Tuesday, April 30, 2013

புறநானூறு - இறப்பதன் முன், நினைத்ததை செய்


புறநானூறு - இறப்பதன் முன், நினைத்ததை செய் 


நிறைய நல்ல விஷயங்களை தள்ளிப் போட்டு கொண்டே போகிறோம். ரிடையர் ஆனபிறகு படிக்க, பார்க்க என்று பல விஷயங்களை வைத்திருக்கிறோம்.

அது வரை இருக்க வேண்டுமே ? இறப்பு என்பது நம் கையிலா இருக்கிறது ? அல்லது அது சொல்லிக் கொண்டு வருமா ?

எது செய்ய வேண்டும் என்று நினைகிறீர்களோ, அதை செய்யுங்கள். தள்ளிப் போடாதீர்கள்

பாடல்

இருங்கடல் உடுத்தஇப் பெருங்கண் மாநிலம்
உடைஇலை நடுவணது இடைபிறர்க்கு இன்றித்
தாமே ஆண்ட ஏமம் காவலர்
இடுதிரை மணலினும் பலரே; சுடுபிணக்
காடுபதி யாகப் போகித் தத்தம்                   

நாடு பிறர்கொளச் சென்றுமாய்ந் தனரே;
அதனால் நீயும் கேண்மதி அத்தை; வீயாது
உடம்பொடு நின்ற உயிரும் இல்லை;
மடங்கல் உண்மை மாயமோ அன்றே;
கள்ளி ஏய்ந்த முள்ளியம் புறங்காட்டு  

வெள்ளில் போகிய வியலுள் ஆங்கண்
உப்பிலாஅ அவிப்புழுக்கல்
கைக்கொண்டு பிறக்கு நோக்காது
இழிபிறப்பினோன் ஈயப்பெற்று
நிலங்கல னாக விலங்குபலி மிசையும் 

இன்னா வைகல் வாரா முன்னே,
செய்ந்நீ முன்னிய வினையே,
முந்நீர் வரைப்பகம் முழுதுடன் துறந்தே.


பொருள் 

இராமானுஜ நூற்றந்தாதி - காமமே சிறந்தது ....


இராமானுஜ நூற்றந்தாதி - காமமே சிறந்தது ....


அறம் , பொருள், இன்பம், வீடு என்ற நான்கை சொல்லுகிறார்கள் பெரியவர்கள்.

அற வழியில் பொருள் ஈட்டி, அதன் மூலம் இன்பம் துய்த்து, பின் அதை கடந்து வீடு பேற்றை அடைய வேண்டும் என்பது பொருள்.

இந்த நான்கில் இன்பம், அதாவது காமமும் காதலும் மிக சக்தி வாய்ந்தது.

வலுவானது. காமத்தை வெல்லுவது கடினம்.

அது மனிதனின் இயற்கையோடு ஒன்றியது. அதை அடக்க நினைப்பதும் சிறந்தது அல்ல. அடக்க அடக்க மேலும் பொங்கி வருவது காமம்.

காமத்தை வெல்ல அமுதனார் எளிய வழி சொல்லுகிறார்.

காமம் அப்படியே இருக்கட்டும். அதை அப்படியே கண்ணன் மேல் திருப்பி விடுங்கள். அவ்வளவுதான்.

ஆயர் பாடி கோபிகைகள் அத்தனை பேரும் கண்ணன் மேல் மோகம் கொண்டார்கள் என்று கூறுவது ஒரு  உவமை - ஒரு உருவகம்.

உள் அர்த்தம், உலக மக்களே உங்கள் காமத்தை, இறைவன்பால் திருப்புங்கள் என்பதே.

அப்படி திருப்பும் போது துன்பம் செய்யும் காமம் சீரிய நல்  காமமாக மாறி விடுகிறது. அந்த காமமே நன்மை செய்யும்.

அறம் , பொருள், இன்பம் இந்த மூன்றும் கண்ணன் மேல் காமம் கொள்வதற்குத் தான் என்று கூறினார் இராமனுசர்.

பாடல்

சேமநல் வீடும் பொருளும் தருமமும் சீரியநற்
காமமும் என்றிவை நான்கென்பர் நான்கினும் கண்ணனுக்கே
ஆமது காமம் அறம்பொருள் வீடிதற் கென்றுரைத்தான்
வாமனன் சீலன் இராமானுசன் இந்த மண்மிசையே


பொருள் 

திருக்குறள் - காதலில், எது பெரிது ?


திருக்குறள் - காதலில், எது பெரிது ?


காதலில் மிகுந்த சுவை தரக் கூடியது எது ?

காதலியை சந்திப்பது, அவளுக்காக காத்திருப்பது, அவளுக்கு பரிசு வாங்கித் தருவது, அவளோடு பைக்கில் ஊர் சுற்றுவது, ஒரே இளநியில் இரண்டு ஸ்ட்ரா போட்டு குடிப்பது, ஓடாத படத்திற்கு ஓர டிக்கெட் போடுவது  என்று பல கூறுகள் இருந்தாலும் இது எல்லாவற்றையும் விட சிறந்தது என்று வள்ளுவர் ஒன்றை கூறுகிறார்...

அது சைட் அடிக்கும் காதலியின் கண்கள்

என்னது, பெண்கள் சைட் அடிப்பார்களா ? அதுவும் திருவள்ளுவர் காலத்து பெண்கள் சைட் அடிப்பார்களா ?  என்று நீங்கள் கேட்கலாம் ? ஆச்சரியப் படலாம்....

எனக்கு என்ன தெரியும்....வள்ளுவர் சொல்கிறார்....படியுங்கள்....அப்புறம் நீங்களே சொல்லுங்கள்....

பாடல்



கண்களவு கொள்ளுஞ் சிறுநோக்கங் காமத்திற் 
செம்பாக மன்று பெரிது.


பொருள்


இராமாயணம் - தருமமும் தகவும்


இராமாயணம் - தருமமும் தகவும் 


தூரத்தில் வரும் இராம இலக்குவனர்களை அனுமன் காண்கிறான். முதலில் அவர்களை கண்ட சுக்ரீவன் தன்னை கொல்ல வாலிதான் அவர்களை அனுப்பி இருக்கிறான் என்று எண்ணி ஓடி ஒளிந்து கொண்டான். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்களே அது போல.

அனுமன் அவர்களை எடை போடுகிறான்.

சில பேருக்கு தர்மம் செய்ய மனம் இருக்கும், வசதி இருக்காது. 

சில பேருக்கு நிறைய பணம் இருக்கும், தர்மம் செய்ய மனம் இருக்காது. 

இரண்டும் சேர்ந்து வருவது இனிமையானது. 

இராம இலகுவனர்களைப் பார்த்தால் தருமமும் தகவும் இவர்களிடம் ஒன்றாக வந்தது போல இருக்கிறது. தருமமும், தகவும் இவர்களின் சொத்து. (தக்கார், தகவிலார் அவர் அவர்தம் எச்சத்தால் காணப்படும் என்பார் வள்ளுவர். தகவு என்றால் தகுதி)

தருமம் என்ற சொல்லுக்கு அறம் , நீதி வழி நிற்றல், தர்ம வழி நிற்றல் என்றும் பொருள் சொல்லலாம். 

சுக்ரீவன் நினைப்பது போல இவர்கள் வாலி அனுப்பி சுக்ரீவனை கொல்ல வந்தவர்கள் அல்ல. 

உங்களிடம் மிக மிக அறிய ஒரு மருந்து இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். உயிர் காக்கும் மருந்து என்றால் அதன் மகத்துவம் புரியும். அந்த மருந்து ஒரே ஒரு பாட்டில் தான் இந்த உலகில் உள்ளது. அது இல்லாவிட்டால் உங்களுக்கு ரொம்ப கஷ்டம். அந்த மருந்தை, வைத்த இடத்தில் காணவில்லை. அதை எப்படி முழு மூச்சுடன் தேடுவீர்கள். அது இல்லாமல் முடியாது. கடையில் போய் வாங்கிக் கொள்ளலாம் என்றால் கிடைக்காது. அந்த மருந்து கிடைத்தால் தான் உண்டு. வெளி நாடு போபவர்களுக்கு இது புரியும். முக்கியமான சில மருந்துகளை எடுத்துச் செல்வார்கள். திடீரென்று ஒரு நாள் அந்த மருந்து பெட்டியில் வைத்த இடத்தில் இருக்காது. பெட்டியை கவிழ்த்து போட்டு உண்டு இல்லை என்று ஆக்கி விடுவார்கள். 

அப்படி ஒரு மருந்தை தேடுபவர்களை போல் இவர்கள் எதையோ இழந்து விட்டு எல்லா பக்கமும் தேடி கொண்டு வருகிறார்கள் 

என்று இராம இலக்குவனர்களை எடை போடுகிறான் அனுமன். 

கண்டவுடன் மனிதர்களை எடை போடுவது அறிவின் ஒரு கூறு. 

பாடல் 


தருமமும், தகவும், இவர்; தனம் எனும் தகையர், இவர்;
கருமமும் பிறிது ஒர் பொருள் கருதி அன்று; அது கருதின்,
அரு மருந்து அனையது, இடை அழிவு வந்துளது; அதனை,
இரு மருங்கினும், நெடிது துருவுகின்றனர், இவர்கள். 

பொருள் 

Monday, April 29, 2013

இராமாயணம் - அந்தரங்கத்தை வெளியே சொல்லக் கூடாது


இராமாயணம் - அந்தரங்கத்தை வெளியே சொல்லக் கூடாது 


மந்தரை கொஞ்சம் கொஞ்சமாக கைகேயின் மனத்தை மாற்றி விட்டாள் . 

"சரி, நான் என்ன செய்ய வேண்டும் " என்று கேட்கிறாள் கைகேயி. 

"அப்படி கேள் சொல்கிறேன்...சம்பாசுர யுத்தத்தில் வென்ற போது உனக்கு இரண்டு வரம் தருகிறேன் என்று தசரதன் சொன்னான் அல்லவா...அவற்றை இப்போது கேள்" என்றாள் உள்ளமும் வளைந்த கூனி 

பாடல் 


நாடி ஒன்று உனக்கு உரைசெய்வென்;
     நளிர் மணி நகையாய்!
தோடு இவர்ந்த தார்ச் சம்பரன்
     தொலைவுற்ற வேலை
ஆடல் வென்றியான் அருளிய வரம்
     அவை இரண்டும்
கோடி’ என்றனள், உள்ளமும்
     கோடிய கொடியாள்.


பொருள் 

அபிராமி அந்தாதி - அழியா முத்தி ஆனந்தமே


அபிராமி அந்தாதி - அழியா முத்தி ஆனந்தமே 


உண்மை எது ? உண்மை என்பதை வரையறத்து கூற முடியுமா ? அப்படி கூற முடிந்தால் நேரடியாக சொல்லிவிடலாமே. எதற்கு இத்தனை வேதம், உபநிடதம், புராணம், இதிகாசம் எல்லாம் ? இத்தனை இருந்தும் இன்னும் உண்மை எது என்று அறிந்தபாடில்லை. 

உண்மை என்பது வார்த்தைகளுக்குள் அடங்காத ஒன்று. எத்தனை ஆயிரம் புத்தகங்கள் படித்தாலும் அதை அறிந்து கொள்ள முடியாது. வார்த்தையாலோ, எழுத்திலோ அதை கூற முடியாது. 

இனிப்பு என்ற சுவையை எழுதிக் காட்ட முடியாது.

மனைவியின் கண்ணோரம் கசியும் காதலை வார்த்தைக்குள் அடக்க முடியாது. 

பக்தியும், இறை உணர்வும் அப்படித்தான்...

அவள், "எழுதா மறையின் அரும் பொருள்". மறை என்றால் வேதம். எழுதா மறை என்றால் எழுதப் படாத மறை பொருள் அவள். அவள் வார்த்தைகளில் சிக்க மாட்டாள். யாரோ கண்டு உங்களிடம் சொல்ல முடியாது. நீங்களே தான் அவளை நேரடியாக அறிய வேண்டும்.

அவளை அறிந்து கொண்டால், உணர்ந்து கொண்டால்....எல்லாம் அவளாகத் தெரியும்.....நிற்பதும், இருப்பதும், கிடப்பதும், நடப்பதும் எல்லாம் அவளாகத் தெரியும். 

இன்னொரு பொருள், நிற்கும் போதும், இருக்கும்போதும் படுத்து கிடக்கும்போதும், நடக்கும்போதும், அவள் நினைவாகவே இருக்கும். 

எபோதும் வணங்குவது அவளுடைய மலர் போன்ற திருவடிகளை. எதை வணங்கினால் என்ன, எல்லாம் அவள்தானே. 

நமக்கு வாழ்க்கையில் கிடக்கும் இன்பங்கள் எல்லாம் அழியக் கூடிய இன்பங்கள். ஒரு சமயம் இன்பமாய் இருக்கும். சிறிது நேரம் இருக்கும். நாள் ஆக நாள் ஆக அதில் உள்ள இன்பம் குறையும். மனம் சலிப்புறும். உடல் சலிப்புறும். பின் அதுவே கூட துன்பமாய் மாறும் 

அபிராமி அப்படி அல்ல.

அவள் அழியாத ஆனந்தம் தருபவள். 

உமா என்றால் ஒளி  என்று பொருள். ஒளி  அநாதியானது. என்று பிறந்தவள் என்று அறிய முடியாத அன்று பிறந்தவள் அவள்.. 

பாடல் 

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை, 
என்றும் வணங்குவது உன் மலர்த் தாள்.-எழுதாமறையின் 
ஒன்றும் அரும்பொருளே. அருளே. உமையே. இமயத்து 
அன்றும் பிறந்தவளே. அழியா முத்தி ஆனந்தமே.

பொருள் 

Sunday, April 28, 2013

திருக்குறள் - நோயும் மருந்தும்


திருக்குறள் - நோயும் மருந்தும் 


தலைவியை பார்த்து, அவள் அழகில் மயங்கி , அவளை அன்போடு நோக்குகிறான் தலைவன்.

அவளும், அவனை நோக்குகிறாள்.

அவளின் பார்வைக்கு அவனுக்கு அர்த்தம் தெரியவில்லை. ஒரு சமயம் அன்பாக பார்ப்பது மாதிரி இருக்கிறது. இன்னொரு சமயம் கோபமாய், வெறுப்பாய் பார்ப்பது மாதிரி இருக்கிறது.

அவனால் அறிய முடியவில்லை.

துன்பம் தருவதும் அவள் கண்கள் தான்.. அந்த துன்பத்திற்கு மருந்து தருவதும் அவள் பார்வைதான்...

பாடல்

இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு 
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.

பொருள்