தொடர்பும் இல்லாமல்



தந்து = தந்தது ?


அவள் வெளியே பார்பதற்கு மான் போல் இருப்பாள். அது ஒரு அழகு.

அவளின் உள் அழகு அவள் கொண்ட நாணம், வெட்கம். 


அது மற்றொரு அழகு.


இப்படி உள் அழகும், வெளி அழகும் கொண்ட அவளுக்கு மற்ற அணிகலன்கள் எதற்கு என்று வள்ளுவர் கேட்கிறார்.



Wednesday, May 23, 2012

திருவிளையாடல் புராணம் - புண் சுமந்த திரு மேனி


திருவிளையாடல் புராணம் - புண் சுமந்த திரு மேனி


மண்ணை படைத்தவன் மண் சுமந்தான்

அடியவர்களுக்காக ஆண்டவன் அடி வாங்கிய கதை அது

மாணிக்க வாசகருக்காக சிவ பெருமான், கூலி ஆளாக வந்து, பிட்டுக்கு மண் சுமந்து, பிரம்படி பட்ட கதை.

அதை பரஞ்சோதியார் எப்படி கூறுகிறார் பாருங்கள்...

நாலாயிர திவ்ய பிரபந்தம் - குளிருதுடா...


நாலாயிர திவ்ய பிரபந்தம் - குளிருதுடா...


அவளுக்கு அவனை அணைத்துக் கொள்ள ஆசைதான்.


ஆனா, அவன் கிட்ட அதை எப்படி சொல்லுவது என்று தெரியவில்லை.


ஆசை ஒரு புறம். நாணம் மறு புறம்.


அவன் எப்ப "ஏய், உன்னை ஒரு தடவை கட்டி பிடிக்காட்டா" என்று கேட்கும் போதெல்லாம்
"சரி" என்று வார்த்தை வாய் வரை வரும், ஆனால் வெளியே விருப்பம் இல்லாத மாதிரி காட்டிக் கொள்வாள்.


இன்னைக்கு அவன் வரவுக்காக யமுனை ஆற்றின் கரையில் காத்து இருக்கிறாள்.


அவன் வர்ற மாதிரி தெரியல. அப்படியே ஆற்றில் நடந்து போய், ஆற்றின் நடுவில் உள்ள மணல் திட்டின் மேல் ஏறி நின்று பார்க்கிறாள்...


அந்தி சாயும் நேரம். வாடை காற்று அவளை வாட்டுகிறது.


குளிரில் அவள் தளிர் மேனி நடுங்குகிறது. விடிய விடிய அவன் வரவு பார்த்து நிற்கிறாள்.


அவ்வளவு காதல்.




ஏர்மலர்ப் பூங்குழல் ஆயர் மாதர் எனைப்பலர் உள்ள இவ்வூரில் உன்தன்
மார்வு தழுவுதற் காசை யின்மை அறிந்தறிந்தே உன்தன் பொய்யைக் கேட்டு
கூர்மழை போல்பனிக் கூதல் எய்திக் கூசி நடுங்கி யமுனை யாற்றில்
வார்மணற் குன்றில் புலர நின்றேன் வாசு தேவா! உன்வரவு பார்த்தே.





ஏர்மலர்ப் = அழகிய பூக்களை


பூங்குழல் = சூடியதால் பூ போன்ற வாசம் உள்ள கூந்தலை உடைய


ஆயர் மாதர் = ஆயர் குலப் பெண்கள்


எனைப்பலர் = என்று பல பெண்கள்


உள்ள இவ்வூரில் = உள்ள இந்த ஊரில்


உன்தன் = உன்னுடைய

மார்வு = மார்பை


தழுவுதற் காசை யின்மை = தழுவ ஆசை இல்லை (என்று பொய் சொன்னதால்)


அறிந்தறிந்தே = உண்மை அறிந்து


உன்தன் பொய்யைக் = நீ சொன்ன பொய்யை (வருவேன் என்று சொன்ன பொய்)


கேட்டு = கேட்டு

கூர்மழை = கூரிய மழை

போல் = போல

பனிக் கூதல் = கூதல் அடிக்கும் பனிக் காற்றில்

எய்திக் = வந்து

கூசி = உடல் குளிரில் கூசி

நடுங்கி = நடுங்கி

யமுனை யாற்றில் = யமுனை ஆற்றில்

வார்மணற் குன்றில் = பெரிய மணல் குன்றில்

புலர = பொழுது புலரும் வரை

நின்றேன் = உனக்காக காத்து நின்றேன்

வாசு தேவா! = வாசு தேவா

உன்வரவு பார்த்தே. = உன்னுடைய வரவை எதிர் பார்த்து

அவள் ஒரு பொய் சொன்னாள். அவனும்.