Sunday, May 5, 2013

இராமாயணம் - வாலியின் சிறப்பு - 1


இராமாயணம் - வாலியின் சிறப்பு - 1


வாலி பற்றி இராமனிடம் அனுமன் எடுத்துரைக்கிறான்.

வாலியை விட வலிமையான பாத்திரம் ஒன்று இருக்க முடியாது என்று நினைக்கும் அளவுக்கு கம்பன் அந்த பாத்திரத்தை படைக்கிறான்.

அந்த வாலியின் சிறப்புகள் என்ன ?


அவன் சிறந்த சிவ பக்தன், அளவற்ற ஆற்றல் கொண்டவன்.



பாடல்

நாலு வேதம் ஆம் நவை இல் ஆர்கலி
வேலி அன்னவன், மலையின் மேல் உளான்,
சூலிதன் அருள் துறையின் முற்றினான்,
வாலி என்று உளான், வரம்பு இல் ஆற்றலான்; 

பொருள்



திருவாசகம் - சிறைபடா நீர் போல்


திருவாசகம் - சிறைபடா நீர்  போல் 


இறை அருளை பெற என்ன செய்ய வேண்டும் ?

ஒன்றும் செய்ய வேண்டாம் !

ஒண்ணும் செய்ய வேண்டாமா ? அப்புறம் இந்த பக்தி, பூஜை, புனஸ்காரம் எல்லாம் எதுக்கு ? அது எல்லாம் வேண்டாமா ?

வேண்டாம்.

இது என்ன புது கதையா இருக்கு. ஒண்ணும் புரியலையே.

சொல்லுவது நான் அல்ல. மாணிக்க வாசகர்.

மலையில் இருந்து கீழே வரும் வெள்ளம். அதை சிறை படுத்தி வைக்க முடியாது. அணை கட்டி வைத்தாலும் ஆவியாகப் போய் விடும். எப்படி தடுத்தாலும் நீர் கசிந்து கசிந்து கீழ் நோக்கி பாய்வதை தடுப்பதை கடினம்.

இறை அருள் என்ற வெள்ளம் உங்கள் மனம் என்ற இடம் நோக்கி பாய்ந்து வரும். நீங்கள் அதை காலியாக வைத்து இருங்கள்.

அந்த வெள்ளம் நம்மிடம் வர முடியாமல், நாம் அதில் குப்பைகளை போட்டு நிரப்பி வைத்திருக்கிறோம். பள்ளம் இருந்தால் தானே அதில் நீர் வந்து பாய முடியும்?

அத்தனை ஆசை, கோபம், காமம், லோபம், வேற்றுமை உணர்வுகள், அச்சம், பொறாமை என்ற குப்பைகள்.

இந்த குப்பைகளை எடுத்து எறிந்து விட்டு, மனதை சுத்தமாய் வைத்திருங்கள். அருள் வெள்ளம் உங்கள் உள்ளத்தை தானே நிரப்பும்

ஈசனோடாயினும் ஆசை அறுமின் என்றார் திருமூலர்

பாடல்


குறைவிலா நிறைவே கோதிலா அமுதே
    ஈறிலாக் கொழுஞ்சுடர்க் குன்றே
மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தென்
    மனத்திடை மன்னிய மன்னே
சிறைபெறா நீர்போல் சிந்தைவாய்ப் பாயுந்
    திருப்பெருந் துறையுறை சிவனே
இறைவனே நீயென் உடலிடங் கொண்டாய்
    இனியுன்னை யென்னிரக் கேனே.  


பொருள்


Saturday, May 4, 2013

இராமாயணம் - அவதார நோக்கமும் செயலும்

இராமாயணம் - அவதார நோக்கமும் செயலும் 


இராமயணத்தை படிக்கும் போது, அதன் கதை போக்கிலேயே படித்துக் கொண்டு போவது ஒரு சுவை.

அதை விடுத்து, இந்த கதை ஏன் இப்படி போகிறது, இதுவே வேறு மாதிரி போனால் எப்படி இருக்கும் ? இந்த கதா பாத்திரம் எதற்கு இருக்கிறது ? அது இல்லாவிட்டால் என்ன என்று கேள்வி கேட்டு விடை தேடினால் அதில் இன்னும் சுவை கூடும்.

அப்படி சிந்தித்த போது எனக்குள் ஒரு கேள்வி....இந்த வாலி வதம் எதற்கு ? அதுவும் மறைந்திருந்து கொல்ல வேண்டிய அவசியம் என்ன ?

இராமன் நேரடியாக வாலியிடம் சென்று ஒரு வார்த்தை சொல்லி இருந்தால், இராவணன் கதறிக் கொண்டு வந்து சீதையை ஒப்படைத்திருப்பான்.

அப்புறம் இராவணனோடு நிதானமாக சண்டை போட்டு அவனை கொன்றிக்கலாம்.

அல்லது வாலியின் துணையோடு நேரே இலங்கை போய் இராவணனை கொன்று சீதையை சிறை மீட்டிருக்கலாம். சுக்ரீவனிடம் உதவி கேட்கலாம் என்றால் வாலியிடம் உதவி கேட்பதில் என்ன தவறு ?

வாலி என்ற பாத்திரம் இல்லாவிட்டால் காவிய போக்கில் என்ன நிகழ்ந்திருக்கும் ?

வாலி வதத்தின் மூலம் கம்பன் என்ன சொல்ல வருகிறான் ? அதுவும் மறைந்திருந்து கொல்வதற்கு ஏதோ ஒரு நோக்கம் இருக்க வேண்டும் அல்லவா ?

ஏன் இராமனை குற்றவாளி கூண்டில் கம்பன் நிறுத்தி வாலி வாயால் அத்தனை கேள்விகளை கேட்க்க வைத்தான் ? கேட்ட பின்னும், வாய் மூடி மெளனமாக இராமனை நிற்க வைத்தான் ?

என்ன காரணம் ? என்ன காரணம் ? என்ன காரணம் ?

யோசித்துப்  பாருங்கள். உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்களேன் ? சுவாரசியமாக இருக்கும்

Friday, May 3, 2013

திருக்குறள் - காதல் நோக்கு


திருக்குறள் - காதல் நோக்கு (கண்ணடிக்கிறா?)


காதலியின் பார்வை, என்ன செய்யும் என்று அதை அனுபவித்தவர்களுக்குத் தெரியும்.

மனதுக்குள் மலரள்ளித் தெளிக்கும்,

உடலெங்கும் உற்சாக நதி கரை புரண்டு ஓடும்,

அட்ரினலில் இரத்தம் கலக்கும், அடிவயிற்றில் கலவரம், காது நுனி சிவக்கும், உள்ளங்கை ஊற்றெடுக்கும், உடல் தூக்கத்தையும் பசியையும் நாடு கடத்தி இருக்கும்....ஓடுகின்ற இதயம் உசைன் போல்ட்டுக்கு சவால் விடும், தரை படாத கால்கள் நியுட்டனின் விதிகளை எள்ளி நகையாடும்....

அவள் நேராக பார்க்க மாட்டாள். ஓரக்கண்ணால ஒரு பார்வை. ஓரப் பார்வைக்கு இத்தனை உற்சாகம்...முழுப் பார்வையும் பார்த்தால்...யார் தாங்குவது ?

அப்படின்னு வள்ளுவர் சொல்லுறார்....

பாடல்

குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும்

பொருள்


அபிராமி அந்தாதி - புனிதரும் நீயும்


அபிராமி அந்தாதி - புனிதரும் நீயும்



அன்பு வயப்பட்டவர்கள் அறிவார்கள் ஈருடல் ஓருயிர் என்றால் என்ன. அன்பு இணைக்கும் பாலம். அன்பு கரைக்கும் இரசவாதம். ஒன்றில் ஒன்று கரைவது அன்பு. நீரையும் எண்ணெயையும் ஒன்றாக ஊற்றி வைத்தாலும் அது ஒன்றோடு ஒன்று பொருந்தாது. தனித் தனியாக நிற்கும்.

இரண்டு பொருளை நாம் சரியாகப் பொறுத்த வில்லை என்றால் அது கட கட என்று ஆடிக் கொண்டிருக்கும். சத்தம் போட்டுக் கொண்டு இருக்கும். சில சமயம் கழண்டு கூட விழுந்து விடும்.


ஒன்றோடு ஒன்று சரியாக பொருந்தி விட்டால் இரண்டும் சேர்ந்து ஒன்றாக செயல் படும்.



மனித மனம் ஒரு நிலையில் நில்லாதது. அங்கும் இங்கும் அலை பாய்ந்து கொண்டே இருக்கும். அரை நிமிடம் கூட அதனால் ஒரு நிலையில் நிற்க முடியாது.



சரண கமலாலயத்தை அரை நிமிஷ நேரமட்டில்
தவமுறை தியானம் வைக்க அறியாத
சட கசட மூட மட்டி 


என்று கூறுவார் அருணகிரிநாதர்

என்னதான் முயற்சி செய்தாலும் சிறை படா நீர் போல் என்று மாணிக்க வாசகர் சொன்னது போல் மனம் நீர் போல் கசிந்து போய் கொண்டே இருக்கிறது.

ஒரு இடத்தில் பொருந்தி நிற்காது.

இறைவனோடு நாம் எப்படி பொருந்தி இருப்பது ? ஒன்று நாம் இறைவனை அடைய வேண்டும். அல்லது இறைவன் நம்மை வந்து அடைய வேண்டும்.

நாம் இறைவனை அடைவது என்பது நடவாத காரியம். அவன் யார், எங்கே இருக்கிறான், எப்படி இருக்கிறான் என்று நமக்குத் தெரியாது.

நாம் யார், எங்கே இருக்கிறோம்,, எப்படி இருக்கிறோம் என்று அவனுக்குத் தெரியும்.

எது எளிது ?

நாம் அவனைத் தேடித் போவதா ? அவன் நம்மை தேடி வருவதா ?

இறைவன் நம்மை வந்து அடைவது எளிது.


பட்டர் கூறுகிறார்...நான் உன்னை வந்து அடைவது என்பது நடவாத காரியம். பேசாமல் நீ வந்து  என் மனதில் இரு என்று அபிராமியிடம்  கூறுகிறார்.

அதுவும் தனியா வராத, வரும்போது உன் கணவனையும் அழைத்துக் கொண்டுவா. இல்லை என்றால், திரும்பியும் உன் கணவனை பார்க்க போய் விடுவாய். நீங்க இரண்டு பெரும் ஒன்றாக வந்து என் மனதில் இருங்கள். அப்பத்தான் திரும்பி எங்கேயும் போக மாட்டீங்க. 

மனிதர்களும், தேவர்களும், மாயா முனிவர்களும் அவர்கள் வேறு, அபிராமி வேறு என்று நினைத்து அவளை அவர்கள் வணங்குகிறார்கள்.

பட்டர் அறிவார். அவர் வேறு அவள் வேறு அல்ல.

பாடல்



மனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே.கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும், பாம்பும்,பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே.

பொருள்


Thursday, May 2, 2013

திருக்குறள் - காதல் பயிருக்கு நீர்


திருக்குறள் - காதல் பயிருக்கு நீர் 


வீடுகளில் செடிக்கு நீர் விடுவதை பார்த்து இருக்கிறீர்களா ? பூச் செடி, துளசி செடி என்று செடி இருக்கும்.

ஒரு சின்ன  சொம்பிலோ , குவளையிலோ மொண்டு செடிக்கு தண்ணி ஊத்துவார்கள்.

சட்டென்று குவளையை கவிழ்த்து விடமுடியாது. அப்படி மொத்தமா கொட்டினால் செடி தாங்காது. கொஞ்ச கொஞ்சமாய் ஊற்ற வேண்டும்

குவளையை சரித்து கொஞ்சம் ஊற்றனும். அப்புறம் குவளைய நிமித்தனும். அப்புறம் கொஞ்சம் சரிக்கணும்...இப்படி கொஞ்ச கொஞ்சமாய் தண்ணி ஊற்றுவார்கள்

அப்படி கொஞ்ச கொஞ்சமா ஊற்றினால்தான் செடி நன்றாக வளரும்.



அவ சில சமயம் நேருக்கு நேர் பார்ப்பாள். அட, நம்ம  ஆளு இப்படி லுக்கு விடுதேனு நானும் அவ கண்ணை பார்த்தால் உடனே பார்வையை தாழ்த்தி விடுவா.  அப்படி பார்வையை தாழ்த்தும் போது ஒரு நாணப் புன்னகை சிந்துவாள்.

அப்புறம், நான் கவனிக்காதபோது லேசா தலைய தூக்கி பார்ப்பா...அப்புறம் நாணம், தலை கவிழ்ப்பு.....

செடிக்கு தண்ணி ஊத்தும் குவளை ஞாபகம் வருகிறதா ?


பாடல்

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்


பொருள்


இராமாயணம் - நீர் மேயும் மேகம்


இராமாயணம் - நீர் மேயும் மேகம் 


அயோத்தியில் மேகங்கள் மழை பொழிகின்றன.

இதுதான் செய்தி

இதைச் சொல்ல வேண்டும். ஆழமாக, அழகாக சொல்ல வேண்டும்.

கம்பர் எப்படி சொல்கிறார் பாருங்கள். கம்பனின் கவிப் புலமைக்கு இது ஒரு உதாரணம்.

சிவ பெருமான். அவன் செந்நிற மேனி கொண்டவன். பொன் போன்ற நிறம்.

"பொன்னார் மேனியனே புலித் தோலை அரைக்கசைத்து" என்பது தேவாரம்.

அவன் மேனி எல்லாம் திருவெண்ணீறு பூசி இருக்கிறான். தூரத்தில் இருந்து பார்க்கும் போது ஒரே வெண்மையாகத் தெரிகிறது.

மேகங்கள் அப்படி வெண்மையாக இருந்ததாம்.

அப்படி பட்ட வெண் மேகங்களில் கொஞ்சம் நீர் இருக்கிறது. நிறைய இல்லை. அது ஏதோ ஆற்றை எடுத்து மேலே அணிந்து கொண்டது மாதிரி இருக்கிறது.

பின் அப்படியே மிதந்து போய் கடலின் மேல் பசு புல் மேய்வது மாதிரி கடல் தண்ணியை  எல்லாம் மேய்ந்ததாம். வயிறு முட்ட தண்ணி சாப்ட்டாச்சு.

திரும்பி அயோத்தி வருகிறது.

வரும்போது எப்படி இருக்கிறது ?

கருமை நிறத்தில் இருக்கிறது. எப்படி கருமை ? திருமகள் மணாளன் திருமாலின் வண்ணம் போல்  திரும்பி வந்தது.


திருமால் இங்கு வரப் போகிறான் என்று கட்டியம் கூறுவது போல இருக்கிறது அது.

பாடல்


நீறு அணிந்த கடவுள் நிறத்த வான்
ஆறு அணிந்து சென்று. ஆர்கலி மேய்ந்து. அகில்
சேறு அணிந்த முலைத் திருமங்கைதன் 
வீறு அணிந்தவன் மேனியின் மீண்டதே.

பொருள்