வருணனை என்பது சற்று கடினமான காரியம்.
வாசகன் எளிதாக skip பண்ணக்கூடிய இடம் வருணனை. அதையும்
தாண்டி, வாசகனை, அந்த வருணனையை படிக்க, இரசிக்க வைக்க
வேண்டும் என்றால் ரொம்ப மெனக்கடனும்.
அதுவும், ஒரு ஊரைப் பற்றி வருணனை என்றால் இன்னும் கஷ்டம்.
ஒரு அழாகான பெண்,
அல்லது ஆண் என்றால் படிப்பவர்களுக்கு ஒரு
ஆர்வம் இயற்கையாக இருக்கும்.
ஊரை பற்றி என்ன எழுத முடியும் ?
கம்பன் வர்ணிக்கும் ஒவ்வொரு இடமும்
அத்தனை அருமை. அடடா என்று நம் முகத்தில் ஒரு புன்னகையை வரவழைக்கும் இடங்கள்.
கம்பனின் வருணனைகள் என்ற தலைப்பில் ஒரு
ஆராய்ச்சியே பண்ணலாம்.
அனுமன் முதன் முதாலாய் இலங்கைக்குள்
நுழைகிறான். இலங்கை எப்படி இருக்கிறது ?
மாட மாளிகைகளும், கூட கோபுரங்களும் என்று நாம் எழுதுவோம். கம்பன் என்ன சொல்கிறான்.