Friday, October 5, 2012

தக்கயாக பரணி - புலவியா ? கலவியா ?


தக்கயாக பரணி - புலவியா ? கலவியா ?


தக்க யாக பரணி என்ற நூலை எழுதியவர் ஒட்டக் கூத்தர். 

கலிங்கத்துப் பரணி போல், இதிலும், கடை திறப்பு என்ற பகுதி உண்டு. 

கணவனோ, காதலனோ அவர்களின் மனைவியையோ, காதிலியையோ கெஞ்சி கூத்தாடி கதவை திறக்கச்  சொல்லும் பாடல்கள்.

காம நெடி கொஞ்சம் தூக்கலான பாடல்கள்.

அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் எப்படி வாழ்கையை, குறிப்பாக இல்லற வாழ்கையை அனுபவித்தார்கள் என்பதை விளக்கும் பாடல்கள்.

நீண்ட நாள் கழித்து கணவன் வருகிறான்.

அவனைக் காண வேண்டும் என்று, அவனைக் கட்டி அணைக்க வேண்டும் என்று ஆவலோடு இருக்கிறாள் அவன் மனைவி.

அவன் வந்து விட்டான்.

ஓடிச்சென்று அவனை இறுகத் தழுவிக் கொள்கிறாள்.

அவனுக்கும் அவள் மேல் அவ்வளவு ஆசை.

இருவரும் ஒருவரை ஒருவர் ஈருடல் ஓர் உயிராய் இறுகத் தழுவி நின்றார்கள்.

அவர்கள் அப்படி உத்வேகத்துடன் கட்டி கொண்டு இருப்பது, காதலில் அணைந்துகொண்டது மாதிரியும் இருக்கிறது. ஆக்ரோஷமாய் இரண்டு எதிரிகள் ஒருவரை ஒருவர் மல் யுத்தத்தில் கட்டி பிடித்து சண்டை இடுவது போலவும் இருக்கிறது.

அப்படி கட்டி அணைக்கும் பெண்களே, கொஞ்சம் கதவை திறவுங்கள் என்று பாடுகிறான் கணவன்....

Thursday, October 4, 2012

தண்டலையார் சதகம் - தன் வலி, தனி வலி


தண்டலையார் சதகம் - தன் வலி தனி வலி 

சில பேருக்கு மற்றவர்கள் வலி தெரியாது. தங்கள் வலி மட்டும் தான் பெரிதாய் தெரியும். அப்படி பட்டவர்களின் பட்டியலை தருகிறது தண்டலையார் சதகம்.

நொந்தவர், பசித்தவர், விருந்தினர், விரகம் உள்ளவர், நோய் வாய் பட்டவர், எப்படி சவலைப் பிள்ளை தாயிடம் பால் அருந்தாமல் இருந்தால் அந்த தாயின் மார்பில் பால் கட்டி தாய் துன்பப் படுவதை அந்தக் குழந்தை அறியாதோ அது மாதிரி. 

மணிமேகலை - அறியாமலே கழிந்த இளமை


மணிமேகலை - அறியாமலே கழிந்த இளமை


கருத்து வேறுபாடு, இரசனை வேறுபாடு, சண்டை, சச்சரவு, உன் குடும்பம், என் குடும்பம் என்று கணவன் மனைவிக்கிடையே காலம் சென்று விடுகிறது. 

ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதே இல்லை. புரிந்து கொள்ள நேரம் இருப்பதும்  இல்லை.

வாழ்க்கை மிக வேகமாக ஓடி விடுகிறது. பெற்றோரர்கள் மறைந்து விடுகிறார்கள். 

பிள்ளகைள் வேலை திருமணம் என்று பிரிந்து போய் விடுகிறார்கள். 

கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் முதல் தடவை பார்ப்பது போல பார்க்கிறார்கள்.  

மாணவி சொல்கிறாள்....வாழ்கை பூராவும் நாம் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவே இல்லை. உனக்கு அறுபது வயது ஆகி விட்டது. என் கூந்தலும் முற்றும் நரைத்து விட்டது. நம் அழகு எல்லாம் போய் விட்டது. இளமையும் காமமும் எங்கே போய் விட்டன ? இருந்தாலும் உன்னை எனக்குப் பிடிக்கிறது. உனக்கும் என்னை பிடிக்கும் என்றே நினைக்கிறேன். இந்த ஜென்மம் இப்படியே போய் விட்டது. இன்னோர் பிறவி இருந்தால் மீண்டும் உன்னோடு சேரவே எனக்கு ஆசை.....

Wednesday, October 3, 2012

கம்ப இராமாயணம் - தசரதனுக்கு ஏன் முடி நரைத்தது ?


கம்ப இராமாயணம் - தசரதனுக்கு ஏன் முடி நரைத்தது ?


ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் இந்த உலகை ஆண்டான் தசரதன். அப்போதெல்லாம் நரைக்காத அந்த காதோர ஒற்றை முடி, இப்போது மட்டும் நரைப்பானேன் ?

கேள்வி வருமா இல்லையா ?

கம்பன் அதற்க்கும் பதில் தருகிறான். 

இராவணனின் தீமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போயிற்று. அந்த தீமைதான் நரை முடியாக வந்து சேர்ந்தது என்கிறான் கம்பன். இராவணன் மட்டும் ஒழுங்காக இருந்திருந்தால் இந்த நரை முடி வந்து இருக்காது என்பது உள் அர்த்தம். 

கம்ப இராமாயணம் - உவமை இல்லா அழகு


கம்ப இராமாயணம் - உவமை இல்லா அழகு


ஒரு பொருளுக்கு இன்னொன்றை உவைமையாகச் சொல்ல வேண்டும் என்றால், உவமை பொருளை விட சிறப்பாக இருக்க வேண்டும்.

நிலவு போன்ற முகம் என்றால் முகத்தை விட நிலவு அழகு.

தாமரை போன்ற பாதம் என்றால் பாதத்தை விட தாமரை அழகு.

கீழான ஒரு பொருளை யாரும் உவைமையாக சொல்ல மாட்டார்கள்.

உவமை என்பது உயர்த்திச் சொல்வது.

அப்படி பார்த்தால் சீதையின் அழகுக்கு எதை உதாரணமாக சொல்வது ? 

எல்லாவற்றையும் விட அவளின் அழகு உயர்வாக இருக்கிறது.

எதைச் சொன்னாலும் அவளின் அழகு அதையும் விஞ்சி நிற்கிறது. 

கம்பன் திணறுகிறான்.

சீதையை பார்த்து விட்டு வந்து இராவணனிடம் சூர்பனகை சொல்கிறாள்.

"இராவணா, அந்த சீதை எப்படி இருக்கிறாள் தெரியுமா...

அவள் நெற்றி வில் போல் இருக்கும், 

அவள் விழி வேல் போல் இருக்கும்,

அவள் பல் முத்துப் போல் இருக்கும்,

அவள் இதழ்கள் பவளம் போல் இருக்கும்,

என்றெல்லாம் சொன்னாலும், சொல்வதற்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம் ஆனால் அது உண்மை இல்லை. 

அவளின் அழகுக்கு உவமையே இல்லை.

இந்த நெல் இருக்கிறதே அது புல்லு மாதிரி இருக்கும் அப்படின்னு சொன்னா அது சரியா இருக்குமா ? இருக்காதுல? அது போலத் தான் இந்த உவமைகளும் 

என்று சொல்கிறாள்.

அப்படி சொல்வதன் மூலம், அவளின் அழகு இந்த உவமைகளை விட சிறப்பானது என்று சொல்கிறார். புல்லை விட நெல் எவ்வளவு உயர்ந்ததோ அது போல் இந்த உவமைகளை விட அவளின் அழகு உயர்ந்தது என்று சொல்லாமல் சொல்கிறார் கம்பர். 

கவிஞ்ஞர்கள் உவமை சொல்லும் போது , நிலவு போன்ற முகம் என்பார்கள். 

இன்னும் ஒரு படி மேலே போய் "நிலவு முகம்", " முகத் தாமரை" என்று உவமையையும் உருவகத்தையும் ஒன்றாக்கி ஒரே வார்த்தை  போல் சொல்வார்கள். கம்பர் ஒரு படி மேலே போகிறார். 

முதலில் வில் ஒக்கும் நுதல் என்றார் - வில்லைப் போல் நெற்றி

பின் வேல் ஒக்கும் விழி என்றார் - வேலை போன்ற விழி

கொஞ்சம் மாற்றி யோசிக்கிறார் 

முத்துப் போல் பல் என்று சொல்லவில்லை. பல் போல முத்து இருக்கும் 
என்றார். இப்போ எது உயர்வு ? அவளின் பல்லா அல்லது முத்தா ?

இன்னும் கொஞ்சம் மாற்றி யோசிக்கிறார், பவழமே இதழ் என்றார். 

பவளம் போல் இதழ் என்றோ, இதழ் போன்ற பவளம் என்றோ சொல்லவில்லை. 

பவளம் தான் இதழ் என்று எப்படி எல்லாமோ சொல்லி பார்க்கிறார்.

நீங்களும் படித்துப் பாருங்களேன்....
 

பாடல்

Tuesday, October 2, 2012

கம்ப இராமாயணம் - நமக்காக வாழ்வது எப்போது


கம்ப இராமாயணம் - நமக்காக வாழ்வது எப்போது 


கணவனுக்காக, மனைவிக்காக, குழந்தைகளுக்காக, நண்பர்களுக்காக, உறவினர்களுக்காக, வேலை செய்யும் நிறுவனத்திற்காக என்று நாம் மற்றவர்களுக்காகவே நம் வாழ்நாளை செலவிட்டுக் கொண்டு இருக்கிறோம்.

எப்போது நமக்காக வாழ்வது ? இவ்வளவும் இல்லாவிட்டால் நாம் என்ன செய்து கொண்டிருப்போம் ?

ஒரு நாள் தசரதன் கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்த்தான். காதோரம் ஒரே ஒரு நரைமுடி. அந்த நரை முடி அவனிடம் ஏதோ சொல்லுவது போல் இருந்தது. உன்னிப்பாக கேட்டான். 

'மன்னனே, நீ இந்த அரசாட்சியை உன் மகனிடம் தந்து விட்டு, கானகம் சென்று தவம் செய்யச் செல் ' என்று சொல்லியது. 

நமக்குத்தான் எத்தனை நரை முடி. அது எவ்வளவு சொல்கிறது. எங்கே கேட்கிறோம். பத்தா குறைக்கு அதன் மேல் சாயத்தை பூசி மறைக்கிறோம்.

தசரதனிடம் அந்த நரை முடி சொன்ன பாடல்...

Monday, October 1, 2012

அபிராமி அந்தாதி - நம்ம வீட்டுப் பெண்

அபிராமி அந்தாதி - நம்ம வீட்டுப் பெண்


திடீரென்று கடவுள் உங்கள் முன்னால் வந்து நின்றால் எப்படி இருக்கும் உங்களுக்கு ?

அவர் கடவுள் தானா என்று கூடத் தெரியாது உங்களுக்கு.
அவரோ, அவளோ , அதுவோ உங்களை விட உயரமா ? குள்ளமா ? கறுப்பா? சிவப்பா ? குண்டா ? ஒல்லியா ?

ஒண்ணும் தெரியாது. 

முன்ன பின்ன பார்த்து இருந்தாதான ?

அபிராமி தெருவில் நடந்து வருகிறாள். சேலை கட்டி, காலில் செருப்பு அணிந்து, கையில் என்ன புத்தகமா? 

நம் கூட + 2 விலோ , கல்லூரியிலோ  படிக்கும் பெண் போல இருக்கிறாள்.

பக்கத்து வீட்டிலோ, எதிர் வீட்டிலோ, பேருந்து நிலையத்திலோ, எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு அவளை.

நம்ம அக்கா தங்கை மாதிரி, நம்ம அம்மா மாதிரி, அத்தை மாதிரி, சித்தி மாதிரி...ஏதோ நம்ம குடும்ப பெண் மாதிரி இருக்கிறாள் 

"காணுதற்கு அந்நியள் அல்லாத"  பெண் அவள். 

நம்ம வீட்டு பெண் மாதிரியே இருக்கிறாள். 

அவளை முதல் முதலில் பார்த்த உடனேயே அவள் மேல் ஒரு காதல். 

காதலா அது ? இல்லை பக்தியா ? இல்லை வேறு ஏதாவது ஒன்றா ? 

எல்லா உறவுக்கும் பெயர் இருக்கிறதா என்ன ? 

அன்பு என்று சொல்லலாமா ?

அவள் மேல் அன்பு பிறந்ததே கூட என் முன் ஜன்ம புண்ணியம் தான்.

எத்தனையோ பேர் அவளை பார்க்கிறார்கள். எல்லோருக்குமா அவள் மேல் காதல் வருகிறது ?

எனக்கு மட்டும் தானே வந்தது..ஏதோ முன் ஜன்ம புண்ணியம்....

அன்பு பூணுதற்கு எண்ணிய எண்ணம் அன்றோ முன் செய்த புண்ணியமே

...அவள் தான் ஆதி...அவள் தான் அந்தம்.. அவளால் தான் இந்த அந்தாதி...

அவள் தன இந்த உலகை எல்லாம் காக்கிறாள். இருந்தாலும் எனக்கு என்னவோ அவளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் போல் இருக்கிறது.

மற்றவர்களால் அவளுக்கு ஒரு துன்பம் வரக் கூடாது....எல்லோரும் கடவுளிடம் " கடவுளே என்னைக் காப்பாற்று" என்று வேண்டுவார்கள்...எனக்கு என்னவோ நான் அவளைக் காப்பாற்ற வேண்டும் போல் இருக்கிறது....என்னே என் பேதை மனம்...அவள் ஆதி பராசக்தி...அவளை போய் நான் காப்பாற்றுவதா...


பேணுதற்கு எண்ணிய எம் பெருமாட்டியையை 

அபிராமி பட்டர் உருகுகிறார்...படித்துப் பாருங்கள்...உங்கள் மனமும் உருகலாம்....