திருக்குறள் - வாழ்வது எப்போது ?
எப்படி எல்லாம் வாழ வேண்டும் என்று சிந்தித்து கொண்டே இருப்பது அல்ல வாழ்கை.
வாழ்கை என்பது வாழ்வது.
நிறைய பேருக்கு பணம் சம்பாதிக்கத் தெரியும். அதை நல்ல வழியில் செலவழிக்கத் தெரியாது. நாளைக்கு வேண்டும் நாளைக்கு வேண்டும் என்று சேர்த்து வைத்துக் கொண்டே இருப்பார்க்கள்.
மனைவி மக்கள் எல்லோரும் இருப்பார்கள். அவர்களோடு சேர்ந்து செலவழிக்க நேரம் இருக்காது. அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்து விடுவார்கள்.
நல்ல புத்தகம், நல்ல இசை, நல்ல நண்பர்கள், (நல்ல blog !) இவற்றிற்கெல்லாம் நேரம் இருக்காது. ஏதோ கற்ப கோடி ஆண்டு வாழப் போவது போல் எதிர் கால கற்பனையில் நிகழ் காலத்தை வீணடித்துக் கொண்டு இருப்பார்கள்.
அவர்களை வள்ளுவர் வாழத் தெரியாதவர்கள் என்று கூறுகிறார்.