Showing posts with label ஆண்டாள். Show all posts
Showing posts with label ஆண்டாள். Show all posts

Tuesday, April 10, 2012

திருப்பாவை - மனதுக்குள் மழை


திருப்பாவை


உங்கள் உள்ளம் கவர்ந்தவர்களின் பெயரைக் கேட்டால் உங்களுக்கு மனதுக்குள் மழை அடிக்குமா ?
 
ஆண்டாளுக்கு அடிக்கிறது.
 
உள்ளம் புகுந்து குளிர்கிரதாம்.
 
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்




புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ!
பிள்ளாய்! எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி,
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!

 
நம் வாழ்க்கை சக்கரம் நம்மை எங்கெங்கோ இட்டு செல்கிறது.

பல சமயம் நல்ல வழியில்.

சில சமயம் வழி அல்லா வழியிலும் இட்டு செல்லும்.

அது அப்படி செல்லாமல் தடுத்து அதை நல வழியில் செலுத்துவது எது ?

அவனின் திருவடி தான்.
 
புள்ளும் = பறவைகளும்

சிலம்பினகாண் = சிலம்பு போல் சப்தித்தன

புள்ளரையன் = பறவைகளின் தலைவன், கருடன் 

கோயிலில் = கோவிலில்

வெள்ளை = வெண்மையான 

விளிசங்கின் = விளிக்கின்ற, சப்திகின்ற சங்கின் 

பேரரவம் = பெரிய சப்தத்தை 

கேட்டிலையோ = கேட்கவில்லையோ
பிள்ளாய்! எழுந்திராய் = பிள்ளை போன்ற மனம் கொண்டவளே, எழுந்திராய் 

பேய்முலை நஞ்சுண்டு = பூதகியின் நஞ்சை உண்டு 

கள்ள சகடம் கலக்கழிய காலோச்சி

சகடம் = சக்கரம்

கள்ள சகடம் = கெட்ட (வழியில் செல்லும் )
சக்கரம்

கலக்கழிய = அந்த வழியில் சென்று அழியாமல்

கால் ஓச்சி = ஓச்சி என்றால் ஆளுதல் என்று 
பொருள். கோல் ஓச்சி என்றால் அரசு ஆளுதல்.

வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை


வெள்ளத்து = வெள்ளம் போல் உள்ள பார் கடலில்


அரவில் = பாம்பின் மேல்

துயில் = உறங்கிய

அமர்ந்த = இருந்த

வித்தினை = விதையை, மூலத்தை

உள்ளத்துக் கொண்டு = உள்ளத்தில் கொண்டு

முனிவர்களும் யோகிகளும் = முனிவர்களும் யோகிகளும்

மெள்ள எழுந்து = அரக்க பறக்க அல்ல, மெல்ல எழுந்து

அரியென்ற பேரரவம் = அரிஎன்ற உச்சரிக்கும் ஒலி

உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!


 

Thursday, April 5, 2012

நல்லாயிர திவ்ய பிரபந்தம் - வளையல் திருடன்

இந்த அரங்கன் இருக்கிறானே ரொம்ப பொல்லாதவனாய் இருப்பான் போல் இருக்கே.

வாமன உருவமாய் வந்து உலகை எல்லாம் பெற்றுக் கொண்டது போதாது என்று, இப்ப தன் அழகில் என்னையே கொள்ளை கொண்டு போய் விடுவான் போல் இருக்கே என்று ஆண்டாள் செல்லமாக பயப் படுகிறாள்.

----------------------------------------------------------
பொல்லாக் குறளுருவாய்ப் பொற்கையில் நீரேற்று
எல்லா வுலகு மளந்துகொண்ட வெம்பெருமான்
நல்லார்கள் வாழும் நளிரரங்க நாகணையான்
இல்லாதோம் கைப்பொருளு மெய்துவா னொத்துளனே

-----------------------------------------

சீர் பிரித்த பின்

----------------------------------------------------------
பொல்லாக் குறள் உருவாய் பொற் கையில் நீர் ஏற்று
எல்லா உலகும் அளந்து கொண்ட எம் பெருமான்
நல்லார்கள் வாழும் நளிர் ரங்க நாக
இல்லாதோம் கைபொருளும் எய்துவான் ஒத்து உளானே

----------------------------------------------------------

பொல்லாக் குறள் உருவாய் = குறள் எவ்வளவு சின்ன உருவம். இரண்டு அடி அவ்வளவு தான். ஆனால் எவ்வளவு பொருள் செறிந்தது ? அதுபோல் வாமன உருவமாய் வந்து. பொல்லா குறள் என்றால் ஏதோ தீமை செய்யும் குறள் அல்ல. செல்லமாக சொல்லுவது. துறு துறு என்று வரும் பிள்ளையை "பொல்லா பிள்ளை" என்று சொல்லுவது இல்லையா, அது போல.

பொற் கையில் நீர் ஏற்று = தன்னுடைய பொன்னான கையால் நீர் ஏற்று (தானம் பெறுவதற்காக)

எல்லா உலகும் அளந்து கொண்ட எம் பெருமான் = எல்லா உலகத்தையும் அளந்து கொண்ட எம் பெருமான்

நல்லார்கள் வாழும் = நல்லவர்கள் வாழும்

நளிர் ரங்க நாக அணையான் = நளினமான பாம்பு அணையில்

இல்லாதோம் கைபொருளும் = ஒன்றும் இல்லாத எங்களின், கைப் பொருளும்

எய்துவான் ஒத்து உளானே = அதையும் எடுத்துக்கொண்டு போய் விடுவான் போல இருக்கே