கம்ப இராமாயணம் - மாரீசன் வதைப் படலம்
மாரீசன் வதைப் படலம் என்றவுடன் நமக்கு என்ன நினைவுக்கு வரும்?
இராவணன், மாரீசனை மாய மானாகப் போகச் சொன்னான். சீதை அந்த பொன் மானைப் பிடித்துத் தரச் சொன்னாள். இராமன், மான் பின் போனான். பின் இலக்குவன் போனான். இராவணன் கபட சந்நியாசி வேடத்தில் வந்து சீதையை தூக்கிச் சென்றான். இராமனின் அம்பு பட்டு மாரீசன் இறந்தான்.
இவ்வளவுதானே நமக்குத் தெரியும்.
இந்தப் பகுதியை கம்பன் எழுதியிருக்கும் விதத்தைப் படித்தால், கம்பன் மிகவும் இரசித்து இரசித்து எழுதிய பகுதி மாதிரி தோன்றும்.
அறம், இலக்கியம், மனோ தத்துவம், அரசியல் கோட்பாடு, வீரம், தன்னிரக்கம், காமம், என்று வண்ணமயமாக தீட்டி இருக்கிறான்.
நீண்ட ஒரு காப்பியத்தைப் படிக்கும் போது, இது போன்ற பகுதிகளை வேகமாக தள்ளிவிட்டு விட்டு மேலே போய் விடுவோம்.
என்ன அவசரம். எங்கே போகப் போகிறோம். நிறுத்தி நிதானமாக இரசிப்போமே.
எந்நேரமும் ஓட்டமும், நடையுமாக ஒரு வித பதட்டத்திலேயே வாழ்க்கை கழிகிறது.
இந்த உலகை விட்டு விட்டு வாருங்கள். கம்பன் காட்டும் அந்த அற்புத, மாயா உலகத்துக்குள் சென்று வருவோம்.
ஒவ்வொரு பாடலும் தேன்.
அடடா அடடா என்று ஒவ்வொரு பாடலும் அத்துணை அற்புதம்.
வாருங்கள். அனுமதி இலவசம்.
No comments:
Post a Comment