Friday, November 30, 2012

இராமாயணம் - மனக்கூனி


இராமாயணம் - மனக்கூனி 


கூன் உடலில் இருந்தால் பரவாயில்லை. அது இயற்கையாக அமைந்தது. நாமாக வரவழைத்துக் கொண்டது அல்ல, தானாக வந்தது.

இவளோ, மனத்தில் கூன் விழுந்தவள். மன விகாரம் நாமே வரவழைத்துக் கொள்வது. 

இராமன் மணி முடி சூடப் போகிறான் என்று அறிந்தவுடன் அயோத்தி மாநகரமே அலங்காரம் கொண்டது, வானவர் வாழும் இந்திர உலகம் போல ஜொலிக்கும் வேளையில், மற்றவர்களுக்கு துன்பம் செய்யும் இராவணனின் தீமையே உரு பெற்று வந்தது போல வந்தால் மனதில் கூன் உள்ள கூனி....

அவளை மனக் கூனி என்றான் கம்பன். மனதில் கூன் விழுந்தவள்.

பாடல்: 

ஆத்திசூடி - இயல்வது கரவேல்


ஆத்திசூடி - இயல்வது கரவேல் 


எது முடியுமோ, அதை மறைக்காமல் செய்ய வேண்டும்.  ஆங்கிலத்தில் சொல்லுவார்களே Realising one's potential என்று, அது போல. 

எவ்வளவு படிக்க முடியுமோ, அவ்வளவு படிக்க வேண்டும்.


எவ்வளவு வேலை பார்க்க முடியுமோ, அவ்வளவு வேலை பார்க்க வேண்டும். 

எவ்வளவு சம்பாதிக்க முடியுமோ, அவ்வளவு 

எவ்வளவு தானம் பண்ண முடியுமோ, அவ்வளவு. 

இயல்வது என்றால் முடிந்த வரை. 

கரவேல் என்றால் மறைக்காமல் என்று பொருள்

.......................
காத்தும் படைத்துங் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீ ராடேலோர் எம்பாவாய்.

என்பார் மணிவாசகர் ...

செய்கிறோமா ? எட்டு மணிநேரம் வேலை செய்ய முடியும் என்றால், ஆறு மணி நேரம் செய்கிறோம். நம்மால் பிறர்க்கு உதவ முடியும், ஆனால் செய்வது இல்லை. 

சாலையில் அடி பட்டு கிடக்கும் மனிதனை பார்த்து விட்டு பார்க்காத மாதிரி போகிறோம். 

பசி என்று கை ஏந்துபவர்களுக்கு பத்து பைசா தர்மம் பண்ணுவது இல்லை. 

முடியாததை செய் என்று சொல்லவில்லை அவ்வை பாட்டி. முடிந்ததையாவது மறைக்காமல் செய் என்கிறாள். 

முடிந்த வரை செய்து கொண்டு இருந்தால், அந்த முடிந்தவற்றின் எல்லை கோடுகள் தானே விரியும். 

நாம் ஏன் முடிந்ததை செய்வது இல்லை ? 

என்னால் நிறைய செய்ய முடியும், செய்யவும் ஆசை இருக்கிறது...ஆனால் வாய்ப்பு இல்லையே, நான் என்ன செய்வது என்று கேட்போருக்கு அவ்வை பதில் சொல்கிறாள்...அடுத்த ப்ளாக்-இல் 


இராமாயணம் - கூனி பெற்ற பரிசு


இராமாயணம் - கூனி பெற்ற பரிசு 


நம்ம வீட்டில் எல்லாம் தரைக்கு மொசைக் போடுவோம், மார்பிள் போடுவோம், கிரானைட் போடுவோம். தசரதனின் அரண்மனையில் அப்படி ஏதாவது உயர்ந்த கற்களை கொண்டு தளம் போட்டுத்தானே இருப்பார்கள் ?

கூனிக்கு கைகேயி முத்து மணிமாலை பரிசாக கொடுத்தாள். அதை வாங்கிய கூனி அதை தரையில் ஓங்கி எறிந்தாள். ஆனால் கம்பன் அப்படி சொல்லவில்லை. அடையும் கவி நயத்தோடு சொல்கிறான்...எப்படி தெரியுமா ?

அப் பொன்மாலையால் குழித்தனள் நிலத்தை என்றான்.

அதாவது நிலத்தை குழி ஆக்கினாளாம்...அவள் எறிந்த வேகத்தில் மாளிகையின் தரை பிளந்து குழி ஆனது என்கிறான் கம்பன்.....எவ்வளவு கோவம்...எவ்வளவு கற்பனை...
 
பாடல் 

Thursday, November 29, 2012

பிரபந்தம் - பல்லாண்டு கூற வாருங்கள்


பிரபந்தம் - பல்லாண்டு கூற வாருங்கள்


தான் மட்டும் இறைவனை வாழ்த்தினால் போதாது, எல்லோரும் வாழ்த்த வேண்டும், அந்த மகிழ்ச்சியையை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார். எவ்வளவு கருணை. 

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று 

என்பார் திருவள்ளுவர். அமிழ்தமே ஆயினும், விருந்தினர் காத்திருக்க தான் மட்டும் உண்ண மாட்டார்கள் உத்தமர்கள். 

இறைவனை வாழ்த்துவதில் அவருக்கு அவ்வளவு சந்தோஷம். 

நீங்கள் வையத்தில் வாழ்வாங்கு வாழ வேண்டுமா, வாருங்கள், வந்து எங்கள் குழுவில் சேர்ந்து கொள்ளுங்கள். சேர்ந்தவர்களுக்கு எல்லாம் மண்ணும் மணமும் தருகிறார். (அது என்ன மண்ணும் மணமும் ? பின்னால் பார்ப்போம்). 

சில பேர் வாழ்க்கை என்பதே உண்பதும் உறங்குவதும் என்று இருப்பார்கள். அவர்களுக்கு இறைவன் மேல் பக்தி கிடையாது. உடல் வளர்பதே முழு முதல் வேலையாக இருப்பார்கள். அவர்களை, நீங்கள் உங்கள் வேலையை தொடர்ந்து கவனியுங்கள். இந்த கூட்டத்தில் நீங்கள் சேர வேண்டாம் என்கிறார். 

இந்த ஜன்மம் மட்டும் அல்ல, முன்னால் உள்ள ஏழேழு பிறவிகளிலும் நாங்கள் எந்த பழியும் செய்யாதவர்கள்.

வாருங்கள், நாம் எல்லோரும் சென்று அரக்கர்கள் வாழும் இலங்கயையை பாழாக்க போர் புரிந்தவனை நாம் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துவோம் என்று அழைக்கிறார். 

பாடல் 

இராமாயணம் - வசையா? புகழா ?


இராமாயணம் - வசையா? புகழா ?


கைகேகிக்கு இராமன் மேல் அளவு கடந்த பாசம். கைகேயின் மனதை மாற்ற வந்த கூனி ஆரம்பிக்கிறாள் "ஆடவர்கள் நகைக்க, ஆண்மை மாசுற, தாடகை என்ற பெண்ணை கொன்ற, குற்றமுள்ள வில்லை கொண்ட  இராமனுக்கா முடி " என்று இராமன் ஒரு பெண்ணை கொன்றதை பெரிய குற்றமாக கூறி ஆரம்பிக்கிறாள். 

ஆனால், இராமன் மேல் பாசம் கொண்ட கைகேகிக்கு கூனி சொல்வது குற்றமாகவே படவில்லை. எப்படி ?

கூனி சொல்வதை எல்லாம் கைகேகி இராமனின் பெருமையாகவே நினைக்கிறாள். நமக்கு வேண்டியவர்கள், நாம் அன்பு செய்பவர்களைப் பற்றி யாரவது தவறாகச் சொன்னால் கூட நமக்கு அது பெரிதாகப் படாது அல்லவா, அது போல 

கூனி சொன்ன பாடல் இது தான் ...
 

கைநிலை - ஆசையில் தேம்பும் நெஞ்சு


கைநிலை - ஆசையில் தேம்பும் நெஞ்சு 


ஒரு பெரிய மலை. அந்த   மலையையை சுற்றி உள்ள சிறு சிறு பள்ளங்களில் நீர் நிறைந்து இருக்கிறது. அந்த மலையின் அடிவாரத்தில் அடர்ந்த காடு. காட்டில் நிறைய பழ மரங்கள். பழ மரங்களில் பழங்களை பறித்து தின்று தாவி விளையாடும் குரங்குகள்.   அந்த மலையில் இருந்து விழும் அருவி. விழுந்த அருவியில் இருந்து வரும் புது நீர், அங்குள்ள பள்ளங்களில், சுனைகளில் தேங்கி இருக்கும் பழைய நீரோடு கலந்து வெளியேறும். அருவியில் இருந்து நீர் விழும் போது அதோடு சில கனிகளும் சேர்ந்து விழும். இந்த குரங்குகள் அந்த கனிகளை உண்ண ஒன்றோடு ஒன்று சண்டையிட்டு கொள்ளும். பின் சினம் ஆறி அந்த கனிகளை உண்ணும். அருவி வரும் அந்த ஊரைச் சேர்ந்தவன் என் காதலன். அவனைக் காண என் மனம் ஆசையில் தேம்புகிறது. 

பாடல் 

Wednesday, November 28, 2012

இராமாயணம் - இராமன் வாங்கிய வசவுகள்


இராமாயணம் - இராமன் வாங்கிய வசவுகள்


இராம காதையில், இராமன் பல இடங்களில் வசை பாடப் படுகிறான். முதலில் ஆரம்பித்தவள் கூனி. 

இராமனுக்கு முடி சூட்டப் போகிறார்கள் என்ற செய்தியை கைகேயி சொன்னவுடன் கூனி கூறுகிறாள் 

ஆடவர்கள் நகைக்க, ஆண்மை மாசு அடைய, தாடகை என்ற பெண்ணை கொன்ற, குற்றம் உள்ள வில்லை கொண்ட இராமனுக்கா மணி முடி சூட்டப் போகிறார்கள் நாளை, இதுவும் ஒரு வாழ்வா என்று அமில வாரத்தைகளை வீசுகிறாள். 

பாடல்