Showing posts with label சிவ புராணம். Show all posts
Showing posts with label சிவ புராணம். Show all posts

Monday, September 22, 2014

சிவபுராணம் - அன்பருக்கு அன்பனே - பாகம் 2

சிவபுராணம் - அன்பருக்கு அன்பனே - பாகம் 2


பாடல்

அன்பருக்கு அன்பனே, யாவையுமாய் அல்லையுமாம்
சோதியனேதுன்இருளே, தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்தமெஞ் ஞானத்தால் கொண்டுணர்வார் தங்கருத்தின்

பொருள்

அன்பருக்கு அன்பனே = உன்னுடைய அன்பர்களுக்கு அன்பானவனே

யாவையுமாய் = அனைத்துமாய்

அல்லையுமாம் = அவை அனைத்தும் இல்லாததுமாய்

சோதியனே = சோதி வடிவானவனே

துன்இருளே = அடர்ந்த இருள் போன்றவனே

தோன்றாப் பெருமையனே = தோற்றம் என்று ஒன்று இல்லாதவனே

ஆதியனே = முதலானவனே

இறுதியானவனே  = நடுவானவனே

நடுவாகி = நடுவானவனே

அல்லானே = இவை அனைத்தும் இல்லாதவனே

ஈர்த்தென்னை = ஈர்த்து , கவர்ந்து என்னை

ஆட்கொண்ட = ஆட்கொண்ட

எந்தை பெருமானே = என் தந்தை போன்றவனே,  பெரியவனே

கூர்த்த = கூர்மையான

மெஞ் ஞானத்தால் = மெய்யான ஞானத்தால்

கொண்டுணர்வார் தங்கருத்தின் = கொண்டு உணர்வார் தங்கள் கருத்தில்


வார்த்தைகளுக்கு பொருள் கண்டாகி விட்டது.

அதில் உள்ள உட் பொருளை பற்றி சிந்திப்போம்.

"அன்பருக்கு அன்பனே"

அன்பர்களுக்கு அன்பானவன்.

சரி, அன்பு இல்லாதவர்களுக்கு என்ன ஆனவன் என்ற கேள்வி எழும் அல்லவா ?

தன் மேல் அன்பு செலுத்துபவர்களிடம் அவன் அன்பு செலுத்துகிறான்; அவன் மேல் அன்பு செலுத்தாதவர்களிடம் அன்பு செலுத்த மாட்டான் என்றால் இது ஏதோ சாதாரண மனித குணம் போல அல்லவா இருக்கிறது.

ஒரு இறைவன் இப்படிச் செய்வானா ?

அந்த கேள்வி அப்படி இருக்கட்டும் ஒரு புறம்.

கற்கண்டு எப்படி இருக்கும் ?

இனிப்பாய் இருக்கும்.

அது இனிப்பாக இருக்க இரண்டு பொருள் வேண்டும். ஒன்று கற்கண்டு, இன்னொன்று அதை சுவைக்கும் நாக்கு.


நாக்கு இல்லாமல் கற்கண்டு இனிக்கும் என்று பார்த்து தெரிந்து கொள்ள முடியாது.

அது போல, நாக்கு மட்டும் இருந்தால் போதாது...அதுவும் நல்ல நிலையில் இருக்க வேண்டும். காய்ச்சல் உள்ள ஒருவனிடம் கற்கண்டை கொடுத்தால் அவனுக்கு எல்லாமே கசப்பாகத்தான் இருக்கும். வாய் கசக்கிறது என்று சொல்லுவான். எதை உண்டாலும் கசப்பாகத்தான் இருக்கும். பித்தம்.

அவனுக்கு கற்கண்டு கசந்தது கற்கண்டின் பிழையா? அது அவன் நாவின் பிழை.

இறைவன் மேல் அன்பு கொண்டவர்களுக்கு அவன் அன்பனாகத்தான் தெரிகிறான்.

இறைவன் இல்லை, அப்படி ஒன்று கிடையவே கிடையாது என்று சொல்பவர்களுக்கு  அவன் அன்பு தெரியாது. அது யார் பிழை ?

நீங்கள் இறைவன் அன்பு கொண்டால் அவன் அன்பு உங்களுக்குப் புரியும்.

காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தம்மை நன்னெறிக்கு உயிப்பது
வேதம் நான்கிலும் மெய் பொருளாவது

நாதன் நாமம் நமசிவாயவே



என்பார் திருஞானசம்பந்தர்.


----------------------/ பாகம் 2 /---------------------------------------------------------------------------------

யாவையுமாய் அல்லையுமாம்


இறைவன் அனைத்துமாக இருக்கிறான் - யாவையுமாய் 

அவனே அனைத்துமாக இல்லாதவனாகவும் இருக்கிறான் - அல்லையுமாய்.

எது என்ன  புதுக் குழப்பம் ?

எல்லாம் அவன் என்பது புரிகிறது. 

அவன் எல்லாமாகவும் இல்லை என்பது எப்படி சரியாகும் ?

ஒன்றுக்கு ஒன்று முரண்படுவது போல இருக்கிறதே ?

சிந்திப்போம்.

அதற்கு முன்னால் இரணியன் கதையை நினைத்துப்  பார்ப்போம். 

 ‘சாணிலும் உளன், ஓர் தண்மை அணுவினை சதகூரிட்ட 
கோணினும் உளன், மாமேருக் குன்றிலும் உளன், இன்னின்ற 
தூணிலும் உளன், நீ சொன்ன சொல்லிலும் உளன்'

அவன் சாணிலும் இருக்கிறான். அணுவை ஆயிரம் கோடியாக பிளந்தால் அந்த தூளிலும்  உள்ளான். மாமேரு குன்றிலும் உள்ளான். இந்த தூணிலும் உள்ளான். நீ சொன்ன சொல்லிலும் உள்ளான் என்று கூறுகிறான் பிரகலாதன். 

தூணில் இருக்கிறானா என்று கேட்டால் ஆமாம் இருக்கிறான்.

இந்த தூண்தான் அவனா என்று கேட்டால் இல்லை. 

தூணில் அவன் இருக்கிறான். ஆனால் அந்தத் தூணே அவன் இல்லை. அவன் தூண்  இல்லாமல் மற்ற வடிவிலும் மற்ற இடங்களிலும் இருப்பான்.


அதைத்தான் மணிவாசகர் சொல்கிறார் - யாவையுமாய், அல்லையுமாய்.

அவன் எல்லாவற்றிலும் இருக்கிறான். அதற்காக அவை எல்லாம் அவன் இல்லை.

சிலையில், படத்தில் அவனை வணங்கலாம். 

ஆனால், அந்த சிலைதான் அவன் என்று சொல்லக் கூடாது. அவன் அந்த சிலையைத் தாண்டி  இருக்கிறான். 

இதையே அபிராமி பட்டரும் "உள்ளே அனைத்தினுக்கும் புறம்பே" என்றார். உள்ளும் புறமும் உண்டு.  

கொள்ளேன் மனத்தில் நின் கோலம் அல்லாது அன்பர் கூட்டம் தன்னை
விள்ளேன் பரசமயம் விரும்பேன் வியன் மூவுலகுக்கு
உள்ளே அனைத்தினுக்கும் புறம்பே உள்ளத்தே விளைந்த
கள்ளே களிக்கும் களியே அளிய என் கண்மணியே

காணும் அனைத்திலும் இறைவனை காண்பது.

அவை அன்றியும் அவனை நினைப்பது.

யாவையுமாய் அல்லையுமாய்

மேலும் சிந்திப்போம்






Sunday, September 21, 2014

சிவபுராணம் - அன்பருக்கு அன்பனே - பாகம் 1

சிவபுராணம் - அன்பருக்கு அன்பனே - பாகம் 1 


பாடல்

அன்பருக்கு அன்பனே, யாவையுமாய் அல்லையுமாம்
சோதியனேதுன்இருளே, தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்தமெஞ் ஞானத்தால் கொண்டுணர்வார் தங்கருத்தின்

பொருள்

அன்பருக்கு அன்பனே = உன்னுடைய அன்பர்களுக்கு அன்பானவனே

யாவையுமாய் = அனைத்துமாய்

அல்லையுமாம் = அவை அனைத்தும் இல்லாததுமாய்

சோதியனே = சோதி வடிவானவனே 

துன்இருளே = அடர்ந்த இருள் போன்றவனே

தோன்றாப் பெருமையனே = தோற்றம் என்று ஒன்று இல்லாதவனே

ஆதியனே = முதலானவனே

இறுதியானவனே  = நடுவானவனே

நடுவாகி = நடுவானவனே

அல்லானே = இவை அனைத்தும் இல்லாதவனே

ஈர்த்தென்னை = ஈர்த்து , கவர்ந்து என்னை

ஆட்கொண்ட = ஆட்கொண்ட

எந்தை பெருமானே = என் தந்தை போன்றவனே,  பெரியவனே

கூர்த்த = கூர்மையான

மெஞ் ஞானத்தால் = மெய்யான ஞானத்தால்

கொண்டுணர்வார் தங்கருத்தின் = கொண்டு உணர்வார் தங்கள் கருத்தில்


வார்த்தைகளுக்கு பொருள் கண்டாகி விட்டது.

அதில் உள்ள உட் பொருளை பற்றி சிந்திப்போம்.

"அன்பருக்கு அன்பனே"

அன்பர்களுக்கு அன்பானவன்.

சரி, அன்பு இல்லாதவர்களுக்கு என்ன ஆனவன் என்ற கேள்வி எழும் அல்லவா ?

தன் மேல் அன்பு செலுத்துபவர்களிடம் அவன் அன்பு செலுத்துகிறான்; அவன் மேல் அன்பு செலுத்தாதவர்களிடம் அன்பு செலுத்த மாட்டான் என்றால் இது ஏதோ சாதாரண மனித குணம் போல அல்லவா இருக்கிறது.

ஒரு இறைவன் இப்படிச் செய்வானா ?

அந்த கேள்வி அப்படி இருக்கட்டும் ஒரு புறம்.

கற்கண்டு எப்படி இருக்கும் ?

இனிப்பாய் இருக்கும்.

அது இனிப்பாக இருக்க இரண்டு பொருள் வேண்டும். ஒன்று கற்கண்டு, இன்னொன்று அதை சுவைக்கும் நாக்கு.


நாக்கு இல்லாமல் கற்கண்டு இனிக்கும் என்று பார்த்து தெரிந்து கொள்ள முடியாது.

அது போல, நாக்கு மட்டும் இருந்தால் போதாது...அதுவும் நல்ல நிலையில் இருக்க வேண்டும். காய்ச்சல் உள்ள ஒருவனிடம் கற்கண்டை கொடுத்தால் அவனுக்கு எல்லாமே கசப்பாகத்தான் இருக்கும். வாய் கசக்கிறது என்று சொல்லுவான். எதை உண்டாலும் கசப்பாகத்தான் இருக்கும். பித்தம்.

அவனுக்கு கற்கண்டு கசந்தது கற்கண்டின் பிழையா? அது அவன் நாவின் பிழை.

இறைவன் மேல் அன்பு கொண்டவர்களுக்கு அவன் அன்பனாகத்தான் தெரிகிறான்.

இறைவன் இல்லை, அப்படி ஒன்று கிடையவே கிடையாது என்று சொல்பவர்களுக்கு  அவன் அன்பு தெரியாது. அது யார் பிழை ?

நீங்கள் இறைவன் அன்பு கொண்டால் அவன் அன்பு உங்களுக்குப் புரியும்.

காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தம்மை நன்னெறிக்கு உயிப்பது
வேதம் நான்கிலும் மெய் பொருளாவது

நாதன் நாமம் நமசிவாயவே

என்பார் திருஞானசம்பந்தர்.




Saturday, September 20, 2014

சிவ புராணம் - இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே - பாகம் 5

சிவ புராணம் - இன்பமும் துன்பமும்  இல்லானே உள்ளானே  - பாகம் 5



பாடல்

நேச அருள் புரிந்து, நெஞ்சில் வஞ்சம் கெட,
பேராது நின்ற பெரும் கருணைப் பேர் ஆறே!
ஆரா அமுதே! அளவு இலாப் பெம்மானே!
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே!
நீராய் உருக்கி, என் ஆர் உயிர் ஆய் நின்றானே!
இன்பமும் துன்பமும் இல்லானே! உள்ளானே!

பொருள்

நேச = அன்பு

அருள் = கருணை

புரிந்து =  புரிந்து

நெஞ்சில் வஞ்சம் கெட = மனதில் உள்ள  வஞ்சனைகள் கெட

பேராது நின்ற = விலகாமல் நின்ற

பெரும் கருணைப் =  பெரிய கருணை

பேர் ஆறே = பெரிய ஆறே

ஆரா அமுதே! = அருமையான அமுதம் போன்றவனே

அளவு இலாப் பெம்மானே! = அளக்க முடியாத பெம்மானே

ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே! = ஆராய்ந்து அறியாதவர்கள் மன்னதில் ஒளிக்கும் ஒளி போன்றவனே

நீராய் உருக்கி, =  நீர் போல உருக்கி

என் ஆர் உயிர் ஆய் நின்றானே = என் உயிர் போல  நின்றவனே

இன்பமும் துன்பமும் இல்லானே! உள்ளானே! = இன்பமும் துன்பமும் இல்லாதவனே , உள்ளவனே

இவ்வளவுதான் பாட்டின் சொல் பொருள்  .விளக்கம்

இதன் உள் அர்த்தத்தை    சிந்திக்க சிந்திக்க விரியும்



சிந்திப்போம்

-------------------பாகம் 2 -----------------------------------------------------------------------------


"நேச அருள் புரிந்து"

நேசம் என்றால்  அன்பு.  

அது என்ன அன்பு - அருள் புரிந்து ?

அன்புக்கும் அருளுக்கும் என்ன வேறுபாடு ?

அன்பு என்பது தொடர்புடையவர்கள் மேல்  கொள்வது.

அருள் என்பது பொதுவாக அனைத்து உயிர்கள் மேலும் கொள்வது.

அதனால் தான் வள்ளுவர் அன்புடைமையை இல்லறவியலிலும் , அருளுடைமையை  துறவரவியலிலும் வைத்தார்.

இறைவன் தன்னை வழிபடுபவர்கள் மேல் மட்டும் அல்ல, எல்லா உயிர்கள் மேலும்  அன்பு செலுத்துபவன்.

தமிழால் அன்று வைத்தாரையும் வாழ வைப்போன் என்பார் அருணகிரிநாதர்.

"நெஞ்சில் வஞ்சம் கெட"

வஞ்சம் என்பது உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவது அல்லது    செய்வது.

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்.

என்பார் வள்ளுவர்.

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்பார்  வள்ளலார்.

அப்படி, இறைவன் நம் மனதில் உள்ள வஞ்சனைகளை எல்லாம் போகும்படி
செய்வான்.

"அளவு இல்லாப் பெம்மானே "

அளவு என்பது மனிதன் வைத்துக் வைத்துக்  கொண்டது. காலம், பருமன், நீள அகலங்கள் , நிற அளவுகள் என்று எல்லாம் மனிதன் தன் வசதிக்காக  வைத்துக்  கொண்டது.  இறைவன் இந்த அளவுக்கெல்லாம் அப்பாற்பட்டவன்.

அவனை கால அளவில் அடைக்க முடியாது - எப்போது  தோன்றினான், எப்போது  முடிவான் என்று அளந்து சொல்ல முடியாது.

அளவு இல்லாத ஒன்றை மனித மனம் கற்பனை  செய்து கூட பார்க்க முடியாது.

ஒரு நாள் கடலில் உள்ள ஒரு ஆமை கிணற்றுக்குள் இருக்கும்   இன்னொரு ஆமையை சந்தித்தது.

அப்போது கடல் ஆமை கிணற்று ஆமையிடம் சொன்னது, "நான் கடலில் இருந்து  வருகிறேன் "என்றது.

கி. ஆமை:  கடல் எப்படி இருக்கும் ?

க. ஆமை: கடல் இந்த கிணறு மாதிரிதான் ஆனால் ரொம்ப பெரியது என்றது.

கி. ஆமை ஒரு கரையில் இருந்து கிணற்றின் மத்திய பாகம் வரை தவ்வியது..."இவ்வளவு  பெரிசா இருக்குமா "என்று கேட்டது.

கடல் ஆமை சிரித்துக் கொண்டே சொன்னது, "இல்லை இல்லை...இதை விட  மிகப்  பெரியது "என்றது.

உடனே கிணற்று ஆமை - மீண்டும் கரைக்கு வந்து இப்போது முக்கால் கிணறு  தாண்டியது...."இவ்வளவு பெரிசா இருக்குமா "என்று கேட்டது.

கிணற்று ஆமைக்கு கடலின் அளவை எப்படி சொல்வது ? கிணற்று ஆமைக்கு தெரிந்தது  எல்லாம் கிணற்றின்  அளவுதான்.

மணிவாசகர் கடல் ஆமை. நாம் கிணற்று ஆமை. நமக்குச் சொல்கிறார்

"அளவு இல்லாப் பெம்மானே " என்று.

 (மேலும் சிந்திப்போம் )
===============================பாகம் 3 ==================================

ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே!


ஓர்தல் என்றால் ஆராய்தல்; எண்ணுதல்; உணர்தல்; அறிதல்; தெளிதல் என்று பொருள்.


 மலையாளத்தில் "ஓர்மை" என்று ஒரு சொல் உண்டு. நினைவு , ஞாபகம் என்ற  அர்த்தத்தில்.

ஓராதார் உள்ளத்து - ஆராயாமல், சிந்திக்காமல் இருப்பவர்கள் உள்ளத்தில் ஒளிக்கும்  ஒளியானே.


அது என்ன ஒளிக்கும் ஒளி ?

ஒளியை, வெளிச்சத்தை யாராலும் ஒளித்து வைக்க முடியாது. அது எங்கும்  இருக்கிறது.

இறைவனைப் பற்றி சிந்திக்காதவர்கள் மனதிலும் அவன் இருக்கிறான். ஆனால்  ஒளிந்து இருக்கிறான். வெளிப் படாமல் இருக்கிறான்.

எப்படி என்றால் ....

விறகில் தீயினன் பாலில் படு நெய்போல் 
மறைய நின்றுளான் மாமணிச் சோதியன் 
உறவு கோல் நாட்டி உணர்வு கயிற்றினால் 
முறுக வாங்கி கடைய முன் நிற்குமே என்று நாவுக்கரசர் கூறியது போல.

விறகினுள் தீயைப்  போலவும்,பாலினுள் நெய்யைப்  போலவும், மணியின் உள்ளே உள்ள   ஒளி போலவும் மறைந்து   .நிற்கிறான் .அவன்.

விறகை கடைந்தால் ஜோதி வெளிப் படும்.

தயிரைக் கடைந்தால் நெய் வெளிப்படும்

மணியை பட்டை தீட்டினால் ஒளி வெளிப்படும்

அது போல இறை சிந்தனை இருந்தால் இறைவன் வெளிப்படுவான்.

இங்கே சற்று நிறுத்தி ஆழமாக சிந்திப்போம்.


இறை சிந்தனை என்று தான்  கூறுகிறார்.

இறைவன் இல்லை என்று சொல்லும் நாத்திகமும் இறை சிந்தனை பற்றித்தான்.  இல்லை என்று சொல்பவனும் இறைவனை பற்றி சிந்திக்கிறான். இறைவன் யார்,  அவன் எப்படி இருக்க  முடியும்,நமக்கு ஒரு சாட்சியும் இல்லையே, அவன் இருக்கிறானா, இல்லையா என்று அவனும் சிந்திக்கிறான். அந்த சிந்தனையின் முடிவில் அவனுக்கும் அந்த இறை சக்தி வெளிப் படலாம். எனவே தான் சைவ சிந்தாந்தம் நாத்திகத்தையும் தன்னுள் கொண்டு இருக்கிறது.  இறைவன் இல்லை என்று சொல்லுபவனும் சைவ மதத்தைச் சார்ந்தவன் தான்.  

"நம்பாதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே" என்று மணிவாசகர் சொல்லவில்லை.

நம்பச் சொல்லவில்லை. சிந்திக்கச் சொல்கிறார்.

அந்த இறை சக்தி எல்லோர் மனத்திலும் இருக்கிறது. சிலரிடம் மறைந்து கிடக்கிறது, சிலரிடம் வெளிப்பட்டு இருக்கிறது.

ஓராதார் உள்ளத்தும் அது இருக்கிறது. ஆனால் மறைந்து இருக்கிறது.

ஒரு அரிக்கேன் விளக்கு இருக்கிறது. உள்ளே சுடர் எரிகிறது. வெளியே உள்ள கண்ணாடில்   கரி படிந்து  இருக்கிறது. வெளிச்சம் வெளியே  தெரியாது.

கரியை சுத்தமாக துடைத்தால் வெளிச்சம் பளீரென்று வெளிப்படும்.

அந்த கரி தான்  ஆணவம்,கன்மம் மாயை என்ற அழுக்குகள் (மும்மலம்) என்று சொல்லுவார்கள்.

அழுக்கை நீக்கினால் ஜோதி சுடர் விட்டு வெளிச்சம் தரும்.

ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே


இப்படி ஒவ்வொரு வரிக்குள்ளும் மிக மிக ஆழ்ந்த அர்த்தங்கள் கொண்டது சிவ புராணம்.

வாசித்துக் கொண்டே போவதற்கு அல்ல. நீண்ட சிந்தனைக்கு உகந்தது சிவ புராணம்.

மேலும் சிந்திப்போம்

--------------------------------\பாகம் 4/-----------------------------------------------------------------------------

நீராய் உருக்கி, என் ஆர் உயிர் ஆய் நின்றானே!

மனம் நெகிழ வேண்டும். மனம் நெகிழாதவர்களை "சரியான கல் நெஞ்சக் காரன்" என்று  சொல்லுவோம்.

இறைவன் திருவடி நம் மனதில் பதிய வேண்டும் என்றால் மனம் இளகி மெத்தென்று இருக்க வேண்டும்.

கல்லின் மேல் பாதம் படியுமா ?

நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்துருக என்பார் அருணகிரிநாதர். மனமாகிய கல் நெகிழ்ந்து உருக வேண்டும்.


நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்து உ ருகத்
தஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல்சேர்
செஞ்சொல் புனைமாலை சிறந்திடவே
பஞ்சக்கர ஆனைபதம் பணிவாம்

அவர்கள் மனம் கல் என்றால் நம் மனம் எல்லாம் இரும்பாக இருக்கும்.

உருகி என்றால் எவ்வளவு உருக வேண்டும் ? நீர் போல உருகி ஓட வேண்டும்.

இளகிய உள்ளத்தில் இறைவன் ஒன்றாகக் கலந்து  விடுவான்.

நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே

மனம்  உருகிய பின் சீவன் வேறு சிவன் வேறு அல்ல. நான் வேறு அவன் வேறு என்று நாம் பிரித்து வைத்துக் கொண்டு அல்லாடுகிறோம். மனம் உருகும்போது பிரிவினையும் உருகி  விடுகிறது.இரண்டும் ஒன்றாக கலந்து விடுகிறது.


(அடுத்த வரியை நாளை சிந்திப்போம்)

-------------------------------------------/பாகம் 5/------------------------------------------------------------------

இன்பமும் துன்பமும் இல்லானே! உள்ளானே!


இன்பம்  சரி. அது எப்படி இறைவனுக்கு துன்பம் வரும் ? 


குழந்தைக்கு  உடம்பு சரி இல்லை என்றால் தாய் வருந்துவாள். தான் பத்தியம் இருப்பாள். இல்லாத கோவிலுக்கு எல்லாம் வேண்டிக்  கொள்வாள்.கண் விழித்து  வைத்தியம் பார்ப்பாள். அவள் உடம்புக்கு ஒன்றும் இல்லை. பிள்ளைக்கு  உடம்பு சரி இல்லை. 


 அதே பிள்ளை,   பள்ளியில் படிப்பில் அல்லது விளையாட்டில் முதலாவதாக  வந்தால்  அந்த தாய் மகிழ்வாள். அவள்  வரவில்லை.அவளுடைய பிள்ளை 
 வந்தது.

ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் என கேட்ட தாய் என்பார்  வள்ளுவர்.

பிள்ளைக்கு துன்பம் என்றால், அவள் துன்பப் படுகிறாள். 

பிள்ளைக்கு இன்பம் என்றால், அவன் இன்பம்  அடைகிறாள்.

இங்கே அவளுக்கென்று இன்பமும் துன்பமும் இல்லை. பிள்ளையின் இன்பமும், துன்பமும் அவளை பற்றிக்  கொள்கிறது.

ஒரு தாய்க்கு இரண்டு பிள்ளை  இருந்து,ஒன்றுக்கு உடல் நலம் இல்லை, இன்னொன்று  வகுப்பில் முதலாவதாக வந்து  இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். 

அவள்  வருந்துவாளா? மகிழ்வாளா ?

இரண்டும் தான். 

இறைவனுக்கு ஆயிரம்  பிள்ளைகள்.

சிலது  வருந்தும், சிலது மகிழும் எனவே இறைவன் 

இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே. 

அவனுக்கு இன்பமும் இல்லை, துன்பமும் இல்லை. 

பிள்ளைகளால் அவனுக்கு இன்பமும் உண்டு, துன்பமும் உண்டு. 

மணிவாசகர் எவ்வளவு ஆழமாக சிந்தித்து எழுதி இருக்கிறார்....


Friday, September 19, 2014

சிவ புராணம் - இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே - பாகம் 4

சிவ புராணம் - இன்பமும் துன்பமும்  இல்லானே உள்ளானே  - பாகம் 4


பாடல்

நேச அருள் புரிந்து, நெஞ்சில் வஞ்சம் கெட,
பேராது நின்ற பெரும் கருணைப் பேர் ஆறே!
ஆரா அமுதே! அளவு இலாப் பெம்மானே!
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே!
நீராய் உருக்கி, என் ஆர் உயிர் ஆய் நின்றானே!
இன்பமும் துன்பமும் இல்லானே! உள்ளானே!

பொருள்

நேச = அன்பு

அருள் = கருணை

புரிந்து =  புரிந்து

நெஞ்சில் வஞ்சம் கெட = மனதில் உள்ள  வஞ்சனைகள் கெட

பேராது நின்ற = விலகாமல் நின்ற

பெரும் கருணைப் =  பெரிய கருணை

பேர் ஆறே = பெரிய ஆறே

ஆரா அமுதே! = அருமையான அமுதம் போன்றவனே

அளவு இலாப் பெம்மானே! = அளக்க முடியாத பெம்மானே

ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே! = ஆராய்ந்து அறியாதவர்கள் மன்னதில் ஒளிக்கும் ஒளி போன்றவனே

நீராய் உருக்கி, =  நீர் போல உருக்கி

என் ஆர் உயிர் ஆய் நின்றானே = என் உயிர் போல  நின்றவனே

இன்பமும் துன்பமும் இல்லானே! உள்ளானே! = இன்பமும் துன்பமும் இல்லாதவனே , உள்ளவனே

இவ்வளவுதான் பாட்டின் சொல் பொருள்  .விளக்கம்

இதன் உள் அர்த்தத்தை    சிந்திக்க சிந்திக்க விரியும்



சிந்திப்போம் 

-------------------பாகம் 2 -----------------------------------------------------------------------------


"நேச அருள் புரிந்து" 

நேசம் என்றால்  அன்பு.    

அது என்ன அன்பு - அருள் புரிந்து ?

அன்புக்கும் அருளுக்கும் என்ன வேறுபாடு ?

அன்பு என்பது தொடர்புடையவர்கள் மேல்  கொள்வது.

அருள் என்பது பொதுவாக அனைத்து உயிர்கள் மேலும் கொள்வது. 

அதனால் தான் வள்ளுவர் அன்புடைமையை இல்லறவியலிலும் , அருளுடைமையை  துறவரவியலிலும் வைத்தார். 

இறைவன் தன்னை வழிபடுபவர்கள் மேல் மட்டும் அல்ல, எல்லா உயிர்கள் மேலும்  அன்பு செலுத்துபவன். 

தமிழால் அன்று வைத்தாரையும் வாழ வைப்போன் என்பார் அருணகிரிநாதர். 

"நெஞ்சில் வஞ்சம் கெட"

வஞ்சம் என்பது உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவது அல்லது    செய்வது. 

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்.

என்பார் வள்ளுவர். 

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்பார்  வள்ளலார்.

அப்படி, இறைவன் நம் மனதில் உள்ள வஞ்சனைகளை எல்லாம் போகும்படி  
செய்வான்.

"அளவு இல்லாப் பெம்மானே "

அளவு என்பது மனிதன் வைத்துக் வைத்துக்  கொண்டது. காலம், பருமன், நீள அகலங்கள் , நிற அளவுகள் என்று எல்லாம் மனிதன் தன் வசதிக்காக  வைத்துக்  கொண்டது.  இறைவன் இந்த அளவுக்கெல்லாம் அப்பாற்பட்டவன். 

அவனை கால அளவில் அடைக்க முடியாது - எப்போது  தோன்றினான், எப்போது  முடிவான் என்று அளந்து சொல்ல முடியாது. 

அளவு இல்லாத ஒன்றை மனித மனம் கற்பனை  செய்து கூட பார்க்க முடியாது. 

ஒரு நாள் கடலில் உள்ள ஒரு ஆமை கிணற்றுக்குள் இருக்கும்   இன்னொரு ஆமையை சந்தித்தது. 

அப்போது கடல் ஆமை கிணற்று ஆமையிடம் சொன்னது, "நான் கடலில் இருந்து  வருகிறேன் "என்றது. 

கி. ஆமை:  கடல் எப்படி இருக்கும் ?

க. ஆமை: கடல் இந்த கிணறு மாதிரிதான் ஆனால் ரொம்ப பெரியது என்றது. 

கி. ஆமை ஒரு கரையில் இருந்து கிணற்றின் மத்திய பாகம் வரை தவ்வியது..."இவ்வளவு  பெரிசா இருக்குமா "என்று கேட்டது. 

கடல் ஆமை சிரித்துக் கொண்டே சொன்னது, "இல்லை இல்லை...இதை விட  மிகப்  பெரியது "என்றது. 

உடனே கிணற்று ஆமை - மீண்டும் கரைக்கு வந்து இப்போது முக்கால் கிணறு  தாண்டியது...."இவ்வளவு பெரிசா இருக்குமா "என்று கேட்டது. 

கிணற்று ஆமைக்கு கடலின் அளவை எப்படி சொல்வது ? கிணற்று ஆமைக்கு தெரிந்தது  எல்லாம் கிணற்றின்  அளவுதான்.

மணிவாசகர் கடல் ஆமை. நாம் கிணற்று ஆமை. நமக்குச் சொல்கிறார்  

"அளவு இல்லாப் பெம்மானே " என்று. 

 (மேலும் சிந்திப்போம் )
===============================பாகம் 3 ==================================

ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே!


ஓர்தல் என்றால் ஆராய்தல்; எண்ணுதல்; உணர்தல்; அறிதல்; தெளிதல் என்று பொருள். 


 மலையாளத்தில் "ஓர்மை" என்று ஒரு சொல் உண்டு. நினைவு , ஞாபகம் என்ற  அர்த்தத்தில். 

ஓராதார் உள்ளத்து - ஆராயாமல், சிந்திக்காமல் இருப்பவர்கள் உள்ளத்தில் ஒளிக்கும்  ஒளியானே. 


அது என்ன ஒளிக்கும் ஒளி ?

ஒளியை, வெளிச்சத்தை யாராலும் ஒளித்து வைக்க முடியாது. அது எங்கும்  இருக்கிறது.

இறைவனைப் பற்றி சிந்திக்காதவர்கள் மனதிலும் அவன் இருக்கிறான். ஆனால்  ஒளிந்து இருக்கிறான். வெளிப் படாமல் இருக்கிறான். 

எப்படி என்றால் ....

விறகில் தீயினன் பாலில் படு நெய்போல் 
மறைய நின்றுளான் மாமணிச் சோதியன் 
உறவு கோல் நாட்டி உணர்வு கயிற்றினால் 
முறுக வாங்கி கடைய முன் நிற்குமே என்று நாவுக்கரசர் கூறியது போல. 

விறகினுள் தீயைப்  போலவும்,பாலினுள் நெய்யைப்  போலவும், மணியின் உள்ளே உள்ள   ஒளி போலவும் மறைந்து   .நிற்கிறான் .அவன். 

விறகை கடைந்தால் ஜோதி வெளிப் படும். 

தயிரைக் கடைந்தால் நெய் வெளிப்படும் 

மணியை பட்டை தீட்டினால் ஒளி வெளிப்படும் 

அது போல இறை சிந்தனை இருந்தால் இறைவன் வெளிப்படுவான். 

இங்கே சற்று நிறுத்தி ஆழமாக சிந்திப்போம்.


இறை சிந்தனை என்று தான்  கூறுகிறார்.

இறைவன் இல்லை என்று சொல்லும் நாத்திகமும் இறை சிந்தனை பற்றித்தான்.  இல்லை என்று சொல்பவனும் இறைவனை பற்றி சிந்திக்கிறான். இறைவன் யார்,  அவன் எப்படி இருக்க  முடியும்,நமக்கு ஒரு சாட்சியும் இல்லையே, அவன் இருக்கிறானா, இல்லையா என்று அவனும் சிந்திக்கிறான். அந்த சிந்தனையின் முடிவில் அவனுக்கும் அந்த இறை சக்தி வெளிப் படலாம். எனவே தான் சைவ சிந்தாந்தம் நாத்திகத்தையும் தன்னுள் கொண்டு இருக்கிறது.  இறைவன் இல்லை என்று சொல்லுபவனும் சைவ மதத்தைச் சார்ந்தவன் தான்.   

"நம்பாதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே" என்று மணிவாசகர் சொல்லவில்லை. 

நம்பச் சொல்லவில்லை. சிந்திக்கச் சொல்கிறார். 

அந்த இறை சக்தி எல்லோர் மனத்திலும் இருக்கிறது. சிலரிடம் மறைந்து கிடக்கிறது, சிலரிடம் வெளிப்பட்டு இருக்கிறது. 

ஓராதார் உள்ளத்தும் அது இருக்கிறது. ஆனால் மறைந்து இருக்கிறது. 

ஒரு அரிக்கேன் விளக்கு இருக்கிறது. உள்ளே சுடர் எரிகிறது. வெளியே உள்ள கண்ணாடில்   கரி படிந்து  இருக்கிறது. வெளிச்சம் வெளியே  தெரியாது.

கரியை சுத்தமாக துடைத்தால் வெளிச்சம் பளீரென்று வெளிப்படும். 

அந்த கரி தான்  ஆணவம்,கன்மம் மாயை என்ற அழுக்குகள் (மும்மலம்) என்று சொல்லுவார்கள். 

அழுக்கை நீக்கினால் ஜோதி சுடர் விட்டு வெளிச்சம் தரும். 

ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே 


இப்படி ஒவ்வொரு வரிக்குள்ளும் மிக மிக ஆழ்ந்த அர்த்தங்கள் கொண்டது சிவ புராணம். 

வாசித்துக் கொண்டே போவதற்கு அல்ல. நீண்ட சிந்தனைக்கு உகந்தது சிவ புராணம். 

மேலும் சிந்திப்போம் 

--------------------------------\பாகம் 4/-----------------------------------------------------------------------------

நீராய் உருக்கி, என் ஆர் உயிர் ஆய் நின்றானே!

மனம் நெகிழ வேண்டும். மனம் நெகிழாதவர்களை "சரியான கல் நெஞ்சக் காரன்" என்று  சொல்லுவோம்.

இறைவன் திருவடி நம் மனதில் பதிய வேண்டும் என்றால் மனம் இளகி மெத்தென்று இருக்க வேண்டும். 

கல்லின் மேல் பாதம் படியுமா ?

நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்துருக என்பார் அருணகிரிநாதர். மனமாகிய கல் நெகிழ்ந்து உருக வேண்டும்.  


நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்து உ ருகத்
தஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல்சேர்
செஞ்சொல் புனைமாலை சிறந்திடவே
பஞ்சக்கர ஆனைபதம் பணிவாம்

அவர்கள் மனம் கல் என்றால் நம் மனம் எல்லாம் இரும்பாக இருக்கும். 

உருகி என்றால் எவ்வளவு உருக வேண்டும் ? நீர் போல உருகி ஓட வேண்டும். 

இளகிய உள்ளத்தில் இறைவன் ஒன்றாகக் கலந்து  விடுவான்.

நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே 

மனம்  உருகிய பின் சீவன் வேறு சிவன் வேறு அல்ல. நான் வேறு அவன் வேறு என்று நாம் பிரித்து வைத்துக் கொண்டு அல்லாடுகிறோம். மனம் உருகும்போது பிரிவினையும் உருகி  விடுகிறது.இரண்டும் ஒன்றாக கலந்து விடுகிறது. 


(அடுத்த வரியை நாளை சிந்திப்போம்) 













Wednesday, September 17, 2014

சிவ புராணம் - இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே - பாகம் 3

சிவ புராணம் - இன்பமும் துன்பமும்  இல்லானே உள்ளானே  - பாகம் 3


பாடல்

நேச அருள் புரிந்து, நெஞ்சில் வஞ்சம் கெட,
பேராது நின்ற பெரும் கருணைப் பேர் ஆறே!
ஆரா அமுதே! அளவு இலாப் பெம்மானே!
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே!
நீராய் உருக்கி, என் ஆர் உயிர் ஆய் நின்றானே!
இன்பமும் துன்பமும் இல்லானே! உள்ளானே!

பொருள்

நேச = அன்பு

அருள் = கருணை

புரிந்து =  புரிந்து

நெஞ்சில் வஞ்சம் கெட = மனதில் உள்ள  வஞ்சனைகள் கெட

பேராது நின்ற = விலகாமல் நின்ற

பெரும் கருணைப் =  பெரிய கருணை

பேர் ஆறே = பெரிய ஆறே

ஆரா அமுதே! = அருமையான அமுதம் போன்றவனே

அளவு இலாப் பெம்மானே! = அளக்க முடியாத பெம்மானே

ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே! = ஆராய்ந்து அறியாதவர்கள் மன்னதில் ஒளிக்கும் ஒளி போன்றவனே

நீராய் உருக்கி, =  நீர் போல உருக்கி

என் ஆர் உயிர் ஆய் நின்றானே = என் உயிர் போல  நின்றவனே

இன்பமும் துன்பமும் இல்லானே! உள்ளானே! = இன்பமும் துன்பமும் இல்லாதவனே , உள்ளவனே

இவ்வளவுதான் பாட்டின் சொல் பொருள்  .விளக்கம்

இதன் உள் அர்த்தத்தை    சிந்திக்க சிந்திக்க விரியும்



சிந்திப்போம் 

-------------------பாகம் 2 -----------------------------------------------------------------------------


"நேச அருள் புரிந்து" 

நேசம் என்றால்  அன்பு.    

அது என்ன அன்பு - அருள் புரிந்து ?

அன்புக்கும் அருளுக்கும் என்ன வேறுபாடு ?

அன்பு என்பது தொடர்புடையவர்கள் மேல்  கொள்வது.

அருள் என்பது பொதுவாக அனைத்து உயிர்கள் மேலும் கொள்வது. 

அதனால் தான் வள்ளுவர் அன்புடைமையை இல்லறவியலிலும் , அருளுடைமையை  துறவரவியலிலும் வைத்தார். 

இறைவன் தன்னை வழிபடுபவர்கள் மேல் மட்டும் அல்ல, எல்லா உயிர்கள் மேலும்  அன்பு செலுத்துபவன். 

தமிழால் அன்று வைத்தாரையும் வாழ வைப்போன் என்பார் அருணகிரிநாதர். 

"நெஞ்சில் வஞ்சம் கெட"

வஞ்சம் என்பது உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவது அல்லது    செய்வது. 

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்.

என்பார் வள்ளுவர். 

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்பார்  வள்ளலார்.

அப்படி, இறைவன் நம் மனதில் உள்ள வஞ்சனைகளை எல்லாம் போகும்படி  
செய்வான்.

"அளவு இல்லாப் பெம்மானே "

அளவு என்பது மனிதன் வைத்துக் வைத்துக்  கொண்டது. காலம், பருமன், நீள அகலங்கள் , நிற அளவுகள் என்று எல்லாம் மனிதன் தன் வசதிக்காக  வைத்துக்  கொண்டது.  இறைவன் இந்த அளவுக்கெல்லாம் அப்பாற்பட்டவன். 

அவனை கால அளவில் அடைக்க முடியாது - எப்போது  தோன்றினான், எப்போது  முடிவான் என்று அளந்து சொல்ல முடியாது. 

அளவு இல்லாத ஒன்றை மனித மனம் கற்பனை  செய்து கூட பார்க்க முடியாது. 

ஒரு நாள் கடலில் உள்ள ஒரு ஆமை கிணற்றுக்குள் இருக்கும்   இன்னொரு ஆமையை சந்தித்தது. 

அப்போது கடல் ஆமை கிணற்று ஆமையிடம் சொன்னது, "நான் கடலில் இருந்து  வருகிறேன் "என்றது. 

கி. ஆமை:  கடல் எப்படி இருக்கும் ?

க. ஆமை: கடல் இந்த கிணறு மாதிரிதான் ஆனால் ரொம்ப பெரியது என்றது. 

கி. ஆமை ஒரு கரையில் இருந்து கிணற்றின் மத்திய பாகம் வரை தவ்வியது..."இவ்வளவு  பெரிசா இருக்குமா "என்று கேட்டது. 

கடல் ஆமை சிரித்துக் கொண்டே சொன்னது, "இல்லை இல்லை...இதை விட  மிகப்  பெரியது "என்றது. 

உடனே கிணற்று ஆமை - மீண்டும் கரைக்கு வந்து இப்போது முக்கால் கிணறு  தாண்டியது...."இவ்வளவு பெரிசா இருக்குமா "என்று கேட்டது. 

கிணற்று ஆமைக்கு கடலின் அளவை எப்படி சொல்வது ? கிணற்று ஆமைக்கு தெரிந்தது  எல்லாம் கிணற்றின்  அளவுதான்.

மணிவாசகர் கடல் ஆமை. நாம் கிணற்று ஆமை. நமக்குச் சொல்கிறார்  

"அளவு இல்லாப் பெம்மானே " என்று. 

 (மேலும் சிந்திப்போம் )
===============================பாகம் 3 ==================================

ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே!


ஓர்தல் என்றால் ஆராய்தல்; எண்ணுதல்; உணர்தல்; அறிதல்; தெளிதல் என்று பொருள். 


 மலையாளத்தில் "ஓர்மை" என்று ஒரு சொல் உண்டு. நினைவு , ஞாபகம் என்ற  அர்த்தத்தில். 

ஓராதார் உள்ளத்து - ஆராயாமல், சிந்திக்காமல் இருப்பவர்கள் உள்ளத்தில் ஒளிக்கும்  ஒளியானே. 


அது என்ன ஒளிக்கும் ஒளி ?

ஒளியை, வெளிச்சத்தை யாராலும் ஒளித்து வைக்க முடியாது. அது எங்கும்  இருக்கிறது.

இறைவனைப் பற்றி சிந்திக்காதவர்கள் மனதிலும் அவன் இருக்கிறான். ஆனால்  ஒளிந்து இருக்கிறான். வெளிப் படாமல் இருக்கிறான். 

எப்படி என்றால் ....

விறகில் தீயினன் பாலில் படு நெய்போல் 
மறைய நின்றுளான் மாமணிச் சோதியன் 
உறவு கோல் நாட்டி உணர்வு கயிற்றினால் 
முறுக வாங்கி கடைய முன் நிற்குமே என்று நாவுக்கரசர் கூறியது போல. 

விறகினுள் தீயைப்  போலவும்,பாலினுள் நெய்யைப்  போலவும், மணியின் உள்ளே உள்ள   ஒளி போலவும் மறைந்து   .நிற்கிறான் .அவன். 

விறகை கடைந்தால் ஜோதி வெளிப் படும். 

தயிரைக் கடைந்தால் நெய் வெளிப்படும் 

மணியை பட்டை தீட்டினால் ஒளி வெளிப்படும் 

அது போல இறை சிந்தனை இருந்தால் இறைவன் வெளிப்படுவான். 

இங்கே சற்று நிறுத்தி ஆழமாக சிந்திப்போம்.


இறை சிந்தனை என்று தான்  கூறுகிறார்.

இறைவன் இல்லை என்று சொல்லும் நாத்திகமும் இறை சிந்தனை பற்றித்தான்.  இல்லை என்று சொல்பவனும் இறைவனை பற்றி சிந்திக்கிறான். இறைவன் யார்,  அவன் எப்படி இருக்க  முடியும்,நமக்கு ஒரு சாட்சியும் இல்லையே, அவன் இருக்கிறானா, இல்லையா என்று அவனும் சிந்திக்கிறான். அந்த சிந்தனையின் முடிவில் அவனுக்கும் அந்த இறை சக்தி வெளிப் படலாம். எனவே தான் சைவ சிந்தாந்தம் நாத்திகத்தையும் தன்னுள் கொண்டு இருக்கிறது.  இறைவன் இல்லை என்று சொல்லுபவனும் சைவ மதத்தைச் சார்ந்தவன் தான்.   

"நம்பாதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே" என்று மணிவாசகர் சொல்லவில்லை. 

நம்பச் சொல்லவில்லை. சிந்திக்கச் சொல்கிறார். 

அந்த இறை சக்தி எல்லோர் மனத்திலும் இருக்கிறது. சிலரிடம் மறைந்து கிடக்கிறது, சிலரிடம் வெளிப்பட்டு இருக்கிறது. 

ஓராதார் உள்ளத்தும் அது இருக்கிறது. ஆனால் மறைந்து இருக்கிறது. 

ஒரு அரிக்கேன் விளக்கு இருக்கிறது. உள்ளே சுடர் எரிகிறது. வெளியே உள்ள கண்ணாடில்   கரி படிந்து  இருக்கிறது. வெளிச்சம் வெளியே  தெரியாது.

கரியை சுத்தமாக துடைத்தால் வெளிச்சம் பளீரென்று வெளிப்படும். 

அந்த கரி தான்  ஆணவம்,கன்மம் மாயை என்ற அழுக்குகள் (மும்மலம்) என்று சொல்லுவார்கள். 

அழுக்கை நீக்கினால் ஜோதி சுடர் விட்டு வெளிச்சம் தரும். 

ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே 


இப்படி ஒவ்வொரு வரிக்குள்ளும் மிக மிக ஆழ்ந்த அர்த்தங்கள் கொண்டது சிவ புராணம். 

வாசித்துக் கொண்டே போவதற்கு அல்ல. நீண்ட சிந்தனைக்கு உகந்தது சிவ புராணம். 

மேலும் சிந்திப்போம் 




Tuesday, September 16, 2014

சிவ புராணம் - இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே - பாகம் 2

சிவ புராணம் - இன்பமும் துன்பமும்  இல்லானே உள்ளானே  - பாகம் 2


பாடல்

நேச அருள் புரிந்து, நெஞ்சில் வஞ்சம் கெட,
பேராது நின்ற பெரும் கருணைப் பேர் ஆறே!
ஆரா அமுதே! அளவு இலாப் பெம்மானே!
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே!
நீராய் உருக்கி, என் ஆர் உயிர் ஆய் நின்றானே!
இன்பமும் துன்பமும் இல்லானே! உள்ளானே!

பொருள்

நேச = அன்பு

அருள் = கருணை

புரிந்து =  புரிந்து

நெஞ்சில் வஞ்சம் கெட = மனதில் உள்ள  வஞ்சனைகள் கெட

பேராது நின்ற = விலகாமல் நின்ற

பெரும் கருணைப் =  பெரிய கருணை

பேர் ஆறே = பெரிய ஆறே

ஆரா அமுதே! = அருமையான அமுதம் போன்றவனே

அளவு இலாப் பெம்மானே! = அளக்க முடியாத பெம்மானே

ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே! = ஆராய்ந்து அறியாதவர்கள் மன்னதில் ஒளிக்கும் ஒளி போன்றவனே

நீராய் உருக்கி, =  நீர் போல உருக்கி

என் ஆர் உயிர் ஆய் நின்றானே = என் உயிர் போல  நின்றவனே

இன்பமும் துன்பமும் இல்லானே! உள்ளானே! = இன்பமும் துன்பமும் இல்லாதவனே , உள்ளவனே

இவ்வளவுதான் பாட்டின் சொல் பொருள்  .விளக்கம்

இதன் உள் அர்த்தத்தை    சிந்திக்க சிந்திக்க விரியும்



சிந்திப்போம் 

-------------------பாகம் 2 -----------------------------------------------------------------------------


"நேச அருள் புரிந்து" 

நேசம் என்றால்  அன்பு.    

அது என்ன அன்பு - அருள் புரிந்து ?

அன்புக்கும் அருளுக்கும் என்ன வேறுபாடு ?

அன்பு என்பது தொடர்புடையவர்கள் மேல்  கொள்வது.

அருள் என்பது பொதுவாக அனைத்து உயிர்கள் மேலும் கொள்வது. 

அதனால் தான் வள்ளுவர் அன்புடைமையை இல்லறவியலிலும் , அருளுடைமையை  துறவரவியலிலும் வைத்தார். 

இறைவன் தன்னை வழிபடுபவர்கள் மேல் மட்டும் அல்ல, எல்லா உயிர்கள் மேலும்  அன்பு செலுத்துபவன். 

தமிழால் அன்று வைத்தாரையும் வாழ வைப்போன் என்பார் அருணகிரிநாதர். 

"நெஞ்சில் வஞ்சம் கெட"

வஞ்சம் என்பது உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவது அல்லது    செய்வது. 

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்.

என்பார் வள்ளுவர். 

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்பார்  வள்ளலார்.

அப்படி, இறைவன் நம் மனதில் உள்ள வஞ்சனைகளை எல்லாம் போகும்படி  
செய்வான்.

"அளவு இல்லாப் பெம்மானே "

அளவு என்பது மனிதன் வைத்துக் வைத்துக்  கொண்டது. காலம், பருமன், நீள அகலங்கள் , நிற அளவுகள் என்று எல்லாம் மனிதன் தன் வசதிக்காக  வைத்துக்  கொண்டது.  இறைவன் இந்த அளவுக்கெல்லாம் அப்பாற்பட்டவன். 

அவனை கால அளவில் அடைக்க முடியாது - எப்போது  தோன்றினான், எப்போது  முடிவான் என்று அளந்து சொல்ல முடியாது. 

அளவு இல்லாத ஒன்றை மனித மனம் கற்பனை  செய்து கூட பார்க்க முடியாது. 

ஒரு நாள் கடலில் உள்ள ஒரு ஆமை கிணற்றுக்குள் இருக்கும்   இன்னொரு ஆமையை சந்தித்தது. 

அப்போது கடல் ஆமை கிணற்று ஆமையிடம் சொன்னது, "நான் கடலில் இருந்து  வருகிறேன் "என்றது. 

கி. ஆமை:  கடல் எப்படி இருக்கும் ?

க. ஆமை: கடல் இந்த கிணறு மாதிரிதான் ஆனால் ரொம்ப பெரியது என்றது. 

கி. ஆமை ஒரு கரையில் இருந்து கிணற்றின் மத்திய பாகம் வரை தவ்வியது..."இவ்வளவு  பெரிசா இருக்குமா "என்று கேட்டது. 

கடல் ஆமை சிரித்துக் கொண்டே சொன்னது, "இல்லை இல்லை...இதை விட  மிகப்  பெரியது "என்றது. 

உடனே கிணற்று ஆமை - மீண்டும் கரைக்கு வந்து இப்போது முக்கால் கிணறு  தாண்டியது...."இவ்வளவு பெரிசா இருக்குமா "என்று கேட்டது. 

கிணற்று ஆமைக்கு கடலின் அளவை எப்படி சொல்வது ? கிணற்று ஆமைக்கு தெரிந்தது  எல்லாம் கிணற்றின்  அளவுதான்.

மணிவாசகர் கடல் ஆமை. நாம் கிணற்று ஆமை. நமக்குச் சொல்கிறார்  

"அளவு இல்லாப் பெம்மானே " என்று. 

 (மேலும் சிந்திப்போம் )


Monday, September 15, 2014

சிவ புராணம் - இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே - பாகம் 1

சிவ புராணம் - இன்பமும் துன்பமும்  இல்லானே உள்ளானே  - பாகம் 1 


பாடல்

நேச அருள் புரிந்து, நெஞ்சில் வஞ்சம் கெட,
பேராது நின்ற பெரும் கருணைப் பேர் ஆறே!
ஆரா அமுதே! அளவு இலாப் பெம்மானே!
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே!
நீராய் உருக்கி, என் ஆர் உயிர் ஆய் நின்றானே!
இன்பமும் துன்பமும் இல்லானே! உள்ளானே!

பொருள்

நேச = அன்பு

அருள் = கருணை

புரிந்து =  புரிந்து

நெஞ்சில் வஞ்சம் கெட = மனதில் உள்ள  வஞ்சனைகள் கெட

பேராது நின்ற = விலகாமல் நின்ற

பெரும் கருணைப் =  பெரிய கருணை

பேர் ஆறே = பெரிய ஆறே

ஆரா அமுதே! = அருமையான அமுதம் போன்றவனே

அளவு இலாப் பெம்மானே! = அளக்க முடியாத பெம்மானே

ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே! = ஆராய்ந்து அறியாதவர்கள் மன்னதில் ஒளிக்கும் ஒளி போன்றவனே

நீராய் உருக்கி, =  நீர் போல உருக்கி

என் ஆர் உயிர் ஆய் நின்றானே = என் உயிர் போல  நின்றவனே

இன்பமும் துன்பமும் இல்லானே! உள்ளானே! = இன்பமும் துன்பமும் இல்லாதவனே , உள்ளவனே

இவ்வளவுதான் பாட்டின் சொல் பொருள்  .விளக்கம்

இதன் உள் அர்த்தத்தை    சிந்திக்க சிந்திக்க விரியும்

சிந்திப்போம் 

Sunday, September 14, 2014

சிவபுராணம் - பாசமாம் பற்று அறுத்து பாரிக்கும் ஆரியனே

சிவபுராணம் - பாசமாம் பற்று அறுத்து பாரிக்கும் ஆரியனே 



பாடல்

நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காஅட்டி
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே.
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேனா ரமுதே சிவபுரனே
பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே

சீர் பிரித்த பின்

நிலந்தன் மேல் வந்து அருளி நீள் கழல்கள் காட்டி
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே.
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேனார் அமுதே சிவபுரனே
பாசமாம் பற்று அறுத்து  பாரிக்கும் ஆரியனே

பொருள் 

நிலந்தன் மேல் வந்து அருளி = நிலத்தின் மேல் வந்து அருளி.  மனிதன் இறைவனை காலம் காலமாய்  தேடிக் கொண்டிருக்கிறான். தேடி கண்டு அடைய முடியாதவன் இறைவன் என்று அவனுக்கு புரிவதில்லை. தேடுகிறோம் என்றால் எதைத் தேடுகிறோம் என்று தெரிய வேண்டும். அது எப்படி இருக்கும், எந்த மாதிரி இருக்கும், என்ன வடிவில் இருக்கும், தெரிய வேண்டும். அது தெரியாமல் எப்படி தேடுவது ? அது மட்டும் அல்ல, அது எங்கே இருக்கும் என்றும் தெரிய வேண்டும். தொலைத்தது ஒரு இடத்தில், தேடுவது இன்னொரு இடத்தில் என்றால் கிடக்குமா ? இத்தனையும் தெரிந்து விட்டால் பின் எதற்கு தேடுவது ?

தேடினால் கிடைக்காது என்று நம் மதம் பல விதங்களில் சொல்லி இருக்கிறது. மாலும், அயனும் தேடிக் காண முடியாத திருவடி என்று சொல்வது ஒரு குறியீடு. தேடினால் கிடைக்காது என்பது அதன் அர்த்தம்.

தேடுவதை நிறுத்தினால் ஒரு வேளை கிடைக்கலாம்.

மணிவாசகர் சொல்கிறார் - நிலத்தில் வந்து அருளினான் என்று. அவனே வந்து, அவனே அருளினான்.

தட்டுங்கள் திறக்கப்படும்
கேளுங்கள் கொடுக்கப்படும்
தேடுங்கள் கிடைக்கும்

என்பது மற்ற மத நம்பிக்கையாக இருக்கலாம். ஆனால், இந்து மதம், அதிலும் குறிப்பாக சைவ மதம், தேடினால் அடைய முடியாது என்றே சொல்லி வந்திருக்கிறது.


நீள் கழல்கள் காட்டி = தன்னுடைய நீண்ட கழல் அணிந்த திருவடிகளை காட்டி

நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் = நாயை விட கீழாக இருந்த அடியேனுக்கு

தாயிற் சிறந்த = தாயை விட சிறந்த

தயாவான தத்துவனே. = தயாவான தத்துவனே

மாசற்ற சோதி = குற்றம் குறை இல்லாத சோதியே

மலர்ந்த மலர்ச்சுடரே = மலர்ந்த மலர் போன்ற சுடரே. சுடர் என்றால் வெளிச்சம் இருக்கும். வெப்பமும் இருக்கும். இந்தச் சுடரில் வெளிச்சம் இருக்கும், ஆனால் மலர் போல குளிர்ச்சியாக இருக்கும். மலர்ந்த மலர்ச் சுடர். ஞானத்தைத் தரும், துன்பத்தைத் தராது.

தேசனே = குரு போன்றவனே

தேனார் அமுதே  = தேனே, அருமையான அமுதம் போன்றவனே

சிவபுரனே = சிவ புரத்தில் உள்ளவனே

பாசமாம் பற்று அறுத்து  பாரிக்கும் ஆரியனே = பாசம் என்ற பற்றை அறுத்து காவல் புரியும் ஆரியனே



Wednesday, September 3, 2014

சிவபுராணம் - அறம் , பாவம் என்ற கயிறுகள்

சிவபுராணம் - அறம் , பாவம் என்ற கயிறுகள் 


நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் றன்னை
மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவ மென்னும் அருங்கயிற்றாற் கட்டிப்
புறந்தோல்போர்த் தெங்கும் புழுஅழுக்கு மூடி
மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை

மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய
விலங்கு மனத்தால் விமலா வுனக்குக்
கலந்தஅன் பாகிக் கசிந்துள் ளுருகும்  
நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி


மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய

நம் புலன்கள் நமக்கு இன்பத்தை நுகரச் செய்து நமக்கு நல்லது செய்வது போலத் தோன்றும். ஆனால், இறுதியில் அவை நமக்கு நன்மைக்கு பதில் தீமையே  செய்கின்றன. ஒன்றிலிருந்து ஒன்றாக, ஒன்றுக்கு மேல் ஒன்றாக மேலும் மேலும் வேண்டும் என்று நம்மை உந்தித் தள்ளி கடைசியில் நம்மை துன்பத்தில் தள்ளி விடுகின்றன.



புறந்தோல்போர்த் தெங்கும் புழுஅழுக்கு மூடி
மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை


உலகிலேயே மிகப் பெரிய பற்று இந்த உடல் மேல் கொண்ட பற்று. இந்த உடலுக்கு ஒன்றும் ஆகி விடக் கூடாது என்பதில் கவனமாய் இருக்கிறோம். தாய், தந்தை, கணவன் , மனைவி , பிள்ளைகள் எல்லாம் நமக்கு அடுத்து தான். இந்த உடல் பற்றை விட்டால், நம் செயலும் சிந்தனையும் மாறிப் போகும்.

எனவே தான் ஞானிகள் எல்லாம், இந்த உடல் ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்று சொல்லி வந்திருக்கிறார்கள்.

இந்த உடலுக்குள்ளே என்ன இருக்கிறது ? இந்த தோலை நீக்கிப் பார்த்தால் பார்க்க சகிக்காது. நாற்றம் அடிக்கும். உடல் எங்கும் புழுவும் அழுக்கும் நிறைந்து இருக்கிறது. ஒன்பது வாயிலைக் கொண்ட உடலில் அனைத்து வாயில்களிலும் உடற் கழிவுகள் எந்நேரமும் வெளியேறிக் கொண்டே இருக்கின்றன. இந்த உடலின் மேல் என்ன பெரிய பற்று ?



அறம்பாவ மென்னும் அருங்கயிற்றாற் கட்டிப்

தீ  வினை மட்டும் அல்ல, நல் வினையும் பிறவிக்கு வழி வகுக்கிறது.
நல்லதும் தீயதும் இல்லாமல் ஒரு வினை இருக்க முடியுமா என்ன ? Beyond Good and Evil  என்று Neitsche ஒரு புத்தகம் எழுதி இருக்கிறர். படித்துப் பார்க்க வேண்டும்.



விலங்கு மனத்தால் விமலா வுனக்குக்
கலந்தஅன் பாகிக் கசிந்துள் ளுருகும்
நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி

விலங்கு மனம். நல்லது சொன்னால் மனதில் நிறுத்திக் கொள்ளாது.  உணர்ச்சி ஒன்றே பிரதானமாக அலையும். உணர்ச்சி அறிவை மழுங்க அடிக்கும். அந்த விலங்கு மனத்தால் உன் மேல் அன்பு கொள்ளும் நலம் இல்லாத எனக்கு நீ தந்தாய் என்கிறார் அடிகள்.

என்ன தான் தந்தான் ?







Sunday, August 31, 2014

சிவ புராணம் - மனம் கழிய நின்ற மறையோனே

சிவ புராணம் - மனம் கழிய நின்ற மறையோனே


பாடல்

மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே
கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று
பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்

பொருள்

மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே = சொல்லும் மனமும் கடந்து நின்ற மறையோனே

கறந்தபால் = அப்போதுதான் கறந்த பாலோடு

கன்னலொடு= கன்னல் என்றால்  கரும்பு. இங்கே  சர்க்கரை

நெய்கலந்தாற் போலச் = நெய் கலந்தார்ப் போல

சிறந்தடியார் = சிறந்து அடியார்

சிந்தனையுள் = சிந்தனையுள்

தேனூறி நின்று  = தேன் ஊற நின்ற

பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான் = பிறந்த பிறப்பை அறுக்கும் எங்கள் பெருமான்

ஏதோ மாணிக்க வாசகர் சர்கரைப் பொங்கல் செய்வதற்கு சொல்லித் தருவது போல இருக்கிறதா ?

அப்படி அல்ல.

மிக மிக ஆழமாக சிந்திக்க வேண்டிய விஷயத்தை மாணிக்க வாசகர் அருளிச்  செய்திருக்கிறார்.

எல்லோரும் இன்பம் வேண்டும், இன்பம் வேண்டும் என்று விரும்புகிறோம்.

ஆனால் துன்பம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

ஏன் ?

ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று தெரிகிறது.

ஆசை புலன்கள் வழி வருகிறது.

புலன்கள் மனதால் செலுத்தப் படுகிறது.

புலன்களை அடக்க வேண்டும் என்றால் மனதை அடக்க வேண்டும்.

மனதை எப்படி அடக்குவது ?

அது தான் சிக்கலான விஷயம்.

நாம் எவ்வளவுக்கு எவ்வளவு மனதை கட்டுப் படுத்த நினைக்கிறோமோ அவ்வளவுக்கவளவு அது நம்மை மீறிச் செல்லும்.

மருந்து சாப்பிடுவதற்கு முன் குரங்கை நினைக்காதே என்றால் கட்டாயம் நினைக்கும்.

மனதை அடக்குவது என்றால் எது மனதை அடக்கும் ?

மனம் தான் மனதை அடக்க வேண்டும். அது எப்படி மனமே மனதை அடக்க முடியும் ?

மனதை அடக்க இரண்டு வழிகள்.

ஒன்று , மனதை ஒன்றில் இலயிக்க விடுவது. மனம் ஒன்றில் இலயித்து விட்டால் வேறு ஒன்றின் பின்னால் போகாது.

ஆனால் ,  இந்த இலயிப்பு நிரந்தரமாக இருக்காது. இலயிப்பு தீரும்போது, மீண்டும் மனம் அதன் வழியில் தறி கேட்டு ஓட ஆரம்பிக்கும்.

அதற்கு நிரந்திர தீர்வு, "மனோ நாசம்".

மனமே இல்லை என்றால் ?

இதைத்தான் மனோ நாசம் என்கிறார்கள்.

இதைத்தான் இரமண மகரிஷி


பாடல்

இலயமு நாச மிரண்டா மொடுக்க
மிலயித் துளதெழு முந்தீபற
வெழாதுரு மாய்ந்ததே லுந்தீபற

சீர் பிரித்த பின்

இலயமும் நாசம் இரண்டாம் ஒடுக்க
இலயித்துளது எழும் உந்தீ பற
எழாது உரு மாய்ந்ததேல் உந்தீபற.


மனம் ஓடுங்கள் மனோ இலயம், மனோ நாசம் என்று இரண்டு உண்டு.
இலையித்துள்ளது (அதாவது இலயித்த மனம்) மீண்டும் எழும்.
மீண்டும் எழாது உரு மாய்ந்தால். அதாவது மனம் நாசம் ஆனால், அது மீண்டும் எழாது.

அதைத்தான் - "மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே"   என்றார்.

மனம் கழிந்த பின் நிற்பவன் அவன்.


"கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று"

சிற்றின்பம் தாண்டி பேரின்பம் அடையும் போது அந்த இன்பம் பாலோடு, சர்க்கரை சேர்த்து , அதோடு நெய்யும் கலந்து தேன் போல தித்திக்கக் கூடியது.

அந்த பரமானந்தம் பெற்றவர்கள் எல்லோரும் ஒரே மாதிரி சொல்கிறார்கள்.


"அளியில் விளைந்த ஓர் ஆனந்தத் தேனை " என்பார்

ஒளியில் விளைந்த உ யர்ஞான பூதரத் துச்சியின்மேல்
அளியில் விளைந்ததொ ராநந்தத் தேனை அநாதியிலே
வெளியில் விளைந்த வெறும்பாழைப்பெற்ற வெறுந்தனியைத்
தௌiய விளம்பியவா, முகமாறுடைத் தேசிகனே.


களி நின்ற வெள்ளம் கரை கண்டதில்லை என்று கரை புரண்டு ஓடும் ஆனந்த  வெள்ளத்தைப் பற்றி கூறுகிறார் அபிராமி  பட்டர்.

வெளிநின்ற நின் திருமேனியைப் பார்த்து என் விழியும் நெஞ்சும்
களிநின்ற வெள்ளம் கரை கண்டதில்லை, கருத்தினுள்ளே
தெளிகின்ற ஞானம் திகழ்கின்றது என்ன திருவுளமோ?-
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே!

இராமலிங்க அடிகளார் கூறுகிறார்

தனித் தனி முக்கனி பிழிந்து வடித்து ஒன்றாகக் கூட்டிச்

சருக்கரையும் கற்கண்டின் பொடியு மிகக் கலந்தே

தனித்த நறுந் தேன் பெய்து பசும்பாலும் தெங்கின்

தனிப்பாலும் சேர்த்தொருதீம் பருப்பிடியும் விரவி

இனித்த நறு நெய்யளைந்தே இளஞ்சூட்டின் இறக்கி

எடுத்தசுவைக் கட்டியினும் இனித்திடுந்தெள் ளமுதே

அனித்தமறத் திருப்பொதுவில் விளங்குநடத் தரசே !

அடிமலர்க்கென் சொல்லணியாம் அலங்கலணிந் தருளே

பேரின்பம் எப்படி இருக்கும் என்றால் சிற்றிபத்தைத்தான் உதாரணம் சொல்ல முடியும். 

இது ஒரு சுவை. இதை விட பெரிய சுவை பேரின்பம்.

ஆழ்ந்து படித்து உணர வேண்டிய பாடல்கள். 










Wednesday, August 27, 2014

சிவ புராணம் - பூவில் மணம் போல

சிவ புராணம் - பூவில் மணம் போல


தோற்றம், நிலைப்பு, இறுதி என்ற இந்த மூன்றும் இல்லாதவனே. அனைத்து உலகையும் ஆக்குவாய், காப்பாய், அழிப்பாய், அருள் தருவாய். என்னை இந்த உலகில் போக்குவாய். என்னை உன்னுடைய பணியில் புகுவிப்பாய். பூவில் மணம் போல இருப்பவனே. தூரத்தில் இருப்பவனே. அருகில் இருப்பவனே.

பாடல்

ஆக்க மளவிறுதி யில்லாய் அனைத்துலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே

பொருள்


ஆக்கம் = தொடக்கம்

அளவு = இருத்தல்

இறுதி யில்லாய் = முடிவு இல்லாதவனே

அனைத்துலகும் = அனைத்து உலகையும்

ஆக்குவாய் = ஆக்குவாய்

காப்பாய் = காத்தருள்வாய்

அழிப்பாய் = அழிப்பாய்

அருள்தருவாய் = அருள் தருவாய்

போக்குவாய் என்னைப் = என்னை இந்த பிறவியில் போக்குவாய்

புகுவிப்பாய் நின்தொழும்பின் = உன் பணியில் என்னை புகும்படி செய்வாய்

நாற்றத்தின் நேரியாய் = பூவின் மணம் போல

சேயாய் = தூரத்தில் இருப்பவனே

நணியானே = அருகிலும் இருப்பவனே


சரி. மிக எளிமையான பகுதி. மேலே செல்வோம் என்று அவசரப் படக்கூடாது.

எல்லாவற்றிற்கும் ஒரு கணக்கு உண்டு. ஒரு நியதி உண்டு.

பிறத்தல், வளர்தல்,அழிதல் என்று ஒரு வரை முறை உண்டு. இதைத்தான் நாம் தினமும்  காண்கிறோம்.

நாம் காணாத  ஒன்றை நம்மால் புரிந்து கொள்ள  முடியாது.

பிறக்காத ஒன்றை, இறக்காத ஒன்றை நம்மால் புரிந்து கொள்ள முடியுமா ?

இறைவன் இந்தக்  கணக்கில்   அடங்காதவன்

காலமும் கணக்கும் நீத்த காரணன் என்பார் கம்பர்

'மூலமும் நடுவும் ஈறும் இல்லது ஓர் மும்மைத்து ஆய
காலமும்,கணக்கும், நீத்த காரணன்-கை வில் 
                                  ஏந்தி,
சூலமும்திகிரி சங்கும் கரகமும் துறந்து, தொல்லை
ஆலமும் மலரும்வெள்ளி்ப்பொருப்பும் விட்டு,-
                         அயோத்தி வந்தான்;

இறைவன் பிறந்து, வளர்ந்து, அழிவது என்ற கணக்கில் வராதவன். அதை எப்படி நாம் புரிந்து கொள்வது ?

"ஆக்கம் அளவு இறுதி இல்லாய்" என்றார்.

ஏன் பூவின் மணம் என்று சொன்னார் ?

பூ தெரிகிறது. ஆனால் அதில் உள்ள மணம் தெரியாது.

கணவனும் மனைவியும் தெரிகிறார்கள். அவர்களுக்கு இடையே உள்ள அன்பு தெரியாது.

செயல் தெரியும். செயலுக்கு  பின்னால் இருக்கும் அறிவு தெரியாது.

அது போல உலகம் தெரிகிறது. அதற்கு பின்னால் உள்ள இறைவன் தெரியாது.

பூவை நுகர்ந்தவர்களுக்கு அதன் மணம் தெரியும்.

மணி வாசகர் சொல்கிறார் ....அனைத்து உலகையும் ஆக்குவாய், அழிப்பாய், காத்து  அருள்வாய் என்று.

நாம் செய்யும் செயல்களில் எத்தனை சதவீதம் நாம் நினைத்து, முடிவு செய்து நடப்பது.

நாளை என்ன செய்வோம் என்று நமக்குத் தெரியாது.

படுக்கப் போகும் போது திருமகள் போல இருந்த கைகேயி, சிறிது நேரத்தில் கூனி சொல் கேட்டு  கொடுமையிலும் கொடுமையான பெண்ணாக ஆனாள் . நினைத்திருப்பாளா இப்படி தான் செய்வோம் என்று.


என் செயல் ஆவது ஒன்றும் இல்லை இனி தெய்வமே உன் செயல் என்று உணரப்  பெற்றேன் என்றார்  பட்டினத்தார்.

 என்செய லாவதியாதொன்று மில்லை இனித்தெய்வமே
     உன்செய லெயென்றுணர்ப் பெற்றேன் இந்தஊனெடுத்த
     பின்செய்த தீவினையாதொன்று மில்லை பிறப்பதற்கு
     முன்செய்த தீவினையோலிங் ஙனேவந்து மூண்டதுவே



நான் இங்கு வந்து பிறந்ததும், இப்படி வளர்ந்ததும், இன்று இப்படி இருப்பதும் இறைவா உன் செயல் என்று அனைத்தையும் அவனிடம் விட்டு  விடுகிறார்.

"போக்குவாய் என்னை புகுவிப்பாய் நின் தொழும்பில் "

 எல்லாம் அவன் செயல்.   சரணாகதி.

"சேயாய் நணியானே" - அறிந்து கொள்ளும் வரை அவன் தூரத்தில் இருப்பவன். அறிந்து கொண்டவ பின் அண்மையில் இருப்பவன்.

யாவர்க்கும் அரியாய் எமக்கு எளியாய் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே

பெம்மான் இவன் அன்றே என்றார் திரு ஞான  சம்பந்தர். பெம்மான் அவன் அன்றே என்று   .சொல்லவில்லை.  "இவன்" என்பது அண்மைச் சுட்டு.  "அவன்" என்பது  சேய்மைச் சுட்டு.

மிக மிக நிதானமாக படிக்க வேண்டிய நூல் சிவ புராணம்.


Tuesday, August 26, 2014

சிவ புராணம் - பொய்யாயின போய் அகல வந்து அருளி - பாகம் 2

சிவ புராணம் - பொய்யாயின  போய் அகல வந்து அருளி - பாகம் 2

பாடல்

வெய்யாய் தணியாய், இயமானனாம் விமலா
பொய்யாயின எல்லாம், போயகல வந்தருளி
மெய்ஞ்ஞானம் ஆகி, மிளிர்கின்ற மெய்ச்சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன், இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை, அகல்விக்கும் நல்லறிவே

வெப்பமாய் இருப்பவனே. குளிர்ச்சியாய் இருப்பவனே. நியமங்கள் என்ற மலம் (அழுக்கு, குற்றம்) இல்லாதவனே. என்னை விட்டு பொய்யாயின போய் விட அருள்  .செய்தவனே.  எனக்கு ஒரு ஞானமும் இல்லாத எனக்கு அஞ்ஞானத்தை போக்கி நல்ல அறிவை கொடுத்தவனே


பொய்யாயின எல்லாம், போயகல வந்தருளி


பொய்யாயின எல்லாம் எப்படி போகும் ? 

மணிவாசகர் சொல்கிறார் - அவனே "வந்து அருளினான்" என்று.

இறைவன் யார், அவன் எப்படி இருப்பான், கறுப்பா சிவப்பா, உயரமா குட்டையா என்று நமக்குத் தெரியாது. பின் எப்படி இறைவனை தேடிக் கண்டு அடைவது. 

நமக்கு அவனைத் தெரியாது. அவனுக்கு நம்மைத் தெரியும் அல்லவா ? 

அவனே வந்து அருள் செய்ததனால் பொய்யாயினவெல்லாம் போயிற்று. 

இதையே சொல்ல வந்த அருணகிரி நாதரும் 

"குருவாய் வருவாய் அருள்வாய் குகனே"  என்றார்.


"அஞ்ஞானம் தன்னை, அகல்விக்கும் நல்லறிவே"

ஒளி வந்தால் இருள் தானே விலகும். நல்லறிவு வந்தால் அஞ்ஞானம் தானே விலகும். அப்படி அஞ்ஞானத்தை விலக்கும் நல்லறிவாக அவன் இருக்கிறான். 

சிவ புராணம் சிந்திக்க சிந்திக்க விரியும். 













Monday, August 25, 2014

சிவ புராணம் - பொய்யாயின போய் அகல வந்து அருளி - பாகம் 1

சிவ புராணம் - பொய்யாயின  போய் அகல வந்து அருளி - பாகம் 1




பாடல்

வெய்யாய் தணியாய், இயமானனாம் விமலா
பொய்யாயின எல்லாம், போயகல வந்தருளி
மெய்ஞ்ஞானம் ஆகி, மிளிர்கின்ற மெய்ச்சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன், இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை, அகல்விக்கும் நல்லறிவே

வெப்பமாய் இருப்பவனே. குளிர்ச்சியாய் இருப்பவனே. நியமங்கள் என்ற மலம் (அழுக்கு, குற்றம்) இல்லாதவனே. என்னை விட்டு பொய்யாயின போய் விட அருள்  .செய்தவனே.  எனக்கு ஒரு ஞானமும் இல்லாத எனக்கு அஞ்ஞானத்தை போக்கி நல்ல அறிவை கொடுத்தவனே


பொருள்

வெய்யாய் = வெப்பமானவனே
தணியாய் = குளிர்சியாணவனே
இயமானனாம் = இதற்கு ஆத்மாவாக  நின்றவனே,நியமங்களாக  இருப்பவனே என்று பொருள் சொல்கிறார்கள்

விமலா = குற்றம் அற்றவனே

பொய்யாயின எல்லாம் = பொய்யாயினவெல்லாம்

போயகல வந்தருளி = அகன்று போய் விட வந்து அருள் செய்தவனே

மெய்ஞ்ஞானம் ஆகி = உண்மையான ஞானம் ஆக நின்று

மிளிர்கின்ற மெய்ச்சுடரே= ஒளி வீசும் உண்மையான சுடரே

எஞ்ஞானம் இல்லாதேன் = எந்தவித ஞானமும் இல்லாதவன் நான்

இன்பப் பெருமானே = இன்பத்தின் உறைவிடமாய் இருப்பவனே

அஞ்ஞானம் தன்னை,  = அறியாமையை

அகல்விக்கும் நல்லறிவே = அகற்றிடும் நல் அறிவே


என்று மாணிக்க வாசகர் இறைவனை  புகழ்கிறார்.

மேலோட்டமான அர்த்தம் அவ்வளவுதான்.

சற்று ஆழமாக சிந்தித்தால்....


பொய்யாயின எல்லாம், போயகல வந்தருளி

அது என்ன போய் அகல ? போய் என்றாலே அகல்வது தானே. gate கதவு, நடு center , மாதிரி போய் அகல ?

ஆசையினால் துன்பம் வருகிறது என்று தெரிகிறது. அதை விட்டு விட வேண்டும் என்றும் தோன்றுகிறது. பல சமயங்களில் விட்டும் விடுகிறோம்.  உடல் விட்டாலும் மனம் விட மாட்டேன் என்று அடம்  பிடிக்கிறது.

இனிப்பு கெடுதல் என்று அறிவுக்குத் தெரிகிறது. விட்டும் விடுகிறோம். இருந்தாலும் மனம் விடுகிறதா ? இனிப்புப் பொருள்களை கண்டால் ஜொள்ளு விடுகிறது.

அறிவும் விட வேண்டும், மனமும் விட வேண்டும்.

முதலில் அறிவை விட்டு போக வேண்டும் பின் மனதை விட்டுப் போக வேண்டும்.

இதைத்தான் வள்ளுவரும்

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.

யாதனின் யாதனின் என்று இரண்டு முறையும்
அதனின் அதனின் என்று இரண்டு முறையும் சொல்கிறார்.

யாதனின் நீங்கியான் நோதல் அதனின் இலன் என்று சொல்லி இருக்கலாம்.

மனமும் நீங்க வேண்டும். அறிவும் நீங்க வேண்டும்.

போய் அகல என்றால் புரிகிறது.

ஆனால் இந்த பொய்யாயின எல்லாம் என்று சொல்கிறாரே...அது என்ன பொய்யாயின ?

எது பொய் எது உண்மை என்று எப்படி அறிந்து கொள்வது ? ஏதாவது புத்தகத்தில் இருக்கிறதா?  யாரிடமாவது கேட்டு தெரிந்து கொள்ளலாமா ?

அதையும் அவரே சொல்கிறார்

மேலும் சிந்திப்போம்


Friday, August 22, 2014

சிவ புராணம் - ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே - பாகம் 2

சிவ புராணம் - ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே - பாகம் 2 


கடவுளை எங்கே வைப்பது ?

சிலர் பூஜை அறையில் வைத்து இருப்பார்கள்.

சிலர் பர்சில் வைத்து இருப்பார்கள்.

சிலர் கழுத்தில் உள்ள டாலரில் மாட்டி தொங்க விட்டிருப்பார்கள்.

கையில், இடுப்பில் என்று எங்கெல்லாமோ இறைவன்.

கடவுளை மனதில், நெஞ்சில், கருத்தில் வைக்க வேண்டும். கக்கத்தில் வைக்கக் கூடாது.


எட்டுத் திசையும் பதினாறு கோணமும் எங்கும் ஒன்றாய்
முட்டித் ததும்பி முளைத்தோங்கு சோதியை மூட ரெல்லாம்
கட்டிச் சுருட்டித்தம் கக்கத்தில் வைப்பர், கருத்தில் வையார்
பட்டப் பகலை இரவென்று கூறிடும் பாதகரே.

என்பார்  பட்டினத்தார்.

இதைத்தான் மணிவாசகரும் ,


உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா வெனவோங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே


உள்ளத்துள் ஓங்காரமாய் நின்றவன் என்கிறார்.

இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க என்று சிவ புராணத்தில்  முன்னால்  குறிப்பிட்டார்.

ஞானிகள் எல்லோரும் ஒரே விதமாக சிந்தித்து இருக்கிறார்கள்.




சிவ புராணம் - ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே

சிவ புராணம் - ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே



உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா வெனவோங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே

நான் உய்யும் படி என் உள்ளத்தின் உள்ளே ஓங்காரமாய் நின்றவனே.
உண்மையானவனே.
விமலனே.
எருதை மேய்பவனே.
வேதங்களால்  ஐயா என்று ஓங்கி உச்சரிக்கப்படுபவனே.
ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே.

இவ்வளவுதான் அர்த்தம் - மேலோட்டமாகப் பார்த்தால்.

சற்று ஆழ்ந்து சிந்திப்போம்.

வாழ்வில் எது உண்மை, எது பொய் என்று எப்படி அறிவது ? ஏன் அறிய வேண்டும்.

பொய்யானவற்றின் பின்னால் போனால் அவை திருப்தி தராது.

நீர் குமிழியை விரட்டிப் பிடிப்பதில் என்ன பயன் ?

பொருள் அல்லவற்றைப் பொருள் என்று உணரும்
மருளான் ஆம், மாணாப் பிறப்பு.

என்பார் வள்ளுவர். பொருள் அல்லாதவற்றை பொருள் என்று உணரும் மயக்கத்தினால் இந்த பிறவி மீண்டும் மீண்டும் உண்டாகிறது.

எது உண்மையானது, எது பொய்யானது என்று அறியும் அறிவு வேண்டும்.

அடிகள் சொல்கிறார் - "மெய்யா". உண்மையானவனே, மெய்யே வடிவானவன்.

இறைவன் என்பது மெய். உண்மை என்று அறிவிக்கிறார்.

அந்த உண்மையை, மெய்யை எப்படி அறிவது ?

நீர் மேல் பாசி படிந்திருக்கும். பாசி விலகினால் நீர் தெரியும்.

கண்ணாடி மேல் தூசி படிந்திருக்கும். தூசியை துடைத்தால் பிம்பம் தெளிவாகத் தெரியும்.

செம்பின் மேல் களிம்பு  படிந்திருக்கும். களிம்பு போனால், செம்பு பளிச்சென்று இருக்கும்.

நம் அறிவின் மேல் எத்தனை அழுக்கு. மலம்.

மலம் என்பது அழுக்கு. கழிவு. வேண்டாதது.

நாம் தான் எத்தனை அழுக்குகளை சுமந்து கொண்டு இருக்கிறோம்.

அழுக்குகளை அழகுகள் என்று நினைத்து இறுகப் பற்றிக் கொண்டு இருக்கிறோம்.

 நமக்கு இருக்கும் மலங்களை மூன்று விதமாக  பிரிக்கிறார்கள்.

ஆணவம் - கன்மம் - மாயை என்று.

இந்த மூன்று மலங்களும் நீங்கினால் சீவன் சிவன் ஆகும். சீவனுக்கும் சிவனுக்கும் ஒரே வித்தாயசம் தான்.

மலம் உள்ளது சீவன். இல்லாதது சிவன்.

அவன் எந்த மலமும் இல்லாதாவன் - வி-மலன். மலம் இல்லாதவன்.

மனிதன் தெய்வம் ஆகலாம்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் 
தெய்வத்துள் வைக்கப்படும் 

என்பார் வள்ளுவர்.


வி என்றால் இல்லாதது என்று  அர்த்தம். எல்லோருக்கும் ஒரு தலைவன் , நாயகன்  உண்டு. தலைவன் இல்லாதவன் வி-நாயகன்.


மெய்யா - விமலா.

அழுக்குகள் (மலம்) இல்லாதவனை அறிய அறிவு வேண்டும்.  அவன் ஞானமே வடிவானவன். அந்த ஞானம், அறிவு எப்படி இருக்கிறது.

அறிவு - ஆழமாகவும் இருக்க வேண்டும், அகலாமாகவும் இருக்க வேண்டும், கூர்மையாகவும் இருக்க வேண்டும்.

எனவே, அவனை

"ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே" என்றார் அடிகள்.

ஆழமாக சிந்திப்போம்.

அகலாமாக ,  விரிவாக சிந்திப்போம்.

நுண்மையாக சிந்திப்போம்.