புறநானுறு - ரொம்ப நல்லவேன்னு சொல்லிட்டாம்மா
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை என்றதுபோல் ஒரு சில நல்லவர்கள் இருப்பதால் இந்த உலகம் இயங்குகிறது என்கிறது புறநானூறு.
யார் அந்த நல்லவர்கள் ? அவர்கள் என்ன செய்வார்கள்?
அமிழ்தமே கிடைத்தாலும் தான் மட்டும் உண்ணாமல், மற்றவர்களோடு பகிர்ந்து உண்பார்கள்.
கோபப்படமாட்டார்கள்.
மற்றவர்கள் அஞ்சுவதற்கு அஞ்சுவார்கள்.
புகழுக்காக உயிரையும் கொடுப்பார்கள்.
பழி வரும் என்றால் உலகமே கிடைத்தாலும் அதை செய்ய மாட்டார்கள்.
தமக்காக உழைக்காமல் பிறர்க்காக உழைப்பார்கள்.