கந்தர் அலங்காரம் - நாலாயிரம் கண்கள்
கோயில்கள் காலப் பெட்டகங்கள்.
அதன் பிரகாரங்களில் எத்தனையோ பேர் கொட்டிய கவலைகள், கனவுகள், பாவ மன்னிப்புகள் சிதறிக் கிடக்கின்றன.
அங்குள்ள சிற்பங்கள் எத்தனை பேரை பார்த்திருக்கும்.
எத்தனை பிரார்த்தனைகளை, முணுமுணுப்புகளை கேட்டிருக்கும், எத்தனை சந்தோஷங்களை, துக்கங்களை கண்டிருக்கும்.
மனிதனின் கடைசி நம்பிக்கை கோயில்.
'உன் பற்று அன்றி ஒரு பற்றிலேன் இறைவா கச்சியேகம்பனே' என்று எல்லாம் விட்டு அவனே சரண் என்று அடையும் இடம் கோயில்.
திருசெந்தூர் கோயில்.
கடல் அலை தாலாட்டும் கோயில்.
கோயிலுக்கு இரண்டு கிலோ மீட்டர் வரை இங்கே ஒரு கோயில் வரப் போகிறது என்று சொன்னால் நம்ப முடியாது.
அருணகிரி நாதர் திரு செந்தூர் கோயிலில் உள்ள முருகனைப் பார்க்கிறார்.
அழகு அப்படியே அவரை கொள்ளை கொள்கிறது. வைத்த கண்ணை எடுக்க முடியவில்லை.
அப்படி ஒரு அழகு. பார்த்து கொண்டே இருக்கலாம்.
எவ்வளவு பார்த்தாலும் போதவில்லை.
அடடா , இந்த அழகைப் பார்க்க இரண்டு கண்ணுதானே இருக்கு...
இன்னும் கொஞ்சம் கண்கள் இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும் என்று ஆதங்கப் படுகிறார்...