Friday, May 31, 2013

சிலப்பதிகாரம் - கொலைகாரக் குடும்பம்

சிலப்பதிகாரம் - கொலைகாரக் குடும்பம் 


(வயது வந்தவர்களுக்கு மட்டும்).

இந்த பாடலை படிக்குமுன் இரண்டு விஷயங்களை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஒன்று, இந்த பாடல் எழுதப்பட்டது முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டில். அதாவது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்.

இரண்டாவது, இதை எழுதியது இளங்கோவடிகள் என்ற துறவி.

காதலன், அவனுடைய காதலியிடம் செல்லமாக கோவிக்கிறான்....நீயும் உன் குடும்பமும் கொலைகார குடும்பம்.


பாடல் 


கடல்புக்கு உயிர்க்கொன்று வாழ்வர்நின் ஐயர்
உடல்புக்கு உயிர்க்கொன்று வாழ்வைமன் நீயும்
மிடல்புக்கு அடங்காத வெம்முலையோ பாரம்
இடர்புக்கு இடுகும் இடைஇழவல் கண்டாய். 

பொருள் 

உன் சகோதரர்கள்  கடலில் சென்று மீன்களை பிடித்து (கொன்று) வாழ்கிறார்கள் . நீயோ என் உடலின் உள் சென்று என் உயிரை எடுத்து (கொன்று) வாழ்கிறாய். உன் வலிமையான மார்புகளின் பாரத்தில் உன் சின்ன இடை துன்பப் படுவதை பார்.  


(மிடல் = வலிமை, திண்மை ; இடுகும் = சிறுக்கும்; இழவல் = வருந்துதல், நட்டப்படுதல். இழவு என்றால் உயிரை இழத்தல்)


பாடல் 


கொடுங்கண் வலையால் உயிர்க்கொல்வான் நுந்தை
நெடுங்கண் வலையால் உயிர்க்கொல்வை மன்நீயும்
வடம்கொள் முலையால் மழைமின்னுப் போல
நுடங்கி உகுமென் நுசுப்புஇழவல் காண்டாய். 


பொருள் 

உன் தந்தை மீன் பிடிக்கும் கொடுமையான வலையால் உயிர்களை கொல்லுகிறான். நீயோ, உன் கண் என்ற வலையால் உயிர்களை கொல்லுகிறாய் . மாலை அணிந்த உன் மார்பால் மழை நேர மின்னலைப் போன்ற உன் இடை எவ்வளவு சங்கடப் படுகிறது பார்.



பாடல் 

ஓடும் திமில்கொண்டு உயிர்க்கொள்வர் நின்ஐயர்
கோடும் புருவத்து உயிர்க்கொல்வை மன்நீயும்
பீடும் பிறர்எவ்வம் பாராய் முலைசுமந்து
வாடும் சிறுமென் மருங்குஇழவல் கண்டாய்." 

பொருள் 

மீன் பிடிக்கும் படகில்   சென்று உயிர்களை  உன் தந்தை. நீயோ வளைந்த உன் புருவத்தால் உயிர்களை கொல்லுகிறாய் . மத்தவங்க பெருமையையும் துன்பத்தையும் நீ எங்க பார்க்கிறாய் ? உன் மார்புகளை சுமந்து வாடும் உன் இடையின் கஷ்டத்தையாவது நீ பார். 

இளங்கோ அடிகளுக்குத்தான் என்ன கரிசனம் ! 


இரணியன் வதம் - ஒவ்வொருவருக்கும் ஒரு முகம்

இரணியன் வதம் - ஒவ்வொருவருக்கும் ஒரு முகம்



நரசிங்கத்தின் உருத்திர உருவத்தை கண்டு சேனைகள் சிதறி ஓடின.

இரணியனின் சேனை  பெரியது ? ஆயிரக்கணக்கான வீரர்கள்.

இங்கே கம்பனின் கற்பனை எல்லாவற்றையும் விஞ்சி நிற்கிறது.

ஓடும் ஒவ்வொரு வீரர் முன்னாலும் ஒரு நரசிங்கம் நின்றதாம் ? எப்படி ?

அவ்வளவு வேகமாக அது வீரர்களிடையே புகுந்து புறப்பட்டது. ஒவ்வொரு வீரரும் அந்த நரசிங்கம் தன் முன்னால் நிற்பது மாதிரி தெரிந்து அலறுகிறார்கள்.

சிங்க முகம் எப்படி இருக்கும் ? கோரை பற்களுடன், பிடரி மயிர் சிலிர்க்க பயங்கரமாக இருக்கும்தானே ?

கம்பன் சொல்கிறான் - திருமுகம் என்று. அவனுக்கு அந்த ஆக்ரோஷமான முகம் கூட அருள் வழியும் முகமாக தெரிகிறது.

நரசிங்கத்தின் தோள்கள் பொன்னை போல ஒளி வீசுகின்றன.

கண்கள் தீயை போலசிவந்து  ஜ்வாலை விடுகின்றன.


பாடல்

'ஆயிரங்கோடி வெள்ளத்து அயில் எயிற்று அவுணர்க்கு, அங்கு அங்கு,
ஏயின ஒருவர்க்கு ஓர் ஓர் திருமுகம், இரட்டிப் பொன் தோள்,
தீ எனக் கனலும் செங் கண் சிரம்தொறும் மூன்றும், தெய்வ
வாயினில் கடல்கள் ஏழும், மலைகளும், மற்றும், முற்றும்.

பொருள்


Thursday, May 30, 2013

இரணியன் வதம் - நரசிங்கம் வளருதல்

இரணியன் வதம் - நரசிங்கம் வளருதல் 



நரசிங்க சிங்கம் வளர்ந்து கொண்டே போகிறது .  அதன் வயறு சத்ய லோகம் வரி போயிற்று. சத்ய லோகத்தில் பிரம்மா அமர்ந்து இருக்கிறார். உட்கார்ந்து இருக்கும் அவரை அப்படியே அந்த வயறு தூக்குகிறது. பிரம்மாவுக்கு தோன்றுகிறது, நாம் உண்டான போது திருமாலின் வயிற்றில் இருந்துதான் வந்தோம்....அது மீண்டும் நடக்கிறதா என்று சந்தேகம் வந்ததாம்...

பாடல்

'மன்றல் அம் துளப மாலை மானுட மடங்கல் வானில்
சென்றது தெரிதல் தேற்றாம்; சேவடி படியில் தீண்ட
நின்றது ஓர் பொழுதின், அண்ட நெடு முகட்டு இருந்த முன்னோன்
அன்று அவன் உந்தி வந்தானாம் எனத்  தோன்றினானால். 


பொருள் 

திருக்குறள் - இல்லாமையிலும் பெரிய இல்லாமை

திருக்குறள் - இல்லாமையிலும் பெரிய இல்லாமை 


எல்லோரிடமும் எல்லாமுமா இருக்கிறது ?

வீடு, நகை, சொந்த உல்லாச படகு, ஒரு கப்பல், சொந்த விமானம், நமக்கென்று ஒரு தீவு, இராஜா மாதிரி அதிகாரம், அழியாத புகழ் இப்படி பட்டியல் போட்டுக் கொண்டே போனால் அந்த பட்டியல் முடியாது.

அப்ப எவ்வளவு இருந்தால் போதும் ?

எவ்வளவுதான் இருந்தாலும், இல்லாததின் அளவு மிகப் பெரியதாய் இருக்கிறதே ? என்ன செய்யலாம் ?

சில விஷயங்கள் இல்லாவிட்டால் ஒன்றும் ஆகி விடாது.

வள்ளுவர் கூறுகிறார், அறிவு இல்லாததுதான் இந்த இல்லாததிலேயே பெரிய இல்லாதது. மத்தது எல்லாம் இல்லாவிட்டாலும், இந்த உலகம் அதை பெரிதாய் நினைக்காது.

பாடல்

அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையா துலகு.

பொருள்


இரணியன் வதம் - இரணியன் போருக்கு புறப்படுதல்

இரணியன் வதம்  - இரணியன் போருக்கு புறப்படுதல் 


அவ்வளவு பெரிய நரசிங்கத்தை கண்டு இரணியன் கொஞ்சம் கூட பயப்படவில்லை.

காரணம் - அவன் பெற்ற வரங்கள். அவன் வலிமை.

நரசிங்கத்தை சண்டைக்கு அழைக்கிறான். அதுவும் ஏக வசனத்தில்....

பிரகலாதன் சொன்ன அரி நீதானா ? கடலில் ஒழிந்தது போதாது என்று இந்த தூணிலும் வந்து ஒளிந்து கொண்டாயா ? சண்டைக்கு வருகிறாயா ? வா...வா...என்று கிளம்பினான் தன் புகழ் எங்கும் தடையின்றி செல்லும் தன்மை கொண்ட இரணியன்...அவன் எழுந்து புறப்பட்ட போது இந்த உலகம் எல்லாம் பெயர்ந்தது....

கற்பனை பண்ணிக் கொள்ளுங்கள்....ஒரு புறம் ககன முட்டை கிழிய சிவந்த கண்களை கொண்ட சிங்கம்.....வானுக்கும் மண்ணுக்கும் நிற்கிறது....இன்னொரு புறம் மிக வலிமை வாய்ந்த இரணியன்....சண்டை ஆரம்பாகப்  போகிறது....


பாடல்

 "ஆர் அடா சிரித்தாய் ? சொன்ன அரிகொலோ ? அஞ்சிப் புக்க
நீர், அடா ? போதாது என்று, நெடுந் தறி நேடினாயோ ?
போர் அடா ? பொருதிஆயின், புறப்படு ! புறப்படு !" என்றான் -
பேர் அடாநின்ற தாளோடு உலகு எலாம் பெயரப் பேர்வான்.


பொருள் 

இராமாயணம் - மனைவியின் மகத்துவம்

இராமாயணம் - மனைவியின் மகத்துவம் 


தசரதன் அரசை இராமனிடம் தருவது என்று முடிவு செய்துவிட்டான். அதற்கு பல காரணங்களை சொல்கிறான். அது பற்றி பின்னால் பார்ப்போம்.

முடிவு செய்தவுடன், தன் மந்திரிகளிடம் ஆலோசனை கேட்கிறான்.

இராமன் அரசை ஏற்று நடத்த தகுதியானவன் என்று சொல்ல வந்த வசிட்டர் முதலியோர் ஒரு முக்கியமான விஷயத்தை சொல்கிறார்கள்.

இராமனின் மனைவி நல்லவள் , எனவே இந்த அரசை அவனிடம் கொடுக்கலாம் என்கிறார்கள்.

ஒரு பெரிய பதவியை எடுத்து வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்றால்  ஒருவனின் மனைவி சிறந்தவளாக இருக்க வேண்டும்.

கணவனின் வெற்றி மனைவியின் கையில் இருக்கிறது.

எவ்வளவு பெரிய விஷயம் ?

இராமன் நல்லவந்தான் என்பதை பின்னால் சொல்லி அவன் மனைவி நல்லவள் என்பதை முதலில் சொல்கிறார்கள்.

பாடல்

மண்ணினும் நல்லள்; மலர்மகள், கலைமகள், கலையூர்
பெண்ணினும் நல்லள்; பெரும்புகழ்ச் சனகியோ நல்லள்-
கண்ணினும் நல்லன்; கற்றவர், கற்றிலா தவரும்,
உண்ணும் நீரினும், உயிரினும், அவனையே உவப்பார்.

பொருள்


Wednesday, May 29, 2013

இரணிய வதம் - நரசிங்கம் வளருதல்

இரணிய வதம்  - நரசிங்கம் வளருதல் 


தூணில் இருந்து வெளிப்பட்ட நரசிங்கம் வளர்ந்து பேருரு கொள்கிறது.

மிகப் பெரிய உருவம் கொள்கிறது. பெரியது என்றால் இப்படி அப்படி அல்ல....கம்பன் வருணிக்கிறான்....மிக பிரமாண்டமான வடிவம்....கற்பனைக்கு  எட்டாத வடிவம்...

பாடல்

'பிளந்தது தூணும்; ஆங்கே பிறந்தது, சீயம்; பின்னை 
வளர்ந்தது, திசைகள் எட்டும்; பகிரண்டம் முதல மற்றும்
அளந்தது; அப் புறத்துச் செய்கை யார் அறிந்துஅறையகிற்பார் ?
கிளர்ந்தது; ககன முட்டை கிழிந்தது, கீழும் மேலும்.



பொருள்