Friday, August 31, 2012

பெரிய புராணம் - பிறவாமையும் மறவாமையும்


பெரிய புராணம் - பிறவாமையும் மறவாமையும்


காரைக்கால் அம்மையார் இறைவனிடம் வேண்டுகிறார்.

நாமா இருந்தால் இறைவனிடம் என்ன கேட்போம் ?

சொத்து, சுகம், நல்ல மனைவி/கணவன், ஆரோக்கியமான பிள்ளைகள், பதவி என்று கேட்போம். பக்தி maangal முக்தி, வீடு பேறு என்று கேட்பார்கள். 

காரைக்கால் அம்மையார் கேட்கிறார்...

இறவாத அன்பு வேண்டும் என்று முதலில் கேட்கிறார்.
அப்புறம், பிறவாமை
அப்புறம், மீண்டும் பிறந்தால் உன்னை மறவாமை 
கடைசியில், இறைவா உன் திருவடிக்கீழ் இருக்கும் முக்தி வேண்டும் என்று கேட்கிறார்.

Thursday, August 30, 2012

பெரிய புராணம் - முதல் பாடல்

பெரிய புராணம் - முதல் பாடல்

நீங்கள் எப்பவாவது கவிதை எழுத நினைத்ததுண்டா?

ஏதேதோ எழுத வேண்டும் என்று தோன்றும்...இதை எழுதலாமா, அதை எழுதலாமா ? இப்படி எழுதலாமா ? அப்படி எழுதலாமா ? என்று மனம் கிடந்து அலை பாயும்...ஆனால் எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாது.

பெரிய பெரிய ஞானிகளுக்கே இந்த கஷ்டம் இருந்திருக்கிறது. 

இறைவனே நேரில் வந்து முதல் அடி எடுத்து தந்து இருக்கிறான்...

அருணகிரி நாதருக்கு "முத்தை தரு" என்று முதல் அடி எடுத்துத் தந்தான்.

குமர குருபரருக்கு "திகடசக்கரம்"என்று எடுத்துக் கொடுத்தான் முருகன். 

சேக்கிழாரும் முதல் அடி கிடைக்காமல் தடுமாறிக் கொண்டு இருந்தார். 

இறைவனே "உலகெல்லாம்" என்று அடி எடுத்துக் கொடுத்தான்.

சேக்கிழார் எழுதிய பெரிய புராணத்தின் முதல் பாடல்  

Wednesday, August 29, 2012

தனிப்பாடல் - விதி


தனிப்பாடல் - விதி


நம்முடைய சாதனைகள் என்ன ? 

நம்முடைய பெற்றோருக்கு நாம் பிறந்தது, நம் உடன் பிறப்புகள், சுற்றம், நாம் பிறந்த ஊர், நம் தாய்மொழி இப்படி எவ்வளவோ விஷயங்கள் நமக்கு அதுவாக அமைந்தவை. நாம் கேட்டு பெற்றது அல்ல.

குணங்குடி மஸ்தான் சாகிபு பாடுகிறார்...

Tuesday, August 28, 2012

தனிப்பாடல் - வறுமையின் கொடுமை


தனிப்பாடல் - வறுமையின் கொடுமை


குமண வள்ளலை பற்றிய பாடல்.

 குமணன் ஒரு நாட்டின் அரசன். சிறந்த தமிழ் பற்று உள்ளவன். கொடை வள்ளல். 

குமணனின் தம்பி குமணனை நாட்டை விட்டே துரத்தி விட்டான். 

நாடில்லாமல், கையில் காசில்லாமல், காட்டில் மறைந்து வாழ்கிறான் குமணன்.

குமணனின் தலையை கொண்டு வருவோர்க்கு பரிசு தருவதாக அறிவித்து இருக்கிறான் பாசாக்கார தம்பி. 

இந்த நிலைமையில், வறுமையால் வாடும் புலவன் குமணனிடம் வருகிறான். 

என்வீட்டு அடுப்பில் நெருப்புக்கு பதில் ஆம்பல் பூ பூத்து இருக்கிறது. 

என் கை குழந்தை, என் மனைவியின் பால் இல்லாத மார்பை முட்டி முட்டி பசி போகாமல் அவளுடைய முகத்தைப் பார்கிறது.

அவள் என்னை பார்க்கிறாள்.

நான் உன்னை பார்க்க வந்தேன் என்கிறான். 

எவ்வளவு வறுமை. எவ்வளவு அன்யோன்யம் ஒரு புலவனுக்கு அரசனிடம். 

பசியால் அழும் குழந்தை. 

அதற்கு பால் தர முடியாமல் தவிக்கும் தாய்

கையாலாகாத புலவனாகிய தந்தை

அவனுக்கு உதவ முடியாத நிலையில் அரசனான குமணன்...

குமணன் எப்படியாவது தனக்கு உதவுவான் என்ற நம்பிக்கை ஊடாடும் அந்தப் பாடல் 

Sunday, August 26, 2012

கம்ப இராமாயணம் - எம்மையும் தருவன


கம்ப இராமாயணம் - எம்மையும் தருவன 


இராமாயணத்தில், பரதனும் இராமனும் கங்கை ஆற்றின் கரையில் சந்திக்கும் இடம் உணர்ச்சிகளின் உச்சகட்டங்களில் ஒன்று. 

ஒரு புறம் நைந்து, நெகிழ்ந்து, உருகி நிற்கும் பரதன்

மறுபுறம், முதலில் வெகுண்டு, பின் பரதன் மேல் கொண்ட பாசத்தால் கண்ணீர் வார்த்து நிற்கும் இலக்குவன்

இன்னொரு  புறம், தீராத காதலன் குகன்

இவர்களோடு வசிட்டன், மந்திரிகள், மக்கள் எல்லாம் இராமனை அந்த கோலத்தில் கண்டு வருந்தி, எப்படியாவது அவனை தங்களோடு கூட்டிக் கொண்டு செல்ல விரும்பும் கூட்டம்

பரதன் எவ்வளவோ சொல்கிறான், "வா, வந்து அரசாட்சியை ஏற்றுக் கொள் "என்று. வசிட்டனும் அது தான் சரி என்கிறான். 

இராமன் மறுத்து விடுகிறான். 

சரி, இனிமேல் இராமனை வற்புறத்த முடியாது என்று தெரிந்து கொண்டு, பரதன் நாட்டை ஆள சம்மதிக்கிறான். 

போகும் போது, இராமனின் பாதுகைகளை கேட்கிறான். 

இராமனும் தந்தான்...எதை ?

Thursday, August 23, 2012

கலிங்கத்துப் பரணி - கடல் அளவு அமுதம்


கலிங்கத்துப் பரணி - கடல் அளவு அமுதம்


கொஞ்சம்போல அமுதம் கிடைத்தாலே எவ்வளவு இனிமையாக இருக்கும்..?
அதுவே கடல் அளவு கிடைத்தால் எப்படி இருக்கும் ?

அவள் கடல் அளவு அமுதம் போன்றவள்...அள்ள அள்ள குறையாத இன்பம்..
வற்றாத இன்பக் கடல்...

உடுக்கை போல் சிறுத்த இடை, காது வரை நீண்ட விழி, இளமையான அவள் மார்பு ...

ஒரு நாள் அவர்களுக்குள் ஊடல்...பாக்க மாட்டேன் என்று கதவை சாத்திக் கொண்டாள்...

அவளிடம் கெஞ்சுகிறான்..."கதவை திற"என்று கொஞ்சுகிறான்...அவள் மிஞ்சுகிறாள்..

அவர்கள் இடையே ஊடல் நாடகம் ஊடாடிக் கொண்டு இருக்கிறது....

பிரபந்தம் - அவன் வராவிட்டால், உயிர் காப்பார் யார்


பிரபந்தம் - அவன் வராவிட்டால், உயிர் காப்பார் யார் 


அவன் நினைவாகவே இருக்கிறது அவளுக்கு.

தூக்கம் வரவில்லை. இரவு ஏறி விட்டது. ஊரே உறங்குகிறது.
உலகம் எல்லாம் தண்ணீரில் மூழ்கி விட்டது மாதிரி ஒரே அமைதி.
இரவு நகர மாட்டேன் என்கிறது...நீண்டு கொண்டே போகிறது....
அவன் வராவிட்டால்,அவள் எப்படி உயிர் தரிப்பாள்...