தேவாரம் - சொர்க்கம் இருப்பது இங்கே
சொர்க்கம் எங்கே இருக்கிறது ? மேலே எங்கேயோ இருக்கிறதா ? அது வேறு உலகமா ?
ஒரு சமயம் நாவுக்கரசர் கைலாய மலைக்கு செல்ல விரும்பினார்.
நடந்தே சென்றார். வயதான காலத்தில் அவரால் முடியவில்லை.
சோர்ந்து விழுந்து விட்டார்.
அப்போது, ஒரு அடியவர் அவரிடம் "ஐயா, நீங்க ஏன் இப்படி கஷ்டப் படுகிறீர்கள்...இதோ இந்த குளத்தில் நீராடி வாருங்கள், உங்களுக்கு கைலாயத்தை நான் காட்டுகிறேன் என்றார்.
நாவுக்கரசரும் அந்த குளத்தில் மூழ்கி எழுந்தார். மூழ்கியது வட நாட்டில் ஏதோ ஒரு இடம்.
எழுந்தது திருவையாறு என்ற இடத்தில்.
நாவுக்கரசருக்கு மிகுந்த ஆச்சரியம்.
எப்படி ஒரு சுவடும் இல்லாமல் இங்கு வந்தோம் என்று.
குளத்தை விட்டு வெளியே வந்து பார்க்கிறார்.
அங்கே எல்லா உயிர்களும் ஆணும் பெண்ணுமாய் வருவதை பார்த்தார்.
அவருக்குள் ஏதோ நிகழ்ந்தது.
அனைத்தும் இறைவனும் இறைவியும் போல அவருக்கு தோன்றியது.
இதுவரை காணாத ஒன்றை கண்டதாக அவரே கூறுகிறார்.
தேவாரத்தில், இந்த பத்து பாடல்கள் மிக முக்கியமான பாடல்களாக கருதப்படுகிறது.
அதில் இருந்து ஒரு பாடல்