Friday, September 7, 2012

கலிங்கத்துப் பரணி - பூவோடு உயிரையும் சொருகினாள்

கலிங்கத்துப் பரணி - பூவோடு உயிரையும் சொருகினாள்


அவனும் அவளும் எதிர் எதிர் வீடு. 

பார்த்தது உண்டு. பேசியதில்லை. 

இருவருக்குள்ளும் காதல் ஊடு பாவாய் ஓடி கொண்டிருக்கிறது. 

தினமும் காலையில் அவள் வீட்டு தோட்டத்தில் உள்ள ரோஜா செடியில் இருந்து ஒற்றை ரோஜாவை பறித்து தலையில் வைத்துக் கொள்வாள். 

வைக்கும் போது அவன் பார்க்கிறானா என்று ஓரக் கண்ணில் ஒரு பார்வை வேறு. உதட்டோரம் கசியும் ஒரு புன்னகை. 

அவள் பறித்து தலையில் சொருகியது ரோஜாவை மட்டுமா ? அவன் உயிரையும் தான். 


தனிப் பாடல் - தமிழுக்காக தலை கொடுத்த வள்ளல்


தனிப் பாடல் - தமிழுக்காக தலை கொடுத்த வள்ளல்


குமணன், அவன் தம்பியால் நாட்டை விட்டு விரட்டப் பட்டு காட்டில் இருக்கிறான். குமணனின் தலையை கொண்டு வருபவர்களுக்கு பரிசு அறிவித்து இருக்கிறான் அவன் பாசக்கார தம்பி.

அப்போது, குமணனிடம்  தன் வறுமையை சொல்கிறான் ஒரு புலவன். குமணனிடம் கொடுப்பதற்கு ஒன்றும் இல்லை. யோசிக்கிறான். தன்னிடம் இல்லை என்று வந்தவனை எப்படி வெறும் கையோடு அனுப்பவுது என்று அவன் மனம் வருந்துகிறது. 

புலவனிடம் சொல்லுவான் "புலவரே, என் தம்பி என் தலைக்கு விலை வைத்து இருக்கிறான். என் தலையை வெட்டி கொண்டு போய் கொடுத்தால் உங்களுக்கு நல்ல சன்மானம் கிடைக்கும். என் தலையயை எடுத்துக் கொள்ளுங்கள்"என்று தலையும் தந்தான்....

பாடல் 

கலிங்கத்துப் பரணி - மலையில் ஆடி வரும் மயில்கள்


கலிங்கத்துப் பரணி - மலையில் ஆடி வரும் மயில்கள்


காதலன் போருக்கு சென்று திரும்பி வருகிறான்.

அவன் வருவான் வருவான் என்று காத்திருந்து சலித்துப் போனாள் அவள்.

கடைசியாக வந்து விட்டான். ஒரு புறம் அவனை காண வேண்டும் என்று ஆவல். 

மறு புறம் தன்னை காக்க வைத்ததால் வந்த கோவம். "நாம எவ்வளவு நாள் அவனைப் பார்க்காமல் கஷ்டப் பட்டோம்..அவனும் கொஞ்சம் படட்டும்"என்று கதவை திறக்காமல் ஊடல் கொள்கிறாள் காதலி.

அவளை சமாதனப் படுத்த காதலன் கொஞ்சுகிறான்

" நீ நடந்து வருவதே தேர் ஆடி ஆடி வருவது மாதிரி இருக்கு. உன் மார்பில் ஆடும் அந்த chain , அலை பாயும் உன் கண்...எல்லாம் பார்க்கும் போது மலையில் இருந்து ஆடி ஆடி இறங்கி வரும் மயில் போல் இருக்கிறாய் நீ "என்று அவளுக்கு ஐஸ் வைக்கிறான்...
  

Wednesday, September 5, 2012

முத்தொள்ளாயிரம் - அழகு திருடன்


 முத்தொள்ளாயிரம் - அழகு திருடன்


அவன் அந்த நாட்டின் தலைவன். அரசன். 

அந்த ஊரில் பெண்கள் எல்லாம் மிக அழகாக இருக்கிறார்கள். (ஜொள்ளு).

கொப்பும் குலையும், மப்பும் மந்தாரமுமாய் இருக்கிறார்கள். 

அவர்கள் ஒரு முறை அவனைப் பார்த்தால் போதும், காதல் வயப் பட்டு, சோறு தண்ணி இல்லாமல், தூக்கம் இல்லாமல் மெலிந்து துவண்டு பொலிவிழந்து போகிறார்கள். 

ஏதோ அவன் வந்து அவர்கள் அழகை கவர்ந்து கொண்டு போன மாதிரி இருக்கிறது. அவனைப் பார்த்த பின் அவர்கள் அழகு காணாமல் போய் விடுகிறது. அப்ப அவன் தான திருடிக் கொண்டு போய் இருக்க வேண்டும் ? 

அப்படி அழகை திருடி கொண்டு போகும் மன்னன் எப்படி ஒரு நல்ல செங்கோல் செலுத்தும் அரசனாக இருக்க முடியும் ?

Tuesday, September 4, 2012

கம்ப இராமாயணம் - செருப்புக்கு ஈந்தான்


கம்ப இராமாயணம் - செருப்புக்கு ஈந்தான்


இராமன் திருவடி உயர்ந்தது.

அவன் திருவடியை தாங்கிய பாதுகை அதனினும் உயர்ந்தது.

அவன் காலைப் பற்றியதால் அந்த பாதுகை அரியணை ஏறியது. 

பதினான்கு ஆண்டு காலம் அரசாண்டது.

பதினான்கு ஆண்டு காலம் கழிந்து இலக்குவனும் பரதனும் சந்திக்கிறார்கள்.

இலக்குவன் பரதன் காலில் விழுகிறான். 

வீரக் கழல் அணிந்தவன் இந்திரன்.

அவனை வென்றவன் இந்திரசித்து.

அந்த இந்திரசித்தை வென்றவன் இலக்குவன்.

அப்படிப்பட்ட இலக்குவன் பரதன் காலில் விழுந்தான்.

பரதன் யார் ? யானை, தேர், குதிரை போன்ற படைகளை உடைய நாட்டின் ஆட்சியை ஒரு தோலால் செய்த செருப்புக்கு (இராமனின் பாதுகைகளுக்கு) அளித்தவன். 

புரிகிறதா கம்பனின் கவித்திறம்.

இந்திரன் பெரிய ஆள். அவனை வென்றவன் இந்திரசித்து. அவனை வென்றவன் இலக்குவன். இலக்குவன் பரதன் காலில் விழுகிறான். அந்த பரதனோ ஒரு செருப்பினை பூசிக்கிறான். அப்படியென்றால் அந்த செருப்பை அணிந்தவன் எப்படி பட்டவனாய் இருக்க வேண்டும் ?

பாடல் 

அனையது ஓர் காலத்து, அம் பொன் சடை முடி அடியது ஆக,
கனை கழல் அமரர் கோமாற் கட்டவன் - படுத்த காளை,
துனை பரி, கரி, தேர், ஊர்தி என்று இவை பிறவும், தோலின்
வினை உறு செருப்புக்கு ஈந்தான் விரை மலர்த் தாளின் வீழ்ந்தான்

பொருள்
அனையது ஓர் காலத்து = அப்படிப்பட்ட ஒரு காலத்தில்

அம் பொன் சடை முடி அடியது ஆக= அழகிய பொன்னால் செய்யப்பட்ட மகுடம் அணிந்த முடி (பரதன்) காலில் பட 

கனை கழல் = வீரக் கழல் (ஆடவர் அணியும் கொலுசு போன்ற அணிகலன்)

அமரர் கோமாற் = அமரர்களின் தலைவன் (இந்திரன் )

கட்டவன் - படுத்த = வென்றவனை (இந்திரசித்து) வெற்றி கொண்ட 

காளை, = இலக்குவன் 

துனை பரி, கரி, தேர், ஊர்தி = காலாட் படை, குதிரை, யானை, தேர், மற்ற துணைகள் 

என்று இவை பிறவும், = அது மட்டும் அல்லாமல், மற்றவற்றையும்

தோலின் = தோலால் செய்த

வினை = செயல் (இங்கு ஆட்சி என்று கொள்ளலாம்)

உறு = சிறந்த, பெரிய

செருப்புக்கு = செருப்புக்கு

ஈந்தான் = தந்தவன் (பரதன்)

விரை மலர்த் தாளின் வீழ்ந்தான் = அவனுடைய திருவடியில் வீழ்ந்தான் 

Saturday, September 1, 2012

தேவாரம் - மந்தி மலர் சிந்தும் மயிலாடு துறை


தேவாரம் - மந்தி மலர் சிந்தும் மயிலாடு துறை


சின்ன குழந்தைகளுக்கு குரங்கு என்றால் ரொம்ப பிடிக்கும். அது செய்யும் சேட்டைகளை பார்த்து வியந்து இரசிப்பார்கள்.

ஞானசம்மந்தர் சிறிய வயதில் ஞானம் பெற்றவர் என்று வரலாறு பேசும்.

அவர் மாயவரம் என்று இன்று அழைக்கப்படும் மயிலாடு(ம்)  துறைக்கு சென்றார்.

அங்கே காவிரி ஆறு சுழித்துக்கொண்டு ஓடுகிறது. 

அந்த நீர் பிரவாகம் வரும் வழியில் சந்தனம், அகில், மலர்கள் எல்லாம் அடித்துக் கொண்டு வருகிறது. 

அப்படி வரும் போது அந்த ஆற்றின் நீர் கரையில் மோதி நீர் திவலைகள் தெறிக்கிறது.

தெறிக்கும் நீர் துளிகளோடு ஆற்றில் வந்த மலர்களும் அருகில் உள்ள 

மரங்களின் மேல் உள்ள குரங்குகளின் மேல் விழுகிறது.

அந்த குரங்குகள் அதனால் கோவம் அடைந்து மரத்தில் இருந்து மலர்களை பறித்து ஆற்றின் மேல் எறிகின்றன...

அப்படிப்பட்ட ஊரான மயிலாடுதுறையில் சிவன் வசிக்கிறார் 
 
அந்தண்மதி செஞ்சடைய ரங்கணெழில் கொன்றையொ டணிந்தழகராம்
எந்தமடி கட்கினிய தானமது வேண்டிலெழி லார்பதியதாம்
கந்தமலி சந்தினொடு காரகிலும் வாரிவரு காவிரியுளால்
வந்ததிரை யுந்தியெதிர் மந்திமலர் சிந்துமயி லாடுதுறையே.

சீர் பிரித்த பின் 

அந்தண்மதி செஞ் சடையர்  அங்கண் எழில் கொன்றையோடு அணிந்த அழகராம் 
எம் தம் அடிகளுக்கு இனிய  தானம் அது வேண்டில் எழிலார் பதியதாம்
கந்த மலி சந்தினொடு கார் அகிலும் வாரி வரும் காவிரி உள்yu
வந்த திரை உந்தி எதிர் மந்தி மலர் சிந்தும் மயிலாடு துறையே 

பொருள்

அந்தண்மதி = அந்த + தண் + மதி = அந்த குளிர்ந்த நிலவை

செஞ் சடையர் =  தன்னுடைய சிறந்த சடை முடியில் அணிந்த

அங்கண் = அந்த சடையில்

எழில் கொன்றையோடு = அழகான கொன்றை மலரை

அணிந்த அழகராம் = அணிந்த அழகராம்

எம் தம் அடிகளுக்கு = எம்முடைய கடவுளான சிவா பெருமானுக்கு

இனிய  தானம் = இனிமையான இருப்பிடம்


அது வேண்டில் = அதை தெரிந்து கொள்ள வேண்டினால்  

எழிலார் பதியதாம் = எழிலார்ந்த இடமாம் 

கந்த மலி = மணம் நிறைந்த (கந்தம் = நறுமணம்)

சந்தினொடு = சந்தனத்தோடு

கார் அகிலும் = அகில் என்ற வாசனை பொருளும்

வாரி வரும் காவிரி உள் = வாரி வரும் காவிரி ஆற்றின்

வந்த திரை  = வந்த அலை (திரை கடல் ஓடியும் திரவியம் தேடு )

உந்தி எதிர் = மேல் வந்து எதிரில் தெறிக்க, அதை எதிர்த்து

மந்தி மலர் சிந்தும் = மந்தி மலரை எடுத்து வீசும்

மயிலாடு துறையே  = மயிலாடு துறையே 


வில்லி பாரதம் - ஆண் தோற்கும் இடம்


வில்லி பாரதம் - ஆண் தோற்கும் இடம்


ஒரு பெண்ணின் அன்பை பெற ஆண், அவளிடம் கெஞ்சி, கொஞ்சித்தான் பெற வேண்டியிருக்கிறது.

மிரட்டி உருட்டி புஜ பல பராகிரமங்களை காட்டி "என்னை லவ் பண்ணலேனா பிச்சிபுடுவேன் பிச்சி "என்று அவளின் காதலை பெற முடியாது.

பெண்ணின் அழகின் முன்னால் ஆண் மண்டியிடுவது அவளின் அழகுக்கு பெருமை, அவனின் ஆண்மைக்கு பெருமை. 

வில்லிபுத்ராழ்வார் எழுதிய பாரதத்தில் ஒரு இடம்.

திரௌபதியை நீராட்டி ஆடை அணிகலன்கள் அணிவித்து திருமண மண்டபத்துக்கு அழைத்து வருகிறார்கள்.

அவளின் அழகை பார்த்த ஆண்களின் ஆண்மை (வீரம்) தேய்ந்ததாம்...