Showing posts with label குற்றாலக் குறவஞ்சி. Show all posts
Showing posts with label குற்றாலக் குறவஞ்சி. Show all posts

Thursday, October 11, 2012

குற்றாலக் குறவஞ்சி - எது முந்தியது ?


குற்றாலக் குறவஞ்சி - எது முந்தியது ?




காதலனை பார்க்க காதலி போகிறாள். தூரத்தில் அவன் தெரிகிறான். அவன் தானா ? அவன் போலத்தான் தெரிகிறது. ஒரு வேளை அவன் இல்லையோ ? இன்னும் கொஞ்சம் தூரம் நெருங்கிப் போகிறாள். அவன் தான். ஆனால் அந்தப் புறம் திரும்பி நிற்கிறான். தோளை தொட்டு திருப்பிப் பார்க்க எத்தனிக்கிறாள். அவள் கரம் நீள்கிறது. பின் ஒரு சின்ன தயக்கம். ஒருவேளை அவனை இல்லா விட்டால் ?

அவள் மனத்திற்கும், கண்ணிற்கும், கரத்திற்கும் பெரிய போட்டி...யார் முதலில் அவனை அறிவோம் என்று. 

சந்த நயம் நிறைந்த அந்தப் பாடல்:

Saturday, October 6, 2012

திருக் குற்றாலக் குறவஞ்சி - மன்மதனின் சேனை


திருக் குற்றாலக் குறவஞ்சி - மன்மதனின் சேனை


மன்மதன் தன் சேனையோடு ஆண்கள் மேல் போர் தொடுக்க வருக்கிறான்.

அவன் சேனை யார் தெரியுமா ? அழகான பெண்கள் தான் அவன் சேனை வீரர்கள். 

அந்தப் பெண்கள். வில் போன்ற புருவத்தை வளைத்து, மீன் போன்ற கண்களில் வேல் போன்ற பார்வையை தீட்டி, தங்கள் கொலுசு என்ற பறை முழங்க சண்டைக்கு வருகிறார்கள். 

இனிமையான கற்பனை கொண்ட அந்தப் பாடல் 

Saturday, September 15, 2012

குற்றாலக் குறவஞ்சி - அவை அடக்கம்


குற்றாலக் குறவஞ்சி - அவை அடக்கம்


பூவோடு சேர்ந்த நாரும் மனம் பெரும் என்பார்கள்.

மாலை அழகாகத்தான் இருக்கிறது. அழகான பூக்கள், அதில் இருந்து வரும் மனம், அதன் நிறம் எல்லாம் அழகுதான். ஆனால் அதன் நடுவில் இருக்கும் நாருக்கு ஒரு மனமும் இல்லை, அழகும் இல்லை. இருந்தாலும் நாம் அந்த நாரை வெறுப்பது இல்லை. 

அது போல, என் பாடல்கள் நார் போல இருந்தாலும், அவை அந்த குற்றாலத்து உறையும் ஈசனைப் பற்றி பாடுவதால், அந்த ஈசன் மலராய் இருந்து, என் பாடல்களுக்கு மணம் சேர்க்கிறான் என்கிறார் திரிகூட ராசப்ப கவி ராயர்....

Thursday, May 17, 2012

குற்றாலக் குறவஞ்சி - நடனமாடும் தமிழ்


குற்றாலக் குறவஞ்சி - நடனமாடும் தமிழ்

திருக் குற்றாலக் குறவஞ்சி பிற்காலத் தமிழ் இலக்கியத்தில் உள்ள ஒரு இனிய பாடல் தொகுப்பு.

பக்தியும், காதலும், சிருங்காரமும், நகைச்சுவையும் சேர்ந்து இனிய சந்தத்தில் அமைந்த பாடல்கள்.

இராகம் போட்டுப் பாடலாம்.

சில பாடல்களில் பெண்களைப் பற்றிய வர்ணனை சற்று தூக்கலாகவே இருக்கும்.

ஜொள்ளர்களுக்கு நல்ல விருந்து.

குற்றாலத்தில் உள்ள சிவனை பாடல் நாயாகனாக கொண்டு எழுதப் பட்ட பாடல்கள்.

அதில் இருந்து ஒரு இனிய பாடல்....