Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

Wednesday, June 13, 2012

திருக்குறள் - காதலா ? நாணமா ?


திருக்குறள் - காதலா ? நாணமா ?


இன்னைக்கு அவன் கிட்ட சொல்லிரலாமா நம்ம காதலை ?

எப்படி சொல்றது ? நேரா போய் "நான் உன்னை காதலிக்கிறேன்" அப்படினா ?

சீ... சீ ... அது ரொம்ப அசிங்கம். அவன் என்னை பத்தி என்ன நினைப்பான்?

பின்ன சொல்லாமையே இருந்திரலாமா ?

அது சரிப் படாது...சொல்லிற வேண்டியது தான்...

ஆனா...ரொம்ப வெட்கமா இருக்கு...ஒரு பொண்ணு போய் எப்படி சொல்ல முடியும்...

சரி அவனா கண்டு பிடிச்சு கேட்டா சொல்லிக்கலாம்...

ஒரு வேளை அவன் கண்டுக்கவே இல்லைனா ?

.................................

ஐயோ, இந்த காதலுக்கும் நாணத்துக்கும் நடுவில் நான் கிடந்து படும் பாடு இருக்கே...போதும்டா சாமி....


Wednesday, May 30, 2012

திருக்குறள் - காதல் என்றும் புதிது


திருக்குறள் - காதல் என்றும் புதிது



நாம் புதியதாய் ஒன்றை படித்து அறிந்து கொள்ளும் போது நமக்கு ஒரு சந்தோஷம் வரும் தானே?

"அட, இதை இத்தனை நாள் அறியாமல் போனோமே" என்று தோன்றும்.
தெரிந்த பின், ஒரு சந்தோஷம் தோன்றும். மேலும் மேலும் அந்த விஷயத்தை பற்றி அறிந்து கொள்ள தோன்றும்.


அது போல, இந்த பெண்ணுடன் பழகும் ஒவ்வொரு நாளும் புதியதாய் இருக்கிறது.


அந்த சிணுங்கல், அந்த வெட்கம், அந்த கனிவு, பரிவு, பாசம், என்று ஒவ்வொரு நாளும் ஏதோ ஒன்று புதியதாய் இருக்கிறது.

ஒரு விஷயத்தை படித்து அறிந்தவுடன் , அந்த விஷயம் நமக்கு பழையதாகிப் போகிறது.


அதில் உள்ள சுவாரசியம் குறைந்து விடுகிறது.


ஆனால், நம் அறியாமை மட்டும் அப்படியே இருக்கிறது.


அது மேலும் மேலும் புதிய விஷயங்களை அறிந்து கொள்ள தூண்டிக் கொண்டே இருக்கிறது.


அறிய அறிய நம் அறியாமை புதிது புதிதாக தோன்றுவதைப் போல, இந்த பெண்ணோடு பழகும் போது ஒவ்வொரு தடவையும்
ஏதோ புதியதாய் தோன்றி கொண்டே இருக்கிறது.


Friday, April 13, 2012

புறநானூறு - காதலும் வீரமும்




கணவனோ காதலனோ போரில் அடிபட்டு கிடக்கிறான்.

அவனை தேடி அந்தப் பெண் போகிறாள்.

நேரமோ இரவு நேரம்

அவன் அடிபட்டு கிடப்பதை பார்க்கிறாள்.

இறக்கவில்லை. ஆனால் அவனால் எழுந்து நடக்க முடியாது.

அவனைப் பார்த்தவுடன் அவளுக்கு துக்கம் பொங்கி பொங்கி வருகிறது. வாய் விட்டு அழ வேண்டும் போல இருக்கிறது. அழுதால் அந்த சத்தம் கேட்டு பக்கத்து காட்டில் இருந்து புலி ஏதும் வந்து விடுமோ
 என்று பயப் படுகிறாள். அவனிடம் சொல்கிறாள் "உன்னை தூக்கி செல்லலாம் என்றாள் நீயோ கனமான ஆளாய் இருக்கிறாய். என்னால் உன்னை தூக்க முடியாது. என் வளையல் அணிந்த கையை பிடித்துக் கொள், மெல்ல நடந்து அந்த மலை அடிவாரம் போய் விடலாம்" என்கிறாள்.

  காதலும் வீரமும் ததும்பும் அந்தப் பாடல்