Monday, February 4, 2013

இராமாயணம் - இராம நாமம்


இராமாயணம் - இராம நாமம் 

அனுமன் இலங்கயையை நோக்கி செல்கிறான். நடுவில் பல இடையூறுகள் வருகின்றன. ஒவ்வொன்றாய் வென்று மேலே செல்கிறான். 

இப்படியே பல இடையூறுகள் வந்த கொண்டே இருந்தால் என்று போய்  இலங்கையை அடைவது என்றுஒரு வினாடி கவலைப் பட்டான். 

மறு நிமிடமே கவலை தீர்ந்தது....விடை கிடைத்து விட்டது. நம்மிடம் தான் இராம நாமம் இருக்கிறதே என்று நினைத்தான், அத்தனை கவலையும் போய்  விட்டது. 

பாடல் 


ஊறு, கடிது ஊறுவன; ஊறு இல் அறம் உன்னா,
தேறல் இல் அரக்கர் புரி தீமை அவை தீர,
ஏறும் வகை எங்கு உள்ளது? "இராம!" என எல்லாம்
மாறும்; அதின் மாறு பிறிது இல்' என வலித்தான்.


பொருள் 

ஆத்திச் சூடி - மீதூண் விரும்பேல்

ஆத்திச் சூடி - மீதூண் விரும்பேல் 

உணவு. 

உயிர் வாழ மிக இன்றியமையாதது உணவு.

அதுவே அளவுக்கு மீறிப் போனால் உடலுக்குத் தீங்கை விளைவிக்கும். அனைத்து விதமான உடல் உபாதைகளுக்கும் அதுவே காரணம் ஆகி விடும் 

மருந்தைப் பற்றி எழுத வந்த வள்ளுவர் பத்து குறளிலும்  உணவைப் பற்றியே சொல்கிறார் 

மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய
தற்றது போற்றி உணின்.

அருந்தியது (உண்டது) அற்றது (நன்றாக செரிமானம்) போற்றி (அறிந்து) உண்டால் மருந்தே வேண்டாம் என்கிறார் வள்ளுவர். 

ஔவையார்  இப்படி ஏழு வார்த்தைகள் எல்லாம் உபயோகப் படுத்த மாட்டார். இரண்டு அல்லது அதிகபட்சம் மூன்று வார்த்தைகள்தான் உபயோகப் படுத்துவார் 

மீதூண் விரும்பேல் 

அதிகமான உணவை விரும்பாதே. 

சில பேருக்கு உணவை கண்ட மாத்திரத்திலேயே எச்சில் ஊறும். அளவுக்கு அதிகமாக உண்டு விட்டு " மூக்கு முட்ட சாப்பிட்டு விட்டேன்...மூச்சு வாங்குது " என்று இடுப்பு பட்டையை (belt ) கொஞ்சம் தளர்த்தி விட்டுக் கொள்வார்கள். 

சாப்பிடும் போது எவ்வளவு சாப்பிடுகிறோம் என்ற எண்ணம் வராது. 

சாம்பார், ரசம் இரசம் , காரக் குழம்பு, மோர் குழம்பு, தயிர், பழம், பீடா, ஐஸ் கிரீம், என்று ஒவ்வொன்றாக உள்ளே போய்  கொண்டே இருக்கும்.

எப்படி அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை நிறுத்துவது ? 

மீதூண் விரும்பேல்.

முதலில் அதிகமாக சாபிடுவதற்கு விரும்புவதை நிறுத்த வேண்டும்.

அந்த உணவு விடுதியில் (hotel ) அது நல்லா இருக்கும், இந்த உணவு விடுதியில் இது நல்லா இருக்கும், என்று பட்டியல் போட்டுக் கொண்டு நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு அலைய கூடாது. 

அளவு இல்லாத (unlimited ) உணவை சாப்பிடக் கூடாது. அளவு சாப்பாடு நலம் பயக்கும் 

நொறுக்குத் தீனி, கண்ட நேரத்தில் உண்பது போன்றவற்றை தவிர்ப்பது நலம். 

உணவின் மேல் விருப்பம் குறைய வேண்டும். நாம் எதை விரும்புகிறோமோ அதை அடிக்கடி செய்வோம், அதே நினைவாக இருப்போம், அதை செய்வதில் சந்தோஷம் அடைவோம் 

விருப்பம் குறைந்தால் , அளவு குறையும்.

அளவு குறைந்தால் ஆரோக்கியம் நிறையும் 

மீதூண் விரும்பேல்...

இராமாயணம் - எல்லாம் விளையாட்டு


இராமாயணம் - எல்லாம் விளையாட்டு 


நாம் எதற்காக வேலைக்குப் போகிறோம் ?

பணம் சம்பாதிக்க, புகழுக்காக, மன திருப்திக்காக, சேவை செய்ய என்று பல காரணங்கள் இருக்கலாம்.

கடவுள் ஏன் இந்த உலகையும், நம்மையும் படைத்தார் ?

அவர் இந்த வேலையயை செய்ய வேண்டிய காரணம் என்ன ? சும்மா இருக்க வேண்டியது தானே ? இதை செய்து அவருக்கு ஆக வேண்டியது என்ன ? பணமா ? புகழா ? நல்ல பெயரா ? ஒண்ணும்  இல்லை.

பின்ன எதுக்கு படைத்து, காத்து, அழித்து ... இவர் இதை எல்லாம் செய்யவில்லை என்றால் யாரவது கேட்கப் போகிறார்களா ? இல்லையே ? 

எதுக்காக வீணா இந்த வேலைய இழுத்துப் போட்டுக் கொண்டு செய்யணும் ?

கம்பன் சொல்கிறான் - அது அவனுக்கு விளையாட்டு . வட  மொழியில் லீலை என்று சொல்வார்கள். 

இந்த உலகமே ஒரு விளையாட்டு தான். இறைவனின் விளையாட்டு. குழந்தை எப்படி பொம்மைகளுடன் விளையாடுமோ அப்படி அவன் விளையாடுகிறான் 

குழந்தை ஏன் விளையாடுகிறது என்று யாராவது கேட்பார்களா ? அது பாட்டுக்கு விளையாடும். விளையாடுவது விளையாட்டுக்கவே. வேறு ஒரு குறிக்கோளும் கிடையாது 

விளையாட்டை யாராவது ரொம்ப சீரியஸ் ஆக எடுத்துக் கொள்வார்களா ? விளையாட்டு என்பதே ஒரு மகிழ்ச்சிக்காக. 

விளையாட்டுக்ச் சொன்னேன் அதை போய்  இப்படி சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ளலாமா என்று சொல்லக் கேட்டு இருக்கிறோம் அல்லவா. ? 

இந்த உலகமே ஒரு விளையாட்டு. நீங்களும் நானும், நம்மை சுற்றி நடப்பது எல்லாமும் இறைவனின் விளையாட்டு. 

இதை போய்  ஏன் இவ்வளவு சீரியஸ் ஆக எடுத்துக் கொள்கிறீர்கள். 

இந்த விளையாட்டில் சில சமயம் நீங்கள் விளையாடுகிறீர்கள், சில சமயம் நடுவராக இருக்கிறீர்கள் சில சமயம் பந்து பொருக்கி போடுகிறீர்கள் சில சமயம் பார்வையாளராக இருக்கிறீர்கள்....எல்லாம் விளையாட்டு தான்....

எப்போதும்  சிரித்துக் கொண்டே இருங்கள், சந்தோஷமாக இருங்கள்...

இந்த வாழ்கையே விளையாட்டு தான்.....

பாடல் 


உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்.
நிலைபெறுத்தலும். நீக்கலும். நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார்-அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.


பொருள் 

உலகம் யாவையும் = இந்த உலகங்கள் அனைத்தையும். உங்களையும் என்னையும் சேர்த்துதான் 

தாம் = அவரே 

உளவாக்கலும் = உண்டாகியும் 
.
நிலைபெறுத்தலும் = அவற்றை நிலை பெறுமாறு செய்தும் 

நீக்கலும் = பின் அவற்றை நீக்கியும் 


 நீங்கலா = எப்போதும் இவற்றை விட்டு நீங்காமல் 

அலகு இலா = அலகு  என்றால் அளவு, ஒரு யூனிட். அப்படி எதுவும் ஒரு அளவு கிடையாது. அவர் பாட்டுக்கு விளையாடுவார் 

விளையாட்டு உடையார் =  விளையாட்டு உடையவர். காத்தும் படைத்துங் கரந்தும் விளையாடி என்பார் மணிவாசகர். முழுப் பாடலும் கீழே. 

 அவர் = அவர் 

தலைவர் = தலைவர் 

அன்னவர்க்கே சரண் நாங்களே = அவரிடம் நாங்கள் சரண் அடைகிறோம். 


((ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடுந்
தீர்த்தன்நற் றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடுங்
கூத்தன்இவ் வானுங் குவலயமும் எல்லோமுங்
காத்தும் படைத்துங் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீ ராடேலோர் எம்பாவாய்.))

Sunday, February 3, 2013

ஆத்திச் சூடி - உடையது விளம்பேல்


ஆத்திச் சூடி - உடையது விளம்பேல் 


வாழ்க்கை மாறிக்கொண்டே இருப்பது 

இன்று நண்பர்களாய் இருப்பவர்கள் நாளை வேறு மாதிரி மாறலாம்

இன்றைய உறவு   நாளைய   பகையாக மாறலாம்.

யார் யாரோடு எப்போது சேருவார்கள் என்று தெரியாது. 

நபர்கள் என்று நாம் எதையாவது சொல்லப் போக, நாளை அவர்கள் வேறு மாதிரி மாறிவிட்டால் கஷ்டம் தான். 

நம் நண்பர்கள் நம் எதிரிகளோடு கை கோர்த்து கொள்ளலாம். 

சில பேர் வீடு வேலைக்காரியிடம், வண்டி ஓட்டும் டிரைவரிடம், கடை காரரிடம் என்று எல்லோரிடமும் எல்லாவற்றையும் சொல்லி வம்பில் மாட்டிக் கொள்வார்கள் 

பெண்ணுக்கோ பையனுக்கோ வரன் பார்த்தால் நிச்சயம் ஆகும் வரை வெளியே சொல்ல மாட்டார்கள். நடுவில் யாரவது புகுந்து எதையாவது சொல்லி சம்பந்தத்தை கலைத்து விடலாம் எதுக்கு வம்பு. 



பொதுவாக யாரிடமும் அளவுக்கு அதிகமாக உள்ளதை சொல்வதை தவிர்ப்பது நலம் பயக்கும் 

உடையது விளம்பேல் என்றாள்  ஔவை  பாட்டி 

உன்னிடம் உள்ளதை பிறரிடம் சொல்லாதே....

அது சொத்து பற்றிய விவரமாய் இருக்கலாம், நட்பு, பகை, காதல் பற்றிய உறவை இருக்கலாம், நோய் பற்றிய சொந்த விஷயமாக இருக்காலாம். 

தோழனோடாயினும்  ஏழ்மை பேசேல் 

சொல்லாத சொல்லுக்கு நாம் அதிகாரி 
சொல்லிய சொல் நமக்கு அதிகாரி 

யோசித்துப் பேசுங்கள். குறைவாகப் பேசுங்கள். யாரிடம் எதை சொல்கிறோம் என்று அறிந்து பேசுங்கள்.


இராமாயணம் - ஜடாயு மேல் எறிந்த வேல் - 2

இராமாயணம் - ஜடாயு மேல் எறிந்த வேல் 


இராவணனுக்கும் ஜடாயுவுக்கும் பெரிய போர் நடந்தது. ஜடாயுவுக்குத் தெரியும் தான் தோற்று விடுவோம் என்று.

இராவாணன் யார் ?

முக்கோடி வாழ் நாள், முயன்றுடைய பெருந்தவம், எக்கொடி யாராலும் வெல்லப்  படாய்  என்று ஈசன்  கொடுத்த வரம், திக்கு அனைத்தும் அடக்கிய புய வலி, நாரத முனிவர்க்கு ஏற்ப நயம் படைத்த நாக்கு....

கூற்றையும் ஆடல் கொண்டவன் ...

இருந்தும் ஜடாயு போரிட்டான் ? ஏன் ?

அநீதியை எதிர்த்து போரிட வேண்டும் என்று  உணர்த்த.

அந்தப் போரினை கம்பர் காட்டும் அழேகே அழகு.

ஆங்கில இலக்கியத்தில் பெரிய ஆளாக பேசப் படும் ஷேக்ஸ்பியர் கூட போரை வர்ணிப்பதில் அவ்வளவு திறமையானவர் அல்ல என்று சொல்வார்கள். அவருடைய நாடகத்தில் போர் வர்ணனை அவ்வளவு சிறப்பானதாக இருக்காது

இராவண ஜடாயு யுத்தம் பற்றி கொஞ்சம் பார்ப்போம்....

அதில் இருந்து ஒரு அருமையான பாடல்...கம்பனின் உவமை காட்டும் அழகுக்கு ஒரு சின்ன உதாரணம் ...

ஜடாயுவின் மேல் இராவணன் வேலை எறிந்தான்
பொருள் இல்லாமல்
அந்த வேல் ஜடாயு கிட்ட போனது, நின்றது, திரும்பி விட்டது...

அதற்க்கு கம்பன் மூன்று உதாரணம் சொல்கிறான் ...

முதல் உதாரணம்

பொருள் இல்லாமல் ஒரு விலை மாதின் வீட்டிற்கு சென்றவன் போல் நின்று திரும்பியது அந்த வேல்....

என்ன உதாரணம்.....

உள்ளே போக ஆசை தான்...ஆனால் கையில் காசு இல்லை...உள்ளே விட மாட்டாள்...அப்படியே வாசலில் நிற்கிறான்... அவள் வெளியே வந்தால் பார்த்து விட்டு செல்லலாம் என்று. அவளோ, அவன் போக விட்டு வரலாம் என்று இருக்கிறாள். சோர்ந்து ,  அவன் திரும்பி போகிறான்

அது போல் அந்த வேல் திரும்பி போனது...ஜடாயுவின் உடலின் உள்ளே போக முடியாமல் சோர்ந்து திரும்பியது....



பொன் நோக்கியர்தம் புலன் 
     நோக்கிய புன்கணோரும், 
இன் நோக்கியர் இல் வழி 
     எய்திய நல் விருந்தும், 
தன் நோக்கிய நெஞ்சுடை யோகியர் 
     தம்மைச் சார்ந்த 
மென் நோக்கியர் நோக்கமும், ஆம் 
     என மீண்டது, அவ்வேல்.



பொன்னை (பொருளை ) நோக்கிய விலை மாதரின் அங்கங்களை நோக்க வந்த கவலை தோய்ந்த கண்களை உடையவர் திரும்பி போவது போல ......


இன் நோக்கியர் இல் வழி 
     எய்திய நல் விருந்தும், 


ஒரு வீட்டிற்கு விருந்துக்குப் போனவன் அந்த வீட்டில் நல்ல உபசரிப்பு இல்லை என்றால் எப்படி சட்டென்று திரும்பி விடுவானோ அப்படி அந்த வேல் சட்டென்று திரும்பியது.

விருந்தினர்களை உபசரிப்பது என்பது தமிழ் கலாசாரம் என்ற பொருள் உள்ளே உள்ளது.

முகம் மாறி நோக்க வாடும் விருந்து என்பது வள்ளுவர் வாக்கு.

மோப்பக் குழையும்  அனிச்சம் முகம் திரிந்து நோக்கக் குழையும் விருந்து என்பார் வள்ளுவர்.

அப்படி உபசரிப்பு இல்லாத இடத்திற்கு வந்த விருந்தினன் எப்படி முகம் வாடி , மனம் வாடி திரும்பிப் போவானோ அப்படி அந்த வேல் திரும்பிப் போனது.

இன் நோக்கியர் = இனிமையான முகத்தை நோக்கி வந்த
இல் வழி = இல்லாத இடத்தில்
எய்திய நல்   விருந்தும் = சென்ற நல்ல விருந்தினனை போல

இப்படி பட்ட உயர்ந்த ஜடாயுவை நாம் கொல்ல  வந்தோமே என்று வெட்கி, வருந்தி திரும்பியது.





தன் நோக்கிய நெஞ்சுடை யோகியர் 
     தம்மைச் சார்ந்த 
மென் நோக்கியர் நோக்கமும்



அடுத்த உதாரணம் மற்றவற்றினும் சிறந்தது.



தன் நோக்கிய = தன்னை நோக்கி அறிந்த 
நெஞ்சுடை யோகியர்  = மனம் உள்ள யோகியர் 
தம்மைச் சார்ந்த = அவர்களை சென்று பார்த்த  
மென் நோக்கியர் நோக்கமும் = மென்மையான பெண்களின் பார்வை போல 

துறவிகளின் மேல் சென்ற குலப் பெண்களின் கண்கள் எப்படி சட்டென்று திரும்புமோ அப்படி அந்த வேல் திரும்பியது. 

என்ன உள்  பொருள் ? பெண்ணின் கண்கள் ஆணை எளிதில் சபலப் பட வைக்கும். முனிவர்களையும் அது மயக்கி விடும் எனவே பெண்கள் மற்ற ஆண்களின் கண்களை நேருக்கு நேர் பார்க்க மாட்டார்கள்.  அதிலும் குறிப்பாக துறவிகளை, அவர்கள் பார்த்தாலும் ஒரு கணத்தில் அந்த பார்வையை வேறு  இடத்திற்கு மாற்றி விடுவார்கள். அந்த மாதிரி அந்த வேல்  சட்டென்று திரும்பிற்று. 

உவமைக்கு கம்பனை மிஞ்ச ஆள் இல்லை. 





Saturday, February 2, 2013

இராமாயணம் - ஜடாயு மேல் எறிந்த வேல்


இராமாயணம் - ஜடாயு மேல் எறிந்த வேல் 


இராவணனுக்கும் ஜடாயுவுக்கும் பெரிய போர் நடந்தது. ஜடாயுவுக்குத் தெரியும் தான் தோற்று விடுவோம் என்று.

இராவாணன் யார் ?

முக்கோடி வாழ் நாள், முயன்றுடைய பெருந்தவம், எக்கொடி யாராலும் வெல்லப்  படாய்  என்று ஈசன்  கொடுத்த வரம், திக்கு அனைத்தும் அடக்கிய புய வலி, நாரத முனிவர்க்கு ஏற்ப நயம் படைத்த நாக்கு....

கூற்றையும் ஆடல் கொண்டவன் ...

இருந்தும் ஜடாயு போரிட்டான் ? ஏன் ?

அநீதியை எதிர்த்து போரிட வேண்டும் என்று  உணர்த்த.

அந்தப் போரினை கம்பர் காட்டும் அழேகே அழகு.

ஆங்கில இலக்கியத்தில் பெரிய ஆளாக பேசப் படும் ஷேக்ஸ்பியர் கூட போரை வர்ணிப்பதில் அவ்வளவு திறமையானவர் அல்ல என்று சொல்வார்கள். அவருடைய நாடகத்தில் போர் வர்ணனை அவ்வளவு சிறப்பானதாக இருக்காது

இராவண ஜடாயு யுத்தம் பற்றி கொஞ்சம் பார்ப்போம்....

அதில் இருந்து ஒரு அருமையான பாடல்...கம்பனின் உவமை காட்டும் அழகுக்கு ஒரு சின்ன உதாரணம் ...

ஜடாயுவின் மேல் இராவணன் வேலை எறிந்தான்
பொருள் இல்லாமல்
அந்த வேல் ஜடாயு கிட்ட போனது, நின்றது, திரும்பி விட்டது...

அதற்க்கு கம்பன் மூன்று உதாரணம் சொல்கிறான் ...

முதல் உதாரணம்

பொருள் இல்லாமல் ஒரு விலை மாதின் வீட்டிற்கு சென்றவன் போல் நின்று திரும்பியது அந்த வேல்....

என்ன உதாரணம்.....

உள்ளே போக ஆசை தான்...ஆனால் கையில் காசு இல்லை...உள்ளே விட மாட்டாள்...அப்படியே வாசலில் நிற்கிறான்... அவள் வெளியே வந்தால் பார்த்து விட்டு செல்லலாம் என்று. அவளோ, அவன் போக விட்டு வரலாம் என்று இருக்கிறாள். சோர்ந்து ,  அவன் திரும்பி போகிறான்

அது போல் அந்த வேல் திரும்பி போனது...ஜடாயுவின் உடலின் உள்ளே போக முடியாமல் சோர்ந்து திரும்பியது....


பொன் நோக்கியர்தம் புலன் நோக்கிய புன்கணோரும்


பொன்னை (பொருளை ) நோக்கிய விலை மாதரின் அங்கங்களை நோக்க வந்த கவலை தோய்ந்த கண்களை உடையவர் திரும்பி போவது போல ......

இது ஒரு உதாரணம்...

இன்னும் இரண்டு உதாரணம் தருகிறான் கம்பன்...இதை தூக்கி சாப்பிடும் விதத்தில்...

அது என்ன என்று அடுத்த ப்ளாகில் பார்ப்போம் ....










Friday, February 1, 2013

இராமானுஜர் நூற்றந்தாதி - இறைவன் இருக்கும் இடம்


இராமானுஜர் நூற்றந்தாதி -  இறைவன் இருக்கும் இடம் 


இறைவன் எங்கே இருப்பான் ? இதற்கு மட்டும் விடை கிடைத்துவிட்டால் எவ்வளவு நல்லா இருக்கும் ?

விடை கிடைத்து விட்டது என்றே வைத்துக் கொள்ளுங்கள்.

இப்படி யோசிப்போம்.

இறைவன் என்று ஒருவன் இருக்கிறான் . அவன் எங்கோ ஒரு இடத்தில் இருக்க வேண்டும்.

 வைகுண்டாமோ, கைலாசமோ, ஏதோ ஒரு இடத்தில் இருக்க வேண்டும் அல்லவா ?

சரி, அங்க தனியா உட்கார்ந்து கொண்டு அவன் என்ன செய்வான் ? போர் அடிக்காதா அவனுக்கு ?

இங்க அவனுடைய பக்தர்கள் அவனுக்காக காத்துக் கொண்டு இருக்கிறார்கள். இங்கு வந்தால் அவனுக்கும் சந்தோஷம் , அவன் பக்தர்களுக்கும் மகிழ்ச்சி.

இது நமக்குத் தெரிகிறது . அவனுக்கும் தெரியும் தானே ? அப்படினா அவன் எங்கு இருப்பான் ?

அடியார்கள் மத்தியில் அவன் இருப்பான் அல்லவா ?

நேரே அங்க போனால் அவனைப் பார்த்து விடலாமே ?

அவன் அங்க இருப்பானான்னு உங்களுக்கு சந்தேகம் இருக்கா ? நான் சொன்னா நம்ப மாட்டீங்க...

அபிராமி பட்டர் சொன்னா நம்புவீங்களா ?


பின்னே திரிந்து உன் அடியாரைப் பேணி பிறப்பு அறுக்க
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன்  என்பார் அபிராமி பட்டர்.

அடியார்கள் பின்னாடியே போனேன் என்கிறார் பட்டர்.



போதொடு நீர் சுமந்து ஏத்திப் புகுவார் அவர் பின் புகுவேன்,
யாதும் சுவடு படாமல் ... என்பார் நாவுக்கரசர்.

மலரோடு நீர் சுமந்து போவார்கள், அவர்கள் பின் நான் செல்லும் சுவடே தெரியாமல் நானும் செல்வேன் என்கிறார் நாவுக்கரசர்.

ஔவையார் சொன்னா ?


பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய்
பெரிது பெரிது புவனம் பெரிது
புவனமோ நான்முகன் படைப்பு
நான்முகன் கரியமால் உதிரத்தில் உதித்தோன்
கரிய மாலோ அலைகடல் துயின்றோன்
அலைகடல் குறுமுனி கலசத்தில் அடக்கம்
கலசமோ புவியிற் சிறுமண்
புவியோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்
அரவோ உமையவள் ஒருசிறு மோதிரம்
உமையோ இறைவர் பாகத் தொடுக்கம்
இறைவரோ தொண்டர் உள்ளத் தொடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே


மாணிக்க வாசகர் சொன்னா ?

உடையாள் உன்றன் நடுவிருக்கும்
உடையாள் நடுவுள் நீயிருத்தி
அடியேன் நடுவுள் இருவீரும்
இருப்ப தானால் அடியேன்உன்
அடியார் நடுவு ளிருக்கும்அரு
ளைப் புரியாய் பொன் னம்பலத்தெம்
முடியா முதலே என்கருத்து
முடியும் வண்ணம் முன்னின்றே. 



சுந்தர மூர்த்தி நாயனார், திருத்தொண்டர் தொகையில்,  சொல்கிறார்

தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் என்று


வள்ளுவர் சொன்னால் கேட்பீங்களா ?

பற்றுக பற்றற்றான் பற்றினை என்று பற்றினை துறந்த துறவிகளின் , அடியார்களின் பற்றை பற்றச் சொல்கிறார் வள்ளுவர் ....


திருவரங்கத்து அமுதனார் இராமானுஜர் என்ற அடியாரை பற்றிக் கொண்டார்


அமுதனார் கூறுகிறார், இராமானுஜர் எனக்கு கிடைத்த செல்வம்.

எனக்குத் தெரியும், ஆண்டவனை விட்டு விட்டு இப்படி இந்த இராமானுஜர் பின்னாலேயே நான் சென்று அவரே கதி என்று கிடப்பதால், அவரைப் பற்றிய  இந்த அந்தாதியை கூட இந்த உலகத்தவர்கள் குறை சொல்லக் கூடும்.

அந்த குறை கூட எனக்கு புகழ் தான், சந்தோஷம் தான்...

ஏன் என்றால், குறை எல்லாம் ஆண்டவனை விடுத்து இராமானுஜரை புகழ்வதை பற்றித்தான் ...இது ஒரு குறையா ? இதை விட எனக்கு வேறு என்ன பாராட்டு இருக்க முடியும் ....உண்மையான பக்தர்களுக்கு என் பாடல் புரியும்..அவர்கள் இதில் குற்றம் காண மாட்டார்கள்....

பாடல்

எனக்குற்ற செல்வம் இராமா னுசனென்று இசையகில்லா
மனக்குற்ற மாந்தர் பழிக்கில் புகழ் அவன் மன்னியசீர்
தனக்குற்ற அன்பர் அவந்திரு நாமங்கள் சாற்றுமென்பா
இனக்குற்றம் காணகில் லார், பத்தி ஏய்ந்த இயல்விதென்றே.

பொருள்

எனக்குற்ற செல்வம் = எனக்கு உற்ற செல்வம் = எனக்கு கிடைத்த செல்வம்

இராமா னுசனென்று = இராமானுசன் என்று

இசையகில்லா = என்னோடு இசையாத, ஒத்துப் போகாத

மனக்குற்ற மாந்தர் = மனதில் குற்றம் உள்ள மாந்தர்கள்

பழிக்கில் = பழி சொன்னால்

புகழ் = அதுவும் எனக்கு புகழ் தான்

அவன் = இராமானுசன்

மன்னியசீர் = நிலைத்த பெருமை

தனக்குற்ற அன்பர் = அவனுடைய அன்பர்கள்

அவந்திரு நாமங்கள் = அவனுடைய (இராமானுசனின்) நாமங்கள்

சாற்றுமென் = சாற்றும் என்  = சொல்லும் என்னுடைய

பா இனக்குற்றம் = பாவின் (பாடலின் ) குற்றம்

 காணகில் லார் = காண மாட்டார்கள்
 பத்தி ஏய்ந்த = பக்தி நிறைந்த, ஏறிய

இயல்விதென்றே = இயல்பு இது என்றே.