Thursday, November 8, 2012

இராமயணம் - வாயெல்லாம் உலர்ந்தது


இராமயணம் - வாயெல்லாம் உலர்ந்தது

ஒரு ஆபத்து என்றால், நமக்கு இதயம் பட படவென்று அடித்துக் கொள்ளும், வியர்க்கும், வாயெல்லாம் உலர்ந்து போகும்.

கும்ப கர்ணன் போர் களத்திற்கு வந்திருக்கிறான். அவனை பார்க்க விபீடணன் செல்கிறான்.

விபீடணன் சென்றது கும்பகர்ணனை இராமன் பக்கம் இழுக்க. அப்படி கும்ப கர்ணன் வந்து  விட்டால் அவனுக்கு ஆபத்து வராது என்ற சகோதர பாசத்தில்

கும்ப கர்னணன் நினைத்தான், எங்கே விபீடணன் மீண்டும் இராவணன் பக்கம் வந்து விடுவானோ, அப்படி வந்து விட்டால் அவனுக்கு ஆபத்து ஆயிற்றே என்று பதறுகிறான் - சகோதர பாசத்தில்.

விபீடணனை பாரத்ததும் கும்பகர்ணன் சொல்கிறான்...

"....இராவணனால் நம் குலத்தின் இயல்பு அழிந்தது. ஆனால் உன்னால் அது சரி செய்யப்பட்டு புண்ணியம் பெற்றது. உன் தோள்களைப் பார்த்து எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் நீ என்னை பார்க்க இங்கு வந்தது எனக்கு மன உளைச்சலை தருகிறது. எங்கே உனக்கும் ஆபத்து வந்து விடுமோ என்று என் வாய் எல்லாம் உலர்கிறது..."

பாடல்

Wednesday, November 7, 2012

திருக்குறள் - வினையும் பயனும்


திருக்குறள் - வினையும் பயனும்


நல் வினை , தீ வினை என்று செயல்களை இரண்டாகப் பிரித்து வைத்து இருக்கிறோம். நல்லது செய்தால் நமக்கு நல்லது நடக்கும். தீயது செய்தால் தீமை பிறக்கும் என்பது நம்பிக்கை.  செயல்களின் பலன்கள் இந்தப் பிறவியில் கிடைக்காவிட்டால் அடுத்து வரும் பிறவிகளில் கிடைக்கும் என்பது இன்னொரு நம்பிக்கை. 

நல்ல வினை செய்தால், அதன் பலன்களை அனுபவிக்க இன்னொரு பிறவி அடைய வேண்டி வரும். அந்தப் பிறவியில் நல்லதோ கெட்டதோ செய்ய நேரிடும். பின் அதன் பலனாக மீண்டும் ஒரு பிறவி என்று இது ஒரு முடிவில்லாமல் போய் கொண்டே அல்லவா இருக்கும். இதுக்கு ஒரு முடிவே கிடையாதா ?

பற்றித் தொடரும் இரு வினைகளை எப்படி நிறுத்துவது ? இதில் இருந்து எப்படி வெளி வருவது ?

இறை அருளால் இந்த வினை பயன்கள் நம்மை சேராது என்கிறார் வள்ளுவர். 

பாடல்

Tuesday, November 6, 2012

அபிராமி அந்தாதி - முன் செய்த புண்ணியம்


அபிராமி அந்தாதி - முன் செய்த புண்ணியம் 


அபிராமி, இரவும் பகலும் உன் நினைவாகவே இருக்கிறது. நான் எதை எழுதினாலும், உன்னைப் பற்றியே இருக்கிறது. நான் படிப்பது எல்லாம் உன் பெயரைத்தான். உன் பாதத்தை பார்க்கும் போது என் மனத்திலும் ஈரம் கசிகிறது. உன் அடியார்களுடன் தான் நான் எப்போதும் இருக்கிறேன். 

இதை எல்லாம் செய்ய நான் என்ன புண்ணியம் செய்தேனோ. இந்த பிறவி எடுத்த பின் பெரிதாய் ஒன்றும் புண்ணியம் செய்து விடவில்லை. இதற்க்கு முன்னால் இருந்த பிறவிகளில் ஏதோ புண்ணியம் பண்ணி இருக்க வேண்டும். 

ஒரு பூ மலர்வதைப் போல், இந்த ஏழு உலகங்களையும் மலரவைத்தவளே, என் தாயே என்று கரைகிறார் பட்டர்.

இந்த பிறவியில் புண்ணியம் ஏதும் செய்யவில்லை என்கிறார் பட்டர். அவருக்கே அப்படிஎன்றால் நாம் எல்லாம் எம் மாத்திரம் ?

அவருடைய மனம் கல் போல கடினமாக இருக்கிறதாம். பக்தி ஏறும் போது, அந்த கல்லும் லேசாக விரிசல் விட்டு, அதன் வழியே அன்பும் கருணையும் கசிந்து வெளி வருகிறதாம். 

நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்து உருக என்பார் அருணகிரி பெருமான். இறைவன் திருவடி நம் மனதில் பதிய வேண்டும் என்றால், மனம் நெகிழ வேண்டும். கல்லின் மேல் எப்படி திருவடி பதியும் ?

பாடல்:

Monday, November 5, 2012

அபிராமி அந்தாதி - அபிராமியின் பழைய இருப்பிடம்


அபிராமி அந்தாதி - அபிராமியின் பழைய இருப்பிடம்



நீங்கள் ஒரு திருமணம் ஆகாத வாலிபர். ஒரு நாள் உங்கள் வீட்டுக்கு உங்கள் வருங்கால மனைவி வருகிறாள். வீடு குப்பை மாதிரி கிடக்கிறது. பிரம்மச்சாரியின் வீடு பின் எப்படி இருக்கும். அவள் இறைந்து கிடந்த புத்தகங்களை எல்லாம் அழகாக அடுக்கி வைக்கிறாள், தினசரி தாள்களை மடித்து வைக்கிறாள், கண்ட படி கிடந் துணிகளை மடித்து அலமாரியில் வைக்கிறாள், இரைந்து கிடக்கும் CD போன்றவற்றை ஒழுங்கு படுத்தி வைக்கிறாள். எல்லாவற்றையும் சரி செய்து விட்டு, கோணல் மாணலாக கிடந்த நாற்காலி மேஜை எல்லாம் சரியாக வைத்து விட்டு, தனக்கு ஒரு நாற்காலியையை இழுத்துப் போட்டு கொண்டு ஜம்மென்று நடுவில் உட்கர்ந்து கொண்டு "இப்ப எப்படி இருக்கு " என்று கேட்கிறாள் ...என்னவோ ரொம்ப நாளாய் இந்த வீட்டை அவள் தான் பராமரித்தது போல...
 
அதில் உங்களுக்கு வருத்தம் ஒன்றும் இல்லையே ?

அனைத்து பொருள்களும் அதனதன் இடத்தில் பொருத்தமாக போய் உட்கார்ந்து கொண்டு விட்டன. 

பட்டரின் மனத்திலும் அபிராமி வந்து இருந்து கொண்டாளாம், ஏதோ பழகிய இடம் போல. 

பாடல் 

Sunday, November 4, 2012

திருக்குறள் - உப்பு உற்பத்தி

திருக்குறள் - உப்பு உற்பத்தி 

உப்பு எப்படி உற்பத்தி செய்வார்கள் தெரியுமா ? 

முதலில் பாத்தி கட்டி அதில் உப்பு தண்ணீரை (கடல் நீரை)  தேக்கி வைப்பார்கள். 

சூரிய வெப்பத்தில் அந்த உப்பு நீர் கொஞ்சம் கொஞ்சமாக ஆவியாகும். அதில் உள்ள உப்பு தங்கி விடும்.

முதலில் உப்பு நீரை இறைக்க வேண்டும். பின் அது ஆவியாகும் வரை காத்திருக்க வேண்டும். 

வள்ளுவர் இன்னொரு உப்பு உற்பத்தி முறையையை சொல்கிறார். 

அபிராமி அந்தாதி - மரணம் பிறவி இரண்டும் எய்தார்


அபிராமி அந்தாதி - மரணம் பிறவி இரண்டும் எய்தார் 


 தாரகாக்ஷன், கமலாக்ஷன், வித்யுன்மாலி என்ற மூன்று அரக்கர்கள் இருந்தார்கள். அவர்கள் பொன், வெள்ளி மற்றும் இரும்பிலான மூன்று உலகங்களை செய்து வைத்துக் கொண்டு எல்லோரையும் துன்புறுத்தி வந்தார்கள். அந்த உலகங்களுக்கு அரண் (தடுப்புச் சுவர்) இருந்தது....நாடுகளுக்கு கோட்டைச் சுவர் இருப்பது மாதிரி. 

அந்த அரணை பெரிய விஷயம் என்று எண்ணி மனதில் அருளே இல்லாமல் எல்லோரையும் துன்புறுத்திய அரக்கர்களின் கோட்டையை அழித்த சிவனும், திருமாலும் அபிராமி இடம் சரணம் சரணம் என்று வந்தனர். அவள், அவளுடைய அடியார்களின் மரணம் பிறவி இரண்டையும் வரமால் காப்பாள். 

"அரணம் பொருள் என்று, அருள் ஒன்று இலாத அசுரர்"

என்ன பொருள் ?

பொருட் செல்வம் பெரிது என்று நினைக்க நினைக்க அருள் நம்மை விட்டு விலகிப் போய் விடுகிறது. பணம் சேர்க்கும் குறிக்கோள் வந்தவுடன், மற்றவர்களுக்கு உதவ நேரமும் இருப்பது இல்லை, மனமும் இருப்பது இல்லை. பொருளே நிரந்தரம் என்று நினைத்து விடுகிறார்கள். மேலும் மேலும் பொருள் சேர்க்க வேண்டும் என்ற ஒரு அசுரத்தனம் வந்து விடுகிறது.  

அப்படிப் பட்ட அசுரர்கள் கடைசியில் அழிந்து போகிறார்கள். 

பிறவி என்று இருந்தால் பொருள் வேண்டும். நமக்கு, நம் குடும்பத்திற்கு, உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு, நமது எதிர் காலத்திற்கு என்று பொருள் கட்டாயம் வேண்டும். எவ்வளவு பொருள் இருந்தாலும் பத்தாது என்றே தோன்றுகிறது. அதை செற்பதிலேயே காலம் முழுவதும் சென்று விடுகிறது. பின் என்ன தான் இதற்க்கு வழி ?

அபிராமி ஒன்றே இதற்க்கு வழி. அவளை வணங்கினால் பிறவியே வராது. பின் எங்கிருந்து பொருள் ஆசை வரும் ? 

மரணமும் இன்றி, பிறவியும் இன்றி ஆனந்த பெறு வாழ்வு வாய்க்கும். 

பாடல்

பிரபந்தம் - இந்த சொத்து எல்லாம் யாருடையது ?


பிரபந்தம் - இந்த சொத்து எல்லாம் யாருடையது ?


வேதங்களை படித்து அறிந்து கொள்வது மிகக் கடினமான காரியம். முதலில் அதற்க்கு சமஸ்க்ரிதம் தெரிய வேண்டும். அந்த மொழியின் உச்சரிப்பு புரிய வேண்டும். வேதங்கள் எழுதப்பட்ட காலத்தில் வழங்கப்பட்ட சமஸ்க்ரித சொற்களுக்கு அர்த்தம் புரிய வேண்டும். கால வழக்கில் ஒரே வார்த்தை வேறு அர்த்தம் பெறுவதும் உண்டு. ஆத்மா என்ற சொல்லுக்கு ஐம்பத்து ஆறு அர்த்தங்கள் உள்ளதாக கூறுகிறார்கள். எது சரியான அர்த்தம் என்பதில் குழப்பம் வரலாம். வேதம் ஓத சில வரைமுறைகள், கட்டுப்பாடுகள், உண்டு.  

நமக்கு அந்த பிரச்சனை எல்லாம் இல்லை. வேதத்தின் சாரத்தை தமிழில் வடித்து மிக மிக இனிமையாக தந்து இருக்கிறார்கள். முன்னூறே பாசுரத்தில். 

பொய்கை ஆழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார் என்ற மூன்று ஆழ்வார்கள் நூறு பாசுரம் எழுதி இருக்கிறார்கள். மொத்தம் முந்நூறு பாசுரம்.  

இதை தமிழ் வேதம் என்று பெரியவர்கள் கூறுவார்கள்

தேமதுர தமிழில் படிக்க படிக்க திகட்டாத பாடல்கள். 

பொய்கை ஆழவார் எழுதிய நூறு பாடல்கள் முதல் திருவந்தாதி என்று அழைக்கப்படுகிறது. அதில் இருந்து சில பாசுரங்களை பார்ப்போம்.

நாம் சொத்து சேர்த்து வைக்கிறோம். மனை, வீடு, தங்கம், வைரம் போன்ற விலை உயர்ந்த பொருட்கள் என்று சேர்த்து வைக்கிறோம். இவை எல்லாம் நம்மது என்று நாம் நினைத்து கொண்டு இருக்கிறோம். 

நமக்கு முன்னால் இவற்றை எல்லாம் யார் யாரோ வைத்து இருந்தார்கள். நமக்கு பின்னால் இது யார் யாரிடமோ இருக்கப் போகிறது. இந்த பிரபஞ்சத்தின் கால அளவை வைத்து பார்க்கும் போது, நாம் இவற்றை வைத்து இருக்கும் கால அளவு ஒரு சிறு நேரத்துளி. அவ்வளவு தான். கொஞ்ச நேரம் வைத்து இருக்க இந்த சண்டை, சச்சரவு, அடி தடி, கோபம், தாபம், எல்லாம். 

இந்த சொத்துகளை இதற்க்கு முன்னால் நம் தந்தை, அதற்க்கு முன்னால் நம் தத்தா வைத்து இருந்திருக்கலாம். அல்லது நாம் யாரிடம் இருந்து வாங்கினோமோ அவர்களின் தந்தை அல்லது பாட்டன் வைத்து இருந்து இருக்கலாம்.

பொய்கை ஆழ்வார் மேலும் ஆழமாக நம்மை சிந்திக்கச் சொல்கிறார். 

இந்த உலகம் முழுவதும் அவன் உருவாகினான். 

சரி, அவன் உருவாக்கினால் என்ன. ஒரு தொழிற்ச்சாலையில் ஒரு பொருள் உற்பத்தி செய்யப்பட்டால் அது அந்த தொழிற்ச்சாலையில் வேலை செய்யும் தொழிலாளிக்கு சொந்தம் இல்லையே என்று வாதிடலாம். 

அவன் உருவாகியது மட்டும் அல்ல, அவன் அதை பிரளய காலத்தில் தன் வயிற்றில் வைத்து காப்பாற்றினான். 

காப்பாற்றியது மட்டும் அல்ல மீண்டும் நாம் அனுபவிக்க அதை நமக்குத் தந்தான். 

இது அவனிடம் இருந்து வந்தது. மீண்டும் அவனிடம் போகும். இடையில் மிக மிக சிறிது காலம் நீங்கள் அதை வைத்து இருக்கிறீர்கள்.

பாடல்