முத்தொள்ளாயிரம் - சைட் அடிக்கும் பெண்கள்
நமக்கு பிரியமானவர்களோடு இருக்கும் போது, அந்த நேரம் நீண்டு கொண்டே போகக் கூடாதா என்று இருக்கும்.
அவர்களோடு எவ்வளவு பேசினாலும், பார்த்தாலும் போதாது.
இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் என்று மனம் ஏங்கும்.
அவளுக்கு அந்த ஊர் அரசன் மேல் கொள்ளைக் காதல்.
அவன் குதிரையின் மேல் போகும் போது வரும் போது பார்த்து அவன் பால் மனதை பறிகொடுத்து விட்டாள்.
கதவின் மறைவில் நின்று அவன் வரும் போதும் போகும் போதும் பார்ப்பாள்.
நிறைய நேரம் பார்க்க ஆசை தான், ஆனால் அவன் ஏறிச் செல்லும் குதிரை மிக வேகமாக சென்று விடுகிறது.
அவள் அந்த குதிரையிடம் பேசுகிறாள்.
"போர்க் களத்தில் வேகமாக செல்கிறாய், சரி. ஊருக்குள் என்ன எதிரிகளா இருக்கிறார்கள், ஏன் இவ்வளவு அவசரம், கொஞ்சம் மெதுவாத்தான் போயேன். நான் இன்னும் கொஞ்சம் அவனை பார்த்து இரசிப்பேன்ல" என்று குதிரையிடம் முறை இடுகிறாள்.
அந்த ஜொள்ளு பாடல்