Sunday, August 5, 2012

அபிராமி அந்தாதி - எல்லா துன்பங்களும் விலக


அபிராமி அந்தாதி - எல்லா துன்பங்களும் விலக


அபிராமி பட்டருக்கு அபிராமியின் மேல் உள்ளது பக்தியா  காதலா என்று இனம் பிரித்து சொல்வது கடினம்.

அபிராமி ஒரு கடவுள் என்பதை மறந்து, ஏதோ ஒரு காதலியிடம் பேசுவது போல் இருக்கிறது அவரின் பாடல்கள்.

"நான் பார்க்கும் இடம் எல்லாம், அபிராமி, உன் பாசாங்குசமும், உன் மேனியில்உள்ள புது மலர்களும், உன் கையில் உள்ள கரும்பும், என் துன்பம் எல்லாம் தீர்க்கும் உன் அழகிய மேனியும், உன் சிறிய இடையும், குங்குமம் தாதன் உன் மார்பும், அதன் மேல் தவழும் முத்து மாலையுமே" என்று பார்க்கும் இடம் தோறும் அவளையே பார்த்தார் அபிராமி பட்டர்.

இந்த அளவுக்கு ஒரு பெண் தெய்வத்தை யாரும் இரசித்து இரசித்து தமிழில் எழுதி இருக்கிறார்களா என்று தெரியவில்லை. அவ்வளவு அன்யோன்யியம்....

கம்ப இராமாயணம் - தீமையா ? நன்மையா ?


கம்ப இராமாயணம் - தீமையா ? நன்மையா ?


கூனியின் போதனையால் கைகேயி மனம் மாறினாள். அவள் மனம் மாறியதற்கு காரணம் கூனியின் போதனை மட்டும் காரணம் அல்ல...

"அரக்கர்களின் பாவமும், தேவர்களின் தவமும் ஒன்று சேர, தன் அருள் மனம் மாறி, இந்த உலகம், வரும் காலம் எல்லாம் இராமனின் புகழ் என்னும் அமுதினை பருக" வழி செய்தாள் என்கிறான் கம்பன். 

Friday, August 3, 2012

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கள்ள மனம் தவிர்த்தே


நாலாயிர திவ்ய பிரபந்தம் - கள்ள மனம் தவிர்த்தே 


சில சமயம் சிறந்த பக்தர்களுக்குக் கூட இறைவன் மேல் சந்தேகம் வரும்..."கடவுள் என்று ஒருவன் இருந்தால் எனக்கு ஏன் இவ்வளவு துன்பம் வருகிறது...நான் யாருக்கு என்ன கெடுதல் செய்தேன்..ஒருவேளை இந்த கடவுள், வேதம் எல்லாம் பொய் தானோ" என்று சந்தேகம் வரும். 

கடவுளை நம்பாத நாத்திக வாதிகள் கூட சில சமயம் "ஒரு வேளை கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரோ" என்ற சந்தேகம் வரலாம்.

சந்தேகம் யாருக்கு வந்தாலும், அவனை. வள்ளலே, மணி வண்ணனே என்று வெளிக்கு சொல்லி வைத்துக் கொள்வார்கள். இது எல்லாம் கடவுளுக்குத் தெரியாதா என்ன ?

"நானும் அப்படித்தான் இருந்தேன்...உன்னை உள்ளன்போடு புகழாமல், வெளிக்கு புகழ்ந்து உன்னையும் ஏமாற்றினேன்...பின், என் கள்ள மனம் தவிர்த்து, உன்னை கண்டு கொண்டேன், இனி உன்னை விடமாட்டேன்" என்கிறார் நம்மாழ்வார்...


கம்ப இராமாயணம் - மனக் குயிலா ? மாடக் குயிலா ?


கம்ப இராமாயணம் - மனக் குயிலா ? மாடக் குயிலா ?


முதன் முதலாக காதலனையோ காதலியையோ பார்த்து காதல் வயப்படவர்களுக்குத் தெரியும்..."அட இந்த பெண்ணை (ஆணை) தான் இத்தனை நாளாய் நான் மனத்தில் நினைத்துக் கொண்டிருந்தேன்...இவளுக்காகத்தான் (இவனுக்காத்தான்) இத்தனை நாள் காத்துக் கொண்டிருந்தேன்" என்ற உணர்வு...

சீதையை அருகில் நேரில் பார்க்கிறான் இராமன். 

அவனால் நம்ப முடியவில்லை. 

உப்பரிகையில் பார்த்த சீதை ஏதோ கனவு மாதிரி இருந்தது அவனுக்கு. 

நேரில் அவளைப் பார்த்தவுடன், "அட, இவள் என் மனதில் மட்டும் தான் இருந்தாள் என்று நினைத்தேன், மனதுக்கும் வெளியேவும், நிஜத்திலும் இருக்கிறாளா" என்று வியக்கிறான்...


நாலாயிர திவ்ய பிரபந்தம் - கடவுளைக் கண்டேன்


நாலாயிர திவ்ய பிரபந்தம் - கடவுளைக் கண்டேன்


கடவுள் இருக்கிறா அல்லது அது வெறும் ஒரு கற்பனையா என்ற வாதம் இருந்து கொண்டே இருக்கிறது.

கடவுள் இருக்கிறார் என்றால், அவரை யாரவது பார்த்து இருக்கிறார்களா ? பார்த்தால் என்ன பார்த்தார்கள் ?

பார்த்தவர்கள் கூட, தைர்யமாக 'நான் கடவுளை பார்த்தேன்' என்று சொல்வார்களா ?

பேயாழ்வார் சொல்கிறார்..ஒரு முறை அல்ல ஐந்து முறை...

Thursday, August 2, 2012

கம்ப இராமாயணம் - கைகேயி எதனால் மனம் மாறினாள் ?


கம்ப இராமாயணம் - கைகேயி எதனால் மனம் மாறினாள் ?


கூனி ஏதேதோ சொல்லி கைகேயியின் மனத்தை மாற்ற முயற்சி செய்தாள். ஒன்றும் பலிக்கவில்லை.

கடைசியில் அவள் ஒன்று சொன்னாள். அதனால கைகேயி மனம் மாறினாள்.

அது என்ன ஒன்று ?

"இராமன் பட்டம் சூட்டிய பின், உன்னிடம் இல்லை என்று வருபவர்களுக்கு நீ எப்படி உதவி செய்வாய் ?

கோசலையிடம் கேட்டு வாங்கித் தருவாயா ?
இல்லையென்றால், அவர்களுக்கு உதவி செய்யாமல் வெறும் கையேடு அனுப்பி விடுவாயா ?

இல்லை உதவி செய்ய முடியவில்லையே என்று வெட்கப்பட்டு உன் உயிரை விட்டு விடுவாயா ?"

என்று கூனி கைகேயியை கேட்டாள்.

தன்னிடம் உதவி என்று வந்தவர்களுக்கு உதவி செய்ய முடியாமல் போய் விடுமோ என்ற நினைப்பு கைகேயியை மனம் மாறச் செய்தது.....

Wednesday, August 1, 2012

கம்ப இராமாயணம் - கூனி அறிமுகம்


கம்ப இராமாயணம் - கூனி அறிமுகம்


முதன் முதலில் கூனி அறிமுகம் ஆகும் இடம்.

அவள் எப்படி தோன்றினாள் ?

இன்னல் செய்யும் இராவணன் இழைத்த தீமை போல் அவள் தோன்றினாள் என்பான் கம்பன்.

இராவணன் என்ற பாத்திரம் அவள் கூனி தோன்றும் இந்த இடம் வரை காப்பியத்தில் அறிமுகபடுத்த படவில்லை.

நேரடியாக சொல்லாவிட்டாலும், கம்பன் ஏதோ சூசகமாக சொல்வதாகப் படுகிறது. 

அவன் செய்த தீமைகளுக்கு இணையாக இன்னொரு தீமை புறப்பட்டு விட்டது என்பது போல் ஒரு அர்த்தம் தொனிக்கிறது.

முள்ளை முள்ளால் எடுப்பதைப் போல், தீமையை தீமையால் எடுக்க கம்பன் ஒரு அச்சாரம் தருவது போல இருக்கிறது.

அவள் எவ்வளவு கொடுமைக்காரி  என்பதை நினைத்துக் கூட பார்க்க 
முடியாதாம்...அவளளவு கொடுமைகளை மனத்தில் கொண்டவள்...