தேவாரம் - பிறவா நாள்
திரு பாதிரிப் புலியூர்.
கடலூர் மாவட்டத்தின் தலை நகர்.
புலிக்கால் முனிவர் பூஜை செய்த தலம்.
திரு நாவுக்கரசரை கல்லில் கட்டி கடலில் போட்ட இடம்.
"சொற்றுணை வேதியன்" என்ற நமச்சிவாய பதிகம் பாடி, அந்த கல் தெப்பமாக மாற, அதில் மிதந்து கரை ஏறி வந்தார்.
இன்றும் "கரை ஏற விட்ட குப்பம்" என்ற இடம் கடலுருக்கு அருகில் உள்ள தேவனாம்பட்டினம் என்ற கடற் கரையில் உள்ளது.
அங்கே நாவுக்கரசருக்கு ஒரு கோயில் இருக்கிறது.
நாவுக்கரசர் சொல்கிறார்....இறைவனைப் பற்றி பேசாத நாள் எல்லாம் பிறவாத நாள் என்கிறார்.