கம்ப இராமாயணம் - நைந்த தம்பிகள்
பதினாலு வருடங்கள் இராமனோடு காடு மேடு எல்லாம் அலைந்து, உறங்காமல் கண் விழித்து நைந்து போய் நந்தி கிராமம் வருகிறான் இலக்குவன்
அங்கே, பதினாலு வருடம் இராமன் பாதுகைகளை வைத்து, தவ வேடம் பூண்டு, உடலும் உள்ளமும் உருகி நைந்து போய் இருக்கிறான் பரதன்.
எதிர் வந்த இலக்குவனை பரதன் வரவேற்கிறான்.
ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி கண்ணீர் விட்டனர்.
சுற்றி இருந்த மக்கள் எல்லாம், இதில் அதிகம் நைந்தது யார் என்று வருத்ததோடு பார்த்தனர்.
அந்த மனதை உருக்கும் பாடல்....