Saturday, June 30, 2012

தனிப் பாடல் - கம்பனின் சுய சோகம்


தனிப் பாடல் - கம்பனின் சுய சோகம்

கம்பனின் மகன் அம்பிகாபதி இறந்து போனான்.

கம்பனுக்கு சோகம் தாளவில்லை.

தன் நண்பன் ஓட்டகூத்தனிடம் சொல்வான்....

"மகன் கானகம் போன துக்கம் கூடத் தாளாமல் தசரதன் உயிர் விட்டான். நான் என் மகன் இறந்த பின் கூட இன்னும் உயிரோடு இருக்கிறேனே...நான் எவ்வளவு கல் நெஞ்சக்காரன்" என்று தன்னை தானே நொந்து கொள்கிறான்.

நாலடியார் - எதைப் படிப்பது?


நாலடியார் - எதைப் படிப்பது?


எதைப் படிப்பது, எவ்வளவு படிப்பது, எதை படிக்காமல் விடுவது, 

எல்லாவற்றையும் படிக்க முடியுமா ? போன்ற குழப்பங்கள் நமக்கு இருக்கும்.
எத்தனை ஆயிரம் புத்தகங்கள், வலை தளங்கள்...அனைத்தையும் படித்து மாளுமா ?

இந்த குழப்பம் இன்று வந்ததில்லை, நாலடியார் எழுதப்பட்ட காலத்திலேயே இருந்திருக்கிறது. 

"படிக்க வேண்டியதோ கடல் போல் இருக்கிறது. படிக்க கிடைத்த நாட்களோ கொஞ்சம் தான். அந்த குறைந்த நாட்களிலும் ஆயிரம் தடங்கல்கள்.

எனவே, படிக்க வேண்டியதை ஆராய்ந்து, தெரிந்து எடுத்து படிக்க வேண்டும், நீரில் இருந்து பாலை பிரித்து உண்ணும் அன்னம் போல்"


Thursday, June 28, 2012

திருவாசகம் - கடவுள் உங்களை தேடிக் கொண்டு இருக்கிறார்


திருவாசகம் - கடவுள் உங்களை தேடிக் கொண்டு இருக்கிறார்


குழந்தையை பெற்ற தாய்மார்களுக்குத் தெரியும்...குழந்தைக்கு பால் தரவில்லை என்றால், அந்தப் பால் மார்பில் கட்டிக் கொள்ளும்.

அந்த கட்டியையை பின் அறுவை சிகிச்சை செய்து தான் அகற்ற முடியும். 

அன்பும் அது போலத்தான், வெளிபடுத்தாத அன்பு உடலுக்குள் நஞ்சாகி விடும். 

கடவுள் அளப்பெரும் அன்புடையவன்.

அவன் அந்த அன்பை யாரிடம் போய் தருவான்?

பக்தர்களை தேடி தேடித் போய் தன் கருணையை பொழிவான்.

மீனவன் வலை வீசி மீனைப் பிடிப்பதைப் போல, இறைவன் பக்தர்களை தேடிக் கொண்டு இருக்கிறான் என்று மாணிக்க வாசகர் சொல்கிறார்.

திருக்குறள் - பணம் சம்பாதியுங்கள்


திருக்குறள் - பணம் சம்பாதியுங்கள்


நமது இலக்கியங்கள் பெரும்பாலும் துறவறம், நிலையாமை, ஈகை, மெய் பொருள் நாடுதல் என்று தான் சொல்லுகின்றன.

உடலை உறுதி செய்தல், பொருள் ஈட்டுதல் என்பன பற்றி சொல்லும் இலக்கியங்கள் மிகக் குறைவு.

திருக்குறளில், அதுவும், கட்டளை இடுவது போல் இந்த குறள் சற்று வித்தியாசமான குறள்.

"பணம் சம்பாதியுங்கள், உங்கள் பகைவர்களின் செருக்கை அறுக்க அதை விட கூரிய பொருள் இல்லை" என்கிறார் வள்ளுவர்.



Tuesday, June 26, 2012

மூதுரை - மனைவியின் மகிமை


மூதுரை - மனைவியின் மகிமை


மனைவி வீட்டில் இருந்தால், இல்லாதது ஒன்றும் இல்லை. அவள் இருந்தால் எல்லாம் இருக்கும்.

அவள் வீட்டில் இல்லாவிட்டாலோ அல்லது அவள் கடுமையான சொற்களை பேசுபவளாய் இருந்தாலோ, அந்த வீடு புலி இருக்கும் குகை போல் ஆகிவிடும்.

கந்தர் அலங்காரம் - முருகன் என்ற இராவுத்தன்


கந்தர் அலங்காரம் - முருகன் என்ற இராவுத்தன்


முருகன் இந்துவா ? முஸ்லிமா ?

அருணகிரியார் முருகனை இராவுத்தனே என்று அழைக்கிறார் இந்த பாடலில்.

இராவுத்தன் என்றால் முஸ்லிம்தானே? முருகன் எப்படி முஸ்லிம் ஆனான்?

இராவுத்தன் என்றால் குதிரை விற்பவன்.

மாணிக்க வாசகருக்காக சிவன் நரிகளை குதிரைகளாக மாற்றி பாண்டிய மன்னனிடம் விற்றார்.

அப்படிப்பட்ட சிவனின் மகன் தானே முருகன். எனவே அவனும் ஒரு இராவுத்தன் தான்.

Monday, June 25, 2012

புறநானுறு - ரொம்ப நல்லவேன்னு சொல்லிட்டாம்மா


புறநானுறு - ரொம்ப நல்லவேன்னு சொல்லிட்டாம்மா


நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை என்றதுபோல் ஒரு சில நல்லவர்கள் இருப்பதால் இந்த உலகம் இயங்குகிறது என்கிறது புறநானூறு.

யார் அந்த நல்லவர்கள் ? அவர்கள் என்ன செய்வார்கள்?

அமிழ்தமே கிடைத்தாலும் தான் மட்டும் உண்ணாமல், மற்றவர்களோடு பகிர்ந்து உண்பார்கள்.

கோபப்படமாட்டார்கள்.

மற்றவர்கள் அஞ்சுவதற்கு அஞ்சுவார்கள்.

புகழுக்காக உயிரையும் கொடுப்பார்கள்.

பழி வரும் என்றால் உலகமே கிடைத்தாலும் அதை செய்ய மாட்டார்கள்.
தமக்காக உழைக்காமல் பிறர்க்காக உழைப்பார்கள்.