Showing posts with label இராமன். Show all posts
Showing posts with label இராமன். Show all posts

Thursday, July 19, 2012

இராமாயணம் - தசரதன் இராமனை காட்டுக்குப் போகச் சொல்லவில்லை


 இராமாயணம் - தசரதன் இராமனை காட்டுக்குப் போகச் சொல்லவில்லை


கைகேயி இரண்டு வரம் கேட்டாள். 

தசரதன் முதலில் இரண்டு வரத்தையும் தர மறுக்கிறான். 

கைகேயி பிடிவாதம் பிடிக்கிறாள். 

தசரதன் இறங்கி வருகிறான். "இரண்டாம் வரத்தை கேட்காதே, உன் மகன் பரதன் வேண்டுமானால் அரசாளட்டும், இராமன் காட்டுக்குப் போக வேண்டாம் " என்று கெஞ்சுகிறான்.

"மண்ணே கொள் நீ; மற்றையது ஒன்றும்
    மற ‘என்றான்."

கைகேயி மறுக்கிறாள். இரண்டு வரமும் வேண்டும் என்கிறாள்.

கடைசியில் தசரதன் "ஈந்தேன் ஈந்தேன் இவ்வரம்" என்கிறான். இவ்வரங்கள் என்று பன்மையில் சொல்லவில்லை. 

பின்னால், "என் சேய் காடாள" என்று சொல்கிறான். 

அதற்குப் பின் அவன் இறந்து போகிறான். அவன் இராமனை பார்க்கவே இல்லை.

கம்பனோ, வால்மீகியோ அந்த சந்திப்பை நடக்க விடவில்லை.

தசரதன் தன் வாயால் இராமனை கானகம் போகச் சொல்லவில்லை.

கைகேயிக்கும் தசரதனுக்கும் இடையே நடந்தது யாருக்கும் தெரியாது.

எனவே, தசரதன் இராமனை பார்த்து "நீ கானகம் போ" என்று சொல்லவில்லை.

தசரதன் அவன் மந்திரிகளிடமும் சொல்லவில்லை.

எனவே, இராமன் கானகம் போக வேண்டியது ஒரு அரசு ஆணை அல்ல.

கணவன் மனைவிக்கு இடையே நடந்த ஒரு உரையாடல்.

இராமனை, அவனிடமே, நேரடியாக,  கானகம் போகச் சொன்னது கைகேயிதான். தசரதன் அல்ல.

அதுவும் எப்படி சொல்கிறாள்...? ... வாங்கிய வரத்தோடு இன்னும் கொஞ்சம் சேர்த்துக் கொள்கிறாள்...

அது என்ன ? வாங்கிய வரம் ? வாங்காத வரம் ?



Monday, July 9, 2012

கம்ப இராமாயணம் - எல்லாம் அவளே


கம்ப இராமாயணம் - எல்லாம் அவளே


காதல் விநோதமானது.

காதல் வயப்பட்டவர்களுக்கு பார்க்கும் பொருள் எல்லாம் அவர்களின் காதலனோ அல்லது காதலியாகவோ தான் தெரியும்.

"பார்க்கும் இடம் எல்லாம் நந்தலாலா உந்தன் பச்சை நிறம் தோன்றுதடா நந்தலாலா" என்று பாரதி சொன்ன மாதிரி.

கம்ப இராமாயணத்தில், சீதையையை முதன் முதலாகப் பார்த்த பின், இராமன் அவள் நினைவாகவே வாடுகிறான்.

"அவளுக்கு என் மேல் கருணையே இல்லையா? இப்படி என்னை வாட்டுகிராளே...எனக்கு எல்லாம் ஒரே குழப்பமாய் இருக்கிறது. நிற்கும் பொருள், அசையும் பொருள் எல்லாம் அவளாகவே தெரிகிறது எனக்கு" என்று புலம்புகிறான்.

அந்தப் பாடல்


Saturday, May 5, 2012

கம்ப இராமாயணம் - மனத்தால் அளந்தவள்


கம்ப இராமாயணம் - மனத்தால் அளந்தவள்


இராமனை கானகம் அனுப்பிவிட்டு திரும்பி வந்த குகன் ஒருபுறம் நிற்கிறான்.

மறுபுறம் பரதன், கோசலை, சுமித்தரை, கைகேயி நிற்கிறார்கள். 

முதலில் பரதன் மேல் சந்தேகப் பட்ட குகன் பின் அவனை "ஆயிரம் இராமர் நின் கேழ்வர் ஆவரோ" என்று பரதனை பாராட்டுகிறான்.

விதவை கோலத்தில் மூன்று பெண்கள், அன்பே உருவான மகன் பரதன், குகன்...எல்லோரும் ஒரு புள்ளியில். 

உணர்ச்சிகளின் குவியலான இடம்.

குகன் கைகேயியை பார்த்து "ஆர் இவர்" என்று கேட்கிறான்.

எப்படி ?

Wednesday, May 2, 2012

கம்ப இராமாயணம் - கண்டனன், கண்களால் ?




கம்ப இராமாயணம் - கண்டனன், கண்களால் ?


அந்த காலத்தில் புகை படம் கிடையாது. 

இராமன் கானகத்தில் இருக்கிறான். சீதையை பற்றி அனுமனிடம் அடையாளம் சொல்லி அனுப்ப வேண்டும். என்ன சொல்லுவது ?

யோசித்துப் பாருங்கள். அவ சிவப்பா, உயரமா, அழகா இருப்பா அப்படின்னு சொல்லாலாம். 

இது ஒரு அடையாளமா ? அனுமனும் சென்று சீதையை பார்த்து விட்டு வந்து சொல்கிறான் இராமனிடம். இராமன் எப்படி நம்புவான் ? 

யாரையாவது பார்த்து விட்டு வந்து சீதையை பார்த்ததாக நினைக்கலாம் அல்லவா ? 

பார்த்தது சீதை தான் என்று அனுமனுக்கும் சந்தேகம் வரக் கூடாது, அனுமன் சீதையை தான் பார்த்த்தான் என்று இராமனும் நம்ப வேண்டும். 

தெளிவு படுத்தவது கம்பன். 

சொல்லில் விளையாடுகிறான். 

கண்டனென்கற்பினுக்கு அணியைகண்களால்,
தெண் திரை அலைகடல் இலங்கைத் தென் நகர்;
அண்டர் நாயக !இனிதுறத்திஐயமும்
பண்டு உள துயரும்என்றுஅனுமன் பன்னுவான்;

கண்டனென் = நான் கண்டேன்

கற்பினுக்கு அணியை = கற்புக்கு அணிகலமாய் திகழும் சீதையை

கண்களால் = கண்களால். அது என்ன கண்களால் ? எல்லாரும் 

கண்களால் தான் பார்ப்பார்கள். அது தான் முதல் வார்த்தையிலேயே சொல்லியாச்சே "கண்டெனன்" அப்படின்னு.

சொல்லுவது கம்பன். 

பயனிலாத சொல்லை சொல்லுவானா ? 

அவள் கற்பின் அணி என்பதை அவளுடைய கண்களை கொண்டு நான் கண்டு கொண்டேன் என்று அர்த்தம்.

அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம் 

கண்டெனன் கற்பினுக்கு அணியினை (அவளின்) கண்களால் என்று பொருள் கொள்ள வேண்டும்.

தெண் = தெளிந்த

திரை அலைகடல் = சுருள் சுருளாக அலைகளை கொண்ட கடல்

இலங்கைத் தென் நகர் = இலங்கை என்ற தெற்கில் உள்ள நகரில்

அண்டர் நாயக = தேவர்களின் நாயகனே

இனிதுறத்தி = இனி துறந்துவிடு

ஐயமும் = சந்தேகத்தையும்

பண்டு உள துயரும் = பழைய துயரையும்

என்றுஅனுமன் பன்னுவான்; = என்று அனுமன் சொல்லுவான் 

Saturday, April 28, 2012

கம்ப இராமாயணம் - இராமனுக்கு எத்தனை உயிர் ?

கம்ப இராமாயணம் - இராமனுக்கு எத்தனை உயிர் ?


சீதையை பிரிந்து இராமன் இருக்கிறான். உடலும், உள்ளமும் சோர்ந்து போய் இருக்கிறான். அப்படி சோர்ந்து போன சமயம்,

இராமனைப் பார்த்தால் ஏதோ உயிர் இல்லாதாவன் மாதிரி தோன்றுகிறது.

அத்தனை அயர்ச்சி. சுக்ரீவன் இராமனை தேற்றுகிறான்.

கொஞ்சம் தேறுதல் அடைகிறான். உயிர் வந்த மாதிரி இருக்கிறது. சற்று நேரம் கழித்து மீண்டும் சோர்வு...ஏதோ இராமன் ஒவ்வொருமுறையும் உயிர் இழந்து மீண்டும் பெற்றது மாதிரி தோன்றுகிறது...

எத்தனை முறை தான் அவனுக்கு உயிர் போய் வருமோ ?

Sunday, April 22, 2012

கம்ப இராமாயணம் - ஐயோ ! என்னே இவன் அழகு !


கம்ப இராமாயணம் - ஐயோ ! என்னே இவன் அழகு !


இராமனின் அழகை வருணிக்க முடியாமல் திணறுகிறான் கம்பன். 

Saturday, April 21, 2012

கம்ப இராமாயணம் - திரிந்த பாற்கடல்


கம்ப இராமாயணம் - திரிந்த பாற்கடல்


நல்ல குணங்கள் எவ்வளவு இருந்தாலும், ஒரே ஒரு கெட்ட குணம் இருந்தால் அந்த கெட்ட குணம் எல்லா நல்ல குணங்களையும் அழித்து விடும்.

பால் எவ்வளவு இருந்தாலும், அதில் ஒரு துளி தயிரை விட்டால் அது திரிந்து போகும். 

அது போல, இராவணின் அளவற்ற வரங்கள் என்னும் பாற்க் கடலில், சீதை என்ற ஒரு துளி பட்டதும் அது திரிந்து போயிற்று என்று புலம்புகிறாள் மண்டோதரி இந்தப் பாடலில்.


--------------------------------------------------------------------------------------------------------------------------------
அரை கடை இட்டு அமைவுற்ற முக்கோடி ஆயுவும் முன் அறிஞர்க்கேயும்

உரை கடையிட்டு அளப்ப அரிய பேர் ஆற்றல், தோள் ஆற்றற்கு உலப்போ இல்லை;

திரை கடையிட்டு அளப்ப அரிய வரம் என்னும் பாற்கடலைச் சீதை என்னும்

பிரை கடை இட்டு அழிப்பதனை அறிந்தேனோ, தவப் பயனின் பெருமை பார்ப்பேன்?
-------------------------------------------------------------------------------------------------------------


அரை கடை இட்டு அமைவுற்ற முக்கோடி ஆயுவும் = இராவணன் அறிய பெரிய தவங்கள் செய்து சிவனிடம் மூன்றரை கோடி ஆயுள் பெற்றான். முக்கோடி என்றால் (1000000000000000000000 ). ஒண்ணு போட்டு அதற்கு பக்கத்தில் 21 பூஜியங்கள். இவ்வளவு ஆயுசு இருந்தால் இவன் எல்லோரையும் ரொம்ப படுத்துவான் என்று உணர்ந்த திருமால், முனிவன் வடிவில் சென்று "மூன்றரை கோடி என்பது கொஞ்சம் அரை குறையாய் இருக்கிறது. அது என்ன அரை கோடி? பேசாமல் இன்னொரு அரை கோடி கேட்டு வாங்கிக்கொள், மொத்தம் நாலு கோடியாய் இருக்கட்டும் என்றார். 'முன்னம் பெற்ற மூன்றரை கோடி ஒழிய அரை கோடி வேண்டும்" என கேட்டுப் பெற்றான். அவன் கேட்ட படியே, முதலில் பெற்ற மூன்றரை கோடி அழிந்து வெறும் அரைக் கோடி தான் நின்றது. 

அந்த அரைக் கோடி வாழ் நாளும் கடை பட்டு போனது சீதையால்.


முன் அறிஞர்க்கேயும் உரை கடையிட்டு = அறிஞர்கள் எல்லாம் கூடி அவன் ஆற்றலை சொல்லப் புகுந்தாலும் சொல்ல முடியாத அளவுக்கு (உரை கடை இட்டு). 

அளப்ப அரிய பேர் ஆற்றல் = அளக்க முடியாத அளவுக்கு பெரிய ஆற்றல்

தோள் ஆற்றற்கு = தோளின் ஆற்றலுக்கு 

உலப்போ இல்லை; = அழிவே இல்லை

திரை கடையிட்டு = திரை என்றால் அலை. அலையை எல்லையாகக் கொண்ட

அளப்ப அரிய வரம் என்னும் பாற்கடலைச் = அளக்க முடியாத நீ (இராவணன்) பெற்ற பாற்கடல் போன்ற வரங்களை

சீதை என்னும் = சீதை என்ற

பிரை கடை இட்டு அழிப்பதனை அறிந்தேனோ = பாலுக்கு பிரை குத்திய மாதிரி, அந்த பாற்கடல் போன்ற வாரங்களுக்கு சீதை என்ற பிரை இட்டதால் அழிந்து போவதனை அறிவேனோ? 

தவப் பயனின் பெருமை பார்ப்பேன்? = நீ செய்த தவங்களின் பெருமையை மட்டுமே எண்ணி இருந்து விட்டேன். உன் தவறும் குறையும் அதை அழிக்கும் என்பதை அறியவில்லை என்பது பொருள்.




Wednesday, April 18, 2012

கம்ப இராமாயணம் - இன்று போய் நாளை வா


கம்ப இராமாயணம் - இன்று போய் நாளை வா


யுத்தத்தில் நிராயுதபாணியாக நிற்கிறான் இராவணன்.

இராமன் நினைத்திருந்தால் அவனை கொன்றிருக்கலாம். அவனுக்கு அறிவுரை சொல்கிறான்.

அறத்தின் துணை இன்றி வெறும் படை பலத்தால் யாரும் வெல்ல முடியாது என்று பலப் பல அறிவுரைகள் கூறுகிறான்.

கடைசியில், "இதை எல்லாம் நீ கேட்கவில்லை என்றால், இன்று போய் போருக்கு நாளை வா" என்றான்...

Sunday, April 15, 2012

கம்ப இராமாயணம் - திகைக்காத இராமன்


கம்ப இராமாயணம் - திகைக்காத இராமன்


இராமன் முடி சூட வருகிறான்.

பட்டத்து இளவரசன்.

அயோத்தி மாநகரமே விழாக் கோலம் பூண்டு இருக்கிறது.

எவ்வளவு சந்தோஷமா இருக்கும்.

கைகேயியை பார்க்கிறான்.

அவள் அவனை கானகம் போகச் சொல்லுகிறாள்.

சொன்ன அந்த கணத்தில் இராமனுக்கு எப்படி இருந்திருக்கும் ?

ஒரு வினாடி திகைதிருப்பானா ? பின் சுதாரித்து இருப்பானோ ?

ஒரு துளியாவது வருத்தம் இருந்திருக்குமா ? நான் ஏன் காட்டுக்குப் போக வேண்டும் என்று கேட்டு இருப்பானா ?

ஒரு வினாடி இராமனின் இடத்தில் இருந்து யோசித்துப் பாருங்கள்.

கம்பனைத் தவிர யாராலும் அந்த இடத்தை இவ்வளவு அழகாக சொல்லி இருக்க முடியாது.
.
இராமனின் முகம் அவள் சொன்னதை கேட்பதற்கு முன்னும், கேட்ட பின்னும் தாமரை மலர் மாதிரி இருந்ததாம், கேட்ட அந்த ஒரு வினாடி தாமரை அந்த நொடியில் மலர்ந்த மாதிரி இருந்ததாம்.


-----------------------------------------------
இப் பொழுது, எம்ம னோரால் இயம்புதற்கு எளிதே? - யாரும்
செப்ப அருங் குணத்து இராமன் திருமுகச் செவ்வி நோக்கின்;
ஒப்பதே முன்பு பின்பு; அவ் வாசகம் உணரக் கேட்டஅப் பொழுது அலர்ந்த செந்தாமரையினை வென்றது அம்மா!

---------------------------------------------------

இப் பொழுது = இப்போது, அது நடந்து முடிந்த எத்தனையோ ஆண்டுகளுக்கு பின், ஆற அமர யோசித்து இப்போது

எம்ம னோரால் இயம்புதற்கு எளிதே? = எம் போன்ற கவின்ஞர்களுக்கு சொல்லுவது எளிதா ? இல்லவே இல்லை.

யாரும் செப்ப அருங் குணத்து இராமன் = யாராலும் சொல்ல முடியாத அளவுக்கு சிறந்த குணங்களை கொண்ட இராமனின்

திருமுகச் செவ்வி நோக்கின் = செம்மையான திரு முகத்தை நோக்கினால்

ஒப்பதே முன்பு பின்பு = அந்த வாசகத்தை கேட்பதற்கு முன்னும் பின்னும் தாமரையை ஒத்து இருந்தது

அவ் வாசகம் உணரக் கேட்ட அப் பொழுது = ஆனால் அந்த வாசகத்தை கேட்ட அந்த ஒரு கணத்தில்


அலர்ந்த செந்தா மரையினை வென்றது அம்மா! = அப்போது தான் மலர்ந்த செந்தாமரையை மிஞ்சி நின்றது அவன் முகம்



அந்த வாசகத்தை கேட்ட உடனே, முகம் மலர்ந்ததாம். மலர்ந்த செந்தாமரையை விட இன்னும் சிறப்பாக இருந்ததாம்.


கம்ப இராமயாணம் - இராமன் கேட்ட வரம்


கம்ப இராமயாணம் - இராமன் கேட்ட வரம்



இராமன், இராவணனை கொன்றபின், சீதையை சிறை மீட்டு வரும் வழியில் வானுலகில்  இருந்து தசரதன் வருகிறான்.

இராமனை கட்டி அணைக்கிறான்.

அப்போது சொல்கிறான் "இராமா,  அன்று கைகேயி கேட்ட கொடிய வரம் என் மனத்தில் வேல் போல் குத்தி நின்றது.

இன்று உன்னை தழுவிய போது உன் மார்பு என்ற காந்தத்தால் அது இழுக்கப்பட்டு வெளியே வந்து  விட்டது. நான் சந்தோஷமாய் இருக்கிறேன். உனக்கு என்ன வேண்டும் கேள்" என்கிறான்.
 .
 இராமனும் இரண்டு வரம் கேட்கிறான்.
 .
 "நீ தீ எனத் துறந்த கைகேயியும் , பரதனையும் உன் மனைவி, மகன் என்று நீ ஏற்றுக் கொள்ள வேண்டும் " என்று வரம் கேட்கிறான்.
 .

 ----------------------------------------------------------------------------------
 ’ஆயினும், உனக்கு அமைந்தது ஒன்று உரை’   என, அழகன்
 ”தீயள் என்று நீ துறந்த என் தெய்வமும் மகனும்
 தாயும் தம்பியும் ஆம்  வரம் தருகஎனத் தாழ்ந்தான்
 வாய் திறந்து எழுந்து ஆர்த்தன உயிர் எலாம்  வழுத்தி
 --------------------------------------------------------------------------------
 
 ஆயினும் = ஆனாலும்
 

 
 உனக்கு அமைந்தது ஒன்று உரை = உனக்கு
 வேண்டியது ஒன்று கேள் என்று தசரதன் இராமனிடம் சொன்னான்.

 
 என, அழகன் = அப்படி சொன்ன உடன், அழகனான இராமன்

 தீயள் என்று நீ துறந்த என் தெய்வமும் = தீயவள் என்று நீ துறந்த என்
 தெய்வமும் (கைகேயியும்)
 

 மகனும் = மகனாகிய பரதனும்


 தாயும்  தம்பியும் = தாயும், தம்பியும்
 

 ஆம் வரம் தருகஎனத் தாழ்ந்தான் =

ஆகும் வரம் தருக என்று தசரதன் அடி பணிந்து நின்றான்
 

 வாய் திறந்து எழுந்து ஆர்த்தன உயிர்
 எலாம் வழுத்தி = அப்படி கேட்டவுடன், உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் வாய் திறந்து இராமன் வாழ்த்தி ஆராவாரம் செய்தன.
 

 ஆர்த்தல் என்றால் ஆரவாரம் செய்தல், நிறைத்தல்
 என்று பொருள்
 

 எவ்வளவு கருணை இருந்தால் இந்த வரம் கேட்கத்  தோன்றும்.

கைகேயியால் பட்ட துன்பம் கொஞ்சம் அல்ல.

பதினாலு வருடம் காட்டில் கஷ்டப்   பட்டான் இராமன்.

மனைவியை பிரிந்தான்.

இவ்வளவு கஷ்டத்திற்கும் காரணமான கைகேயியை "என்  தெய்வம்" என்கிறான்.

 நினைத்துக் கூட பார்க்க முடியாத கருணை  உள்ளம்.

Saturday, April 14, 2012

கம்ப இராமாயணம் - ஆண்களும் விரும்பும் இராமனின் அழகு



ஒரு ஆணின் அழகை ஒரு பெண் இரசிப்பது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. 

ஒரு ஆணின் அழகை இன்னொரு ஆண் விரும்புவது என்றால் அவன் எவ்வளவு அழகாய் இருக்க வேண்டும். 

இராமனின் பின்னால் சென்ற விஸ்வாமித்திரன், இராமனின் அழகைப் பார்த்து, வியக்கிறான், இவனின் அழகைப் பார்த்தால் ஆண்கள் எல்லாம் நாம் பெண்ணாய் பிறக்கவில்லையே என்று நினைப்பார்களாம்.....

அந்தப் பாடல் 

Friday, April 13, 2012

கம்ப இராமாயணம் - சீதை கேட்ட வரம்


கம்ப இராமாயணம் - சீதை கேட்ட வரம்


அசோகவனத்தில் அனுமன் சீதையை கண்டான். அப்போது, அனுமன் மூலம் சீதை இராமனிடம் ஒரு வரம் கேட்கிறாள்.

நான் ஒரு வேளை இந்த அசோகவனத்திலேயே இறந்து விட்டால், மீண்டும் பிறந்து வந்து இராமனின் திரு மேனியை தீண்டும் வரம் சீதை தொழுது வேண்டினாள் என்று இராமனிடம் சொல்லுவாய் என்றாள்.


இராமன் திருமேனி எப்படி பட்டது?....சீதையே சொல்லுகிறாள்....

Thursday, April 12, 2012

கம்ப இராமயாணம் - இறைவனும் பக்தனும்





இறைவனுக்கும் பக்தனுக்கும் இடையே உள்ள உறவு மிக நுணுக்கமானது.

அதை அருகில் இருப்பவர்கள் கூட அறிந்து கொள்ள முடியாது. 

பக்தன் இறைவனை அறிவான்.

இறைவன் பக்தனை அறிவான்.

இதை பக்தன் வெளியே சொன்னாலும் மற்றவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள்.

பக்தனை விடுங்கள். இறைவனே சொன்னாலும் புரியாது.
 
இராமயணத்தில் ஒரு இடம். அனுமன் இராமனைப் பார்க்கிறான். அனுமனுக்கு இராமன் யார் என்று தெரிகிறது. இராமனுக்கும் அனுமனைப் புரிகிறது. ஆனால் அவர்கள் இடையே இருந்த லக்ஷ்மணனுக்கு அங்கு நடப்பது ஒன்றும் புரியவில்லை.

அந்த இடம்.....

Monday, April 9, 2012

கம்ப இராமாயணம் - இராமன் கடவுளா ?

இராமன் கடவுளா ? அவன் கடவுளின் அவதாரமா ? இதைப் பற்றி கம்பன் என்ன சொல்கிறான் ?


அப்படி கம்பன் சொன்ன ஒரு இடம்

Sunday, April 8, 2012

கம்ப இராமாயணம் - கை நடுங்கிய இராமன்


இராமயணத்தை படிக்கும் போது கம்பனுக்கு கும்பகர்ணன் மேல் ஒரு தனிப் பாசம் இருப்பதாகவே தோன்றுகிறது.

கும்பகர்ணனிடம் போரிட்டு அனுமன் விலகி சென்று விட்டான்.

இராமன் கும்பகர்ணனின் கை இரண்டையும் அறுத்தான், பின் கால் இரண்டையும் அறுத்தான்.

அப்போதும் கும்ப கர்ணன் மிக வீரமாக போரிடுகிறான். கையும் காலும் இல்லாமல் எப்படி போரிடுவது ?

வாயால்,பெரிய கற்களை கவ்வி, அதை நாக்கால் வேகமாக துப்பி வானர சேனைகளை வாட்டி வதைக்கிறான்.

அந்த வீரத்தை கண்டு இராமனின் கையும் நடுங்கியதாம். இதை விட கும்ப கர்ணனின் வீரத்திற்கு சிறப்பு சேர்க்க முடியுமா ?

இதோ அந்தப் பாடல்.....

Saturday, April 7, 2012

கம்ப இராமாயணம் - கும்ப கர்ணன் இராமனை சந்திக்கும் தருணம்

கும்ப கர்ணன் ஒரு இனிமையான பாத்திரம். அவனுக்கு நண்பர்கள் இருந்து இருப்பார்களா ? அவனுக்கு மனைவி உண்டா ? பிள்ளைகள் உண்டா ? தெரியவில்லை. ஆனால், ரொம்ப நல்லவன் மாதிரிதான் தோன்றுகிறது.

இராவணனாவது மாற்றான் மனைவியை கவர்ந்தான். கும்பகர்ணன் அப்படி எந்த தவறும் செய்யவில்லை. இராவணனுக்கு நல்லது எடுத்துச் சொன்னான். இடித்து கூட சொன்னான் (பேசுவது மானம், இடை பேணுவது காமம், கூசுவது மானிடரை). இராவணன் கேட்கவில்லை. அதற்காக விபீஷணன் மாதிரி இராவணனை விட்டுவிட்டு செல்லவில்லை.

கடைசி வரை போராடி உயிர் கொடுக்கிறான். "நான் இறந்த பிறகாவது சீதையையை விட்டு விடு " என்று கெஞ்சுகிறான், இராவணனிடம்.

ரொம்ப அன்பு உள்ளவனாக அவனை காண்பிக்கிறான் கம்பன். தவறே செய்தால் கூட, அண்ணனுக்காக உயிர் கொடுக்கிறான். அவனை திருத்த நினைக்கிறான். விபீஷணன் மேல் அளவு கந்த காதல் வைத்து இருக்குகிறான்.
விபீஷணனை இராவணனிடம் இருந்து காப்பாற்றும்படி இராமனிடம் வேண்டுகிறான். விபீஷணன், கும்ப கர்ணனை பார்க்க வந்த போது "ஏன் தனியா வந்த, சீக்கிரம் போய் விடு, இராவணனால் உனக்கு ஏதாவது ஆபத்து வந்து விடும் என்று ஆதங்கப் படுகிறான்".



யுத்த களம். முதன் முதலாக கும்ப கர்ணன் இராமனை பார்க்கிறான்.
என்ன சொல்லி இருப்பான் ?
மூன்று விஷயங்கள் சொல்கிறான் இராமனிடம்.....
அடுத்து வரும் blog - ல் பார்க்கலாம்