Wednesday, October 31, 2012

அபிராமி அந்தாதி - மனதின் இருள் அகற்றியவள்


அபிராமி அந்தாதி - மனதின் இருள் அகற்றியவள் 


சந்தையில் புதிதாக ஒரு பொருள் வந்தால் அதை வாங்க ஆசைப் படுகிறோம். புதிய கை தொலைபேசி, கணணி, சமையலறை சாதனம், புதிய புடவை, புதிய வண்டி என்று பொருள்கள் மேல் ஆசைப் படுகிறோம். 

ஆசைப் பட்டு வாங்கிய பொருள்கள் நமக்கு இன்பம் தருகின்றன. அவற்றின் பலனை அனுபவிக்கிறோம். சந்தோஷமாய் இருக்கிறது. இது இல்லாம எத்தனை நாள் கஷ்டப் பட்டேன் என்று நிம்மதி பெரு மூச்சு விடுகிறோம். 

நாள் ஆக ஆக பொருள் பழையதாகிறது. அடிக்கடி பழுதாகிறது. அதைவிட சிறந்த பொருள் சந்தையில் வருகிறது. நாம் பெருமையாய் நினைத்த பொருள் இன்று நன்றாக இல்லை. சில சமயம் அந்தநாள் எரிச்சல் வருகிறது. " இந்த சனியனை முதலில் தலைய சுத்தி விட்டு எரியனும்...இதை கட்டி யாரு மேய்கிறது ..." என்று அங்கலாய்க்கிறோம்.

பின் கொஞ்சம் தெளிவு வருகிறது. எல்லா சாமானும் இப்படித்தான். வாங்குன கொஞ்ச நாளைக்கு நல்லா இருக்கும். அப்புறம், இப்படித்தான். சரி சரின்னு போக வேண்டியது தான் என்று ஒரு ஞானம் பிறக்கிறது. 

அபிராமி, அந்த பொருளாகவும், அந்த பொருள் தரும் சுகமாகவும், அது சுகமா அல்லது சுமையா என்ற குழப்பமாகவும், அந்த குழப்பத்தில் இருந்து வரும் அறிவாகவும் இருக்கிறாள், இதை எல்லாம் அறிந்து கொள்ளும் அருளையும் அவள் எனக்குத் தந்தாள். 

முதலில் பொருட் செல்வம். பின்னர் அருட் செல்வம் ...இரண்டு செல்வத்தையும் தருபவள் அபிராமி.  

அவள் என் மனத்தில் வஞ்சமாகிய இருள் ஏதும் இல்லாமல் அத்தனையும் ஒளி வெள்ளமாகச் செய்தாள். 

அவளின் அருளை என்னவென்று சொல்லுவது.

பாடல்

Tuesday, October 30, 2012

திருவிளையாடல் புராணம் - மாணவன் இலக்கணம்


திருவிளையாடல் புராணம் - மாணவன் இலக்கணம் 


மாணவன் எப்படி படிக்க வேண்டும் ? ஒரு பாடத்தை ஒரு ஆசிரியரிடம் மட்டும் கேட்டுத் தெரிந்தால் போதாது. அந்த பாடத்தைப் பற்றி நண்பர்களிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும். ஒரு புத்தகம் மட்டும் படித்தால், ஒரே பாடத்தை இரண்டு மூணு புத்தகங்களில் படிக்க வேண்டும், துணை பாடல் நூல் (நோட்ஸ் ) இருந்தால் அதை பார்க்க வேண்டும். இன்டெர் நெட் இருந்தால், அதில் அந்த பாட சமந்தமாய் என்ன இருக்கிறது என்று தேட வேண்டும். இப்படி பல வழிகளில் அறிவை பெற்ற பின், கர்வம் இல்லாமல், தான் பெற்ற அறிவால் மற்றவர்களுக்கு இதமான சுகம் தர வேண்டும்...

இதற்கு ஒரு உதாரணம் தருகிறார் பரஞ்சோதியார்...திரு விளையாடார் புராணத்தில்...

தென்றல் காற்று இருக்கிறதே...அது முதலில் ஒரு பூங்காவுக்குள் போகும். அங்கே உள்ள மலர்களின் நறுமணத்தை எடுத்துக் கொள்ளும். அப்படியே பக்கத்தில் உள்ள குளத்தில் குதித்து கொஞ்சம் குளிர்ச்சியை எடுத்துக் கொள்ளும். அந்த குளத்தில் உள்ள தாமரை மலரை தொட்டு தடவி அதன் மணத்தையும் தேனையும் எடுத்துக் கொள்ளும். பின் அங்கிருத்து கிளம்பிப் போய் மல்லிகை, இருவாட்சி, முல்லை போன்ற மலர்களின் நறுமணத்தை எடுத்துக் கொள்ளும்...இப்படி குளிர்ச்சியையும், நறு மணத்தையும், தேனையும் சுமந்து கொண்டு இதமாக வீசும் தென்றல் காற்று ... பல பல இடங்களில் சென்று பலவிதமான அறிவை பெரும் மாணவனை போல் இருக்கிறதாம்.....

பாடல்

Monday, October 29, 2012

குறுந்தொகை - தயிர் சாதமும் புளிக் குழம்பும்


குறுந்தொகை - தயிர் சாதமும் புளிக் குழம்பும்


புதிதாய் திருமணம் முடித்து கணவனோடு அவன் வீட்டிற்கு வந்து இருக்கிறாள். வீடு ஒண்ணும் பெரியது அல்ல. விறகு அடுப்பு. அவன் வெளிய நிமித்தம் வெளியே போய் இருக்கிறான். மதியம் உணவுக்கு வீட்டிற்கு வருவான். புது மனைவி அல்லவா.

அவன் வருவதற்குள் எப்படியாவது உணவு சமைத்து வைத்து விட வேண்டும் என்று பர பர வென்று வேலை செய்கிறாள். அவளுக்கு சமைத்து அவ்வளவா பழக்கம் இல்லை. இருந்தாலும் சுவையான உணவை சமைத்து அவனுக்கு ருசியாக உணவளிக்க வேண்டும் ஆசைப் படுகிறாள். 

சாதம் ஆச்சு. என்ன பண்ணலாம் ?

தயிர் சாதம் பண்ணலாமா ?

கொஞ்சம் சாதத்தை பாத்திரத்தில் போட்டு, அதில் தயிர் விட்டு அவளுடைய காந்தள் மலர் போன்ற விரலால் பிசைகிறாள்.

பிசைஞ்சாச்சு. கைய கழுவனும். துடைக்கணும். அதுக்கெல்லாம் நேரம் இல்லை. அக்கம் பக்கம் பார்த்தாள்.  தன் சேலையில் துடைத்துக் கொள்கிறாள். படபடப்பு...பழக்கம் வேறு இல்லை. அவன் வருவதற்குள் சமைக்க வேண்டுமே என்ற ஆவல். 

விறகு வேறு ஈரமாய் இருக்கிறது. ஒரே புகை. புகை அடித்து அவள் உடல் எல்லாம் புகை வாடை அடிக்கிறது. 

அவனுக்கு புளிக் குழம்பு பிடிக்குமே என்று புளிக் குழம்பு செய்கிறாள். புளித் தண்ணியில், உப்பு, மிளகாய் தூள் எல்லாம் போட்டு விரலால் கலக்குகிறாள். 

அவன் வந்து விட்டான். அவனுக்கு பரிமாறுகிறாள். அவன் ருசித்து சாப்பிடுகிறான். அவன் முகத்தில் உள்ள சந்தோஷத்தை பார்த்து அவளுக்கும் சந்தோஷம்.

அந்த குறுந்தொகைப் பாடல் 

Sunday, October 28, 2012

கம்ப இராமாயணம் - இக்கட்டான கட்டங்கள்


கம்ப இராமாயணம் - இக்கட்டான கட்டங்கள் 


இராம காதையில் பல இக்கட்டான கட்டங்கள் உள்ளன. காப்பிய முடிச்சுகள். அந்த இடங்களில் , சில கதா பாத்திரங்கள் எப்படி நடந்து கொள்ளும் விதம் காவியப் போக்கையே மாற்றி விடும் அளவுக்கு கதை ஓட்டத்தில் ஒரு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. 

இந்த இக்கட்டான இடங்களை கம்பன் எப்படி கையாளுகிறான் என்பதை தொகுத்தால் அது ஒரு சுவாரசியமான புத்தகமாக உருவெடுக்கும்.

கைகேயி மனம் மாறும் இடம், இராமன் கானகம் செல்ல ஒத்துக் கொள்ளும் இடம், இராமன் பரதனின் வேண்டுகோளை புறக்கணிக்கும் இடம், வாலியை மறைந்து நின்று கொல்லும் இடம், சீதை லக்ஷ்மணனை இராமனை தேடிச் சொல்ல போக பணிக்கும் இடம், சூரபனகை மூக்கு அறுபடும் இடம், விபீடணன் கட்சி மாறும் இடம் என்று பல தர்ம சங்கடமான இடம். 

அதில் விபீடணன் இராவணனை விட்டு செல்லும் நிகழ்வுகளைப் பார்ப்போம். 

விபீடணன் செய்தது சரியா ? 

இராவணன் செய்த அத்தனை குற்றங்களுக்கும் துணை போனவன் விபீடணன். அவன் சீதையை தூக்கி வந்த போது ஒன்றும் சொல்லவில்லை. இராவணின் செல்வத்தை, செல்வாக்கை அனுபவித்து வந்தவன் அவன். 

ஆபத்து என்று வந்த போது இராவணனுக்கு அறிவுரை சொல்லத் தொடங்குகிறான். முதலிலேயே சொல்லி திருத்தி இருக்க வேண்டாமா ? எல்லாம் நடக்கும் வரை பார்த்துக் கொண்டு இருந்து விட்டு , கடைசியில் அறிவுரை சொல்கிறான். அறிவுரை சொல்லும் நேரம் அல்ல அது. 

இராவணன் கேட்கவில்லை. என்ன செய்திருக்க வேண்டும் விபீடணன். அண்ணனுக்காக சண்டை இட்டு இருக்க வேண்டாமா ? நல்லது சொன்னேன், நீ கேட்கவில்லை, நான் இராமனிடம் போகிறேன் என்று கிளம்பி விட்டான். 

திருக்குறள் - தீயா வேலை செய்யணும்


திருக்குறள் - தீயா வேலை செய்யணும்


எப்படி வேலை செய்யணும் என்பதற்கு வள்ளுவர் கொஞ்சம் டிப்ஸ் தருகிறார். 

அதில் முதலாவது. 

ஒரு வேலை செய்யும் முன்னால் அதோடு கூட வேற என்ன வேலை எல்லாம் சேர்த்து செய்யலாம் என்று சிந்தித்து எல்லாவற்றையும் ஒன்றாக செய்து முடிக்க வேண்டும் என்கிறார்.

எப்படி ?

இப்ப ஒரு வெளியூருக்கு வேலை நிமித்தமாய் போவதாய் வைத்துக் கொள்ளுவோம்..அப்படியே அந்த ஊரில் உள்ள நம்ம நண்பர்களையோ, உறவினர்களையோ பார்த்து விட்டு வரலாம், அங்கே உள்ள நல்ல கோவில் அல்லது சுற்றுலா இடங்களை பார்த்துவிட்டு வரலாம், அந்த ஊரில் ஏதாவது சிறப்பான பொருள் அல்லது மலிவான பொருள் இருந்தால் அதை வாங்கி வரலாம். இப்படி, அலுவலக வேலையோடு இன்னும் ஓரிரண்டு வேலைகளை சேர்த்து செய்வது உத்தமம். 

அலுவலகத்தில் இருந்து திரும்பி வரும்போது வீட்டுக்கு வேண்டிய பொருட்களை வாங்கி வரலாம். 

எப்போதும் ஒரு வேலைய மட்டும் செய்யக் கூடாது...ஒரு வேலை கூட ஒண்ணு ரெண்டை சேர்த்து செய்ய வேண்டும் என்கிறார். 

எப்படி ஒரு யானையை வைத்து இன்னொரு யானையை பிடிப்பார்களோ அது மாதிரி...ஒரு வேலையின் மூலம் இன்னொரு வேலையும் செய்து முடிக்க வேண்டும்....

பாடல்

அபிராமி அந்தாதி -நெஞ்சத்து அழுக்கை எல்லாம் துடைத்தனை


அபிராமி அந்தாதி -நெஞ்சத்து அழுக்கை எல்லாம் துடைத்தனை


அபிராமி, இந்த பிறவி வஞ்சம்  நிறைந்ததாய் இருக்கிறது. முதலில் நான் வஞ்சகன். நினைப்பது ஒன்று செய்வது ஒன்றாய் இருக்கிறது என் நிலை. என் சுற்றி உள்ளவர்களும் அப்படியே. 

வஞ்சம் நிறைந்த இந்த பிறவி முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நீ அந்த பிறவி தொடரை உடைத்தாய். 

கல்லைப் போன்ற என் கடின நெஞ்சை நீ நெகிழ வைத்தாய். உருக வைத்தாய். உன் அன்பை கண்டு என் உள்ளம் உருகுகிறது.

உன் தாமரை போன்ற பாதங்களை என் தலையின் மேல் சூடும் பாக்கியத்தை நீ தந்தாய். 

என் மனத்தில் எத்தனையோ அழுக்குகள் குவிந்து கிடக்கிறது. அதை கொஞ்சம் தண்ணி விட்டு கழுவ முடியாது என்பதால் உன் அருளாகிய வெள்ளத்தால் அத்தனை அழுக்கையும் அடித்துக்கொண்டு போக வைத்தாய்.

உன் அருளை என்னவென்று சொல்லுவது.

பாடல்

Friday, October 26, 2012

அபிராமி அந்தாதி - இருவர் அறிந்த இரகசியம்


அபிராமி அந்தாதி - இருவர் அறிந்த இரகசியம்


எனக்கு அவள் மேல் தீராத காதல். 

அவள் என் மனம் எல்லாம் நிறைந்து நிற்கிறாள். எந்நேரமும் அவள் நினைவு தான். வேறு ஒருவரை பற்றியும் சிந்தனை இல்லை. 

என் மனதில் தான் அவள் இருக்கிறாள். அவள் மனதில் நான் இருக்கிறேனா என்று தெரியாது. ஒரு வேளை இருக்கலாம். 

இதை அவளிடம் சொல்லவில்லை. அவள் எங்கே , நான் எங்கே. எப்படி சொல்வது. ஒரு நாள் அவளோட அண்ணன் விசாரித்தான்..."ஆம், உன் தங்கையை நான் நேசிக்கிறேன்...ஆனால் அவளிடம் கூட இதை சொல்லவில்லை " என்றேன். என்னை ஒரு மாதிரி பார்த்து விட்டு போய் விட்டான்.

கொஞ்ச நாள் கழித்து அவளுக்கு திருமணம் ஆகி விட்டது.  ஒரு நாள் அவள் கணவனிடம் போய் " நான் உன் மனைவியை நேசிக்கிறேன்" என்று சொன்னேன். அவருக்கும் என்ன சொல்வது என்று தெரியவில்லை. 

திருமணம் ஆன பெண்ணை நேசிக்கக் கூடாது என்று யார் சொன்னது ?

நாயகன் நாயகி பாவம் என்று கேள்வி பட்டு இருக்கிறோம். இறைவனை நாயகனகாவும் தன்னை நாயகியாகவும் வரித்து பல ஆண் பக்தர்கள் பாடல் புனைந்து இருக்கிறார்கள். 

ஆனால் இறைவியை காதலியாகவோ, துணைவியாகவோ யாரும் பாடிய மாதிரி தெரியவில்லை. 

அது இலக்கண இலக்கிய வரம்புக்குள் வராத ஒன்றாக இருக்கலாம். 

அபிராமி அந்தாதியின் பாடல்களைப் படிக்கும்போது எனக்கு காதலியின் அதீத காதல் கொண்ட ஒரு காதலன் அதை சொல்ல முடியாமல் தவிக்கும் பாடல்கள் போலவே தோன்றும்.

இது சரியா தவறா என்று தெரியவில்லை. எனக்கு இப்படி தோன்றுகிறது.

பாடல்