அபிராமி அந்தாதி - எல்லா துன்பங்களும் விலக
அபிராமி பட்டருக்கு அபிராமியின் மேல் உள்ளது பக்தியா காதலா என்று இனம் பிரித்து சொல்வது கடினம்.
அபிராமி ஒரு கடவுள் என்பதை மறந்து, ஏதோ ஒரு காதலியிடம் பேசுவது போல் இருக்கிறது அவரின் பாடல்கள்.
"நான் பார்க்கும் இடம் எல்லாம், அபிராமி, உன் பாசாங்குசமும், உன் மேனியில்உள்ள புது மலர்களும், உன் கையில் உள்ள கரும்பும், என் துன்பம் எல்லாம் தீர்க்கும் உன் அழகிய மேனியும், உன் சிறிய இடையும், குங்குமம் தாதன் உன் மார்பும், அதன் மேல் தவழும் முத்து மாலையுமே" என்று பார்க்கும் இடம் தோறும் அவளையே பார்த்தார் அபிராமி பட்டர்.
இந்த அளவுக்கு ஒரு பெண் தெய்வத்தை யாரும் இரசித்து இரசித்து தமிழில் எழுதி இருக்கிறார்களா என்று தெரியவில்லை. அவ்வளவு அன்யோன்யியம்....