Showing posts with label கம்ப இராமாயாணம். Show all posts
Showing posts with label கம்ப இராமாயாணம். Show all posts

Thursday, August 12, 2021

கம்ப இராமாயாணம் - வலியார் வலியே

 கம்ப இராமாயாணம் - வலியார் வலியே 


அசோகவனத்தில் சீதை சிறை இருக்கிறாள். அனுமன் அவளை அடையாளம் கண்டு கொள்கிறான். மறைந்து இருந்து அவள் செய்வதை/பேசுவதை கேட்கிறான். 


சீதை புலம்புகிறாள். 


"கரிய மேகம், பெரிய கடல், காடு போன்ற கரிய இராமன் என் உயிரை திருப்பித் தருவானா? பேரிடி போல் கேட்கும் அவன் வில்லின் நாண் ஒலி தான் நான் கேட்பேனா? இராம இலக்குவனர்களிடம் உள்ள வலிமையே, நீ சொல்வாய்" 


என்கிறாள் 


பாடல் 


கரு மேகம்,நெடுங் கடல், கா அனையான்

தருமே, தனியேன்எனது ஆர் உயிர்தான் ?

உரும்ஏறு உறழ்வெஞ் சிலை நாண் ஒலிதான்

வருமே ? உரையாய், வலியார் வலியே !


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/08/blog-post_12.html


(Please click the above link to continue reading)


கரு மேகம் = கரிய மேகம் 


நெடுங் கடல் = நீண்ட பெரிய கடல் 


கா  = அடர்ந்த காடு 


அனையான் = போன்றவன் 


தருமே = தருவானா 


தனியேன் எனது = தனியாக இருக்கும் எனது 


ஆர் உயிர்தான் ? = அருமையான உயிரைத்தான் 


உரும்ஏறு உறழ் = பேரிடி போல சப்தம் செய்யும் 


வெஞ் சிலை = கொடிய வில்லின் 


 நாண் ஒலிதான் = நாண் ஒலி தான் 


வருமே ? = இங்கே இலங்கைக்கு வருமா ? 


உரையாய் = நீ சொல்வாய் 


வலியார் = வலிமை பொருந்திய இராம, இலக்குவர்கள் 


வலியே ! = இடம் உள்ள வலிமையே 



இராமன் வந்து தன்னை சிறை மீட்டிச் செல்வான் என்ற நம்பிக்கையில் இருக்கிறாள். அவன் வருவானா, எப்போது வருவான் என்று ஏங்குகிறாள். 


சோகத்தில், துன்பத்தில் தான் மனதின் அடியில் உள்ள உணர்சிகள் மேலே வருகின்றன. 


மேலும் என்னென்ன சொல்கிறாள் என்று பார்ப்போம். 



Thursday, April 29, 2021

கம்ப இராமாயாணம் - நினைவும் செய்கையும் மறந்து

 கம்ப இராமாயாணம் - நினைவும் செய்கையும் மறந்து 


ஒரு நொடிப் பொழுதில் இந்திரசித்து பிரமாஸ்திரத்தை இலக்குவன் மேல் எய்து விட்டான். 


அருகில் இருந்த அனுமன் திகைத்தான். இது, யார் இப்படி செய்தது...வந்தவன் இந்திரனா, அவனை அந்த வெள்ளை யானையோடு சேர்த்து எடுத்து எறிந்து விடுகிறேன் பார் என்று வந்தான்...வந்த மாத்திரத்தில் வில்லில் இருந்து புறப்பட்ட ஆயிரம்  கடுமையான  அம்புகள் தைக்க நினைவும், செய்கையும் மறந்து போய் நிலத்தில் சோர்ந்து விழுந்து விட்டான்.


பாடல் 


அனுமன், 'இந்திரன் வந்தவன் என்கொல், 

   ஈது அமைந்தான்? 

இனி என்? எற்றுவென் களிற்றினோடு 

   எடுத்து' என எழுந்தான்; 

தனுவின் ஆயிரம் கோடி வெங் கடுங் 

   கணை தைக்க, 

நினைவும் செய்கையும் மறந்துபோய், 

   நெடு நிலம் சேர்ந்தான். 


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/04/blog-post_44.html


(please click the above link to continue reading)



அனுமன்,= அனுமன் நினைத்தான் 


 'இந்திரன் வந்தவன் என்கொல் = இந்திரனா வந்தது  


ஈது அமைந்தான்?  = இப்படிச் செய்தவன் 


இனி என்? = இனி என்ன செய்வது 


எற்றுவென்  = தூக்கி எறிவேன் 


களிற்றினோடு  = யானையோடு 


எடுத்து' = எடுத்து 


என எழுந்தான்;  = என்று எழுந்தான் 


தனுவின் = வில்லின் 


ஆயிரம் கோடி  = ஆயிரம் கோடி 


வெங் கடுங்கணை தைக்க,  = வெம்மையான கொடிய அம்புகள் தைக்க 


நினைவும் = நினைவும் 


செய்கையும் = செய்கையும் 


மறந்துபோய்,  = மறந்து போய் 


நெடு நிலம் சேர்ந்தான்.  = நிலத்தில் வீழ்ந்தான் 


அப்பேற்பட்ட அனுமனையும் அந்த பிரம்மாஸ்திரம் சாய்த்தது.


இலக்குவன் விழுந்து விட்டான். 


அனுமனும் பேச்சு மூச்சு இல்லாமல் விழுந்து விட்டான். 


இனி போர் என்ன ஆகும் ?