Monday, January 4, 2016

இராமாயணம் - தன்னைத் தான் தொழும்

இராமாயணம் - தன்னைத் தான் தொழும் 



நீங்கள் எவ்வளவு உயர்ந்தவர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா ? ஏதோ நாம் ஒன்றும் பெரிய ஆள் இல்லை, ஏதோ பிறந்தோம், வளர்ந்தோம், வாழ்கிறோம் என்று இருக்கிறீர்கள். நீங்கள் எவ்வளவு பெரியவர்கள் என்று உங்களுக்குத் தெரியாது. எப்போதாவது நீங்கள் உங்களையே பெரிய மனிதன் என்று உணர்ந்து இருக்கிறீர்களா ?

ஒரு பெரிய மனிதரைக் கண்டால் பொதுவாக மக்கள் என்ன செய்வார்கள் ? அவரை விழுந்து வணங்குவார்கள். அவரிடம் ஆசீர்வாதம் கேட்பார்கள்.

ஒருவரை மற்றவர்கள் வணங்குகிறார்கள் என்றால் அவர் பெரிய மனிதர் தானே ?

இராமன் வரப் போகிறான் என்று அனுமன் கூறக் கேட்டான் பரதன். அதைக் கேட்டவுடன் பரதன் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை.

அவனுடைய மகிழ்ச்சியை கம்பன் படம் பிடிக்கிறான்

பாடல்

'வேதியர்தமைத் தொழும்; வேந்தரைத் தொழும்; 
தாதியர்தமைத் தொழும்; தன்னைத் தான் தொழும்; 
ஏதும் ஒன்று உணர்குறாது இருக்கும்; நிற்குமால்;- 
காதல் என்றதுவும் ஓர் கள்ளின் தோன்றிற்றே! 

பொருள்

'வேதியர்தமைத் தொழும்; = அவையில் இருந்த வேதியர்களைத் தொழுதான்

வேந்தரைத் தொழும்; = அங்குள்ள வேந்தர்களைத் தொழுதான்

தாதியர்தமைத் தொழும்; = வேலை செய்யும் பணிப் பெண்களைத் தொழுதான்

தன்னைத் தான் தொழும்; = தன்னையே தொழுது கொண்டான்

ஏதும் ஒன்று உணர்குறாது இருக்கும்;  = ஒரு உணர்வும் இல்லாமல் இருந்தான்

நிற்குமால்;- = நின்றான்

காதல் என்றதுவும் ஓர் கள்ளின் தோன்றிற்றே! = காதல் என்பது கள் போலத்தான்

இராமனை காணப் போவதால் , தான் எவ்வளவு பெரிய மனிதன் என்று உணர்ந்த பரதன்  தன்னைத் தானே தொழுது கொண்டான்.

பரதன் என்ற தனி மனிதனாக தான் ஒன்றும் பெரிய ஆள் இல்லை என்று அவனுக்குத் தெரியும். இராமனை காணப் போகிறேன் என்பதால் தான் பெரிய ஆள் என்று நினைந்து தன்னைத்தானே வணங்கிக் கொண்டான். 

இன்னும் இராமனை காணவில்லை. பார்க்கப் போகிறோம் என்ற எண்ணமே அவனுக்குள் அந்த நினைவை தோற்றுவிக்கிறது. 

இராமனை பார்க்கப் போவதால், தான் வணங்கத்தக்கவன் என்று நினைந்து பரதன் தன்னைத் தானே   வணங்கிக் கொண்டான். 

தான் மட்டும் அல்ல, இராமனை யாரெல்லாம் காணப் போகிறார்களோ அவர்கள் எல்லோரும் வணங்கத் தக்கவர்களே என்று எண்ணி, அங்கிருந்த வேதியர்களையும், அரசர்களையும், பணிப் பெண்களையும் வணங்கினான்.

யாருக்குத் தெரியும்?...நாளையே நீங்களும் இராமனை காண நேரிடலாம் ? நாளும் இறைவனை காண வேண்டும் என்று தானே பிரார்த்தனை பண்ணுகிறீர்கள் ? அந்த பிரார்த்தனை கை கூடி வந்தால், நீங்களும் இறைவனை  காணும் பேறு பெறுவீர்கள். 

காண்பீர்களோ, இல்லையோ...காணும் சாத்தியம் இருப்பதால் நீங்களும் பெரியவர்கள் தான். 

கண்ணாடி முன் நின்று ஒரு முறை உங்களை நீங்களே வணங்கிக் கொள்ளுங்கள்.

அது மட்டும் அல்ல உங்களை சுற்றி உள்ளவர்கள் எல்லோரும் வணங்கத் தக்கவர்கள்தான் .  

இது பக்தியின் உச்சம் !

அதைக் கம்பன் பக்தி என்று கூட சொல்லவில்லை. காதல் என்கிறான். கள் வெறி கொண்டது போல இருக்கும் காதல் என்கிறான். 

ஒரு கரைதல். ஒரு களிப்பு. ஒரு உன்மந்தம்....













Sunday, January 3, 2016

நாலாயிர திவ்ய பிரபந்தம் - திருபல்லாண்டு

நாலாயிர திவ்ய பிரபந்தம் - திருபல்லாண்டு 



பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
செவ்வடி செவ்விதிருக் காப்பு

மனிதன், இறைவனிடம் பொதுவாகவே ஏதாவது கேட்டுக் கொண்டே தான் இருக்கிறான்.

படிப்பைக் கொடு, செல்வத்தைக் கொடு, உடல் ஆரோக்யத்தைக் கொடு, மன நிம்மதியைக் கொடு, என் பிள்ளைக்கு வேலை, நல்ல இடத்தில் திருமணம், சிக்கல்களில் இருந்து விடுதலை, என்று ஏதாவது ஒன்றைக் கேட்டுக் கொண்டே இருக்கிறான்.

பற்றுகளை விட்டு விட்டேன் என்று சொல்லும் துறவிகளும், ஞானிகளும் கூட முக்தி கொடு, பரமபதம் கொடு என்று கேட்கிறார்கள்.

அதுவும் இல்லாவிட்டால் , இங்கேயே, உன்னைப் பார்த்துக் கொண்டே இருக்கும்  வரம் தா என்று வேண்டுகிறார்கள்.

காலம் காலமாக மனிதன் ஆண்டவனிடம்  எதையோ கேட்டுக் கொண்டே தான் இருக்கிறான். அவனின் தேவைகள் தீர்ந்தபாடில்லை.


இறைவா உன் கருணை  வேண்டும்,உன் அன்பு வேண்டும், உன் தயை வேண்டும் என்று உருகிக் கொண்டிருக்கிறான் மனிதன்.

இறைவன் பெரிய ஆள் தான். அவனால் எல்லாம் முடியும். மிக மிக சக்தி வாய்ந்தவன் தான்.

எதைக் கேட்டாலும் தருவான்...

அது ஒரு புறம் இருக்கட்டும்.

ஒரு தாய்  இருக்கிறாள். அவளுடைய பையன் படித்து பட்டம் பெற்று பெரிய ஆளாகி விட்டான். அவனுக்கு கீழே ஒரு பெரிய நிறுவனமே இயங்குகிறது. அவன் ஆணையை நிறைவேற்ற ஆயிரம் பேர் காத்து இருக்கிறார்கள்.

இருந்தாலும், அவன் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது , அந்தத் தாய்  " பாத்து போப்பா, ஜாக்கிரதையா போப்பா " என்று சொல்லி அனுப்பவாள் .

ஏன் ?

மகனுக்கு அறிவில்லையா ? அவனுக்கு எப்படி போக வேண்டும்  என்று  தெரியாதா ?

 தெரியும்.அது அந்தத்  தாய்க்கும்    தெரியும்.  இருந்தும்,அவள் மனதில் ஊற்றெடுக்கும் காதலால், அந்த பிள்ளையின்  மேல் உள்ள வாஞ்சையால் அவள் அப்படி சொல்கிறாள். அவனுக்கு ஒரு துன்பமும் நேர்ந்து விடக் கூடாதே என்ற கவலையில் சொல்கிறாள்.

 பக்தி இலக்கியத்தில் முதன் முதலாக , இறைவனிடம் ஒன்றும் கேட்காமல், ஒரு நன்றி கூட சொல்லாமல், "இறைவா நீ நல்லா இரு ...பல்லாண்டு காலம் நீ சௌக்கியமாக வாழ வேண்டும்  " என்று பெரியாழ்வார்  வாழ்த்துகிறார்.

இறைவனுக்கு என்ன ஆபத்து வந்து விடப் போகிறது ? வந்தாலும் அவனுக்குத் தன்னை காத்துக் கொள்ளத் தெரியாதா ?

தெரியும். அது ஆழ்வாருக்கும் தெரியும்.

இருந்தும்  பெருமாள் மேல் அவ்வளவு காதல்.

நீ பல்லாண்டு வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறார்.


பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு
பலகோடி நூறாயிரம் ஆண்டுகள் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறார்.

ஒரு தாய், தன் பிள்ளையை வாழ்த்துவதைப் போல வாழ்த்துகிறார்.


இவர் வாழ்த்துவதைப் பார்த்து பெருமாளுக்கு ஒரே  சிரிப்பு.

எனக்கு என்ன ஆபத்து வந்து விடும் என்று நீர் என்னை வாழ்த்துகிரீர். என்னுடைய தோள்களைப் பாரும். பெரிய பெரிய மல்லர்களை வீழ்த்திய தோள்கள் என்று தன் தோள்களைக் காட்டுகிறான் அவன்.

 அதைப் பார்த்ததும் , ஆழ்வாருக்கு இன்னும் பயம் வந்து விட்டது....

மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
செவ்வடி செவ்விதிருக் காப்பு


என்ன பயம் ?














Monday, December 21, 2015

நான்மணிக்கடிகை - எது, எதற்குச் சமம் ?

நான்மணிக்கடிகை - எது, எதற்குச் சமம் ?



திரு ஒக்கும், தீது இல் ஒழுக்கம்; பெரிய
அறன் ஒக்கும், ஆற்றின் ஒழுகல்; பிறனைக்
கொலை ஒக்கும், கொண்டு கண்மாறல்; புலை ஒக்கும்,
போற்றாதார் முன்னர்ச் செலவு. 

செல்வம் வேண்டுமா ?

செல்வம் வேண்டாம் என்று யாரவது கூறுவார்களா ?

அந்த செல்வத்தைத் தேடித்தானே இத்தனை அலைச்சல்.

எப்படி அந்த செல்வத்தை அடைவது ?

படிக்க வேண்டுமா ? அதிர்ஷ்டம் வேண்டுமா ? பெரிய ஆட்களின் நட்பு வேண்டுமா ? எது இருந்தால் செல்வத்தை அடையலாம் ?

இது ஒண்ணும் வேண்டாம்.

குற்றம் இல்லாத ஒழுக்கம் இருந்தாலே செல்வம் தானாக வந்து சேரும் என்கிறது நான்மணிக்கடிகை.

அந்த ஒழுக்கமே செல்வத்திற்கு ஒப்பானது.

எப்படி என்று அறிவதற்கு முன்னால், ஒழுக்கம் என்றால் என்ன என்று அறிந்து கொள்வோம்.

ஒழுக்கம் என்றால் ஒழுகுதல்.

வீட்டின் கூரையில் ஒரு சிறு ஓட்டை இருந்தால் அதில் இருந்து நீர் ஒழுகுவதைப் பார்த்து இருப்பீர்கள்.

வீட்டில் குளியல் அறையில் உள்ள குழாய் சரியாக மூடாவிட்டால் நீர் ஒழுக்கிக் கொண்டே இருக்கும்.

அதே போல் நீங்கள் எதை விடாமல் செய்து கொண்டு இருக்கிரீர்களோ அது உங்களது ஒழுக்கம்.

காலையில் எழுந்தவுடன் காபி தினமும் காப்பி குடிக்கிறீர்களா ? அது உங்கள் ஒழுக்கம்.

தினமும் ஒரு மணி நேரம் நடை பயிற்சி செய்கிறீர்களா ? அதுவும் உங்கள் ஒழுக்கம்.

சரி, நான் தினமும் "தண்ணி" அடிக்கிறேன். அதுவும் ஒழுக்கமா ?

நான் தினமும் திருடுகிறேன் ? அதுவும் ஒழுக்கமா ?

மீண்டும் நம் உதாரணத்துக்குப் போவோம்.

நீர் எங்கிருந்து எங்கே ஒழுகுகிறது ? உயர்ந்த இடத்தில் இருந்து தாழ்ந்த இடம் இடம் நோக்கி ஒழுகுகிறது. தாழ்ந்த இடத்தில் இருந்து உயர்ந்த இடம் நோக்கிப் போவது இல்லை.

அதுபோல, சான்றோர், உயர்ந்தோர் செய்த செயல்களை நாம் திரும்ப திரும்பச் செய்தால் அது ஒழுக்கம்.

அந்த ஒழுக்கம் செல்வத்திற்கு இணையானது.

ஒரு மாணவன் தினமும் 2 மணிநேரம் படிக்கிறான் என்று வைத்துக் கொள்வோம்...அவன் கட்டாயம் நல்ல மதிப்பெண்கள் பெறுவான், நல்ல கல்லூரியில் அவனுக்கு இடம் கிடைக்கும், நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும், நிறைய சம்பளம் கிடைக்கும். செல்வம் கிடைக்கும். அதற்க்கு காரணம் என்ன - ஒழுக்கம்.

ஒருவன் தினமும் பாடல் பயிற்சி செய்கிறான், ஒரு விளயாட்டில் பயிற்சி செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம் ...செய்து கொண்டே இருந்தால் அவன் அந்தத் துறையில் சிறந்து விளங்குவான்.

அப்படி சிறந்து விளங்கினால், அவனுக்கு செல்வமும், பேரும் புகழும் கிடைக்கும் அல்லவா.

எனவே தான்,

திரு ஒக்கும் , தீது இல் ஒழுக்கம்

என்கிறது நான் மணிக்கடிகை.

நான் தினமும் தண்ணி அடிக்கிறேன், புகை பிடிக்கிறேன் என்றால் அதுவும் ஒழுக்கம் தான்.   ஆனால் அது தீய ஒழுக்கம். அது செல்வத்தைத் தராது.

இன்னும் சிந்திப்போம்





Saturday, December 19, 2015

திருக்குறள் - அகர முதல எழுத்து எல்லாம் - பகுதி 3

திருக்குறள் - அகர முதல எழுத்து எல்லாம் - பகுதி 3



அகரம் முதல, எழுத்து எல்லாம்; ஆதி- 
பகவன் முதற்றே, உலகு.

தெரிந்த குறள் தான். இதில் என்ன புதிதாக இருக்கப் போகிறது ?

அ என்ற எழுத்து எல்லா எழுத்துகளுக்கும் முதலாவது எப்படியோ அப்படியே இந்த உலகுக்கு எல்லாம் இறைவன் முதல்.

இந்த குறள் யாருக்குச் சொல்லப் பட்டது ? ஏன் சொல்லப் பட்டது என்று சிந்திப்போம்.

உலகில் எத்தனையோ புத்தகங்கள் இருக்கின்றன. கலை, கவிதை, நாடகம், அறிவியல், மொழி, சரித்திரம் என்று எத்தனையோ புத்தங்கள் இருக்கின்றன.

அத்தனை புத்தகங்களும் ஏதோ ஒரு வழியில் பகுக்கப் பட்டிருக்கிறது. பலப் பல அத்யாயங்களாகப் பிரித்து எழுதப் பட்டிருக்கும்.

ஒவ்வொரு  அத்யாயதிலும் பல  பத்திகளாகப் (para ) பிரிக்கப் பட்டிருக்கும்.

ஒவ்வொரு பத்தியும் பல வாக்கியங்களை கொண்டிருக்கும்.

ஒவ்வொரு வாக்கியமும் பல எழுத்துகளை கொண்டிருக்கும்.

அத்தனை எழுத்துக்கும் மூல எழத்து 'அ' என்ற எழுத்து.

அ என்ற எழுத்து வாயைத் திறந்தாலே வந்து விடும்.அதை நீட்டினால் ஆ. உதட்டை குவித்தால் உ. குவிந்த உதட்டை இன்னும் சுருக்கினால் ஊ என்று அனைத்து எழுத்துகளும் அதில் இருந்து பிறக்கிறது.

எனவே, ஒரு புத்தகம் என்றால் அதைப் பகுத்துக் கொண்டே போனால் அ வில் வந்து நிற்கும்.

அதே போல, இந்த உலகை பகுத்துக் கொண்டே வந்தால், அது இறைவனில் வந்து நிற்கும்.

அ என்ற எழுத்துக்கு முன் எதுவும் இல்லை. அது போல இறைவனுக்கு முன் எதுவும் இல்லை.

அ என்ற எழுத்து தானாகவும் இயங்கும், மற்ற எழுத்துகளை இயங்க வைக்கும், மற்ற எழுத்துகளோடு சேர்ந்தும் இயங்கும்.

அது போல, இறைவனும் தானாகவே இயங்குவான், மற்ற உயிர்களை இயக்குவான், அவற்றுள் இருந்தும் இயங்குவான்.

சரி, இந்த எழுத்து, அதன் பிறப்பு, அதன் சேர்க்கை, அதன் வடிவம் எல்லாம் மொழி அறிவு உள்ளவனுக்குப் புரியும். படிப்பு அறிவு இல்லாதவனுக்கு அ வும் தெரியாது, உ வும் தெரியாது.

அவனுக்கு எப்படி கடவுளை உணர்த்துவது ?

வள்ளுவர், படித்தவனுக்கு மட்டுமே குறளை எழுதினாரா ? படிக்காதவன் குறளை அறிந்து அதன் படி நடக்க வேண்டாமா ? அப்படி என்றால் படித்தவன் , படிக்காதவன் எல்லோருக்கும் புரியும்படி வேறு ஏதாவது உதாரணத்தை எடுத்திருக்கலாமே வள்ளுவர் . ஏன் எடுக்கவில்லை ?

படிக்காதவன் இறைவனை அறிந்து கொள்ள முடியாது என்று நினைத்து விட்டாரா ?

சிந்திப்போம்.

================= பாகம் 2 ===============================================

கடவுள் வாழ்த்தில் ஆரம்பிக்கிறார் வள்ளுவர்.


அகரம் முதல, எழுத்து எல்லாம்; ஆதி- 
பகவன் முதற்றே, உலகு.

இதில் எங்கே வாழ்த்து இருக்கிறது ? வாழ்க என்று சொல்லவே இல்லையே ?

நமச்சிவாய வாழ்க என்று மணிவாசகர் ஆரம்பித்தார் 
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம் என்றார் தெய்வப் புலவர் சேக்கிழார் 
தலைவர் அன்னவர்க்கே  சரண் நாங்களே என்றார் கம்பர் 

வணங்குதலும் இல்லை, வாழ்த்தும் இல்லை ...வள்ளுவரில். 

பின் எப்படி இது ஒரு கடவுள் வாழ்த்து ஆகும் ?

கடவுளை வாழ்த்துவதற்கு முன், கடவுள் இருக்கிறார் என்பதை உறுதிப் படுத்த நினைக்கிறார் வள்ளுவர். 

கடவுள் என்று ஒன்று இருந்தால் அல்லவா அதை வாழ்த்த முடியும். 

கடவுள் இருக்கிறார் என்பதற்கு என்ன நிரூபணம் ? அதை உறுதிப் படுத்தி விட்டு, பின் அந்த கடவுளை வாழ்த்தலாம்.

எல்லோரும் கடவுள் இருக்கிறார் என்று மனதில் கொண்டு, நம்பிக்கையின் அடிப்படையில்  கடவுள் வாழ்தை சொன்னார்கள். 

வள்ளுவர் அப்படி செய்யவில்லை. அப்படி செய்திருந்தால், "சரி தான், இது ஏதோ வள்ளுவரின்   நம்பிக்கையின் பாற்பட்ட ஒரு புத்தகம் " என்று மக்கள் இதை ஒதுக்கி விடக் கூடும். 

எனவே, வள்ளுவர் கடவுள் ஒன்று உண்டு என்பதற்கு ஒரு வாதத்தை முன் வைக்கிறார். 

நாம் நாளும் பேசும், எழுதும் மொழிக்கு ஒரு எழுத்து முதலில் இருப்பதை போல , நாம் வாழும் இந்த உலகுக்கும் ஏதோ ஒன்று முதலாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார். 

அவர் அகர முதல எழுத்து என்றார். இன்னொரு மொழிக்காரன் உகர முதல என்று சொல்லலாம். மற்றொருவன் எகர முதல என்று சொல்லலாம். எந்த எழுத்து  ஆதி எழுத்து என்பதல்ல வாதம். ஏதோ ஒரு எழுத்து அனைத்துக்கும் ஆதாரமாக இருப்பதைப் போல , உலகுக்கு இறைவன் ஆதாரமாக இருக்கிறான் என்கிறான். 

மொழியைப் பகுத்துக் கொண்டே போனால் ஏதோ ஒரு புள்ளியில் வந்து நிற்கும். 

அதைப் போல உலகை பகுத்துக் கொண்டே வந்தால் ஏதோ ஒரு புள்ளியில் வந்து நிற்கும். அந்த புள்ளி இறைவன்.

"ஆதி பகவன்  முதற்றே உலகு" பகவன் என்றால் பகுப்பவன். பிரிப்பவன். அவனில் இருந்து எல்லாம் பிறந்து பிரிந்து பிரிந்து இந்த நிலைக்கு வந்தது. 

மொழியைப் பிரித்தால் அகரத்தில் வந்து நிற்பதைப் போல, உலகைப் பிரித்தால் இறையில் வந்து நிற்கும். 

பிரித்துக் கொண்டிருக்கிறார்கள், இன்றும், 

சரி, இந்த மொழி, சொல், எழுத்து எல்லாம் படித்தவனுக்கு புரிந்த உதாரணங்கள். 

ஏன் வள்ளுவர் படித்தவனுக்கு புரிந்த மாதிரி ஒரு உதாரணத்தை சொல்கிறார்.  படிக்காத  பாமரன் இதை எப்படி புரிந்து கொள்வான் ? என்ற பழைய கேள்விக்கு மீண்டும் போவோம். 

....தொடரும்.

படிக்க படிக்க சந்தேகங்களும் கூடிக் கொண்டே போகிறதே தவிர குறைகிற மாதிரி தெரியவில்லை.

ஒரு கேள்விக்கு விடை கிடைத்தால், அந்த விடையில் இருந்து ஆயிரம் புது கேள்விகள்  பிறக்கின்றன.

அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு.

என்பார் வள்ளுவர். அதாவது, படிக்கப் படிக்க , இன்னும் நமக்கு என்னவெல்லாம் தெரியவில்லை என்ற வியப்பு மேலிடுவது போல, இந்த பெண்ணிடம் பழகும் போது ஒவ்வொரு முறையும் ஏதோ புதிதாக வந்து கொண்டே இருக்கிறது.

ஒரு உதாரணம் பார்ப்போம்.

என் முன்னால் ஒரு பேனா இருக்கிறது.

இது என்ன என்ற கேள்வி எழும் போது --இதன் பெயர் பேனா. இது எழுதுவதற்கு உபயோகமாகும் ஒரு பொருள்  என்ற பதில் வருகிறது.

அந்த பதிலில் இருந்து - இது எதனால் செய்யப் பட்டது, யார் செய்தார்கள், என்ன விலை, எங்கு செய்தார்கள், இதைப் போல வேறு பேனாக்களும் இருக்கிறதா, அவை என்ன, இதில் எழுது பொருள் (ink ) என்ன நிறம், வேறு என்ன என்ன நிறம் எல்லாம் இருக்கிறது, இதை எப்படி செய்கிறார்கள் என்று எத்தனை கேள்வி வருகிறது.

கல்வி ஒரு கடல்.

சொல்லப் போனால் கல்வியின் ஒவ்வொரு பகுதியும் ஒரு கடல் போன்றது. அதனால் தான் மணிவாசகர்

"கல்வி என்னும் பல் கடல் பிழைத்தும்" என்கிறார்.

கல்வியில் இருந்து தப்பிப் பிழைத்தேன் என்கிறார்.

படிக்காதவனுக்கு சந்தேகங்கள் குறைவு. நம்பிக்கை அதிகம்.

சந்தேகம் எல்லாம் படித்தவனுக்குத் தான் எனவே தான், படித்தவனுக்கு புரிய வேண்டும் என்பதற்காக

அகர முதல எழுத்து எல்லாம்

என்று வள்ளுவர் ஆரம்பிக்கிறார்.

எழுத்து அறிவு உள்ளவனுக்குத் தெரியும் மொழியின் அடிப்படை ஒரு எழுத்து என்று. அவனுக்கு தெரிந்த உதாரணத்தைக் கொண்டு அறியாத கடவுளை காட்டுகிறார் வள்ளுவர்.

படித்தவன் அதோடு நிற்க மாட்டான்....

சரி, கடவுள் என்று ஒருவர் இருப்பதாகவே வைத்துக் கொள்வோம், அவரை எதற்கு வணங்க  வேண்டும் என்று கேள்வி கேட்பான்.

அதற்கு அடுத்து விடை சொல்கிறார் வள்ளுவர்....









Friday, December 18, 2015

திருக்குறள் - அகர முதல எழுத்து எல்லாம் - பகுதி 2

திருக்குறள் - அகர முதல எழுத்து எல்லாம் - பகுதி 2



அகரம் முதல, எழுத்து எல்லாம்; ஆதி- 
பகவன் முதற்றே, உலகு.

தெரிந்த குறள் தான். இதில் என்ன புதிதாக இருக்கப் போகிறது ?

அ என்ற எழுத்து எல்லா எழுத்துகளுக்கும் முதலாவது எப்படியோ அப்படியே இந்த உலகுக்கு எல்லாம் இறைவன் முதல்.

இந்த குறள் யாருக்குச் சொல்லப் பட்டது ? ஏன் சொல்லப் பட்டது என்று சிந்திப்போம்.

உலகில் எத்தனையோ புத்தகங்கள் இருக்கின்றன. கலை, கவிதை, நாடகம், அறிவியல், மொழி, சரித்திரம் என்று எத்தனையோ புத்தங்கள் இருக்கின்றன.

அத்தனை புத்தகங்களும் ஏதோ ஒரு வழியில் பகுக்கப் பட்டிருக்கிறது. பலப் பல அத்யாயங்களாகப் பிரித்து எழுதப் பட்டிருக்கும்.

ஒவ்வொரு  அத்யாயதிலும் பல  பத்திகளாகப் (para ) பிரிக்கப் பட்டிருக்கும்.

ஒவ்வொரு பத்தியும் பல வாக்கியங்களை கொண்டிருக்கும்.

ஒவ்வொரு வாக்கியமும் பல எழுத்துகளை கொண்டிருக்கும்.

அத்தனை எழுத்துக்கும் மூல எழத்து 'அ' என்ற எழுத்து.

அ என்ற எழுத்து வாயைத் திறந்தாலே வந்து விடும்.அதை நீட்டினால் ஆ. உதட்டை குவித்தால் உ. குவிந்த உதட்டை இன்னும் சுருக்கினால் ஊ என்று அனைத்து எழுத்துகளும் அதில் இருந்து பிறக்கிறது.

எனவே, ஒரு புத்தகம் என்றால் அதைப் பகுத்துக் கொண்டே போனால் அ வில் வந்து நிற்கும்.

அதே போல, இந்த உலகை பகுத்துக் கொண்டே வந்தால், அது இறைவனில் வந்து நிற்கும்.

அ என்ற எழுத்துக்கு முன் எதுவும் இல்லை. அது போல இறைவனுக்கு முன் எதுவும் இல்லை.

அ என்ற எழுத்து தானாகவும் இயங்கும், மற்ற எழுத்துகளை இயங்க வைக்கும், மற்ற எழுத்துகளோடு சேர்ந்தும் இயங்கும்.

அது போல, இறைவனும் தானாகவே இயங்குவான், மற்ற உயிர்களை இயக்குவான், அவற்றுள் இருந்தும் இயங்குவான்.

சரி, இந்த எழுத்து, அதன் பிறப்பு, அதன் சேர்க்கை, அதன் வடிவம் எல்லாம் மொழி அறிவு உள்ளவனுக்குப் புரியும். படிப்பு அறிவு இல்லாதவனுக்கு அ வும் தெரியாது, உ வும் தெரியாது.

அவனுக்கு எப்படி கடவுளை உணர்த்துவது ?

வள்ளுவர், படித்தவனுக்கு மட்டுமே குறளை எழுதினாரா ? படிக்காதவன் குறளை அறிந்து அதன் படி நடக்க வேண்டாமா ? அப்படி என்றால் படித்தவன் , படிக்காதவன் எல்லோருக்கும் புரியும்படி வேறு ஏதாவது உதாரணத்தை எடுத்திருக்கலாமே வள்ளுவர் . ஏன் எடுக்கவில்லை ?

படிக்காதவன் இறைவனை அறிந்து கொள்ள முடியாது என்று நினைத்து விட்டாரா ?

சிந்திப்போம்.

================= பாகம் 2 ===============================================

கடவுள் வாழ்த்தில் ஆரம்பிக்கிறார் வள்ளுவர்.


அகரம் முதல, எழுத்து எல்லாம்; ஆதி- 
பகவன் முதற்றே, உலகு.

இதில் எங்கே வாழ்த்து இருக்கிறது ? வாழ்க என்று சொல்லவே இல்லையே ?

நமச்சிவாய வாழ்க என்று மணிவாசகர் ஆரம்பித்தார் 
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம் என்றார் தெய்வப் புலவர் சேக்கிழார் 
தலைவர் அன்னவர்க்கே  சரண் நாங்களே என்றார் கம்பர் 

வணங்குதலும் இல்லை, வாழ்த்தும் இல்லை ...வள்ளுவரில். 

பின் எப்படி இது ஒரு கடவுள் வாழ்த்து ஆகும் ?

கடவுளை வாழ்த்துவதற்கு முன், கடவுள் இருக்கிறார் என்பதை உறுதிப் படுத்த நினைக்கிறார் வள்ளுவர். 

கடவுள் என்று ஒன்று இருந்தால் அல்லவா அதை வாழ்த்த முடியும். 

கடவுள் இருக்கிறார் என்பதற்கு என்ன நிரூபணம் ? அதை உறுதிப் படுத்தி விட்டு, பின் அந்த கடவுளை வாழ்த்தலாம்.

எல்லோரும் கடவுள் இருக்கிறார் என்று மனதில் கொண்டு, நம்பிக்கையின் அடிப்படையில்  கடவுள் வாழ்தை சொன்னார்கள். 

வள்ளுவர் அப்படி செய்யவில்லை. அப்படி செய்திருந்தால், "சரி தான், இது ஏதோ வள்ளுவரின்   நம்பிக்கையின் பாற்பட்ட ஒரு புத்தகம் " என்று மக்கள் இதை ஒதுக்கி விடக் கூடும். 

எனவே, வள்ளுவர் கடவுள் ஒன்று உண்டு என்பதற்கு ஒரு வாதத்தை முன் வைக்கிறார். 

நாம் நாளும் பேசும், எழுதும் மொழிக்கு ஒரு எழுத்து முதலில் இருப்பதை போல , நாம் வாழும் இந்த உலகுக்கும் ஏதோ ஒன்று முதலாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார். 

அவர் அகர முதல எழுத்து என்றார். இன்னொரு மொழிக்காரன் உகர முதல என்று சொல்லலாம். மற்றொருவன் எகர முதல என்று சொல்லலாம். எந்த எழுத்து  ஆதி எழுத்து என்பதல்ல வாதம். ஏதோ ஒரு எழுத்து அனைத்துக்கும் ஆதாரமாக இருப்பதைப் போல , உலகுக்கு இறைவன் ஆதாரமாக இருக்கிறான் என்கிறான். 

மொழியைப் பகுத்துக் கொண்டே போனால் ஏதோ ஒரு புள்ளியில் வந்து நிற்கும். 

அதைப் போல உலகை பகுத்துக் கொண்டே வந்தால் ஏதோ ஒரு புள்ளியில் வந்து நிற்கும். அந்த புள்ளி இறைவன்.

"ஆதி பகவன்  முதற்றே உலகு" பகவன் என்றால் பகுப்பவன். பிரிப்பவன். அவனில் இருந்து எல்லாம் பிறந்து பிரிந்து பிரிந்து இந்த நிலைக்கு வந்தது. 

மொழியைப் பிரித்தால் அகரத்தில் வந்து நிற்பதைப் போல, உலகைப் பிரித்தால் இறையில் வந்து நிற்கும். 

பிரித்துக் கொண்டிருக்கிறார்கள், இன்றும், 

சரி, இந்த மொழி, சொல், எழுத்து எல்லாம் படித்தவனுக்கு புரிந்த உதாரணங்கள். 

ஏன் வள்ளுவர் படித்தவனுக்கு புரிந்த மாதிரி ஒரு உதாரணத்தை சொல்கிறார்.  படிக்காத  பாமரன் இதை எப்படி புரிந்து கொள்வான் ? என்ற பழைய கேள்விக்கு மீண்டும் போவோம். 

....தொடரும்.







Friday, December 11, 2015

தேவாரம் - உள்ளம் கவர் கள்வன் - முன்னால் இருந்தும் தெரியவில்லை - பாகம் 1

தேவாரம் - உள்ளம் கவர் கள்வன் - முன்னால் இருந்தும் தெரியவில்லை  - பாகம் 1




தோடுடைய செவியன் விடையேறியோர் தூ வெண்மதி சூடிக்
காடுடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளங் கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனை நாட் பணிந்தேத்த அருள் செய்த
பீடுடைய பி மா புரம் மேவிய பெம்மானிவ னன்றே.

மிக பிரபலமான தேவாரப் பாட்டு.

எல்லோரும் அறிந்தது.

ஞானசம்பந்தர் சிறு குழந்தையாக இருக்கும் போது , அவருடைய தந்தையார் அவரை கோவிலுக்கு அழைத்துச் சென்றார். கோவிலுக்குள் செல்லுமுன் அங்குள்ள திருக்குளத்தில் நீராடச் சென்றார். ஞான சம்பந்தரை குளக்  கரையில், அமரச் செய்துவிட்டு, அவர் மட்டும் நீராடச் சென்றார்.

தந்தையார் நீரில் மூழ்கியவுடன், தந்தையைக் காணவில்லையே என்று குழந்தையான ஞான சம்பந்தர் அழுதார். அவரின் அழு குரல் கேட்டு பார்வதியும் சிவன் வந்தனர் . பார்வதி தன் ஞானப் பாலை அவருக்குத் தந்தார்.

குளத்தில் இருந்து நீராடி வந்த ஞானசம்பந்தரின் தந்தை , குழந்தையின் வாயில் பால் வடிவதைக் கண்டு, யார் உனக்கு பால் தந்தது என்று கேட்டார்.

குழந்தை மேலே கண்ட பாடலைப் பாடியது என்பது புராணம் தரும் செய்தி.

இந்தத் தேவாரம் காட்டும் சில ஆழ்ந்த கருத்துகளை பார்ப்போம்.

உனக்கு யார் பால் தந்தது என்று தந்தையார் கேட்ட போது , குழந்தை கூறியது  "இவன் அன்றே" என்று.

இதோ இருக்கிறானே இவன் தான் என்று.

அவன் அன்றே என்று சொல்லி இருந்தால் வேறு எங்கோ தூரத்தில் இருக்கிறான் என்று  கொள்ளலாம். இவன் அன்றே என்பது அண்மைச் சுட்டு. அருகில்  உள்ள ஒன்றை சுட்டிக் காட்டுவது.

பக்கத்தில் இருக்கிறான்.

ஞான சம்பந்தருக்குத் தெரிகிறது. அவருடைய தந்தையாருக்குத் தெரியவில்லை.

இப்படித்தான், உண்மை மிக மிக அருகில் இருந்தும், நாம் அதை அறியாமலேயே  எங்கே எங்கே என்று ஊரெல்லாம் தேடிக் கொண்டிருப்போம்.

உண்மை, உங்களுக்கு மிக மிக அருகில் இருக்கிறது. பார்க்கும் கண் வேண்டும்.

ஞானசம்பந்தரின் தந்தை மட்டும் அல்ல, அருகில் இருந்த யாரும் இறைவனை  காணவில்லை. கண்டதாக குறிப்பு ஒன்றும் இல்லை.

அவர்கள் எல்லோரும் வேறு எதையோ தேடிக் கொண்டிருக்கிறார்கள். எதைத் தேடுகிறோமோ அதைத்தானே கண்டடைவோம் ?

தேடுங்கள் , கிடைக்கும் என்றார் இயேசு.

ஆம். தேடியது கிடைக்கும்.

எதைத் தேடுகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

மேலும் தொடரும்.





Thursday, December 10, 2015

திருக்குறள் - அகர முதல எழுத்து எல்லாம்

திருக்குறள் - அகர முதல எழுத்து எல்லாம் 



அகரம் முதல, எழுத்து எல்லாம்; ஆதி- 
பகவன் முதற்றே, உலகு.

தெரிந்த குறள் தான். இதில் என்ன புதிதாக இருக்கப் போகிறது ?

அ என்ற எழுத்து எல்லா எழுத்துகளுக்கும் முதலாவது எப்படியோ அப்படியே இந்த உலகுக்கு எல்லாம் இறைவன் முதல்.

இந்த குறள் யாருக்குச் சொல்லப் பட்டது ? ஏன் சொல்லப் பட்டது என்று சிந்திப்போம்.

உலகில் எத்தனையோ புத்தகங்கள் இருக்கின்றன. கலை, கவிதை, நாடகம், அறிவியல், மொழி, சரித்திரம் என்று எத்தனையோ புத்தங்கள் இருக்கின்றன.

அத்தனை புத்தகங்களும் ஏதோ ஒரு வழியில் பகுக்கப் பட்டிருக்கிறது. பலப் பல அத்யாயங்களாகப் பிரித்து எழுதப் பட்டிருக்கும்.

ஒவ்வொரு  அத்யாயதிலும் பல  பத்திகளாகப் (para ) பிரிக்கப் பட்டிருக்கும்.

ஒவ்வொரு பத்தியும் பல வாக்கியங்களை கொண்டிருக்கும்.

ஒவ்வொரு வாக்கியமும் பல எழுத்துகளை கொண்டிருக்கும்.

அத்தனை எழுத்துக்கும் மூல எழத்து 'அ' என்ற எழுத்து.

அ என்ற எழுத்து வாயைத் திறந்தாலே வந்து விடும்.அதை நீட்டினால் ஆ. உதட்டை குவித்தால் உ. குவிந்த உதட்டை இன்னும் சுருக்கினால் ஊ என்று அனைத்து எழுத்துகளும் அதில் இருந்து பிறக்கிறது.

எனவே, ஒரு புத்தகம் என்றால் அதைப் பகுத்துக் கொண்டே போனால் அ வில் வந்து நிற்கும்.

அதே போல, இந்த உலகை பகுத்துக் கொண்டே வந்தால், அது இறைவனில் வந்து நிற்கும்.

அ என்ற எழுத்துக்கு முன் எதுவும் இல்லை. அது போல இறைவனுக்கு முன் எதுவும் இல்லை.

அ என்ற எழுத்து தானாகவும் இயங்கும், மற்ற எழுத்துகளை இயங்க வைக்கும், மற்ற எழுத்துகளோடு சேர்ந்தும் இயங்கும்.

அது போல, இறைவனும் தானாகவே இயங்குவான், மற்ற உயிர்களை இயக்குவான், அவற்றுள் இருந்தும் இயங்குவான்.

சரி, இந்த எழுத்து, அதன் பிறப்பு, அதன் சேர்க்கை, அதன் வடிவம் எல்லாம் மொழி அறிவு உள்ளவனுக்குப் புரியும். படிப்பு அறிவு இல்லாதவனுக்கு அ வும் தெரியாது, உ வும் தெரியாது.

அவனுக்கு எப்படி கடவுளை உணர்த்துவது ?

வள்ளுவர், படித்தவனுக்கு மட்டுமே குறளை எழுதினாரா ? படிக்காதவன் குறளை அறிந்து அதன் படி நடக்க வேண்டாமா ? அப்படி என்றால் படித்தவன் , படிக்காதவன் எல்லோருக்கும் புரியும்படி வேறு ஏதாவது உதாரணத்தை எடுத்திருக்கலாமே வள்ளுவர் . ஏன் எடுக்கவில்லை ?

படிக்காதவன் இறைவனை அறிந்து கொள்ள முடியாது என்று நினைத்து விட்டாரா ?

சிந்திப்போம்.