Thursday, March 21, 2013

பெரிய புராணம் - திருநீலகண்டர் - 5


பெரிய புராணம் - திருநீலகண்டர் - 5


வாழ்க்கை எப்படியோ ஓடி விடுகிறது. சரியா தவறா என்று அறிந்து கொள்வதற்குள் வாழ்க்கை வேகமாக ஓடி விடுகிறது. இப்படி செய்திருக்கலாமோ, அப்படி செய்யாமல் இருந்திருக்கலாமோ என்று நினைத்து வருத்தப்படத்தான் முடிகிறது. மீண்டும் வாழ ஒரு வாய்ப்பு கிடைப்பதில்லை.

நினைத்துப் பாருங்கள். உங்கள் வாழ்க்கையை ஒரு 30 வருடம் பின்னோக்கி சென்று அங்கிருந்து மீண்டும் ஆரம்பிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும் என்று ? 

ஒரு வேளை நீங்கள் இதே வாழ்க்கையை மீண்டும் கூட வாழலாம்....இருந்தாலும் 30 வருட இளமை கிடைக்குமே...எவ்வளவு  நன்றாக இருக்கும் ?


திருநீலகண்டருக்கும் , அவர் மனைவிக்கும் அப்படி ஒரு வாய்ப்பு வந்தது. 

திருநீலகண்டரும் அவர் மனைவியும் ஒருவரை ஒருவர் தொடாமல் வாழ்ந்து ஆண்டு பல ஆகி விட்டது....வடிவுறு மூப்பும் வந்து சேர்ந்தது. உடல் தளர்ந்து விட்டது.

ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள். மனதிற்குள் தாங்கள் செய்தது சரியா தவறா என்ற கேள்வி  எழுந்திருக்கும். 

என்ன செய்வது. வாழ்க்கை ஓடி விட்டது. இளமை போய் விட்டது. வா என்றால் வருமா ?


அப்படி இருக்கும் போது ஒருநாள், சிவன் ஒரு அடியார் போல் அவர்கள் வீட்டுக்கு வந்தார். திருநீலகண்டரும் அவர் மனைவியும் அவருக்கு   வேண்டிய உபசாரங்கள் செய்தார்கள். அந்த அடியார்  போகும் போது , ஒரு பாத்திரத்தை கொடுத்து அதை பத்திரமாக வைத்திருக்கும்படி சொல்லிவிட்டு போனார்.

சிறிது நாள் கழித்து அவர் மீண்டு வந்து கேட்டபோது, அந்த பாத்திரம் காணவில்லை. 

திருநீலகண்டர், தொலைந்துபோன அந்த பாத்திரத்திற்கு பதிலாக வேறு ஒரு பாத்திரம்  தருவதாக சொன்னார். அடியவர் (சிவன்) கேட்கவில்லை.

"நீர் அந்த பாத்திரத்தை வேண்டும் என்றே எடுத்துக் கொண்டீர் " அப்படி இல்லையென்றால், உன் மகன் மீது சத்தியம் செய்   என்றார். 

எனக்கு மகனே இல்லை என்று கூறினார் திருநீலகண்டர். அப்படி என்றால், உன் மனைவியின் கையை  பிடித்துகொண்டு இந்த குளத்தில் மூழ்கி சத்தியம் செய் என்றார்.

அப்போதும், அவர் தங்களுக்குள் நடந்ததை சொல்லவில்லை. ஒரு குச்சியை எடுத்து, அதில் இருவரும் ஆளுக்கு ஒரு  முனையை பற்றிக்கொண்டு குளத்தில் மூழ்கி எழுந்தார்கள். 

எழும்போது பழைய இளமையோடு வந்தார்கள். 

நடுவில் உள்ள நிறைய பாடல்களை தவிர்த்து, அவர்கள் இளமை பெற்று வந்த பாடல் மட்டும் தருகிறேன். 

பாடல் 

 வாவியின் மூழ்கி ஏறும் கணவரும் மனைவி யாரும் 
 மேவிய மூப்பு நீங்கி விருப்புறும் இளமை பெற்றுத் 
 தேவரும் முனிவர் தாமும் சிறப்பொடு பொழியுந் தெய்வப்
 பூவின் மா மழையின் மீள மூழ்குவார் போன்று தோன்ற 

பொருள் 

Wednesday, March 20, 2013

அற்புதத் திருவந்தாதி - காண்பார்


அற்புதத் திருவந்தாதி - காண்பார் 


காரைக்கால் எழுதியது அற்புதத் திருவந்தாதி. உண்மையிலேயே அற்புதமான நூல்.  அதில் இருந்து ஒரு பாடல். 

கடவுள் இருக்கிறாரா ? இந்த கேள்வி காலம் காலமாய் எழுப்பப்பட்டு முடிவான விடை கிடைக்காமல் மனித குலம் இன்னும் தேடிக்கொண்டே இருக்கிறது. 

காரைக்கால் அம்மையார் இறை உணர்வு பற்றி மனிதர்களை மூன்று விதமாகப் பிரிக்கிறார்.

கடவுள் என்று யாரும் கிடையாது. இந்த உலகைப் படைத்தவன் கடவுள் அல்ல.. இந்த உலகம் தானே உண்டானது. இது சில நியதிகளுக்கு உட்பட்டு இயங்குகிறது. என்று வாதிடும் ஒரு சாரார் 

இன்னொரு சாரார், நமக்கு மேலே ஒரு சக்தி இருக்கிறது. அது என்னவென்று  தெரியாது. அப்படி ஒன்று இல்லாமலா இத்தனையும் நடக்கிறது ? இந்த உலகம் ஒரு நியதிக்கு உட்பட்டு இயங்குகிறது என்று கூறினால் அந்த நியதிகள் எப்படி வந்தன. இவர்கள் இறைவனை முழுமையாக அறியாதவர்கள். ஆனால் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்று அவர்களின் உள்ளுணர்வு சொல்லிக்கொண்டே இருக்கிறது.

மூன்றாவது, இறைவனை அறிந்து, உணர்ந்து, அவன் அன்பில், கருணையில் உருகி அவனையே எங்கும் காண்பார்கள். உள்ளும் புறமும் நீக்கமற நிறைந்த ஜோதியாய் காண்பார்கள். 

இதில் முதலாவது பகுதியை சேர்ந்தவர்களுக்கு அவர்கள் எப்படி நினைக்கிறார்களோ அப்படி இறைவன் தோன்றுகிறான். மீண்டும் மீண்டும் தோன்றும் ஒரு ஒழுங்கு, ஒரு நியதி ...அதுவாக இருக்கிறான் இறைவன் அவர்களுக்கு. 

இரண்டாவது ரகத்தை சேர்ந்தவர்கள்...கை கூப்பி தொழுது ஏதோ ஒரு உருவத்தில் அவனை நினைக்கிறார்கள்...பெருமாள் சிவன், பிள்ளையார் முருகன் என்று அவர்கள் ஏதோ ஒரு உருவத்தில் அவனை நினைக்கிறார்கள். அந்த உருவத்தில் அவர்களுக்கு அவன் காட்சி தருகிரான் 

மூன்றாவது ரகம், இவர்களுக்கு இறைவன் ஜோதி ரூபமாய் உள்ளும் புறமும் எங்கும் நீக்கமற நிறைந்து காட்சி தருகிறான்.

பாடல் 
  

காண்பார்க்குங் காணலாந் தன்மையனே கைதொழுது
காண்பார்க்குங் காணலாங் காதலாற் - காண்பார்க்குச்
சோதியாய்ச் சிந்தையுளே தோன்றுமே தொல்லுலகுக்
காதியாய் நின்ற அரன்.

பொருள் 


அபிராமி அந்தாதி - அன்னையும் ஆயினள்


அபிராமி அந்தாதி - அன்னையும் ஆயினள் 


பெண் ஒரு பெரும் சக்தி. 

பெண்ணில், தாய்மை எண்ணம் எப்போதும் ஓங்கியே இருக்கும் என்று நினைக்கிறேன். உயிரை உருவாக்குவதும், அதை காத்து போற்றுவதும் பெண்ணிற்கு இயல்பாகவே உள்ள குணம் என்று நினைக்கிறேன். 

அபிராமியை காணும் பட்டருக்கு இரண்டு எண்ணம் தோன்றுகிறது. அவள், சங்கரனின் மனைவி மட்டும் அல்ல, சங்கரனின் தாயாகவும் இருக்கிறாள். 

எப்படி மனைவியே தாயாகவும் இருக்க முடியும் ? 

அதுதான் பெண்மை. அவள் என்னவாக இருந்தாலும் தாயாக, அன்னையாக எப்போதும் இருக்கிறாள். 

ஒவ்வொரு மனவிக்குள்ளும் ஒரு தாய் இருந்து கொண்டே இருக்கிறாள்....பரிந்தெடுக்க, அரவணைக்க, அன்பு காட்ட...


பாடல் 

தவளே இவள், எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம் 
அவளே, அவர்தமக்கு அன்னையும் ஆயினள், ஆகையினால், 
இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம், 
துவளேன், இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த் தொண்டு செய்தே

பொருள் 

Tuesday, March 19, 2013

திருக்குறள் - இனியவை கூறல்


திருக்குறள் - இனியவை கூறல் 


அல்லவை தேய அறம் பெருகும் நல்லவை நாடி 
இனிய சொலின் 

(இனியவை கூறல் - 96ஆவது குறள் )

நல்லதை வேண்டி, இனிய சொற்களை கூறினால், துன்பம் தேய்ந்து இன்பம் பெருகும். 

அவ்வளவுதாங்க இந்த குறள். ஒரு கடினனமான வார்த்தையும் கிடையாது. 

இது ஒரு மேலோட்டமான கருத்து. ஆழமாக சிந்திக்க சிந்திக்க அர்த்தங்கள் பொங்கி வரும் ஊற்று திருக்குறள்.

இதில் என்ன ஆழமான அர்த்தம் ?

எல்லோருக்கும் இன்பம் வேண்டும். யாருக்கும் துன்பம் வேண்டாம். இதுதானே உலகில்  உள்ள   அத்தனை உயிர்களும் வேண்டுவது ? 

வள்ளுவர் அதற்க்கு வழி  சொல்லுகிறார் - ஏழே ஏழு வார்த்தைகளில் ....

முதலில் மற்றவர்களுக்கு நல்லதை நினை - "நல்லதை நாடி ". நாடி என்றால் விரும்பி என்று அர்த்தம். நோக்கம் நல்லதாய் இருக்க வேண்டும். யாருக்கு நல்லதை நாடி ? நமக்கு  நாம் நல்லததைத்  தான் விரும்புவோம். அதை சொல்லவே வேண்டாம்.  எனவே நம்மை   தவிர்த்து எல்லா உயிர்களுக்கும் நல்லதை நாடி. 

"இனிய சொலின்" சில பேர் நல்லதை கூட கடுமையாக சொல்லுவார்கள். சில வீட்டில் பிள்ளைகளை படிக்கச் சொல்லி பெற்றோர்கள் கண்டிப்பதை பார்க்கலாம்..."படிக்காட்டி, நீ உருப்படமாட்ட, மாடு மேய்க்கத்தான் போற, பிச்சை எடுக்கத்தான் போற " என்று எல்லாம் திட்டுவார்கள். நோக்கம் நல்லத்தான். நல்லதைத் தான் நாடுகிறார்கள். ஆனால் அதை இனிமையாகச் சொல்லுவது இல்லை. 

இப்படி நல்லதை நாடி, இனிமையாகச் சொன்னால் என்ன விளையும் ?

அறம் பெருகும்....இன்பம் பெருகும், செல்வம் பெருகும் என்று சொல்லி இருக்கலாம். அது என்ன அறம் பெருகும். அறம் என்ற சொல் அறு என்ற வேர்ச்சொல்லில் இருந்து வந்தது. நல்லன இல்லாதவற்றை அறுத்து எரிந்து விட்டு, நல்லதை பெருக்கும். 

அல்லவை தேய - தீயவை தேய என்று கூட சொல்லவில்லை. தீது என்று சொல்லுவதே ஒரு இனிய சொல் அல்ல. எனவே, அல்லவை தேய என்கிறார். அதாவது நமக்கு தேவையில்லாதவைகள்  (துன்பம், தீமை ) தேய என்கிறார். 

இந்தக் குறளில்   சில மறைமுகப் பொருளும் உண்டு.

அதாவது, சில பேர் உதட்டளவில் இனிமையாகப் பேசுவார்கள். நெஞ்சு எல்லாம் நஞ்சாக இருக்கும். பேச்சு இனிமையாக இருந்தாலும், நோக்கமும் நல்லதாக இருக்க வேண்டும். கேட்டதை நாடி  இனிய சொல்லக் கூடாது என்பது ஒரு சொல்லாமல் சொன்ன பொருள். 

இரண்டாவது, நல்லதை நினைத்து கூட இனிமை இல்லாத சொல்லை சொல்லக் கூடாது. அப்படி சொன்னால் கேட்பவன் அந்த நல்லதை செய்யாமல் போனாலும் போகலாம். அது யாருக்கு நல்லது. நல்லதே ஆனாலும், அதை இனிமையாகச் சொல்ல வேண்டும். கடுமையாகச் சொல்லக் கூடாது. 


மூன்றாவது, நல்லவை நாடி இனிய சொன்னால், அல்லவை தேய்ந்து அறம்  பெருகும். கெட்டதை நாடி இனிய சொன்னாலோ, அல்லது நல்லவை நாடி இனிமை இல்லாதவற்றைச் சொன்னாலோ என்ன ஆகும் ? அப்படிச் செய்தால் அல்லவை வளர்ந்து, அறம் குறுகும் (வளராது ). 

கணிதம் படித்தவர்களுக்கு சற்று எளிமையாக இருக்கும்...இப்படி யோசித்துப் பாருங்கள் ...


அல்லவை - தேயும் , வளரும் 
அறம் - தேயும் , வளரும் 
நல்லவை நாடி, தீயவை நாடி 
இனிய சொலின், இனிமை இல்லாதவற்றை சொலின் 


மீண்டும் ஒரு முறை குறளை படித்துப் பார்ப்போம் ...

   
அல்லவை தேய அறம் பெருகும் நல்லவை நாடி 
இனிய சொலின் 

பெரிய புராணம் - திருநீலகண்டர் - 4


பெரிய புராணம் - திருநீலகண்டர் - 4


இளமை அழகா ? முதுமை அழகா ?

இளைய பெண் அழகாய் இருப்பாளா ? வயதான கிழவி அழகாய் இருப்பாளா ?

இளமை தானே அழகு ? அதில் ஒன்றும் சந்தேகம் இல்லையே ?

சேக்கிழார் அப்படி சொல்லவில்லை. அழகான, வடிவான மூப்பு என்கிறார்.

திருநீலகண்டரும் அவர் மனைவியும் அப்படி ஒருவரை ஒருவர் தொட்டுக் கொள்ளாமல் பல காலம் வாழ்ந்தனர்.

இளமை போய் விட்டது.

தலை சாய்ந்து விட்டது ? ஏன் ? உடல் சாய்ந்ததால்....கூன் விழுந்ததால். உடலில் ஒரு தளர்வு வந்துவிட்டது.  வலிமை போய் விட்டது.

வயது முதிர்ந்து மூப்பு வந்து விட்டது. ஆனால் அழகாக இருக்கிறார்கள். எப்படி ?

வாழும்போது நிறைவாக வாழ்ந்தால், வயோதிகம் அழகாக இருக்கும். வாழ் நாள் பூராவும் ஏக்கத்திலும், கோபத்திலும், பொறாமையிலும், எரிச்சலிலும், பேராசையிலும் சென்றால்  முதுமை வெம்பி போன பழம் மாதிரி அழகு இல்லாமல் , சுவை இல்லாமல் போகும்.

திருநீலகண்டரும், அவர் மனைவியும் மெய் இன்பம் பெறவில்லை.  அவர்களுக்கு குழந்தை இல்லை.

ஒருவர் மேல் ஒருவர் அன்புடன், இறை பக்தியுடன் வாழ்ந்து வந்ததால், "வடிவுறு மூப்பு " அடைந்தார்கள்.

உடல் வலிமை போனாலும் இறைவன் மேல் கொண்ட அன்பு கொஞ்சம் கூட தளரவில்லை.

 பாடல்


இளமையின் மிக்குளார்கள் இருவரும் அறிய நின்ற
அளவில் சீர் ஆணை போற்றி ஆண்டுகள் பலவும் செல்ல 
வள மலி இளமை நீங்கி வடிவுறு மூப்பு வந்து 
தளர்வொடு சாய்ந்தும் அன்பு தம்பிரான் திறத்துச் சாயார் 



பொருள் 


சிலப்பதிகாரம் - கூடான கூடலான்


சிலப்பதிகாரம் - கூடான கூடலான் 


மதுரை நகருக்கு கூடல் நகர் என்று ஒரு பெயர் உண்டு. நான் மாடக் கூடல் என்றும் சொல்லுவார்கள். 

கூடல் நகரை ஆள்வதால் பாண்டிய மன்னன்  கூடலான் என்று அழைக்கப்பட்டான்.

இந்த உடலை கூடு என்று கூறுவார்கள் . கூடு விட்டு இங்கு ஆவிதான் போனபின் யாரே அனுபவிப்பார் பாவிகாள்  அந்தப் பணம் என்பார் ஔவையார். 

உயிர் போய் விட்டால் இந்த உடல் வெறும் கூடு தானே.

அப்படி பாண்டிய நாட்டை ஆண்ட கூடலான், ஒரு நாள் ஒரு பெண்ணின் கூந்தலை கண்டு அஞ்சி  உயிரை விட்டு வேறு கூடாகிப் போனான்...அது எப்போது தெரியுமா ?



பாடல் 

காவி யுகுநீருங் கையில் தனிச்சிலம்பும் 
ஆவி குடிபோன அவ்வடிவம்--பாவியேன் 
காடெல்லாஞ் சூழ்ந்த கருங்குழலுங் கண்டஞ்சிக் 
கூடலான கூடாயி னான்

பொருள் 

Monday, March 18, 2013

பெரிய புராணம் - திருநீலகண்டர் - 3


பெரிய புராணம் - திருநீலகண்டர் - 3


கணவன் மனைவிக்கு நடுவில் ஊடல் வருவது இயற்கை. அதுவே கொஞ்சம் சண்டையாகவும் மாறலாம். என்கூட பேசாதிங்க, என்னை ஒண்ணும் தொட வேண்டாம் என்று மனைவி கோபித்துக் கொள்வது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. எல்லார் வீட்டிலும் நடப்பதுதான்.

கோபத்தில் அந்த அம்மா எம்மை தீண்டாதீர் என்றார். 

அதை தெய்வ வாக்காக கொண்டு, மனைவி "திரு நீல கண்டத்தின் மேல் ஆணை, எம்மை தீண்டாதீர் " என்று சொன்னதால் மனைவியை மட்டும் அல்ல, வேறு எந்த பெண்ணையும் மனதால் கூட தொடுவது இல்லை என்று விரதம் பூண்டார் திருநீல கண்டர்.  

மனைவியும் அப்படி சொல்லிவிட்டாரே தவிர, கணவன் மேல் உள்ள அன்பு துளியும் குறைவில்லை. அவர் இன்னொரு பெண்ணின் வீடு சென்றது குற்றம்தான். கோவித்தது சரிதான். அதுக்காக, அவரிடம் பேசாமல் இல்லை, அவர்க்கு வேண்டியது செய்யாமல் இல்லை....தொடுவதும், தொட்டுக்கொள்வதும் மட்டும் இல்லை. 

கணவன் மனைவிக்கு நடுவில் இந்தத் திரை. வெளியே சொல்ல முடியுமா ? 

ரொம்ப அந்தரங்கமான விஷயம். சேக்கிழாருக்கு சொல்லவும் வேண்டும். விரசத்தை தொட்டு விடவும் கூடாது. 

பாடல் 

கற்புறு மனைவியாரும் கணவனார்க்கு ஆன எல்லாம் 
பொற்புற மெய் உறாமல் பொருந்துவ போற்றிச் செய்ய 
இல் புறம்பு ஒழியாது அங் கண் இருவரும் வேறு வைகி 
அன்புறு புணர்ச்சி இன்மை அயலறியாமை வாழ்ந்தார் 

பொருள்