Tuesday, June 4, 2013

பிரகலாதன் இறை தத்துவம் - உள்ளங்கை நெல்லிக் கனி

பிரகலாதன் இறை தத்துவம் - உள்ளங்கை நெல்லிக் கனி 


கொஞ்சம் யுத்த களத்தை விட்டு பின்னோக்கி (flash  back ) செல்வோம்.

பிரகலாதன் அவனுடைய தந்தையான இரணியனை துதிக்க மறுக்கிறான். இரணியன் கேட்கிறான் நீ வணங்கும் அந்த நாராயணன் யார் என்று ?

இரணியன் இறை தத்துவத்தை விளக்குகிறான். கிட்டத்தட்ட இருபது பாடல்கள். 

Philosophy , Theology என்று கம்பன் பின்னுகிறான். இறை தத்துவத்தின் உச்சியை தொடுகிறான்.

அதிலிருந்து சில பாடல்கள் 


விதை இல்லாமல் மரம் இல்லை. அரசனே, நீ மயக்கம்  (prejudice ) கொள்ளாமல் கேட்டால்,, உள்ளங்கை நெல்லிக் கனி போல இதை நீயே காணலாம் என்று இறை தன்மையை விளக்குகிறான்.  

பாடல் 

"வித்து இன்றி விளைவது ஒன்று இல்லை; வேந்த! நின்
பித்து இன்றி உணர்தியேல், அளவைப் பெய்குவேன்;
'உய்த்து ஒன்றும் ஒழிவு இன்றி உணர்தற்பாற்று' எனா,
கைத்து ஒன்று நெல்லிஅம் கனியின் காண்டியால்.

பொருள் 

Monday, June 3, 2013

திருக்குறள் - புல்லறிவாண்மை

திருக்குறள் - புல்லறிவாண்மை 


அது என்ன புல்லறிவாண்மை ?

புல்லிய அறிவை ஆள்தல்.

கொஞ்சம் போல படித்துவிட்டு மேதாவி போல காட்டிக் கொள்வது. அறிவின்மை என்பது வேறு. ஏதோ மேல் போக்காக படித்து விட்டு கற்றறிந்த பண்டிதர் போல பேசுவது புல்லறிவாண்மை.

இப்படி பட்ட ஆட்களை வள்ளுவர் ரொம்பதான் கிண்டல் அடிக்கிறார்.

இந்த மாதிரி ஆட்கள் தங்களுக்குத் தாங்களே செய்து கொள்ளும் தீமை இருக்கிறதே, அதை அவர்களின்   எதிரிகள் கூட செய்ய முடியாது என்கிறார் .

அதாவது ஒரு எதிரி எவ்வளவு ஒருவனுக்கு தீமை செய்வானோ அதை விட அதிகமான தீமைகளை இந்த அரை வேக்காடுகள் தங்களுக்கு தாங்களே செய்து கொள்வார்கள் என்கிறார்.

பாடல்

அறிவிலார் தாம்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது.

பொருள்


இரணியன் வதம் - நரசிங்கத்தின் கோர தாண்டவம்

இரணியன் வதம் - நரசிங்கத்தின் கோர தாண்டவம் 


நரசிங்கப் பெருமாள் களத்தில் இறங்கி விட்டார். அரக்கர்களை பின்னி பெடல் எடுக்கிறார்.

சின்ன பையன்கள் தங்களுக்கு பிடித்த கதா நாயகர்களின் வீர சாகசங்களை எப்படி ஒரு உற்சாகத்தோடு சொல்லுவார்களோ அப்படி ஒரு குதூகலத்தோடு சொல்லுகிறான் கம்பன்.

சில பேரை வாயில் போட்டு கடிக்கும், சில பேரை கையில் அப்படியே பிசைந்து  கொல்லும். இன்னும் கொஞ்ச பேரை அப்படியே தூக்கி மலை மேல் மோதிக் கொல்லும் . இன்னும் கொஞ்ச பேரை அப்படியே தண்ணீருக்குள் முக்கி கொல்லும். சில பேரை தூக்கி தீயில் அப்படியே வாட்டும்......

பாடல்

'பேருடை அவுணர்தம்மைப் பிறை எயிற்று அடக்கும்; பேரா,
பாரிடைத் தேய்க்கும்; மீளப் பகிரண்டத்து அடிக்கும்;  பற்றி,
மேருவில் புடைக்கும்; மாள, விரல்களின் பிசையும்; வேலை
நீரிடைக் குமிழி ஊட்டும்; நெருப்பிடைச் சுரிக்க நீட்டும்;

பொருள்


Sunday, June 2, 2013

திருக்குறள் - கனியும் காயும்

திருக்குறள் - கனியும் காயும் 


இனிய வுளவாக வின்னுத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.

நாம் பேசுவதற்கு முன்னால் நம்மிடம் இரண்டு வாய்ப்பு இருக்கிறது.

இனிய சொல் பேசலாம். அல்லது இனிமை இல்லாத சொல் பேசலாம்.

எதை பேசுவது என்பது நம் முடிவில் இருக்கிறது.

இனிய உளவாக இன்னாத கூறல் 
கனி இருப்ப காய் கவர்ந்தற்று 

நல்ல இனிய சொற்கள் இருக்கும்போது அதை விட்டு விட்டு இனிமை இல்லாத சொற்களை பேசுவது கனி இருக்கும் போது அதை விடுத்து காயை உண்ணுவது போல என்கிறார் வள்ளுவர்.

வள்ளுவர் இவ்வளவு குறைவாக சொல்பவர் அல்லவே. இதில் இன்னும் ஏதோ இருக்க வேண்டும்.

ஆழ்ந்து சிந்தித்துப் பாப்போம்.

கவர்தல் என்ற சொல்லுக்கு - கவர்ச்சி உடையது என்று ஒரு பொருள். அந்த இடம் என்னை  ரொம்ப கவர்ந்து விட்டது என்று கூறக் கேட்டு இருக்கிறோம். அந்த பெண் ரொம்ப கவர்ச்சியாக உடை அணிந்து இருக்கிறாள் என்று கூறுவது போல. சிலருக்கு இன்னாத சொற்களின் மேல் ஒரு கவர்ச்சி. தீய சொற்கள், கேட்ட சொற்கள், பயன் தராத சொற்கள், இனிமை இல்லாத சொற்கள் பால் கவர்ச்சி. இனிய சொற்கள் பால் நாட்டம் கொள்ள வேண்டும்.

இரண்டாவது

கவர்தல் என்றால் கவர்ந்து கொள்ளுதல், பறித்தல் என்று பொருள் உண்டு. கவர்ந்து சென்று விட்டான் என்று சொல்லுகிறோம் அல்லவா ? நல்ல இனிய சொற்கள் இருக்கும் போது இன்னாத சொற்களை திருடிக் கொண்டு வருவது எவ்வளவு மடமையான செயல்

திருடுவதே குற்றம். அதிலும் தேவை இல்லாத ஒன்றை திருடுவது எவ்வவளவு மடமை...அந்த அளவு மடமை இனிய உளவாக இன்னாத கூறல்.

இனிய சொல் என்றால் புரிகிறது. அது என்ன இன்னாத சொல் ? இன்னாத என்றால் துன்பம் தரும் சொல், தீமை தரும் சொற்கள்.

வேறு வழியில்லாமல் ஒரு கெட்ட காரியத்தை செய்து விட்டால் அது மன்னிக்கப் படலாம். நல்ல காரிய செய்ய ஒரு வழி இருந்தும் அதை விடுத்து கெட்ட காரியம் செய்தால் அது தண்டனைக்கு உரியதுதானே ?

இனிய சொற்கள் இருக்கின்றன. "இனிய உளவாக". வேண்டும் என்றால் இனிய சொற்களை  சொல்லலாம். இனிய சொற்கள் இல்லை என்றால் அது வேறு விஷயம். இனிய உளவாக இன்னாத கூறல் ?

இனிய சொல், இன்னாத சொல்
கனி, காய்.
கூறுதல், கவர்தல்.

காய் கடினமானது. கனி மென்மையானது.

காயை உண்பது என்றால் கத்தியால் வெட்டி , சிறு சிறு துண்டுகள் ஆக்கித்தான் உண்ண முடியும். கனியை எளிதாக அப்படியே உண்ணமுடியும்.

காயை அதிகம் உண்ண முடியாது. கனிகளை வேண்டும் வரை உண்ணலாம்.

உண்ட பின்னும் காய் செரிமானம் ஆக நேரம் பிடிக்கும். கனி உடலுக்கு இதம் தரும்.

காய் புளிக்கும், துவர்க்கும், கசக்கும்....பொதுவாகவே எல்லா கனிகளும் இனிப்பாக சுவை நிறைந்ததாய் இருக்கும்.

காயை விட கனி பார்க்கவும் அழகாக இருக்கும்.

இறைவனுக்கு கனிகளை படைக்கிறோம்.

உடல் நிலை சரி இல்லாதவர்களை காண போகும்போது  கனிகள் வாங்கிச் செல்கிறோம். உடலுக்கும் மனதுக்கும் இதம் தருவது  கனி என்பதால். நோயை குணமாக்கி உடலுக்கு ஆரோக்கியம் தரும் - கனி.

யோசித்து யோசித்து எழுதி இருக்கிறார் வள்ளுவர்.

இரணியன் வதம் - தாயை போன்ற கருணையுடன்

இரணியன் வதம் - தாயை போன்ற கருணையுடன் 


ஒரு தாய் எவ்வளவு கருணையுடன் அவள் கருவை சுமக்கிறாள். வரப் போவது ஆணா , பெண்ணா, கருப்பா சிவப்பா, உயரமா, குள்ளமா என்று ஒன்றும் தெரியாது. இருந்தாலும், அந்த பிறக்காத உயிர் மேலும் அவள் அளவற்ற அன்புடன் தன உதிரத்தை தந்து வளர்கிறாள்.

கடினமாக இருக்கிறது என்று அவள் குறை மாதத்தில் குழந்தையை வெளியே தள்ளி விடுவதில்லை. தகுந்த காலம் வரை, தன் வயிற்றில் வைத்திருந்து பின் பிறப்பிக்கிறாள்.

அது போல், அந்த நரசிம்மம், நல்லவர்களை கருணையோடு ஒரு தாயை போல வைத்திருந்து தந்தது.

பாடல்

'நன்மையின் தொடர்ந்தார்க்கு உண்டோ, கேடு ? நான்முகத்தோன் ஆதி
தொன்மையின் தொடர்ந்த வாய்மை அறத்தொடும் துறந்திலோரை,
அன்வயித்து, ஓரும் தீய அவுணர் அல்லாரை, அந் நாள், 
தன் வயிற்றகத்து வைத்துத் தந்தது, அச் சீயம், தாயின்.

பொருள் 

Saturday, June 1, 2013

திருக்குறள் - அறிவின் பயன்

திருக்குறள் - அறிவின் பயன் 


முந்தைய ப்ளாகில் இல்லாதவற்றுள் எல்லாம் பெரிய இல்லாமை அறிவு இல்லாமையே என்றும், மற்ற இல்லாமைகளை இந்த உலகம் பெரிதாக கொள்ளாது என்றும் பார்த்தோம்.

அறிவை விட அருள், அன்பு முக்கியமில்லையா ? எல்லோரும் அறிவு உள்ளவர்களாய் இருப்பது என்பது கடினம். ஆனால், எல்லோரும் மற்றவர்கள் மேல் அன்பு கொண்டவர்களாய் இருக்க வேண்டும் அல்லவா ?

அறிவை விட அன்பு முக்கியம் இல்லையா ? ஏன் வள்ளுவர் அறிவில்லாமையை பெரிதாக சொல்கிறார் ? அன்புடைமை பற்றி ஏன் அவ்வளவு சொல்லவில்லை என்று கேள்வி எழலாம்.

வள்ளுவர் சாதாரண மனிதர் அல்ல.

ஒரு விஷயத்தை சொல்லுமுன் எவ்வளவு யோசித்து இருப்பார் ?

அறிவு என்றால் என்ன ? What is intelligence  ? அறிவு என்பதற்கு வள்ளுவர் சில இலக்கணங்களை தருகிறார்.

அதில் முக்கியமான ஒன்று அறிவு மற்ற உயிர்களை தன் உயிர் போல நினைக்கும்.

அறிவினால் அவ்வது என்ன ? மற்றதன் நோயையை தன் நோய் போல நினைக்காவிட்டால் ?

பாடல்

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்

தம்நோய்போல் போற்றாக் கடை.


பொருள்

இரணியன் வதம் - சொல்லாமல் சொன்னது

இரணியன் வதம்  - சொல்லாமல் சொன்னது 



நரசிங்கத்தின் உக்கிரமான அழகை சொல்லி முடியவில்லை கம்பனுக்கு. மேலும் மேலும் மெருகேற்றிக் கொண்டே போகிறான். என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை அவனுக்கு.

கம்பனுக்கு நெஞ்சு விம்முகிறது. மூச்சு முட்டுகிறது. வார்த்தைகள் கை கட்டி வாய் மூடி சேவகம் செய்யும் கம்பனுக்கே நரசிமத்தை வார்த்தையில் வடிக்க முடியவில்லை.

"அம்மா" என்று  அரற்றுகிறான்.

தான் காணாத, தனக்குத் தெரியாத ஒன்றை சொல்லி அதுக்கும் மேலே என்று சொல்லுகிறான். மொத்தத்தில் ஒரு உன்மத்தம் பிடித்தவன் போல ஆகி விட்டான்.

உலகின் முடிவில் ஊழித் தீ என்று ஒன்று வரும்.. அது எல்லாவறையும் எரித்து விடும் என்பது இந்து மத நம்பிக்கை.

அந்த ஊழித் தீயை அவித்து  விடும் அளவிற்கு உக்கிரமாய் அந்த நரசிம்மம் தோன்றியது. அந்த ஊழித் தீயை தூண்டும் ஊழிக் காற்று. அந்த காற்றையும் மாற்றி போடும் அளவிற்கு ஆக்ரோஷமாய் நரசிம்மம் வந்தது.  

பாடல்

'முடங்கு வால் உளை அவ் அண்டம் முழுவதும் முடிவில் உண்ணும்
கடம் கொள் வெங் காலச் செந் தீஅதனை வந்து  அவிக்கும்; கால
மடங்கலின் உயிர்ப்பும், மற்று அக் காற்றினை மாற்றும்; ஆனால்,
அடங்கலும் பகு வாய் யாக்கை அப் புறத்து அகத்தது அம்மா !

பொருள்