திருக்குறள் - பணம் சம்பாதியுங்கள்
நமது இலக்கியங்கள் பெரும்பாலும் துறவறம், நிலையாமை, ஈகை, மெய் பொருள் நாடுதல் என்று தான் சொல்லுகின்றன.
உடலை உறுதி செய்தல், பொருள் ஈட்டுதல் என்பன பற்றி சொல்லும் இலக்கியங்கள் மிகக் குறைவு.
திருக்குறளில், அதுவும், கட்டளை இடுவது போல் இந்த குறள் சற்று வித்தியாசமான குறள்.
"பணம் சம்பாதியுங்கள், உங்கள் பகைவர்களின் செருக்கை அறுக்க அதை விட கூரிய பொருள் இல்லை" என்கிறார் வள்ளுவர்.