Monday, December 21, 2015

நான்மணிக்கடிகை - எது, எதற்குச் சமம் ?

நான்மணிக்கடிகை - எது, எதற்குச் சமம் ?



திரு ஒக்கும், தீது இல் ஒழுக்கம்; பெரிய
அறன் ஒக்கும், ஆற்றின் ஒழுகல்; பிறனைக்
கொலை ஒக்கும், கொண்டு கண்மாறல்; புலை ஒக்கும்,
போற்றாதார் முன்னர்ச் செலவு. 

செல்வம் வேண்டுமா ?

செல்வம் வேண்டாம் என்று யாரவது கூறுவார்களா ?

அந்த செல்வத்தைத் தேடித்தானே இத்தனை அலைச்சல்.

எப்படி அந்த செல்வத்தை அடைவது ?

படிக்க வேண்டுமா ? அதிர்ஷ்டம் வேண்டுமா ? பெரிய ஆட்களின் நட்பு வேண்டுமா ? எது இருந்தால் செல்வத்தை அடையலாம் ?

இது ஒண்ணும் வேண்டாம்.

குற்றம் இல்லாத ஒழுக்கம் இருந்தாலே செல்வம் தானாக வந்து சேரும் என்கிறது நான்மணிக்கடிகை.

அந்த ஒழுக்கமே செல்வத்திற்கு ஒப்பானது.

எப்படி என்று அறிவதற்கு முன்னால், ஒழுக்கம் என்றால் என்ன என்று அறிந்து கொள்வோம்.

ஒழுக்கம் என்றால் ஒழுகுதல்.

வீட்டின் கூரையில் ஒரு சிறு ஓட்டை இருந்தால் அதில் இருந்து நீர் ஒழுகுவதைப் பார்த்து இருப்பீர்கள்.

வீட்டில் குளியல் அறையில் உள்ள குழாய் சரியாக மூடாவிட்டால் நீர் ஒழுக்கிக் கொண்டே இருக்கும்.

அதே போல் நீங்கள் எதை விடாமல் செய்து கொண்டு இருக்கிரீர்களோ அது உங்களது ஒழுக்கம்.

காலையில் எழுந்தவுடன் காபி தினமும் காப்பி குடிக்கிறீர்களா ? அது உங்கள் ஒழுக்கம்.

தினமும் ஒரு மணி நேரம் நடை பயிற்சி செய்கிறீர்களா ? அதுவும் உங்கள் ஒழுக்கம்.

சரி, நான் தினமும் "தண்ணி" அடிக்கிறேன். அதுவும் ஒழுக்கமா ?

நான் தினமும் திருடுகிறேன் ? அதுவும் ஒழுக்கமா ?

மீண்டும் நம் உதாரணத்துக்குப் போவோம்.

நீர் எங்கிருந்து எங்கே ஒழுகுகிறது ? உயர்ந்த இடத்தில் இருந்து தாழ்ந்த இடம் இடம் நோக்கி ஒழுகுகிறது. தாழ்ந்த இடத்தில் இருந்து உயர்ந்த இடம் நோக்கிப் போவது இல்லை.

அதுபோல, சான்றோர், உயர்ந்தோர் செய்த செயல்களை நாம் திரும்ப திரும்பச் செய்தால் அது ஒழுக்கம்.

அந்த ஒழுக்கம் செல்வத்திற்கு இணையானது.

ஒரு மாணவன் தினமும் 2 மணிநேரம் படிக்கிறான் என்று வைத்துக் கொள்வோம்...அவன் கட்டாயம் நல்ல மதிப்பெண்கள் பெறுவான், நல்ல கல்லூரியில் அவனுக்கு இடம் கிடைக்கும், நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும், நிறைய சம்பளம் கிடைக்கும். செல்வம் கிடைக்கும். அதற்க்கு காரணம் என்ன - ஒழுக்கம்.

ஒருவன் தினமும் பாடல் பயிற்சி செய்கிறான், ஒரு விளயாட்டில் பயிற்சி செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம் ...செய்து கொண்டே இருந்தால் அவன் அந்தத் துறையில் சிறந்து விளங்குவான்.

அப்படி சிறந்து விளங்கினால், அவனுக்கு செல்வமும், பேரும் புகழும் கிடைக்கும் அல்லவா.

எனவே தான்,

திரு ஒக்கும் , தீது இல் ஒழுக்கம்

என்கிறது நான் மணிக்கடிகை.

நான் தினமும் தண்ணி அடிக்கிறேன், புகை பிடிக்கிறேன் என்றால் அதுவும் ஒழுக்கம் தான்.   ஆனால் அது தீய ஒழுக்கம். அது செல்வத்தைத் தராது.

இன்னும் சிந்திப்போம்





Saturday, December 19, 2015

திருக்குறள் - அகர முதல எழுத்து எல்லாம் - பகுதி 3

திருக்குறள் - அகர முதல எழுத்து எல்லாம் - பகுதி 3



அகரம் முதல, எழுத்து எல்லாம்; ஆதி- 
பகவன் முதற்றே, உலகு.

தெரிந்த குறள் தான். இதில் என்ன புதிதாக இருக்கப் போகிறது ?

அ என்ற எழுத்து எல்லா எழுத்துகளுக்கும் முதலாவது எப்படியோ அப்படியே இந்த உலகுக்கு எல்லாம் இறைவன் முதல்.

இந்த குறள் யாருக்குச் சொல்லப் பட்டது ? ஏன் சொல்லப் பட்டது என்று சிந்திப்போம்.

உலகில் எத்தனையோ புத்தகங்கள் இருக்கின்றன. கலை, கவிதை, நாடகம், அறிவியல், மொழி, சரித்திரம் என்று எத்தனையோ புத்தங்கள் இருக்கின்றன.

அத்தனை புத்தகங்களும் ஏதோ ஒரு வழியில் பகுக்கப் பட்டிருக்கிறது. பலப் பல அத்யாயங்களாகப் பிரித்து எழுதப் பட்டிருக்கும்.

ஒவ்வொரு  அத்யாயதிலும் பல  பத்திகளாகப் (para ) பிரிக்கப் பட்டிருக்கும்.

ஒவ்வொரு பத்தியும் பல வாக்கியங்களை கொண்டிருக்கும்.

ஒவ்வொரு வாக்கியமும் பல எழுத்துகளை கொண்டிருக்கும்.

அத்தனை எழுத்துக்கும் மூல எழத்து 'அ' என்ற எழுத்து.

அ என்ற எழுத்து வாயைத் திறந்தாலே வந்து விடும்.அதை நீட்டினால் ஆ. உதட்டை குவித்தால் உ. குவிந்த உதட்டை இன்னும் சுருக்கினால் ஊ என்று அனைத்து எழுத்துகளும் அதில் இருந்து பிறக்கிறது.

எனவே, ஒரு புத்தகம் என்றால் அதைப் பகுத்துக் கொண்டே போனால் அ வில் வந்து நிற்கும்.

அதே போல, இந்த உலகை பகுத்துக் கொண்டே வந்தால், அது இறைவனில் வந்து நிற்கும்.

அ என்ற எழுத்துக்கு முன் எதுவும் இல்லை. அது போல இறைவனுக்கு முன் எதுவும் இல்லை.

அ என்ற எழுத்து தானாகவும் இயங்கும், மற்ற எழுத்துகளை இயங்க வைக்கும், மற்ற எழுத்துகளோடு சேர்ந்தும் இயங்கும்.

அது போல, இறைவனும் தானாகவே இயங்குவான், மற்ற உயிர்களை இயக்குவான், அவற்றுள் இருந்தும் இயங்குவான்.

சரி, இந்த எழுத்து, அதன் பிறப்பு, அதன் சேர்க்கை, அதன் வடிவம் எல்லாம் மொழி அறிவு உள்ளவனுக்குப் புரியும். படிப்பு அறிவு இல்லாதவனுக்கு அ வும் தெரியாது, உ வும் தெரியாது.

அவனுக்கு எப்படி கடவுளை உணர்த்துவது ?

வள்ளுவர், படித்தவனுக்கு மட்டுமே குறளை எழுதினாரா ? படிக்காதவன் குறளை அறிந்து அதன் படி நடக்க வேண்டாமா ? அப்படி என்றால் படித்தவன் , படிக்காதவன் எல்லோருக்கும் புரியும்படி வேறு ஏதாவது உதாரணத்தை எடுத்திருக்கலாமே வள்ளுவர் . ஏன் எடுக்கவில்லை ?

படிக்காதவன் இறைவனை அறிந்து கொள்ள முடியாது என்று நினைத்து விட்டாரா ?

சிந்திப்போம்.

================= பாகம் 2 ===============================================

கடவுள் வாழ்த்தில் ஆரம்பிக்கிறார் வள்ளுவர்.


அகரம் முதல, எழுத்து எல்லாம்; ஆதி- 
பகவன் முதற்றே, உலகு.

இதில் எங்கே வாழ்த்து இருக்கிறது ? வாழ்க என்று சொல்லவே இல்லையே ?

நமச்சிவாய வாழ்க என்று மணிவாசகர் ஆரம்பித்தார் 
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம் என்றார் தெய்வப் புலவர் சேக்கிழார் 
தலைவர் அன்னவர்க்கே  சரண் நாங்களே என்றார் கம்பர் 

வணங்குதலும் இல்லை, வாழ்த்தும் இல்லை ...வள்ளுவரில். 

பின் எப்படி இது ஒரு கடவுள் வாழ்த்து ஆகும் ?

கடவுளை வாழ்த்துவதற்கு முன், கடவுள் இருக்கிறார் என்பதை உறுதிப் படுத்த நினைக்கிறார் வள்ளுவர். 

கடவுள் என்று ஒன்று இருந்தால் அல்லவா அதை வாழ்த்த முடியும். 

கடவுள் இருக்கிறார் என்பதற்கு என்ன நிரூபணம் ? அதை உறுதிப் படுத்தி விட்டு, பின் அந்த கடவுளை வாழ்த்தலாம்.

எல்லோரும் கடவுள் இருக்கிறார் என்று மனதில் கொண்டு, நம்பிக்கையின் அடிப்படையில்  கடவுள் வாழ்தை சொன்னார்கள். 

வள்ளுவர் அப்படி செய்யவில்லை. அப்படி செய்திருந்தால், "சரி தான், இது ஏதோ வள்ளுவரின்   நம்பிக்கையின் பாற்பட்ட ஒரு புத்தகம் " என்று மக்கள் இதை ஒதுக்கி விடக் கூடும். 

எனவே, வள்ளுவர் கடவுள் ஒன்று உண்டு என்பதற்கு ஒரு வாதத்தை முன் வைக்கிறார். 

நாம் நாளும் பேசும், எழுதும் மொழிக்கு ஒரு எழுத்து முதலில் இருப்பதை போல , நாம் வாழும் இந்த உலகுக்கும் ஏதோ ஒன்று முதலாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார். 

அவர் அகர முதல எழுத்து என்றார். இன்னொரு மொழிக்காரன் உகர முதல என்று சொல்லலாம். மற்றொருவன் எகர முதல என்று சொல்லலாம். எந்த எழுத்து  ஆதி எழுத்து என்பதல்ல வாதம். ஏதோ ஒரு எழுத்து அனைத்துக்கும் ஆதாரமாக இருப்பதைப் போல , உலகுக்கு இறைவன் ஆதாரமாக இருக்கிறான் என்கிறான். 

மொழியைப் பகுத்துக் கொண்டே போனால் ஏதோ ஒரு புள்ளியில் வந்து நிற்கும். 

அதைப் போல உலகை பகுத்துக் கொண்டே வந்தால் ஏதோ ஒரு புள்ளியில் வந்து நிற்கும். அந்த புள்ளி இறைவன்.

"ஆதி பகவன்  முதற்றே உலகு" பகவன் என்றால் பகுப்பவன். பிரிப்பவன். அவனில் இருந்து எல்லாம் பிறந்து பிரிந்து பிரிந்து இந்த நிலைக்கு வந்தது. 

மொழியைப் பிரித்தால் அகரத்தில் வந்து நிற்பதைப் போல, உலகைப் பிரித்தால் இறையில் வந்து நிற்கும். 

பிரித்துக் கொண்டிருக்கிறார்கள், இன்றும், 

சரி, இந்த மொழி, சொல், எழுத்து எல்லாம் படித்தவனுக்கு புரிந்த உதாரணங்கள். 

ஏன் வள்ளுவர் படித்தவனுக்கு புரிந்த மாதிரி ஒரு உதாரணத்தை சொல்கிறார்.  படிக்காத  பாமரன் இதை எப்படி புரிந்து கொள்வான் ? என்ற பழைய கேள்விக்கு மீண்டும் போவோம். 

....தொடரும்.

படிக்க படிக்க சந்தேகங்களும் கூடிக் கொண்டே போகிறதே தவிர குறைகிற மாதிரி தெரியவில்லை.

ஒரு கேள்விக்கு விடை கிடைத்தால், அந்த விடையில் இருந்து ஆயிரம் புது கேள்விகள்  பிறக்கின்றன.

அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு.

என்பார் வள்ளுவர். அதாவது, படிக்கப் படிக்க , இன்னும் நமக்கு என்னவெல்லாம் தெரியவில்லை என்ற வியப்பு மேலிடுவது போல, இந்த பெண்ணிடம் பழகும் போது ஒவ்வொரு முறையும் ஏதோ புதிதாக வந்து கொண்டே இருக்கிறது.

ஒரு உதாரணம் பார்ப்போம்.

என் முன்னால் ஒரு பேனா இருக்கிறது.

இது என்ன என்ற கேள்வி எழும் போது --இதன் பெயர் பேனா. இது எழுதுவதற்கு உபயோகமாகும் ஒரு பொருள்  என்ற பதில் வருகிறது.

அந்த பதிலில் இருந்து - இது எதனால் செய்யப் பட்டது, யார் செய்தார்கள், என்ன விலை, எங்கு செய்தார்கள், இதைப் போல வேறு பேனாக்களும் இருக்கிறதா, அவை என்ன, இதில் எழுது பொருள் (ink ) என்ன நிறம், வேறு என்ன என்ன நிறம் எல்லாம் இருக்கிறது, இதை எப்படி செய்கிறார்கள் என்று எத்தனை கேள்வி வருகிறது.

கல்வி ஒரு கடல்.

சொல்லப் போனால் கல்வியின் ஒவ்வொரு பகுதியும் ஒரு கடல் போன்றது. அதனால் தான் மணிவாசகர்

"கல்வி என்னும் பல் கடல் பிழைத்தும்" என்கிறார்.

கல்வியில் இருந்து தப்பிப் பிழைத்தேன் என்கிறார்.

படிக்காதவனுக்கு சந்தேகங்கள் குறைவு. நம்பிக்கை அதிகம்.

சந்தேகம் எல்லாம் படித்தவனுக்குத் தான் எனவே தான், படித்தவனுக்கு புரிய வேண்டும் என்பதற்காக

அகர முதல எழுத்து எல்லாம்

என்று வள்ளுவர் ஆரம்பிக்கிறார்.

எழுத்து அறிவு உள்ளவனுக்குத் தெரியும் மொழியின் அடிப்படை ஒரு எழுத்து என்று. அவனுக்கு தெரிந்த உதாரணத்தைக் கொண்டு அறியாத கடவுளை காட்டுகிறார் வள்ளுவர்.

படித்தவன் அதோடு நிற்க மாட்டான்....

சரி, கடவுள் என்று ஒருவர் இருப்பதாகவே வைத்துக் கொள்வோம், அவரை எதற்கு வணங்க  வேண்டும் என்று கேள்வி கேட்பான்.

அதற்கு அடுத்து விடை சொல்கிறார் வள்ளுவர்....









Friday, December 18, 2015

திருக்குறள் - அகர முதல எழுத்து எல்லாம் - பகுதி 2

திருக்குறள் - அகர முதல எழுத்து எல்லாம் - பகுதி 2



அகரம் முதல, எழுத்து எல்லாம்; ஆதி- 
பகவன் முதற்றே, உலகு.

தெரிந்த குறள் தான். இதில் என்ன புதிதாக இருக்கப் போகிறது ?

அ என்ற எழுத்து எல்லா எழுத்துகளுக்கும் முதலாவது எப்படியோ அப்படியே இந்த உலகுக்கு எல்லாம் இறைவன் முதல்.

இந்த குறள் யாருக்குச் சொல்லப் பட்டது ? ஏன் சொல்லப் பட்டது என்று சிந்திப்போம்.

உலகில் எத்தனையோ புத்தகங்கள் இருக்கின்றன. கலை, கவிதை, நாடகம், அறிவியல், மொழி, சரித்திரம் என்று எத்தனையோ புத்தங்கள் இருக்கின்றன.

அத்தனை புத்தகங்களும் ஏதோ ஒரு வழியில் பகுக்கப் பட்டிருக்கிறது. பலப் பல அத்யாயங்களாகப் பிரித்து எழுதப் பட்டிருக்கும்.

ஒவ்வொரு  அத்யாயதிலும் பல  பத்திகளாகப் (para ) பிரிக்கப் பட்டிருக்கும்.

ஒவ்வொரு பத்தியும் பல வாக்கியங்களை கொண்டிருக்கும்.

ஒவ்வொரு வாக்கியமும் பல எழுத்துகளை கொண்டிருக்கும்.

அத்தனை எழுத்துக்கும் மூல எழத்து 'அ' என்ற எழுத்து.

அ என்ற எழுத்து வாயைத் திறந்தாலே வந்து விடும்.அதை நீட்டினால் ஆ. உதட்டை குவித்தால் உ. குவிந்த உதட்டை இன்னும் சுருக்கினால் ஊ என்று அனைத்து எழுத்துகளும் அதில் இருந்து பிறக்கிறது.

எனவே, ஒரு புத்தகம் என்றால் அதைப் பகுத்துக் கொண்டே போனால் அ வில் வந்து நிற்கும்.

அதே போல, இந்த உலகை பகுத்துக் கொண்டே வந்தால், அது இறைவனில் வந்து நிற்கும்.

அ என்ற எழுத்துக்கு முன் எதுவும் இல்லை. அது போல இறைவனுக்கு முன் எதுவும் இல்லை.

அ என்ற எழுத்து தானாகவும் இயங்கும், மற்ற எழுத்துகளை இயங்க வைக்கும், மற்ற எழுத்துகளோடு சேர்ந்தும் இயங்கும்.

அது போல, இறைவனும் தானாகவே இயங்குவான், மற்ற உயிர்களை இயக்குவான், அவற்றுள் இருந்தும் இயங்குவான்.

சரி, இந்த எழுத்து, அதன் பிறப்பு, அதன் சேர்க்கை, அதன் வடிவம் எல்லாம் மொழி அறிவு உள்ளவனுக்குப் புரியும். படிப்பு அறிவு இல்லாதவனுக்கு அ வும் தெரியாது, உ வும் தெரியாது.

அவனுக்கு எப்படி கடவுளை உணர்த்துவது ?

வள்ளுவர், படித்தவனுக்கு மட்டுமே குறளை எழுதினாரா ? படிக்காதவன் குறளை அறிந்து அதன் படி நடக்க வேண்டாமா ? அப்படி என்றால் படித்தவன் , படிக்காதவன் எல்லோருக்கும் புரியும்படி வேறு ஏதாவது உதாரணத்தை எடுத்திருக்கலாமே வள்ளுவர் . ஏன் எடுக்கவில்லை ?

படிக்காதவன் இறைவனை அறிந்து கொள்ள முடியாது என்று நினைத்து விட்டாரா ?

சிந்திப்போம்.

================= பாகம் 2 ===============================================

கடவுள் வாழ்த்தில் ஆரம்பிக்கிறார் வள்ளுவர்.


அகரம் முதல, எழுத்து எல்லாம்; ஆதி- 
பகவன் முதற்றே, உலகு.

இதில் எங்கே வாழ்த்து இருக்கிறது ? வாழ்க என்று சொல்லவே இல்லையே ?

நமச்சிவாய வாழ்க என்று மணிவாசகர் ஆரம்பித்தார் 
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம் என்றார் தெய்வப் புலவர் சேக்கிழார் 
தலைவர் அன்னவர்க்கே  சரண் நாங்களே என்றார் கம்பர் 

வணங்குதலும் இல்லை, வாழ்த்தும் இல்லை ...வள்ளுவரில். 

பின் எப்படி இது ஒரு கடவுள் வாழ்த்து ஆகும் ?

கடவுளை வாழ்த்துவதற்கு முன், கடவுள் இருக்கிறார் என்பதை உறுதிப் படுத்த நினைக்கிறார் வள்ளுவர். 

கடவுள் என்று ஒன்று இருந்தால் அல்லவா அதை வாழ்த்த முடியும். 

கடவுள் இருக்கிறார் என்பதற்கு என்ன நிரூபணம் ? அதை உறுதிப் படுத்தி விட்டு, பின் அந்த கடவுளை வாழ்த்தலாம்.

எல்லோரும் கடவுள் இருக்கிறார் என்று மனதில் கொண்டு, நம்பிக்கையின் அடிப்படையில்  கடவுள் வாழ்தை சொன்னார்கள். 

வள்ளுவர் அப்படி செய்யவில்லை. அப்படி செய்திருந்தால், "சரி தான், இது ஏதோ வள்ளுவரின்   நம்பிக்கையின் பாற்பட்ட ஒரு புத்தகம் " என்று மக்கள் இதை ஒதுக்கி விடக் கூடும். 

எனவே, வள்ளுவர் கடவுள் ஒன்று உண்டு என்பதற்கு ஒரு வாதத்தை முன் வைக்கிறார். 

நாம் நாளும் பேசும், எழுதும் மொழிக்கு ஒரு எழுத்து முதலில் இருப்பதை போல , நாம் வாழும் இந்த உலகுக்கும் ஏதோ ஒன்று முதலாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார். 

அவர் அகர முதல எழுத்து என்றார். இன்னொரு மொழிக்காரன் உகர முதல என்று சொல்லலாம். மற்றொருவன் எகர முதல என்று சொல்லலாம். எந்த எழுத்து  ஆதி எழுத்து என்பதல்ல வாதம். ஏதோ ஒரு எழுத்து அனைத்துக்கும் ஆதாரமாக இருப்பதைப் போல , உலகுக்கு இறைவன் ஆதாரமாக இருக்கிறான் என்கிறான். 

மொழியைப் பகுத்துக் கொண்டே போனால் ஏதோ ஒரு புள்ளியில் வந்து நிற்கும். 

அதைப் போல உலகை பகுத்துக் கொண்டே வந்தால் ஏதோ ஒரு புள்ளியில் வந்து நிற்கும். அந்த புள்ளி இறைவன்.

"ஆதி பகவன்  முதற்றே உலகு" பகவன் என்றால் பகுப்பவன். பிரிப்பவன். அவனில் இருந்து எல்லாம் பிறந்து பிரிந்து பிரிந்து இந்த நிலைக்கு வந்தது. 

மொழியைப் பிரித்தால் அகரத்தில் வந்து நிற்பதைப் போல, உலகைப் பிரித்தால் இறையில் வந்து நிற்கும். 

பிரித்துக் கொண்டிருக்கிறார்கள், இன்றும், 

சரி, இந்த மொழி, சொல், எழுத்து எல்லாம் படித்தவனுக்கு புரிந்த உதாரணங்கள். 

ஏன் வள்ளுவர் படித்தவனுக்கு புரிந்த மாதிரி ஒரு உதாரணத்தை சொல்கிறார்.  படிக்காத  பாமரன் இதை எப்படி புரிந்து கொள்வான் ? என்ற பழைய கேள்விக்கு மீண்டும் போவோம். 

....தொடரும்.







Friday, December 11, 2015

தேவாரம் - உள்ளம் கவர் கள்வன் - முன்னால் இருந்தும் தெரியவில்லை - பாகம் 1

தேவாரம் - உள்ளம் கவர் கள்வன் - முன்னால் இருந்தும் தெரியவில்லை  - பாகம் 1




தோடுடைய செவியன் விடையேறியோர் தூ வெண்மதி சூடிக்
காடுடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளங் கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனை நாட் பணிந்தேத்த அருள் செய்த
பீடுடைய பி மா புரம் மேவிய பெம்மானிவ னன்றே.

மிக பிரபலமான தேவாரப் பாட்டு.

எல்லோரும் அறிந்தது.

ஞானசம்பந்தர் சிறு குழந்தையாக இருக்கும் போது , அவருடைய தந்தையார் அவரை கோவிலுக்கு அழைத்துச் சென்றார். கோவிலுக்குள் செல்லுமுன் அங்குள்ள திருக்குளத்தில் நீராடச் சென்றார். ஞான சம்பந்தரை குளக்  கரையில், அமரச் செய்துவிட்டு, அவர் மட்டும் நீராடச் சென்றார்.

தந்தையார் நீரில் மூழ்கியவுடன், தந்தையைக் காணவில்லையே என்று குழந்தையான ஞான சம்பந்தர் அழுதார். அவரின் அழு குரல் கேட்டு பார்வதியும் சிவன் வந்தனர் . பார்வதி தன் ஞானப் பாலை அவருக்குத் தந்தார்.

குளத்தில் இருந்து நீராடி வந்த ஞானசம்பந்தரின் தந்தை , குழந்தையின் வாயில் பால் வடிவதைக் கண்டு, யார் உனக்கு பால் தந்தது என்று கேட்டார்.

குழந்தை மேலே கண்ட பாடலைப் பாடியது என்பது புராணம் தரும் செய்தி.

இந்தத் தேவாரம் காட்டும் சில ஆழ்ந்த கருத்துகளை பார்ப்போம்.

உனக்கு யார் பால் தந்தது என்று தந்தையார் கேட்ட போது , குழந்தை கூறியது  "இவன் அன்றே" என்று.

இதோ இருக்கிறானே இவன் தான் என்று.

அவன் அன்றே என்று சொல்லி இருந்தால் வேறு எங்கோ தூரத்தில் இருக்கிறான் என்று  கொள்ளலாம். இவன் அன்றே என்பது அண்மைச் சுட்டு. அருகில்  உள்ள ஒன்றை சுட்டிக் காட்டுவது.

பக்கத்தில் இருக்கிறான்.

ஞான சம்பந்தருக்குத் தெரிகிறது. அவருடைய தந்தையாருக்குத் தெரியவில்லை.

இப்படித்தான், உண்மை மிக மிக அருகில் இருந்தும், நாம் அதை அறியாமலேயே  எங்கே எங்கே என்று ஊரெல்லாம் தேடிக் கொண்டிருப்போம்.

உண்மை, உங்களுக்கு மிக மிக அருகில் இருக்கிறது. பார்க்கும் கண் வேண்டும்.

ஞானசம்பந்தரின் தந்தை மட்டும் அல்ல, அருகில் இருந்த யாரும் இறைவனை  காணவில்லை. கண்டதாக குறிப்பு ஒன்றும் இல்லை.

அவர்கள் எல்லோரும் வேறு எதையோ தேடிக் கொண்டிருக்கிறார்கள். எதைத் தேடுகிறோமோ அதைத்தானே கண்டடைவோம் ?

தேடுங்கள் , கிடைக்கும் என்றார் இயேசு.

ஆம். தேடியது கிடைக்கும்.

எதைத் தேடுகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

மேலும் தொடரும்.





Thursday, December 10, 2015

திருக்குறள் - அகர முதல எழுத்து எல்லாம்

திருக்குறள் - அகர முதல எழுத்து எல்லாம் 



அகரம் முதல, எழுத்து எல்லாம்; ஆதி- 
பகவன் முதற்றே, உலகு.

தெரிந்த குறள் தான். இதில் என்ன புதிதாக இருக்கப் போகிறது ?

அ என்ற எழுத்து எல்லா எழுத்துகளுக்கும் முதலாவது எப்படியோ அப்படியே இந்த உலகுக்கு எல்லாம் இறைவன் முதல்.

இந்த குறள் யாருக்குச் சொல்லப் பட்டது ? ஏன் சொல்லப் பட்டது என்று சிந்திப்போம்.

உலகில் எத்தனையோ புத்தகங்கள் இருக்கின்றன. கலை, கவிதை, நாடகம், அறிவியல், மொழி, சரித்திரம் என்று எத்தனையோ புத்தங்கள் இருக்கின்றன.

அத்தனை புத்தகங்களும் ஏதோ ஒரு வழியில் பகுக்கப் பட்டிருக்கிறது. பலப் பல அத்யாயங்களாகப் பிரித்து எழுதப் பட்டிருக்கும்.

ஒவ்வொரு  அத்யாயதிலும் பல  பத்திகளாகப் (para ) பிரிக்கப் பட்டிருக்கும்.

ஒவ்வொரு பத்தியும் பல வாக்கியங்களை கொண்டிருக்கும்.

ஒவ்வொரு வாக்கியமும் பல எழுத்துகளை கொண்டிருக்கும்.

அத்தனை எழுத்துக்கும் மூல எழத்து 'அ' என்ற எழுத்து.

அ என்ற எழுத்து வாயைத் திறந்தாலே வந்து விடும்.அதை நீட்டினால் ஆ. உதட்டை குவித்தால் உ. குவிந்த உதட்டை இன்னும் சுருக்கினால் ஊ என்று அனைத்து எழுத்துகளும் அதில் இருந்து பிறக்கிறது.

எனவே, ஒரு புத்தகம் என்றால் அதைப் பகுத்துக் கொண்டே போனால் அ வில் வந்து நிற்கும்.

அதே போல, இந்த உலகை பகுத்துக் கொண்டே வந்தால், அது இறைவனில் வந்து நிற்கும்.

அ என்ற எழுத்துக்கு முன் எதுவும் இல்லை. அது போல இறைவனுக்கு முன் எதுவும் இல்லை.

அ என்ற எழுத்து தானாகவும் இயங்கும், மற்ற எழுத்துகளை இயங்க வைக்கும், மற்ற எழுத்துகளோடு சேர்ந்தும் இயங்கும்.

அது போல, இறைவனும் தானாகவே இயங்குவான், மற்ற உயிர்களை இயக்குவான், அவற்றுள் இருந்தும் இயங்குவான்.

சரி, இந்த எழுத்து, அதன் பிறப்பு, அதன் சேர்க்கை, அதன் வடிவம் எல்லாம் மொழி அறிவு உள்ளவனுக்குப் புரியும். படிப்பு அறிவு இல்லாதவனுக்கு அ வும் தெரியாது, உ வும் தெரியாது.

அவனுக்கு எப்படி கடவுளை உணர்த்துவது ?

வள்ளுவர், படித்தவனுக்கு மட்டுமே குறளை எழுதினாரா ? படிக்காதவன் குறளை அறிந்து அதன் படி நடக்க வேண்டாமா ? அப்படி என்றால் படித்தவன் , படிக்காதவன் எல்லோருக்கும் புரியும்படி வேறு ஏதாவது உதாரணத்தை எடுத்திருக்கலாமே வள்ளுவர் . ஏன் எடுக்கவில்லை ?

படிக்காதவன் இறைவனை அறிந்து கொள்ள முடியாது என்று நினைத்து விட்டாரா ?

சிந்திப்போம்.








Tuesday, November 24, 2015

பெரிய புராணம் - அயலறியாமை வாழ்ந்தார்

பெரிய புராணம் - அயலறியாமை வாழ்ந்தார்


திருநீல கண்டர் , இளமையின் வேகத்தால், காம வயபட்டு , மனைவி அல்லாத இன்னொரு பெண்ணிடம் உறவு கொண்டார். அது கண்டு பொறுக்க மாட்டாத அவரின் மனைவி "திருநீலகண்டத்தின் மேல் ஆணை, நீர் எந்தப் பெண்ணையும் தொடக் கூடாது " என்று கூறினார்.

மனைவியின் வாக்கை ஏற்று, மனைவியை மட்டும் அல்ல, வேறு எந்தப் பெண்ணையும் மனதாலும் நினையாமல் வாழ்ந்து வந்தார்.

சரி, ஏதோ கணவன் மனைவிக்கு இடையில் சண்டை வந்து விட்டது. மனைவியும் ஏதோ சொல்லி விட்டாள் என்று இல்லாமல் அவள் சொன்னதை வேத வாக்காக கொண்டு அவர் வாழத் தொடங்கினார்.

மனைவியோ, கணவனிடம் சண்டை போட்டாள் , எம்மை தொடாதே என்று ஆணையிட்டாளே தவிர வேறு ஒன்றிலும் குறை வைக்கவில்லை.

அவரைத் தொட்டு செய்யும் பணிவிடை தவிர்த்து மீதி அத்தனை காரியங்களையும் செய்து வந்தார்.

அது மட்டும் அல்ல, அவர்களுக்குள் நடந்த இந்த சண்டை, ஊடல், இந்த சங்கல்பம் அக்கம் பக்கம் யாரும் அறியாமல் மறைத்து வைத்தார்.

கணவன் மனைவிக்கு இடையில் ஆயிரம் சண்டை சச்சரவு வரலாம். வரும்.

எக்காரணம் கொண்டும், அது வெளியில் தெரியக் கூடாது. அது அவர்களுக்குள்ளேயே இருக்க வேண்டும்.

ஒரு குடும்பத்தின் மானத்தை, ஒரு குயவாணர் குலத்தில் பிறந்த ஒரு பெண் எப்படி கட்டிக் காக்கிறாள் என்று காட்டுகிறார் சேக்கிழார்.

ஒரு குடும்பத்தின் மானம், கௌரவம் அந்த வீட்டின் பெண்ணின் கையில் இருக்கிறது.

அவள் , தவறிப் போய் ஒரு வார்த்தை சொல்லிவிட்டாலும் அந்த குடுமத்தின் மானம் பறி போய் விடும்.

பாடல்

கற்புறு மனைவியாரும் கணவனார்க்கு ஆன எல்லாம்
பொற்புற மெய் உறாமல் பொருந்துவ போற்றிச் செய்ய
இல் புறம்பு ஒழியாது அங் கண் இருவரும் வேறு வைகி
அன்புறு புணர்ச்சி இன்மை அயலறியாமை வாழ்ந்தார்

பொருள்

கற்புறு மனைவியாரும் = கற்பு அமைந்த அந்த மனைவியும்

கணவனார்க்கு = கணவருக்கு

ஆன எல்லாம் = தேவையான எல்லாம்

பொற்புற = பொறுப்புடன்

மெய் உறாமல் = உடல் மட்டும் தொட்டுக் கொள்ளாமல்

பொருந்துவ = தேவையானவற்றை

போற்றிச் செய்ய = விரும்பிச் செய்தார். ஏதோ கடனுக்கு என்று செய்யவில்லை.

இல் புறம்பு ஒழியாது = வீட்டு விஷயம் வெளியில் தெரியாமல்

அங் கண் இருவரும் = அவர்கள் இருவரும்

வேறு வைகி = வேறு வீரு ஆளாக நாட்களை கடத்தி வந்தனர்

அன்புறு = அன்புடன் ஏற்படும்

புணர்ச்சி இன்மை = உடல் உறவு இல்லாமையை

அயலறியாமை வாழ்ந்தார் = வெளியில் உள்ளவர்க்கள் அறியாமல் வாழ்ந்து வந்தனர்.


கணவன் மனைவிக்கு இடையில் சண்டை தான். ஊடல் தான். ஒருவரை ஒருவர் தொட்டுக் கொள்வது  கூட கிடையாதுதான். இருந்தாலும், அது வெளியில் யாருக்கும்  தெரியாமல் எப்போதும் போல சிரித்து பேசி வாழ்கிறார்கள்.

கணவனுக்கு வேண்டியது எல்லாம் அன்போடு, விருப்போடு சிறப்பாகச் செய்து தருகிரார் அந்தப் பெண். முகம் சுழிப்பது இல்லை. முகத்தை கடு கடு என்று வைத்துக் கொள்வது இல்லை.

ஒரு புடவை  எடுத்துத் தர வில்லை என்றால், ஒரு சினிமாவுக்கு கூட்டிப் போகவில்லை என்றால்  சில வீடுகளில் பெண்மணிகளின் முகம் போகும் போக்கே தனிதான்.

தண்ணீர் செம்பும், கதவும் கிடந்து இடிபடும்.

ஆனால், இந்தப் பெண்ணோ, அன்புடன் சிரித்த முகத்துடன் அனைத்தும் செய்தார்.

ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள்.

ஒரு விலைமகளின் வீட்டுக்குப் போய் வந்தவனை அடியார்களில் ஒருவனாக  ஏற்றுக் கொள்ளும்  பக்குவமும் துணிவும் வேறு எந்த மதத்துகாவது இருக்குமா ?

மனிதர்கள் பலவீனமானவர்கள்.

தவறு செய்யும் இயல்பு உடையவர்கள்.

அந்த பலவீனங்களை ஏற்றுக் கொண்டது இந்து மதம்.

படிப்பு அறிவு இல்லாதவனுக்கும், பண வசதி இல்லாதவனுக்கும்,  தவறு செய்பவனுக்கும்  நல்ல கதி கிடைக்கும் என்று ஒரு நம்பிக்கையை தந்தது இந்த மதம்.


நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை, வா என்று அன்போடு அழைத்துக் கொண்டது இந்த மதம்.

மதத்தை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களோ இல்லையோ,  இப்படி பட்ட தனி மனித  வாழ்க்கையை உயர்த்திப் பிடித்த பெரிய புராணத்தை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் தானே ?

நம் பெருமை நமக்குத் தெரியவில்லை.



Monday, November 23, 2015

பெரிய புராணம் - பெரியவர் பெயர்ந்து நீங்கி - காமத்தை வெல்ல முடியுமா ? - பாகம் 6

பெரிய புராணம் - பெரியவர் பெயர்ந்து நீங்கி - காமத்தை வெல்ல முடியுமா ? - பாகம் 6


திருநீலகண்டர், தன் மனைவி இருக்க, இன்னொரு பெண்ணிடம் சென்று வந்தார். அதைக் கண்டு பொறுக்க முடியாத அவரின் மனைவி, "திருநீலகண்டத்தின் மேல் ஆணை, நீர் வேறு எந்த பெண்ணையும் தொடக் கூடாது " என்று ஆணையிட்டார்.

அதைக் கேட்டவுடன், திருநீலகண்ட நாயனார், அவளை விட்டு மனதாலும், உடலாலும் விலகி, "எம்மை" என்று நீ பன்மையில் சொன்னதனால், மற்ற பெண்களையும் மனதாலும் தீண்டேன் என்றார்.

இங்கே சிறிது நிறுத்தி, திருநீலகண்டரின் இடத்தில் நம்மை வைத்துப் பார்ப்போம்.

படிப்பறிவு இல்லாத, உடல் உழைப்பையே நம்பி வாழும் ஒருவர். ஏழை. அவருடைய மனைவி எந்தப் பெண்ணையும் தொடக் கூடாது என்று சிவனின் மேல் ஆணை என்கிறார். நாமாக இருந்தால் என்ன செய்திருப்போம் ?

ஒன்று, மனைவியை அடக்கி அவளை நம் விருப்பத்துக்கு இணங்க வைத்திருப்போம்.

அல்லது,  நீ இல்லாட்டி என்ன,  எச்சில் கையை வீசினா ஆயிரம் காக்கை என்று  வேறு இடம் நாடிப் போயிருப்போம்.

சாதாரண மனிதர்களின் இயல்பு அப்படித்தானே இருக்கும்.

எந்தப் பெண்ணையும் மனதாலும் தீண்டமாட்டேன் என்று ஒதுங்கி நின்றார்.

பாடல்

ஆதியார் நீல கண்டத்து அளவு தாம் கொண்ட ஆர்வம்
 பேதியா ஆணை கேட்ட பெரியவர் பெயர்ந்து நீங்கி 
 ஏதிலார் போல நோக்கி எம்மை என்றதனால் மற்றை
 மாதரார் தமையும் என் தன் மனத்தினும் தீண்டேன் என்றார்


பொருள் 

ஆதியார் = எல்லாவற்றிற்கும் முதலான

நீல கண்டத்து  அளவு = திருநீலகண்டத்தவரான சிவனின் மேல்

தாம் கொண்ட ஆர்வம் = தான் கொண்ட ஆர்வம்

பேதியா = குறையாத , மாறாத

ஆணை கேட்ட = "எந்தப் பெண்ணையும் தீண்டக் கூடாது" என்ற அந்த ஆணையக் கேட்ட

பெரியவர் = பெரியவர்

 பெயர்ந்து நீங்கி  = பெயர்ந்து என்றாலும், நீங்கி என்றாலும் ஒரே பொருள் தான். பின் ஏன் சேக்கிழார் இரண்டு வார்த்தைகளைப் போடுகிறார். மனதினால் பெயர்ந்து, உடலால் நீங்கி. மனமும், உடலும் நீங்கியது

ஏதிலார் போல நோக்கி = ஏதிலார் என்றால் முன்னப் பின்ன அறிமுகம் இல்லாதவர்கள்.

ஏதிலார் குற்றம் போல் தம் குற்றம் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு. 

என்பது வள்ளுவம்.

மற்றவர்களுடைய குற்றங்களை காண்பது போல நம்முடைய குற்றத்தையும் கண்டால், உயிர்களுக்கு ஒரு தீங்கும் வராது.

சொந்த மனைவியை யாரோ ஒரு பெண்ணைப் போல பார்த்தாராம்.

எம்மை என்றதனால் = எம்மை என்று சொன்னதால்

மற்றை = வேறு எந்த

மாதரார் தமையும் = பெண்ணையும்

என் தன் மனத்தினும்  தீண்டேன் என்றார் = என்னுடைய மனத்தாலும் தீண்டேன் என்றார்.


இது நடக்கிற காரியமா ?

சொந்த வீடு. சின்ன குடிசை வீடு. பக்கத்தில் இரதி போல மனைவி படுத்திருக்கிறாள். உடல் தீண்டாவிட்டாலும், மனம் சும்மா இருக்குமா ?

சரி மனைவிதான், உடன் படவில்லை, மற்ற பெண்களையாவது மனம் நினைக்காமல் இருக்குமா ?

காமம் சும்மா இருக்குமா ?

காமத்தை கட்டுப் படுத்த முடியுமா ?

திருநீலகண்ட நாயனாரால் முடிந்தது.

எப்படி ?

எவ்வளவோ படித்தவர்களால் முடியாத அந்த செயலை அவர் எப்படி செய்தார்.

காமம் மோசமானது. அனைத்து குற்றங்களுக்கும் அதுவே காரணம் என்று அறிந்த  மேதாவிகள் கூட அதன் பிடியில் இருந்து தப்பியது இல்லை.

காமம் , சாம்ராஜ்யங்களை புரட்டிப் போட்டிருக்கிறது.

மகுடங்களை , தலை மாற்றி இருக்கிறது.

சக்ரவர்திகளை , காலில் விழ வைத்திருக்கிறது.

அப்பேற்பட்ட காமத்தை படிப்பறிவில்லா, அதிகாரம், புகழ் , செல்வாக்கு , புஜ பலம் இல்லாத  ஒரு ஏழை குயவனால் எப்படி வெல்ல முடிந்தது ?

பக்தி ஒன்றே அவரிடம் இருந்தது. அந்த பக்தி அவருக்கு உதவி செய்தது. 


"ஆதியார் நீல கண்டத்து அளவு தாம் கொண்ட ஆர்வம்  பேதியா "

நீலகண்டத்தின் மேல் கொண்ட ஆர்வம் , அவருக்கு காமத்தை வெல்ல துணை செய்தது. 

பக்தி காமத்தை மட்டுமல்ல, வேறு எந்த தீய குணத்தில் இருந்தும் காக்கும். 

சொல்லப் போனால் , சேக்கிழார் , அதை பக்தி என்று கூட சொல்லவில்லை. இறைவன் மேல் உள்ள   ஆர்வம் என்கிறார். 

காமத்தை விடு என்று சேக்கிழார் சொல்லி இருந்தால் யார் கேட்டிருப்பார்கள் ?

பக்தி காமத்தை வெல்ல வழி வகுக்கும் என்று சொல்லி இருந்தால் கூட யாரும் கேட்டிருக்க மாட்டார்கள். 

நேரடியாகச் சொல்லாமல்,

திருநீலகண்டர் என்ற ஏழை குயவானார், இறைவன் மேல் கொண்ட பக்தியால், காமத்தை வென்றார்  என்று சொல்லிச் செல்கிறார். 


அது மட்டும் அல்ல....

===================== பாகம் 2 ===========================================

மனித மனம் எப்போதும் எதையாவது ஒன்றை பற்றிக் கொண்டே இருக்கும். எதையும் பற்றாமல் அதனால் இருக்க முடியாது. 

அதிலும், தீய குணங்களை எளிதில் பற்றிக் கொள்ளும். நல்ல குணங்களைப் பற்ற நாள் ஆகும். 

எனவே தான் பதியும், பாசமும் இருக்க, பசு எப்போதும் பாசத்தையே பற்றும், பதியை விட்டு விட்டு. 

பன்றியோடு சேர்ந்த கன்றும் ஏதோ தின்னும் என்று சொல்ல்வார்கள். ஏன் மாத்திச் சொல்ல முடியவில்லை ? 

கன்றோடு சேர்ந்த பன்றியும் புல் தின்னும் என்று சொல்ல முடியாது. 

ஏன் ?

தீய பழக்கங்கள் எளிதில் வந்து விடும்.

அதனால் தான் அவ்வையார், 

தீயாரை காண்பதுவும் தீது என்றாள் 


தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற
தீயார்சொல் கேட்பதுவும் தீதே - தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது.

தீயவர்களைக் பார்க்கக் கூட கூடாது என்கிறாள். பார்த்தால், கிட்ட வா என்பான். வந்தால் , "வா அப்படியே ஒரு டீ சாப்டுகிட்டே பேசலாம்" என்பான் . ஒன்றிலிருந்து ஒன்றாக பல தீய பழக்கங்கள் வந்து சேரும்.

தீயவன் , தீயவற்றில் காட்டும் ருசி ஒரு புறம். நம் மனம் தீயவற்றை எளிதாகப் பற்றி கொள்ளும் குணம் மறு புறம். 

மனம் எதயாவது ஒன்றைப் பற்றிக் கொண்டுதான் இருக்கும்.

எனவே தான், பற்றை விடச் சொன்ன வள்ளுவர் கூட

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு

திருநீலகண்டர் இறைவனைப் பற்றிக் கொண்டார்.  இறைவன் மேல் ஆணை என்று சொன்னவுடன், அவரால் காமத்தை விட முடிந்தது. 

அது மட்டும் அல்ல, மனைவியின் சொல்லை அவர் மதித்தார். "நீ யார் என்னை தடுப்பதற்கு ...நான் ஆம்பிளை எங்க வேண்டுமானாலும் போவேன் வருவேன் " என்று வீரம் பேசவில்லை. 

மனைவியின் சொல்லுக்கு மதிப்பு தரும் அந்த பண்பு எங்கிருந்து வந்தது. 

படித்து வரவில்லை. 

பக்தியினால் கூட வந்திருக்காது. பக்தி , மனைவி பேச்சை கேள் என்று சொல்லித் தருவது இல்லை. 

இறைவன் மேல் பக்தி வரும் போது , அப்படி பக்தி கொண்ட மற்ற நல்லவர்களின் தொடர்பு ஏற்படுகிறது. அந்தத் தொடர்பு அவரை பண் படுத்தியது என்றுதான் கொள்ள வேண்டும். 

நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று


அப்படி இருந்தால் , ஏன் மற்றொரு பெண்ணின் வீட்டுக்குப் போனார் என்ற கேள்வி வருகிறது அல்லவா ?  

சேக்கிழார் சொல்கிறார் "இளமை மீதுற...எளியர் ஆனார் " என்கிறார். உணர்ச்சி வசப்பட்டு, தன் வசம் இழந்து தவறு செய்தார் என்று ஒப்புக் கொள்கிறார் செய்கிறார். 

அதை பூசி மெழுகவில்லை. அந்த தவறான செயலுக்கு ஞாயம்  தேடவில்லை. 

தவறு செய்து விட்டார். அதை மனைவி கண்டித்தவுடன், உணர்ந்து மனைவியின் பேச்சைக் கேட்டு, அப்படியே நடந்தார்.

பக்தியின் உச்சம் தொட்டு காட்டுகிறார் சேக்கிழார்.

பக்தி, ஒரு படிக்காத பாமரனை, இந்த அளவுக்கு பக்குவப் படுத்தும் என்றால், மற்றவர்களை அது எந்த அளவுக்கு பண்படுத்தும் என்று சிந்தித்துப் பார்க்கலாம். 

இவர் அப்படி என்றால், அவரின் மனைவி இன்னும் ஒரு படி மேலே போகிறார். 

ஒரு குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்று சேக்கிழார் அடுத்த பாடல் காட்டுகிறார்.