Thursday, August 12, 2021

கம்ப இராமாயாணம் - வலியார் வலியே

 கம்ப இராமாயாணம் - வலியார் வலியே 


அசோகவனத்தில் சீதை சிறை இருக்கிறாள். அனுமன் அவளை அடையாளம் கண்டு கொள்கிறான். மறைந்து இருந்து அவள் செய்வதை/பேசுவதை கேட்கிறான். 


சீதை புலம்புகிறாள். 


"கரிய மேகம், பெரிய கடல், காடு போன்ற கரிய இராமன் என் உயிரை திருப்பித் தருவானா? பேரிடி போல் கேட்கும் அவன் வில்லின் நாண் ஒலி தான் நான் கேட்பேனா? இராம இலக்குவனர்களிடம் உள்ள வலிமையே, நீ சொல்வாய்" 


என்கிறாள் 


பாடல் 


கரு மேகம்,நெடுங் கடல், கா அனையான்

தருமே, தனியேன்எனது ஆர் உயிர்தான் ?

உரும்ஏறு உறழ்வெஞ் சிலை நாண் ஒலிதான்

வருமே ? உரையாய், வலியார் வலியே !


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/08/blog-post_12.html


(Please click the above link to continue reading)


கரு மேகம் = கரிய மேகம் 


நெடுங் கடல் = நீண்ட பெரிய கடல் 


கா  = அடர்ந்த காடு 


அனையான் = போன்றவன் 


தருமே = தருவானா 


தனியேன் எனது = தனியாக இருக்கும் எனது 


ஆர் உயிர்தான் ? = அருமையான உயிரைத்தான் 


உரும்ஏறு உறழ் = பேரிடி போல சப்தம் செய்யும் 


வெஞ் சிலை = கொடிய வில்லின் 


 நாண் ஒலிதான் = நாண் ஒலி தான் 


வருமே ? = இங்கே இலங்கைக்கு வருமா ? 


உரையாய் = நீ சொல்வாய் 


வலியார் = வலிமை பொருந்திய இராம, இலக்குவர்கள் 


வலியே ! = இடம் உள்ள வலிமையே 



இராமன் வந்து தன்னை சிறை மீட்டிச் செல்வான் என்ற நம்பிக்கையில் இருக்கிறாள். அவன் வருவானா, எப்போது வருவான் என்று ஏங்குகிறாள். 


சோகத்தில், துன்பத்தில் தான் மனதின் அடியில் உள்ள உணர்சிகள் மேலே வருகின்றன. 


மேலும் என்னென்ன சொல்கிறாள் என்று பார்ப்போம். 



1 comment:

  1. ஆவலுடன் காத்து கொண்டு இருக்கிறேன்

    ReplyDelete