Wednesday, August 31, 2022

திருக்குறள் - அழுக்காறாமை - இன்றிக் கெடும்

 திருக்குறள் - அழுக்காறாமை -  இன்றிக் கெடும்


பொறாமை கொள்வதே தவறு. அதனினும் பெரிய தவறு ஒன்று இருக்கிறது என்றால் ஒருவன் மற்றவனுக்கு செய்யும் உதவி கண்டு பொறாமை படுவது. 



ஒரு பணக்காரன் ஏழைகளுக்கு உதவி செய்கிறான். உணவு தருகிறான். அந்த ஏழைகளின் பிள்ளைகள் படிக்க பண உதவி செய்கிறான், அந்த வீட்டுப் பெண்கள் திருமணம் செய்து கொள்ள தங்கம், பணம் என்று உதவி செய்கிறான். அதைக் கண்டு பொறாமை கொள்பவர்கள் இருக்கிறார்கள். இப்படி எல்லாம் உதவி பெற்று அந்த ஏழை மக்கள் உயர்ந்து விடுவார்களோ என்று பொறாமை. எவ்வளவு கேவலமான ஒன்று. 



ரொம்ப தூரம் போவானேன்? காரில் வெளியில் போகும் போது, போக்கு வரத்து நெரிசலில் நிற்கும் போது, ஒரு ஏழை அல்லது வயதானவர், அல்லது ஒரு சின்னப் பிள்ளை பிச்சை கேட்டு கார் கண்ணாடியை தட்டும். கணவனோ மனைவியோ, கண்ணாடியை இறக்கி பணம் தருவார். நூறு ரூபாய் தருகிறார் என்று வைத்துக் கொள்வோம். மற்றவர் சொல்லுவார் ..."பிச்சைகாரனுக்கு நூறு ரூபாய் போடனுமாக்கும்...ஏதோ அஞ்சு பத்து கொடுத்தால் போதாதா...பெரிய கர்ண பரம்பரை..." என்று வசனம் பிறக்கும். 


கொடுத்தது யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும், சொல்லுவது யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். 


இது நிகழும் சாத்தியம் இருக்கிறது அல்லவா? 


ஒருவர் கொடுப்பதை மற்றவர் தடுக்க நினைப்பது, அதைக் கண்டு பொறாமை படுவது. 


இப்படிப் பட்டவர்களுக்கு ஒரு தண்டனை தர வேண்டும் என்று நினைக்கிறார் வள்ளுவர். 


வள்ளுவர் போல் மிகக் கடுமையான தண்டனை தர யாராலும் முடியாது. எவ்வளவு கோபம் வந்தால் அப்படி ஒரு தண்டனையை தந்திருப்பார் என்று நாம் யோசிக்க முடிகிறது. 


"உய்வில்லை செய் நன்றி கொன்ற மகற்கு" என்றார். 


அதைவிட கொடுமையான தண்டனையை இங்கே சொல்கிறார். 


நாம் ஓரிரு வேளை உணவு உண்ணாமல் இருந்து விடலாம். சில நாட்கள் கூட உணவு உண்ணாமல் இருந்து விட முடியும். சாப்பிடாமல் போனால் யாருக்கும் தெரியாது. நாம பாட்டுக்கு போய் வரலாம். 


கையில் காசு இல்லை. உணவுக்கு வழி இல்லை. பசி உயிர் போகிறது. கஷடம்தான். பொறுத்துக் கொள்ள முடியும். சகித்து விடலாம். 


ஆனால், ,கையில் காசு இல்லை, உடை வாங்க வழி இல்லை என்று உடை இல்லாமல் தெருவில் போக முடியுமா? 


எவ்வளவு கேவலம் ? அதை விட உயரை விட்டு விடலாம் அல்லவா? 


தான் உடை இல்லாமல் போனால் பரவாயில்லை, ஒருவனின் தாய், தந்தை, உடன் பிறப்பு, மனைவி, ,கணவன், பிள்ளைகள் என்று எல்லோரும் உடை வாங்க வழி இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும்? சகிக்க முடியுமா? 


நாம் உடை இல்லாமல் இருப்பதே சகிக்க முடியாது. மற்றவர்களும் அப்படி என்றால் பொறுக்க முடியுமா? 


"கொடுப்பது கண்டு பொறாமை படுபவனது சுற்றம் உடுக்க உடை இல்லாமலும், உண்ண உணவு இல்லாமலும் கெடும்"  என்கிறார். 


மிகக் கடுமையான தண்டனை. 


பாடல் 


கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்

உண்பதூஉம் இன்றிக் கெடும்



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_31.html

(Pl click the above link to continue reading)



கொடுப்பது = ஒருவன் மற்றவனுக்கு கொடுப்பதைக் கண்டு 


அழுக்கறுப்பான் = பொறாமை படுபவனது 


சுற்றம் = உறவினர்கள் 


உடுப்பதூஉம் = உடுக்க உடையும் 


உண்பதூஉம் = உண்ண உணவும் 


இன்றிக் = இல்லாமல் 


கெடும் = கேட்டினை அடைவார்கள் 


உறவினர்கள் தானே உணவும், உடையும் இல்லாமல் துன்பப் படுவார்கள், நமக்கு இல்லையே என்று யாராவது நினைத்து விடக் கூடாது என்று பரிமேலழகர் கூறுவார் "உறவு கெடும் என்றால் தான் கெடுவது சொல்லாமலேயே பெறப் படும்" என்று. 


ஒருவனிடம் உணவும், உடையும் இல்லை என்றால் வேறு என்னதான் இருக்க முடியும்?


எனவே, யாரோ யாருக்கோ நல்லது செய்து விட்டுப் போகிறார்கள். இருவரும் நல்லா இருக்கட்டும் என்று வாழ்த்திவிட்டு நம் வேலையை பார்க்க போய்விட வேண்டும். 


யோசித்துப் பார்த்தால், அரசாங்கம் நலிவடைந்த பிரிவினருக்கு சில உதவிகள் செய்கிறது. இட ஒதுக்கீடு, வேலையில் முன்னுரிமை, நிலப் பட்டா, ஓய்வூதியம், என்று எத்தனையோ நல திட்டங்களை அறிவிக்கிறது. 


அது கண்டு பலர் பொறுப்பது இல்லை.  எதற்கு அவர்களுக்கு இந்தச் சலுகைகள் எல்லாம், எத்தனை நாளுக்குத்தான் இப்படி தந்து கொண்டே இருப்பது, அவர்களுக்கு என்ன குறை, படித்து, உழைத்து வர வேண்டியதுதானே...என்று அவர்களுக்கு அரசாங்கம் செய்யும் சலுகைகளைக் கண்டு பொறாமை கொள்கிறார்கள். 


அதுவும் இதில் வருமோ? 











(இந்த அதிகாரத்தின் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


முன்னுரை:  அழுக்காறாமை என்றால் பொறாமை கொள்ளாமை. பிறர் ஆக்கம் கண்டு பொறுத்துக் கொள்ளும் தன்மை இல்லாமை.  பிறர் ஆக்கம் கண்டு பொறாமை என்பார் பரிமேலழகர். 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_31.html


குறள்  எண் 161:

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து

அழுக்காறு இலாத இயல்பு

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post.html


குறள்  எண் 162:  (பாகம் 1)


விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்

அழுக்காற்றின் அன்மை பெறின்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/1.html


குறள்  எண் 162:  (பாகம் 2)

விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்

அழுக்காற்றின் அன்மை பெறின்



குறள்  எண் 162:: அறனாக்கம்

அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்

பேணாது அழுக்கறுப் பான்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_16.html


குறள்  எண் 163: அல்லவை செய்யார்


அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்

ஏதம் படுபாக்கு அறிந்து


)


Tuesday, August 30, 2022

நாலாயிர திவ்ய பிரபந்தம் - வெற்றிப் பாசுரம்

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - வெற்றிப் பாசுரம் 


நாம் எதைப் பற்றி அதிகம் நினைத்துக் கொண்டு இருக்கிறோமோ, அதை அடைவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கும். 


எதை நினைக்கிறோமோ, அதைச் செய்வோம். எதைச் செய்கிறோமோ, அதில் பலன் கிடைக்கும். எவ்வளவு பலன் என்பது எவ்வளவு முயற்சி, காலம், இடம் அவற்றைப் பொறுத்தது.


வெற்றி அடைய வேண்டுமா?  வெற்றி பற்றி சிந்திக்க வேண்டும். வெற்றி அடைந்தவர்களைப் பற்றி சிந்திக்க வேண்டும். அவர்கள் எப்படி வென்றார்கள் என்று ஆராய வேண்டும். அவர்களின் வெற்றி நமக்கு ஒரு தூண்டு கோல், அது ஒரு ஊக்கம் தரும். 


உள்ளதிற்குள் பெரிய வெற்றி யாருடைய வெற்றியாக இருக்கும்? மிகப் பெரிய காரியத்தை யார் செய்திருப்பார்கள்? 


மிகப் பெரியவன் கடவுள் என்று கொண்டால், அவனுடைய வெற்றிதானே மிகப் பெரிய வெற்றியாக இருக்க முடியும். 


பிரமாண்டமான வெற்றி. நினைத்துக் கூட பார்க்க முடியாத வெற்றி அதுவாகத் தானே இருக்க முடியும்? 


இறைவன் அடைந்த வெற்றிகளைப் பற்றி சிந்திக்கிறார் நம்மாழ்வார். 


பிரமிப்பு ஊட்டுகிறது. சிலிர்த்துப் போய் விடுகிறது. 


நாம் எத்தனையோ ஆங்கிலப் படங்கள் பார்த்து வியந்திருப்போம். அதன் பிரமாண்டம், மித மிஞ்சிய கற்பனை, அதை எப்படி திரையில் கொண்டு வந்தார்கள் என்று வியந்திருப்போம்.


வேற்றுக் கிரகங்கள், இராட்சச திமிங்கலம், டினோசர், இயந்திர மனிதன், பறக்கும் மனிதன், என்று பெரிய கற்பனைகளை நாம் கண்டு வியந்து இருக்கிறோம். 


நம்மாழ்வார் பாடல்களைப் படித்துப் பாருங்கள். அவர் காட்டும் பிரமாண்டம், அவர் அதை ஒரு பாட்டுக்குள் கொண்டு வரும் திறமை, படிக்க படிக்க புல்லரிக்கும். படித்த பின் அவற்றை நம்மால் சரியாக கற்பனை கூட பண்ண முடியாது. 


முயன்று பாருங்கள். 


வாமன அவதாரமாக திருமால் வந்து மூன்றடி தானம் கேட்கிறார். மாவலியும் தருகிறேன் என்று ஒத்துக் கொள்கிறார். அதுவரை நம்மால் கற்பனை பண்ண முடியும். 


அடுத்தது என்ன நிகழ்ந்தது என்பதை நாம் கற்பனை பண்ணவும் முடியாது. .


திருமாலின் உருவம் எங்கோ பாதாளம் வரை போயிற்று. அங்கிருந்து வளர்ந்து கொண்டே வருகிறது. 


நீங்கள் ஒரு கடற்கரையில் நிற்பதாக கற்பனை பண்ணிக் கொள்ளுங்கள். கடலின் நீண்ட பெரும் பரப்பை பார்த்துக் கொண்டே இருக்கிறீர்கள். 


தூரத்தில் ஒரு சக்கரமும், சங்கும் கடலின் பரப்பின் மேல் எழுகிறது. என்ன இது என்று பார்கிறீர்கள். அது மிக பிரமண்டாமாக வளர்ந்து கொண்டே போகிறது. நீங்கள் பயந்து சற்று பின் வாங்கி என்ன அது என்று பார்கிறீர்கள். சங்கு, சக்கரத்தைத் தொடர்ந்து ஒரு வில் வருகிறது. எல்லோரும் அலறுகிறார்கள். பயத்தில் ஓடுகிறார்கள். அது மேலே போய்க் கொண்டே இருக்கிறது. அதைத் தொடர்ந்து, ஒரு பெரிய வாள் வருகிறது. இவற்றை தாங்கி இருந்த உருவத்தின் தலை இந்த  அண்ட சராசரத்தின் உச்சியை முட்டுகிறது. முட்டியது மட்டும் அல்ல, அதன் கூரையை கிழிக்கிறது. 


இந்த பிரபஞ்சம் நீரால் சூழப்பட்டு இருக்கிறது என்கிறார்கள். பிரபஞ்சத்தின் கூரையில் ஓட்டை போட்டால், அந்த தண்ணீர் கொட்டும் என்கிறார். அதற்கு ஆவரண ஜலம் என்று பெயர். 


இதுவரை கண்டது திருமாலின் ஒரு அடி. அடுத்த அடி எடுத்து வைக்க வேண்டும். அந்தத் திருவடியை உயர்த்துகிறார், அது அவர் தலை வரை போகிறது. 


கற்பனை செய்து பாருங்கள். ஓர் காலை ஊன்றிக் கொண்டு, இன்னொரு காலை தலைவரை உயர்த்தி. உயர்த்திய காலை ஊன்றி, கீழே உள்ள காலை அடுத்து தலைவரை உயர்த்த வேண்டும். அது ஒரு அடி என்ற கணக்கு. 


இந்த உலகம் அனைத்தையும் இரண்டே அடியில் அளக்க வேண்டும் என்றால் அந்தப் பாதம் எவ்வளவு பெரிதாக இருக்க வேண்டும், அவ்வளவு பெரிய பாதம் என்றால் கால் எப்படி இருக்கும், மொத்த உருவமும் எப்படி இருக்கும் என்று கற்பனை பண்ண முடிகிறதா? 


இவ்வளவு பெரிய உருவம், இரண்டு அடியில் அத்தனை உலகையும் அளக்க வேண்டும் அதுவும் மிகக் குறைந்த நேரத்தில். மாவலி நின்று கொண்டிருக்கிறான். மூன்றாவது அடி எங்கே என்று கேட்க வேண்டும். அப்படி என்றால் அந்த உருவம் இந்த உலகை எவ்வளவு வேகமாக அளந்திருக்கும் ?


பாடல் 



ஆழி யெழச்சங்கும் வில்லு மெழ,திசை

வாழி யெழத்தண்டும் வாளு மெழ,அண்டம்

மோழை யெழமுடி பாத மெழ,அப்பன்

ஊழி யெழவுல கங்கொண்ட வாறே. (3594)




பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_30.html


(pl click the above link to continue reading)




ஆழி யெழச் = சக்கரம் எழ 


சங்கும் = சங்கும் 


வில்லு மெழ = வில்லும் எழ 


திசை வாழி யெழத் = திசைகள் தோறும் உள்ள மக்கள் அதைக் கண்டு ஒரு புறம் பயந்து, மறுபுறம் பிரமித்தது, வாழ்க வாழ்க என்று கோஷம் இடுகிறார்கள். பிரமாண்டமான சப்த்தம். உலகமே நடுங்குகிறது. 



தண்டும் = கதை ஆயுதமும் 


வாளு மெழ, = வாளும் எழ 


அண்டம் மோழை யெழ = அண்டத்தின் உச்சி பிளந்து, ஆவரண நீர் பொங்கி எழ 


முடி = திருமுடி, தலை 


பாத மெழ = பாதம் அதுவரை செல்ல 


அப்பன் = திருமால் 


ஊழி யெழவுல கங்கொண்ட வாறே. = மாவலியால் (விதியின் காரணமாக) பட்ட துன்பங்கள் நீங்கி உலகம் நன்மை அடைய 


இது உண்மையா, இல்லையா என்ற தர்க்கம் ஒரு புறம் இருக்கட்டும். 


எவ்வளவு பெரிய பிரமாண்டம் என்று மனமும், சிந்தனையும் விரிகிறது அல்லவா? 


அதை நினைக்கும் போது நாம் செய்ய நினைக்கும் காரியங்கள் ஒரு தூசு என்று தெரிகிறது அல்லவா? இதைச் செய்யவா இந்தப் பாடு படுகிறேன்...இப்ப செய்து முடிக்கிறேன் என்று நமக்குள் ஒரு உத்வேகம் வருகிறது அல்லவா. அந்த முயற்சி, ஊக்கம், உந்து சக்தி வெற்றியைத் தேடித் தரும். 


இப்படி பத்துப் பாடல்களை அருளிச் செய்து இருக்கிறார் நம்மாழ்வார். 


இதரப் பாசுரங்களும் இதே மாதிரித்தான். 




Monday, August 29, 2022

கந்தரனுபூதி - வளை பட்ட கை - பாகம் 3

       

 கந்தரனுபூதி -  வளை பட்ட கை - பாகம் 3


பாடல் 


வளைபட்ட கைம் மாதொடு, மக்கள் எனும்

தளைபட்டு அழியத் தகுமோ? தகுமோ?

கிளைபட்டு எழு சூர் உரமும், கிரியும்,

தொளைபட்டு உருவத் தொடு வேலவனே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/3.html


(Pl click the above link to continue reading) 


வளைபட்ட கைம் = வளையல் அணிந்த கைகள் 


மாதொடு = கொண்ட பெண்கள் 


மக்கள் = மக்கள் 


எனும் = என்ற 


தளைபட்டு  = விலங்கில் அகப்பட்டு 


அழியத் = அழிவது 


தகுமோ? தகுமோ? = சரியா, சரியா ?


கிளைபட்டு எழு = கிளை கிளையாக கிளம்பும் 


சூர் உரமும் = சூர பத்மனின் உறுதியும் 


கிரியும், = (மாயா) மலையும் 


தொளைபட்டு = துளைத்து 


உருவத் = உருவிக் கொண்டு வெளியில் செல்லும் 


தொடு வேலவனே. = வேலைத் தொடுத்தவனே 


அதாவது மனைவி மக்கள் என்ற பந்தத்தில் அகப்பட்டு அழிவது சரியா என்று முருகனைக் கேட்கிறார். 


இந்தப் பாடலில் உள்ள "தளைபட்டு அழிய" என்ற வார்த்தைகளை எடுத்துக் கொள்வோம். 


தளை படுதல், அழிதல் என்று இரண்டு இருக்கிறது. 


பெரிய எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், தலைவர்கள் போன்றோரை சிறையில் அடைத்தால் அவர்கள் என்ன செய்வார்கள். 


சிறையில் இருந்து கொண்டு படிப்பார்கள், எழுதுவார்கள். எத்தனையோ பெரிய பெரிய புத்தகங்கள், சிந்தனைகள் சிறைச் சாலையில் பிறந்ததுதான். 


சிறை என்று நினைத்தால், அது சிறை. .


எழுதக் கிடைத்த வாய்ப்பு என்று நினைத்தால், அது வாய்ப்பு. 


நான்கு சுவர்களும், சில பல கம்பிகளும், சில காவல்காரர்களும் சிறையை உண்டாக்கி விடாது. 


வீட்டிற்குள் இருந்து கொண்டே சிறையில் இருப்பது போல தனிமையில் வாடுபவர்கள் பலர்.


குடும்பம் சிறை அல்ல. அது ஆன்மீக வளர்சிக்கு ஒரு படிக்கல். அது புரியாவிட்டால் அது சிறைதான்.


எப்படி என்று பார்ப்போம். 


ஒரு சிறுவன் இருக்கிறான். வீட்டில் அம்மா ஏதோ பலகாரம் செய்கிறாள்.  அவனுக்கு அது பிடிக்கும். எடுத்து உண்கிறான். தம்பி தங்கைகளுக்கு வேண்டுமே என்ற எண்ணம் எல்லாம் கிடையாது. எல்லாம் தனக்கு வேண்டும் என்று நினைக்கிறான். 


சிறு பிள்ளை அப்படித்தான் நினைக்கும். 


வளர்ந்து பெரியவன் ஆகிறான். திருமணம் ஆகிறது. 


அதே பலகாரம் ஒரு உணவு விடுதியில் சாப்பிடுகிறான். "நல்லா இருக்கே...அவளுக்கு கொஞ்சம் வாங்கிக் கொண்டு போவோம்" என்று நினைக்கிறான். 


தன் மேல் மட்டும் இருந்த அன்பு, சற்று விரிந்து மனைவி மேலும் செல்கிறது. அவளுக்கு இந்த சேலை நன்றாக இருக்கும், அவளுக்கு இந்த உணவு பிடிக்கும் என்று அவளைப் பற்றி நினைக்கிறான். 


பின் சிறிது நாளில் பிள்ளை வருகிறது. 


பிள்ளை வளர்கிறது. 


அதே பலகாரம். ஒரே ஒரு துண்டுதான் இருக்கிறது. பிள்ளை ஓடி வருகிறான். "இங்க வாடா...இந்தா இதைச் சாப்பிட்டு பாரு" என்று தனக்கு இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று பிள்ளைக்குக் கொடுக்கிறான். பிள்ளையின் முகத்தில் உள்ள மகிழ்ச்சியைக் கண்டு அவன் மகிழ்கிறான். 


அன்பு இன்னும் விரிகிறது. 


மனைவி, பிள்ளை, பேரப் பிள்ளை என்று அன்பு விரிந்து கொண்டே போகும். ஒரு காலகட்டத்தில், எந்தப் பிள்ளையைப் பார்த்தாலும் தன் பிள்ளையை பார்ப்பது போலவே இருக்கும். எந்த சின்னப் பிள்ளையைப் பார்த்தாலும் தன் பேரப் பிள்ளையை பார்ப்பது போல இருக்கும்.  தெருவில் ஒரு பிள்ளை கீழே விழுந்துவிட்டால் தன் பிள்ளை விழுந்தது போல ஒரு பதற்றம் வரும். 


அன்பு மேலும் விரிந்து குடும்பத்தைத் தாண்டி சமுதாயம் வரையில் பரவும். 


தனக்கு என்று இருந்ததை மனைவிக்கு, பிள்ளைக்கு, பேரப் பிள்ளைக்கு, மற்ற பிள்ளைகளுக்கு என்று கொடுக்கத் தோன்றும். அதில் இன்பமும் இருக்கும். 


துறவு என்றால் வேறு என்ன? துறப்பதில் இன்பம் காண முடியும். 


மனைவி மக்கள் மேல் அன்பு செலுத்தத் தொடங்கினால் அது மேலும் மேலும் விரிந்து துறவு, வீடு பேறு, இறைவன் வரை கொண்டு சேர்க்கும். 


அன்பு இல்லாவிட்டால் அது தளை தான். விலங்குதான். சுமைதான். 


இந்த மனைவி மக்கள் என்பது எப்போது தளை ஆகும்? அன்பு இல்லாவிட்டால். அன்பு இல்லாவிட்டால் அருள் பிறக்காது. அருள் இல்லாவிட்ட்டால் துறவு நிகழாது. பற்று விடாவிட்டால் இறை அனுபவம் நிகழாது. 


இப்படியே நான் கிடந்து அழியத் தகுமோ என்று அருணகிரிநாதர் கேட்பது, அன்பில்லாமல் கிடந்து அழிவது சரியா என்று கேட்கிறார். 


தளைதான். ஆனால், அதனால் அழிய வேண்டியது இல்லை. அந்த அன்பு பெருக அவனருள் வேண்டும் என்று முருகனை வேண்டுகிறார். 



(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம்: 


முன்னுரை: 

https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_30.html


1. பணியாய் அருள்வாய் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_5.html


2. எல்லாமற என்னை இழந்த நலம் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_10.html


)


 

3. எனை ஆண்ட இடம் தானோ? பாகம் 1 & 2


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/1_14.html

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/2_17.html


4. வளை பட்ட கை - பாகம் 1 & 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_23.html

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/2_24.html


)


Sunday, August 28, 2022

திருவாசகம் - திரு அம்மானை - கல்லைப் பிசைந்து கனி ஆக்கி

     

திருவாசகம் - திரு அம்மானை  -   கல்லைப் பிசைந்து கனி ஆக்கி



முதலில் பாடலைப் படித்து விடுங்கள். பொருள் எல்லாம் அப்புறம் பார்க்கலாம். படிக்கும் போதே மனதை உருக்கும். பொருளைத் தாண்டி நேரே உணர்வைத் தொடும் பாடல்கள். 




பாடல் 


கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை,

வல்லாளன், தென்னன், பெருந்துறையான், பிச்சு ஏற்றி,

கல்லைப் பிசைந்து கனி ஆக்கி, தன் கருணை

வெள்ளத்து அழுத்தி, வினை கடிந்த வேதியனை,

தில்லை நகர் புக்கு, சிற்றம்பலம் மன்னும்

ஒல்லை விடையானை பாடுதும் காண்; அம்மானாய்!


வாழ்வின் ஓட்டத்தில் மனம் இறுகி விடுகிறது. துன்பங்கள், வெறுப்பு, கவலை, பயம், ஏமாற்றம், ஆசை எல்லாம் சேர்ந்து நம்மை அலைகழித்து நம் மனதை கல் போல ஆக்கி விடுகின்றன. 


எதை நம்புவது, ,யாரை நம்புவது என்று பயம். எல்லாவற்றிலும் ஒரு சந்தேகம். விடை காண முடியாத குழப்பங்கள். 


படித்து தெரிந்து கொள்ளலாம் என்றால் அதற்கு நேரம் கிடைப்பது இல்லை. 


என்னதான் செய்வது. திருவிழாவில் பெற்றோரைத் தொலைத்த பிள்ளை போல் கலங்கி நிற்கிறோம். 


அப்படித்தான் நின்றார் மணிவாசகர். இறைவன் எனக்கு அருள் செய்தான் என்கிறார். 


எப்படி?


"கல்வி அறிவு ஒன்றும் இல்லாத, நாயினும் கீழான என்னை, அவன் மேல் பைத்தியம் பிடிக்க வைத்து, கல் போன்ற என் மனதை கனி போல் மேன்மையாக்கி, அதை பிசைந்து, அவனுடைய கருணை வெள்ளத்தில் ஆழ்த்தி, என் முன் வினைகளை தடுத்து, என்னை ஆட்கொண்டான்" 


என்கிறார். 


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_28.html


(pl click the above link to continue reading)




கல்லா மனத்துக்  = கல்வி அறிவு இல்லாத மனமுடைய 


கடைப்பட்ட = கீழான, தாழ்ந்த 


நாயேனை, = நாய் போன்றவனை 


வல்லாளன் = வலிமை மிக்கவன் 


தென்னன் = தென்னாடு உடையவன் 


பெருந்துறையான் = திருபெருந்துறையில் உறைபவன் 


பிச்சு ஏற்றி, = பித்தம் பிடிக்க வைத்து 


கல்லைப் பிசைந்து = கல் போன்ற என் மனதை பிசைந்து 


கனி ஆக்கி = கனி போல அதை மேன்மையாக்கி 


தன் கருணை = அவனுடைய கருணை என்ற


வெள்ளத்து அழுத்தி = வெள்ளத்தில் அழுத்தி , 


வினை கடிந்த = என்னுடைய வினைகளை அறுத்து 


வேதியனை, = வேதத்தின் தலைவனை 


தில்லை நகர் புக்கு = சிதம்பரத்தில் நுழைந்து 


சிற்றம்பலம் மன்னும் = சித்ற்றம்பலத்தில் நிலைத்து நிற்கும் 


ஒல்லை விடையானை  = விடை என்றால் எருது. ஒல்லை என்றால் விரைந்து. விரைந்து வரும் எருதின் மேல் அமர்ந்தவனை 


பாடுதும் காண்; அம்மானாய்! = அம்மானை பாட்டில் பாடுவோம் 


மணிவாசகர் அடிக்கடி தன்னை 'நாய்' என்று குறைத்துச் சொல்லுவார். நாய் நன்றி உள்ள பிராணிதானே. அதில் என்ன கேவலம்? 


அது அல்ல. 


நாம் எவ்வளவோ படிக்கிறோம். உயர்ந்த நூல்களை வாசிக்கிறோம். பெரியவர்கள் சொல்வதைக் கேட்கிறோம். அப்புறம் என்ன செய்கிறோம்? அதில் சொன்னபடி செய்வது இல்லை. மறுபடியும் மறுபடியும் நம் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகிறோம். படித்ததால் ஒரு பலனும் இல்லை. 


நாயும் அப்படித்தான். எவ்வளவு தான் அதை கழுவி, குளிப்பாட்டி, உயர்ந்த உணவுகளை கொடுத்தாலும், சந்தர்பம் வந்தால் தெருவுக்கு ஓடும், கண்டதிலும் வாய் வைக்கும், இன்னொரு நாயைக் கண்டால் குலைக்கும். 


நம் உரிமையாளன் நமக்கு எவ்வளவு நல்லது செய்து இருக்கிறான். எப்படி சிறந்த உணவை நமக்கு தந்திருக்கிறான். நான் இந்த தெருவோரம் இருக்கும் அசிங்கத்தை உண்ணலாமா என்று அது நினைக்காது. அதன் இயற்கை அது. 


எனவேதான், அந்த குணம் பற்றி தன்னை நாய் என்று குறைத்துச் சொல்லுவார். 


இராமன் மிதிலைக்கு வருகிறான். ஊருக்கு வெளியில் உள்ள கோட்டையில் உள்ள கொடிகள் எல்லாம் இராமனைப் பார்த்து "பாற்கடலை விட்டு இலக்குமி இங்கு வந்து இருக்கிறாள்...நீ சீக்கிரம் வா" என்று அழைப்பது போல கை நீட்டி அழைப்பது போல காற்றில் அசைந்தன என்பார் கம்பர். 


"ஒல்லை வா" 

‘மை அறு மலரின் நீங்கி  யான் செய் மா தவத்தின் வந்து.

செய்யவள் இருந்தாள்’ என்று செழு மணிக் கொடிகள் என்னும்

கைகளை நீட்டி அந்தக் கடி நகர். கமலச் செங் கண்

ஐயனை. ‘ஒல்லை வா’ என்று    அழைப்பது போன்றது அம்மா!



"ஒல்லை விடையானை பாடுதும் காண் அம்மானாய்" 


"கல்லா மனத்து" என்பதை கல்வி அறிவு இல்லாத மனம் என்பதை விட கல் போன்ற மனம் என்று பொருள் சொல்வது சிறப்பாக இருக்கும். 


"நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்து உருக" என்பார் அருணகிரிநாதர். 


இறைவனை அடைய கல்வி ஒரு தடை. 


"கற்றாரை யான் வேண்டேன், கற்பனவும் இனி அமையும்" என்று மணிவாசகரே பாடி இருக்கிறார். எனவே, கல்வி அறிவு இல்லாமல் இருப்பது ஒரு தடை இல்லை.


அறுபத்து மூன்று நாயன்மார்களில் இறைவனை வெகு சீக்கிரத்தில், ஆறே நாளில் அடைந்தவர் கல்வி அறிவு சற்றும் இல்லாத கண்ணப்ப நாயனார்.



வாளால் மகவரிந்து ஊட்டவல்லேன் அல்லன்; மாது சொன்ன

சூளால் இளமை துறக்கவல்லேன் அல்லன்; தொண்டுசெய்து

நாலாரில் கண்ணிடத்து அப்பவல்லேன் அல்லன்; நானினிச் சென்று

ஆளாவது எப்படியோதிருக்காளத்தி அப்பனுக்கே


என்பார் பட்டினத்தார். 


"திருநீல கண்டத்தின் மேல் ஆணை, எம்மைத் தொடாதே" என்று சொன்னதால், கட்டிய மனைவியை தொடாமல் இருந்த திருநீலகண்ட நாயனார் ஒரு குயவர். 


"கல்வி எனும் பல் கடல் பிழைத்தும்" என்பார் மணிவாசகர். 


முதலில் சொன்னது போல் பொருள், உரை எல்லாம் விட்டு விடுங்கள் . 


பாடலைப் படித்துப் பாருங்கள். 


மனதை ஏதோ செய்யும். 


அப்படி எல்லாம் ஒன்றும் செய்யவில்லையே என்றால், இன்னும் காலம் வரவில்லை என்று அர்த்தம். 


வரும். 






(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


முன்னுரை:

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_8.html


அறைகூவி, வீடு அருளும்


வாரா வழியருளி



Friday, August 26, 2022

திருக்குறள் - அழுக்காறாமை - அது சாலும்

      

 திருக்குறள் - அழுக்காறாமை -  அது சாலும் 


(இந்த அதிகாரத்தின் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


முன்னுரை:  அழுக்காறாமை என்றால் பொறாமை கொள்ளாமை. பிறர் ஆக்கம் கண்டு பொறுத்துக் கொள்ளும் தன்மை இல்லாமை.  பிறர் ஆக்கம் கண்டு பொறாமை என்பார் பரிமேலழகர். 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_31.html


குறள்  எண் 161:

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து

அழுக்காறு இலாத இயல்பு

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post.html


குறள்  எண் 162:  (பாகம் 1)


விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்

அழுக்காற்றின் அன்மை பெறின்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/1.html


குறள்  எண் 162:  (பாகம் 2)

விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்

அழுக்காற்றின் அன்மை பெறின்



குறள்  எண் 162:: அறனாக்கம்

அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்

பேணாது அழுக்கறுப் பான்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_16.html


குறள்  எண் 163: அல்லவை செய்யார்


அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்

ஏதம் படுபாக்கு அறிந்து


)


நமக்கு துன்பம் எப்படி வருகிறது?


இயற்கை உபாதையால் வரலாம் - நோய், விபத்து, பொருளாதார சீர்குலைவு, போன்றவற்றால் நிகழலாம். 


அல்லது 


பகைவர்களால், எதிரிகளால், நமக்கு வேண்டாதவர்களால் நிகழலாம்.


இயற்கையை நாம் ஒன்றும் செய்ய முடியாது. மழை பெய்யும், பெய்யாமல் போகும், வெள்ளம் வரும், நில நடுக்கம் வரும்...அதை நம்மால் ஒன்றும் செய்ய முடியாது.  எனவே, அதை விட்டு விடுவோம். 


இந்த எதிரிகள், பகைவர்கள் ..இவர்களை நாம் ஏதாவது செய்ய முடியும்.


முதலில், பகை வராமல் பார்த்துக் கொள்ளலாம். 


வந்துவிட்டால், சமாதானம் செய்து கொள்ளலாம்  அல்லது சண்டை போட்டு எதிரியின் வலிமையை ஒடுக்கலாம். 


நமக்கு எதிரியே இல்லை, பகையே இல்லை என்று வைத்துக் கொண்டால், நமக்கு துன்பமே வராதுதானே?


இல்லை என்கிறார் வள்ளுவர். 


"உனக்கு எதிரி இல்லாவிட்டால் கூட, பொறாமை என்ற ஒரு குணம் உனக்குள் இருந்தால், எதிரி செய்யும் அத்தனை துன்பத்தையும் அது தரும்" என்கிறார். 





பாடல் 


அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்

வழுக்கியும் கேடுஈன் பது


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_26.html


(Pl click the above link to continue reading)


அழுக்காறு = பொறாமை 


உடையார்க்கு = உள்ளவர்களுக்கு 


அதுசாலும் = அது போதும் 


ஒன்னார் = பகைவர் 


வழுக்கியும் = இல்லாவிட்டாலும் 


 கேடுஈன் பது = கேட்டினை தருவதற்கு 


பகைவன் என்ன செய்வான் ?


நம் செல்வதையும் நம்மையும் பிரித்து விடுவான். 


எப்படி?


ஒன்று, நம்மிடம் உள்ள செல்வத்தை திருடிக் கொள்ளலாம், ,அல்லது அடித்துப் பறிக்கலாம்.


அல்லது, நம்மை சிறை செய்து உள்ளே தள்ளிவிடலாம்.


எப்படியும் நமக்கு உள்ள இன்பங்களை அனுபவிக்க முடியாமல் செய்து விடுவான். தொல்லை கொடுத்துக் கொண்டே இருப்பான். நிம்மதியாக இருக்க விடமாட்டான். 


பொறாமையும் அதையே செய்யும்.


நம்மிடம் ஆயிரம் சிறப்புகள் இருக்கும், பணம் இருக்கும், ஆரோக்கியம் இருக்கும், நட்பு, சுற்றம் எல்லாம் இருக்கும். இருந்தும், அடுத்தவனுக்கு நம்மை விட ஏதோ ஒன்று கூட இருந்து விட்டால் நம் சிறப்பு ஒன்றும் தெரியாது. 


என் மனைவி அழகுதான். என்று அடுத்தவன் மனனவி என் மனைவியை விட அழகாக இருக்கிறாள் என்று நினைக்கத் தலைப் பட்டேனோ, அன்றில் இருந்து என் மனைவியின் அழகு என் கண்ணுக்குத் தெரியாது. "எனக்குன்னு வந்து வாச்சுதே" நு எரிச்சல் படத் தோன்றும். 


யார் என்ன செய்தார்கள்? 


யாரும், ஒன்றும் செய்ய வில்லை. என் பொறாமை என் நிம்மதியை குலைத்து விடுகிறது. 


இங்கு உரையில் ஒரு நுட்பம் செய்கிறார் பரிமேலழகர் 


அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்

வழுக்கியும் கேடுஈன் பது


என்பதில் "அதுசாலும்" என்று இருக்கிறது. 


பரிமேலழகர் "அதுவே சாலும்" என்று ஒரு ஏகாரத்தை சேர்க்கிறார். 


உன்னிடம் ஆயிரம் நல்ல குணங்கள் இருக்கலாம், ஆனால் பொறாமை என்ற ஒரு தீக்குணம் இருந்தால் அது ஒன்றே போதும், உனக்கு பகைவர்கள் செய்யும் தீங்கு அதனையும் அதுவே கொண்டு வரும் என்கிறார். 


"அதுவே" என்பதில் உள்ள ஏகாரம் பிரி நிலை ஏகாரம் என்று அழைக்கப்படும்.


பிரித்துக் காட்டுவதால். 


இராமன் நல்லவன் என்றால் இராமன் நல்லவன், மற்றவர்களும் நல்லவர்களாக இருக்கலாம் என்ற செய்தி அதில் அடங்கி இருக்கிறது. 


இராமனே நல்லவன் என்று சொன்னால். அவன் மட்டும்தான் நல்லவன் என்று அவனை மற்றவர்களில் இருந்து பிரித்துக் காட்டுவதால் அது பிரிநிலை ஏகாரம் என்று அழைக்கப்படும். .


தெரிநிலை தேற்றம் ஐயம் முற்று எண் சிறப்பு

எதிர்மறை எச்சம் வினா விழைவு ஒழியிசை

பிரிப்பு கழிவு ஆக்கம் இன்னன இடைப்பொருள்


என்பது நன்னூல் சூத்திரம் (421). இது "பிரிப்பு" என்பதன் கீழ் வருவது. 


நன்னூல் படிக்கலாம். ஆசைதான். காலம் போய்க் கொண்டே இருக்கிறதே. என்ன செய்ய? 


"இளமையில் கல்" என்று பாட்டி தெரியாமலா சொன்னாள்.



Wednesday, August 24, 2022

கந்தரனுபூதி - வளை பட்ட கை - பாகம் 2

      

 கந்தரனுபூதி -  வளை பட்ட கை - பாகம் 2 


(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம்: 


முன்னுரை: 

https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_30.html


1. பணியாய் அருள்வாய் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_5.html


2. எல்லாமற என்னை இழந்த நலம் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_10.html

 

3. எனை ஆண்ட இடம் தானோ? பாகம் 1 & 2


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/1_14.html

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/2_17.html


4. வளை பட்ட கை - 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_23.html





)


பாடல் 


வளைபட்ட கைம் மாதொடு, மக்கள் எனும்

தளைபட்டு அழியத் தகுமோ? தகுமோ?

கிளைபட்டு எழு சூர் உரமும், கிரியும்,

தொளைபட்டு உருவத் தொடு வேலவனே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/2_24.html


(Pl click the above link to continue reading) 


வளைபட்ட கைம் = வளையல் அணிந்த கைகள் 


மாதொடு = கொண்ட பெண்கள் 


மக்கள் = மக்கள் 


எனும் = என்ற 


தளைபட்டு  = விலங்கில் அகப்பட்டு 


அழியத் = அழிவது 


தகுமோ? தகுமோ? = சரியா, சரியா ?


கிளைபட்டு எழு = கிளை கிளையாக கிளம்பும் 


சூர் உரமும் = சூர பத்மனின் உறுதியும் 


கிரியும், = (மாயா) மலையும் 


தொளைபட்டு = துளைத்து 


உருவத் = உருவிக் கொண்டு வெளியில் செல்லும் 


தொடு வேலவனே. = வேலைத் தொடுத்தவனே 


அதாவது மனைவி மக்கள் என்ற பந்தத்தில் அகப்பட்டு அழிவது சரியா என்று முருகனைக் கேட்கிறார். 


நான் வாசித்தவரை, என் சிற்றறிவுக்கு எட்டிய வரை, உரை எழுதிய பெரியவர்கள் எல்லோரும் மேலே சொன்ன கருத்தை ஒட்டித்தான் எழுதி இருக்கிறார்கள். வேற்று கருத்துகள் இருப்பின் வாசகர்கள் பகிர்ந்து கொள்ளலாம். 


அருணகிரிநாதர் அனுபூதி பெற்ற மகான். 


மனைவி மற்றும் மக்களை ஒரு தளை (விலங்கு) என்று  சொல்லுவாரா? அப்படி பொருள் கொண்டால் என்ன செய்ய வேண்டும் ?ஒன்று திருமணம் செய்து கொள்ளக் கூடாது அல்லது திருமணம் ஏற்கனவே செய்திருந்தால் அதை விட்டு தப்பிக்க வேண்டும். 


திருமணம் ஆன ஆண்கள் எல்லோரும் அதை பின் பற்ற நினைத்தால் என்ன ஆகும்? 


அருணகிரியார் அப்படிச் சொல்லி இருப்பாரா? அதற்கு வேறு அர்த்தம் இருக்குமா என்று சிந்தித்தேன். 


முதலாவது, வளை பட்ட கை மாதொடு மக்கள் என்பது ஒரு ஆணின் பார்வையில் சொல்லப் பட்டது. அதையே ஒரு பெண்ணின் பார்வையில் இருந்து பார்த்தால் "கழல் பட்ட காலொடு மக்கள்" என்று சொல்லலாம். பெண்கள் தங்கள் கணவன்மாரை பிள்ளைகளை தளையாக நினைக்கலாம். அப்படி நினைத்து எல்லா பெண்களும் சன்யாசிகளாகி விட்டால் என்ன செய்வது? 


இரண்டாவது, பெண்கள் வேலைக்குப் போவது, பொருள் ஈட்டுவது என்பதெல்லாம் ஒரு நூற்றாண்டு கால சங்கதி. அதற்கு முன்னால் பெரும்பாலும் பெண்கள் வேலைக்குப் போவதில்லை. எனவே, அவர்கள் ஏதோ பாரம் போல ஒரு சித்திரம் தீட்டப் பட்டு இருக்கிறது. ஆண் தான் உழைக்கிறான், கஷ்டப்படுகிறான், பெண் சுகமாக வீட்டில் இருந்து அனுபவித்துக் கொண்டிருக்கிறாள் என்ற ஒரு தோற்றம் உருவாகிவிட்டது.   


அது சரி அல்ல. 


பெண் வேலைக்குப் போகவில்லை, யுத்தங்களில் ஈடு படவில்லை என்பதெல்லாம் உண்மைதான். ஆனால், அவர்களின் இழப்பு மிக அதிகமானது. காதோரம் முதன் முதலில் ஒரு நரை முடி தோன்றியவுடன் பதறாத ஆண்கள் யார்? ஒரு முடிதான். அதை வெட்டி தூரப் போட்டுவிட்டாலும் மனம் கிடந்து குழம்பியதா இல்லையா?  பின் வெட்டி முடிக்க முடியவில்லை என்றால் சாயம் பூசுவது. தலை முடி கொட்டி வழுக்கை விழும் போது எவ்வளவு சங்கடம் வருகிறது. 


அதுவும் ஐம்பது வயதுக்கு மேல். 


இருபது வயதில் இளநரை வந்த வாலிபனைக் கேளுங்கள். வாழ்வே முடிந்துவிட்டது என்று சொல்லுவான். 


ஆனால், பெண்கள், மிக இளம் வயதில், பிள்ளை பெறும் பொழுது உடலின் கட்டுக் கோப்பை, இளமையை எவ்வளவு இழக்கிறார்கள். உடம்பில் அத்தனை பிடிமானங்களும் தளரும். தோல் தன் தன்மையை இழக்கும். இடுப்பு எலும்பு பிடி தளரும். மார்பகங்கள் கட்டு குலையும். 


ஒரு நரை முடிக்கே அந்தப் பதற்றம் என்றால், பெண்ணின் இழப்பை என்னென்று சொல்லுவது? சரி, ஒரு குழந்தையோடு முடியுமா என்றால் இல்லை. குடும்பக் கட்டுப்பாடு எல்லாம் இப்போதுதானே. காலம் காலமாக பிள்ளை பெற்றுக் கொண்டே இருந்தார்கள். எவ்வளவு இழக்க வேண்டி இருந்திருக்கும்? 


பிள்ளைகள் ஒரு தளை (விலங்கு) என்று சொல்வதானால் ஆண்களை விட பெண்கள்தான் அதை சொல்ல அருகதை உள்ளவர்கள். 


ஒரு புறம் பிள்ளைகளை பெற்றுக் கொண்டிருக்க வேண்டும். இன்னொரு புறம் ஆணின் நாட்டம் அவள் பால் குறைய அவளுக்கு மன அழுத்தம் மேலும் அதிகமாகும். 


படிக்க முடியாது. 

வேலை பார்த்து சம்பாதிக்க முடியாது.

சாதித்து பேர் வாங்க முடியாது.

உடலை பேணி பாதுக்காக முடியாது.

செய்த வேலையையே வாழ்நாள் பூராவும் செய்து கொண்டிருக்க வேண்டும்



அவ்வளவு தியாகம் செய்யும் பெண்களை "வளை பட்ட கை மாதொடு மக்கள் எனும் தளை " என்று சொல்லுவது சரிதானா?


எப்படிப் பார்த்தாலும், அது சரியாக வரவில்லை. பின் அருணகிரியார் என்னதான் சொல்லி இருப்பார்?






இன்றைய பாடல் சற்று சிக்கலான பாடல். 


"மனைவி மக்கள் என்ற தளையில் (கை விலங்கு) பட்டு நான் அழிவது சரியா சரியா "


என்று அருணகிரிநாதர் கேட்கிறார். 


அருணகிரிநாதர், பட்டினத்தார் போன்ற பெரியவர்கள் பெண்களைப் பற்றி மிகக் கடுமையாக பாடியிருக்கிறார்கள். பெண்கள் ஏதோ பேய், பிசாசு போலவும், பிடித்தால் விடாது, மோக வலை, என்றெல்லம் பயமுறுத்தி இருக்கிறார்கள். 


எனக்கு இதில் மிக நீண்ட நாட்களாக ஒரு சங்கடம் உண்டு. 



பெண் என்பவள் மோசமானவளா? ஒரு ஆணின் ஆன்மீக முன்னேறத்திற்கு அவள் ஒரு தடையா?  அப்படி என்றால் பெண்ணின் ஆன்மீக முன்னேற்றத்திற்கு ஒரு ஆண் தடையா? அப்படி யாரும் சொல்லி இருப்பதாகத் தெரியவில்லை. 


சரி, பெண் ஆன்மிக முன்னேறத்திற்கு ஒரு தடை என்றே ஒரு வாதத்துக்கு வைத்துக் கொள்வோம். எந்தப் பெண்ணும் ஒரு ஆணை வலுக் கட்டாயாமாக திருமணம் செய்து கொள்வதில்லை. விலை மகளிர் கூட அவர்களே வலியச் சென்று எந்த ஆணையும் மயக்குவது இல்லை. ஆண்களே போய் அவர்கள் வலையில் விழுகிறார்கள்.  இன்பம் அனுபவிக்கிறார்கள்.பின் அந்தப் பெண்களை குறை கூறுகிறார்கள். இது எப்படிச் சரியாகும் ?


இன்னும் ஒரு ப் படி மேலே போவோம். பெண் என்பவள் ஆணை சம்சார பந்தத்துக்குள் இழுப்பவள் என்று வைத்துக் கொண்டால், பெண்ணை தவிர்த்து விட முடியுமா? தவிர்த்து விட்டால் உலகம் இயங்குவது எப்படி ? எல்லா ஆண்களும் நான் பட்டினத்தார், அருணகிரிநாதர் சொன்னபடி நடக்கப் போகிறேன். பெண் என்பவள் நம்மை இந்த பிறவிப் பெருங்கடலுள் அழுத்தும் ஒரு சக்தி. அதில் இருந்து விட பட வேண்டும் என்று ஓடி விட்டால், இந்த உலகம் நின்று விடாதா? நானும் நீங்களும் பிறப்பது எப்படி? வினைகள் தீர்வது எப்படி? 


சரி, பெண்ணாவது ஒரு வழியில் சேர்த்துக் கொள்ளலாம். பிள்ளைகள் என்ன பாவம் செய்தார்கள். அவர்களையும் சேர்த்து தளை , விலங்கு என்று எப்படிச் சொல்வது? 


பெண்டாட்டி பிள்ளை வேண்டாம் என்றால், இல்லறமே கூடாது என்று ஆகி விடும். 


இல்லறமல்லது நல்லறம் அன்று சொன்னது தவறா? 


மாதொரு பாகனாய் ஈசன் நின்றது தவறா? 


"பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே" என்ற தேவாரம் பிழையா? 



என் தாயும், தாரமும், தமக்கையும், மகளும் பெண். அவர்கள் எல்லோரும் மோசமானவர்களா? 


பெண் என்பவள் எவ்வளவு இனிமையானவள். 


பத்து மாதம் சுமந்து பெறுகிறாள்.


பாலூட்டி, சீராட்டி வளர்கிறாள். 


மனைவியாக எவ்வளவு இன்பம். ஐம்புலன்களுக்கும் இன்பம் தரும் இவளைப் போல வேறு ஒன்று இல்லை என்று வள்ளுவர் ஜொள்ளு விட வைக்கிறார். 


மகளாக, எவ்வளவு இன்பம். பெண் பிள்ளையை பெற்றவர்களுக்குத் தான் தெரியும் அந்த சுகம். 


தமக்கையாக. 


நண்பியாக. 


ஒரு ஆணின் எல்லா காலத்திலும் பின்னி பிணைந்து இருக்கும் பெண்ணை எப்படி வெறுத்து ஒதுக்க முடியும்? 


அப்படியே ஒதுக்கினாலும் அது செய்நன்றி மறந்த குற்றமாகாதா? 


ஒன்றுக்கு ஒன்று முரணாக இருக்கிறதே. எந்த வழியில் செல்வது?


ஒன்று அருணகிரிநாதர் சொல்வது சரி என்று ஏற்றுக் கொண்டு, பெண்கள் வலையில் விழாமல் அல்லது விழுந்து விட்டால் தப்பிவிட முயற்சிக்கலாம். 


அல்லது, அவர் சொல்வது சரி அல்ல என்று மேலே போய் விடலாம். 


எது சரி? அல்லது இதற்கு வேறு விளக்கம் ஏதாவது இருக்குமா?  


சிந்திக்க வேண்டிய விடயம் தானே?


சிந்திப்போம்.....

திருவாசகம் - திரு அம்மானை - தாய்போல் தலையளித்திட்டு

    

 திருவாசகம் - திரு அம்மானை  -   தாய்போல் தலையளித்திட்டு


(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


முன்னுரை:

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_8.html


அறைகூவி, வீடு அருளும்


வாரா வழியருளி



அவனும் அவளும் அவ்வப்போது பார்த்துக் கொள்வார்கள். சில நேரம் ஒரு சின்ன புன்னகை.  ஒரு நாள் தைரியமாக அவன் அவளிடம் சென்று தன்னை அறிமுகம் செய்து கொள்கிறான். அவர்கள் அடிக்கடி சந்திக்கிறார்கள்.பேசி, சிரித்து மகிழ்கிறார்கள். முதன் முதலாக அவன் அவள் கரங்களைப் பற்றுகிறான். அவளுக்குள் நாணம் ஒரு புறம், சந்தோசம் மறுபுறம், இதயம் பட பட என்று அடித்துக் கொள்கிறது. ரோமம் எல்லாம் சிலிர்கிறது. யாரும் பார்த்து விடுவார்களோ என்ற பயம் ஒரு புறம். சற்று நெருங்கி அமர்கிறார்கள்.....


அந்த நேரத்தில் அவள் அனுபவித்த அந்த உணர்வை சொல் என்றால் எப்படிச் சொல்வாள். எல்லாம் தெரியும், இருந்தும் ஒன்றும் சொல்ல முடியாது. தன் அனுபவம் தான் இருந்தும் சொல்ல முடியாது. 


இறை அனுபவமும் அப்படித்தான். 


மாணிக்கவாசகர் தவிக்கிறார். என்ன என்று சொல்லுவது, எப்படிச் சொல்வது, கடல் போன்ற இன்பம். அதை எப்படி வார்த்தைகளுக்குள் அடக்குவது? 


பாடல் தேனாக உருகி வருகிறது....


இறைவன் திருக்கருனையை நினைத்து நினைத்து உருகுகிறார் 


"வானில் உள்ள மால், அயன், இந்திரன் முதலிய தேவர்கள் எல்லாம் உன்னை அடைய பாடு படுகிறார்கள். அவர்களுக்கு காட்சி தராமல், கீழான என்னை ஒரு தாய் போல் அன்பு செய்து ஆண்டு கொண்டாய். என் உரோமங்கள் சிலிர்கிறது. புது உயிர் பிறந்தது போல இருக்கிறது. தேன் போல இனிக்கிறது. அமுதம் போல் இருக்கிறது. உன் திருவடிகள் எவ்வளவு ஒளி பொருந்தி இருக்கிறது. அந்தத் திருவடிகளைப் பாடுங்கள் அம்மானை ஆடும் பெண்களே" என்கிறார். 


பாடலைப் படித்துப் பாருங்கள். அந்த உணர்வு ஓட்டம் புரியும். 



பாடல் 



வான் வந்த தேவர்களும், மால், அயனோடு, இந்திரனும்,

கான் நின்று வற்றியும், புற்று எழுந்தும், காண்பு அரிய

தான் வந்து, நாயேனைத் தாய்போல் தலையளித்திட்டு,

ஊன் வந்து உரோமங்கள், உள்ளே உயிர்ப்பு எய்து

தேன் வந்து, அமுதின் தெளிவின் ஒளி வந்த,

வான் வந்த, வார் கழலே பாடுதும் காண்; அம்மானாய்!


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_24.html


(pl click the above link to continue reading)




வான் வந்த தேவர்களும் = வானில் உள்ள தேவர்களும் 


மால் = திருமாலும் 


அயனோடு = பிரமன் 


இந்திரனும் = இந்திரனும் 


கான் நின்று = காட்டில் நின்று (தவம் செய்து) 


வற்றியும் = உடல் வற்றி மெலிந்தும் 


புற்று எழுந்தும் = அவர்களைச் சுற்றி புற்று எழுந்தும் 


காண்பு அரிய = காண முடியாத 


தான் வந்து = (அவன்) தானே வந்து 


நாயேனைத் = நாய் போல கீழான என்னை 


தாய்போல் = ஒரு தாயைப் போல 


தலையளித்திட்டு, = அன்பு செய்து 


ஊன் வந்து = என் உடலில் புகுந்து 


உரோமங்கள் = உரோமங்கள் 


உள்ளே உயிர்ப்பு எய்து = உயிர் பெற்று 


தேன் வந்து = தேனைப் போல 


அமுதின் = அமுதத்தின் 


தெளிவின் = தெளிவைப் போல 


ஒளி வந்த = ஒளி பொருந்திய 


வான் வந்த = வானில் இருந்து வந்த 


வார் கழலே = வெற்றித் திருவடிகளை 


பாடுதும் காண்; அம்மானாய்! = பாடுவோம் அம்மானைப் பெண்களே 




Tuesday, August 23, 2022

கந்தரனுபூதி - வளை பட்ட கை

     

 கந்தரனுபூதி -  வளை பட்ட கை 


(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம்: 


முன்னுரை: 

https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_30.html


1. பணியாய் அருள்வாய் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_5.html


2. எல்லாமற என்னை இழந்த நலம் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_10.html

 

3. எனை ஆண்ட இடம் தானோ? பாகம் 1 & 2


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/1_14.html

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/2_17.html



)



வளைபட்ட கைம் மாதொடு, மக்கள் எனும்

தளைபட்டு அழியத் தகுமோ? தகுமோ?

கிளைபட்டு எழு சூர் உரமும், கிரியும்,

தொளைபட்டு உருவத் தொடு வேலவனே.



இன்றைய பாடல் சற்று சிக்கலான பாடல். 


"மனைவி மக்கள் என்ற தளையில் (கை விலங்கு) பட்டு நான் அழிவது சரியா சரியா "


என்று அருணகிரிநாதர் கேட்கிறார். 


அருணகிரிநாதர், பட்டினத்தார் போன்ற பெரியவர்கள் பெண்களைப் பற்றி மிகக் கடுமையாக பாடியிருக்கிறார்கள். பெண்கள் ஏதோ பேய், பிசாசு போலவும், பிடித்தால் விடாது, மோக வலை, என்றெல்லம் பயமுறுத்தி இருக்கிறார்கள். 


எனக்கு இதில் மிக நீண்ட நாட்களாக ஒரு சங்கடம் உண்டு. 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_23.html


(Pl click the above link to continue reading) 



பெண் என்பவள் மோசமானவளா? ஒரு ஆணின் ஆன்மீக முன்னேறத்திற்கு அவள் ஒரு தடையா?  அப்படி என்றால் பெண்ணின் ஆன்மீக முன்னேற்றத்திற்கு ஒரு ஆண் தடையா? அப்படி யாரும் சொல்லி இருப்பதாகத் தெரியவில்லை. 


சரி, பெண் ஆன்மிக முன்னேறத்திற்கு ஒரு தடை என்றே ஒரு வாதத்துக்கு வைத்துக் கொள்வோம். எந்தப் பெண்ணும் ஒரு ஆணை வலுக் கட்டாயாமாக திருமணம் செய்து கொள்வதில்லை. விலை மகளிர் கூட அவர்களே வலியச் சென்று எந்த ஆணையும் மயக்குவது இல்லை. ஆண்களே போய் அவர்கள் வலையில் விழுகிறார்கள்.  இன்பம் அனுபவிக்கிறார்கள்.பின் அந்தப் பெண்களை குறை கூறுகிறார்கள். இது எப்படிச் சரியாகும் ?


இன்னும் ஒரு ப் படி மேலே போவோம். பெண் என்பவள் ஆணை சம்சார பந்தத்துக்குள் இழுப்பவள் என்று வைத்துக் கொண்டால், பெண்ணை தவிர்த்து விட முடியுமா? தவிர்த்து விட்டால் உலகம் இயங்குவது எப்படி ? எல்லா ஆண்களும் நான் பட்டினத்தார், அருணகிரிநாதர் சொன்னபடி நடக்கப் போகிறேன். பெண் என்பவள் நம்மை இந்த பிறவிப் பெருங்கடலுள் அழுத்தும் ஒரு சக்தி. அதில் இருந்து விட பட வேண்டும் என்று ஓடி விட்டால், இந்த உலகம் நின்று விடாதா? நானும் நீங்களும் பிறப்பது எப்படி? வினைகள் தீர்வது எப்படி? 


சரி, பெண்ணாவது ஒரு வழியில் சேர்த்துக் கொள்ளலாம். பிள்ளைகள் என்ன பாவம் செய்தார்கள். அவர்களையும் சேர்த்து தளை , விலங்கு என்று எப்படிச் சொல்வது? 


பெண்டாட்டி பிள்ளை வேண்டாம் என்றால், இல்லறமே கூடாது என்று ஆகி விடும். 


இல்லறமல்லது நல்லறம் அன்று சொன்னது தவறா? 


மாதொரு பாகனாய் ஈசன் நின்றது தவறா? 


"பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே" என்ற தேவாரம் பிழையா? 



என் தாயும், தாரமும், தமக்கையும், மகளும் பெண். அவர்கள் எல்லோரும் மோசமானவர்களா? 


பெண் என்பவள் எவ்வளவு இனிமையானவள். 


பத்து மாதம் சுமந்து பெறுகிறாள்.


பாலூட்டி, சீராட்டி வளர்கிறாள். 


மனைவியாக எவ்வளவு இன்பம். ஐம்புலன்களுக்கும் இன்பம் தரும் இவளைப் போல வேறு ஒன்று இல்லை என்று வள்ளுவர் ஜொள்ளு விட வைக்கிறார். 


மகளாக, எவ்வளவு இன்பம். பெண் பிள்ளையை பெற்றவர்களுக்குத் தான் தெரியும் அந்த சுகம். 


தமக்கையாக. 


நண்பியாக. 


ஒரு ஆணின் எல்லா காலத்திலும் பின்னி பிணைந்து இருக்கும் பெண்ணை எப்படி வெறுத்து ஒதுக்க முடியும்? 


அப்படியே ஒதுக்கினாலும் அது செய்நன்றி மறந்த குற்றமாகாதா? 


ஒன்றுக்கு ஒன்று முரணாக இருக்கிறதே. எந்த வழியில் செல்வது?


ஒன்று அருணகிரிநாதர் சொல்வது சரி என்று ஏற்றுக் கொண்டு, பெண்கள் வலையில் விழாமல் அல்லது விழுந்து விட்டால் தப்பிவிட முயற்சிக்கலாம். 


அல்லது, அவர் சொல்வது சரி அல்ல என்று மேலே போய் விடலாம். 


எது சரி? அல்லது இதற்கு வேறு விளக்கம் ஏதாவது இருக்குமா?  


சிந்திக்க வேண்டிய விடயம் தானே?


சிந்திப்போம்.....

Monday, August 22, 2022

திருக்குறள் - அழுக்காறாமை - அல்லவை செய்யார்

     

 திருக்குறள் - அழுக்காறாமை - அல்லவை செய்யார்


(இந்த அதிகாரத்தின் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


முன்னுரை:  அழுக்காறாமை என்றால் பொறாமை கொள்ளாமை. பிறர் ஆக்கம் கண்டு பொறுத்துக் கொள்ளும் தன்மை இல்லாமை.  பிறர் ஆக்கம் கண்டு பொறாமை என்பார் பரிமேலழகர். 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_31.html


குறள்  எண் 161:

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து

அழுக்காறு இலாத இயல்பு

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post.html


குறள்  எண் 162:  (பாகம் 1)


விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்

அழுக்காற்றின் அன்மை பெறின்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/1.html


குறள்  எண் 162:  (பாகம் 2)

விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்

அழுக்காற்றின் அன்மை பெறின்



குறள்  எண் 162:: அறனாக்கம்

அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்

பேணாது அழுக்கறுப் பான்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_16.html


)


பொறாமை கொள்ளாதே என்று வள்ளுவர் சொல்கிறார்.  பொறாமை கொண்டால் என்ன ஆகும்? இன்னும் சொல்லப் போனால், கொஞ்சம் பொறாமை இருந்தால் தானே மற்றவர்கள் போல் நாமும் உயர முடியும்? அப்படிப் பார்த்தால் பொறாமை நல்லதுதானே? என்று கூட நாம் நினைப்போம். 


அது சரியல்ல. பொறாமை கொண்டால் இம்மைக்கு மட்டும் அல்ல மறுமைக்கும் துன்பம் தொடரும். எனவே, பொறாமை கொள்ளக் கூடாது என்கிறார். 


கீழே உள்ள குறளுக்கு பரிமேலழகர் செய்த உரை வியக்கத் தக்கது. 



பாடல் 

அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்

ஏதம் படுபாக்கு அறிந்து


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_22.html


(Pl click the above link to continue reading)



அழுக்காற்றின் = அழுக்காறு, அதாவது பொறாமை காரணமாக 


அல்லவை செய்யார் = அறன் அல்லாதவற்றைச் செய்யார் 


இழுக்காற்றின் = தவறானவற்றின் 


ஏதம் = துக்கம், துன்பம் 


படுபாக்கு = உண்டாவது 


அறிந்து = அறிந்து 


பொறாமை கொள்வதால் வரும் துன்பத்தை அறிந்து அறன் அல்லாதவற்றை செய்யக் கூடாது என்பது பொதுப் பொருள். 


இதில் பரிமேலழகரின் நுணுக்கம் ஆச்சரியமானது.


பொறாமை கொள்வதால் வரும் துன்பங்களை அறிந்து அறன் அல்லாதவற்றை செய்ய மாட்டார்கள் என்கிறார் வள்ளுவர். யார் செய்ய மாட்டார்கள் என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டு பதில் சொல்கிறார் பரிமேலழகர்.


"அறிந்து" என்று கூறியதால், அறிவுள்ளவர்கள் என்று உரை செய்கிறார். பொறாமை கொண்டால் துன்பம் வரும் என்று யாருக்குத் தெரியும்? அறிவு உள்ளவர்களுக்குத் தான் தெரியும். அது தெரியாமல் இருந்தால், அவன் அறிவற்ற மூடன் என்று பொருள். பொறாமை கூட நல்லதுதான் என்று யாராவது சொன்னால், அவன் அறிவு அவ்வளவுதான் என்று எண்ணிக் கொள்ள வேண்டும். 


"ஏதம்" என்றால் துன்பம்.துக்கம். சில அறிவிலிகள் சொல்லக் கூடும் "துன்பப் பட்டால்தானே சுகம் அடைய முடியும். வேலை செய்வது துன்பம் தான். அதற்காக வேலை செய்யாமல் இருக்க முடியுமா? எனவே,முதலில் துன்பம் வந்தால் என்ன, பின்னால் இன்பம் வந்தால் சரிதான்" என்று கூறக் கூடும். பரிமேலழகர் கூறுகிறார் "இம்மைக்கும் மறுமைக்கும் துன்பம் தரும்" என்று. 


பொறாமை கொண்டால் ஒரு நாளும் இன்பம் வராது. எனவே பொறாமை கொள்வதில் அர்த்தமே இல்லை என்கிறார். 


நான் என மனதுக்குள் பொறாமை கொண்டால் யாருக்கு என்ன? நான் என்ன யார் பொருளையும் திருடுகிறேனா? மற்றவர்கள் மேல் வசை பாடுகிறேனா? ஒன்றும் இல்லையே. என் மனதுக்குள் பொறாமை எழுகிறது. அதில் யாருக்கு என்ன கெடுதல் என்று கேட்கலாம். 


"அல்லவை செய்யார்" என்பதற்கு பரிமேலழகர் "அறன் அல்லாதவற்றைச் செய்யார் என்கிறார். அறன் அல்லாதது எது என்றால் பிறருக்கு மன, மெய், மொழிகளால் தீங்கு செய்தலும், நினைத்தலும் ஆம் என்கிறார். 


யார் மேல் பொறாமை கொள்ளக் கூடாது என்றால் "கல்வியாலும், செல்வத்தாலும் உயர்ந்தவர்கள் மேல்" என்கிறார். 


எவ்வளவு நுணுக்கமான உரை. எவ்வளவு ஆழமாக சிந்தித்து எழுதி இருக்கிறார்கள். 


நம் சொத்தின் மதிப்பு தெரியாமல் இருக்கிறோம். 


 




Friday, August 19, 2022

திருவாசகம் - திரு அம்மானை - அந்தம் இலா ஆனந்தம்

   

 திருவாசகம் - திரு அம்மானை  -   அந்தம் இலா ஆனந்தம்


(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


முன்னுரை:

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_8.html


அறைகூவி, வீடு அருளும்


வாரா வழியருளி



ஒரு நிறுவனத்தின் மேல் அதிகாரியாக இருப்பார் அவர். அவரைக் கேட்டுக் கொண்டுதான் எல்லாம் நடக்கும். அவர் கையெழுத்துப் போட்டால்தான் எதுவும் நகரும். என்னை விட்டால் இந்த நிறுவனத்தை செலுத்த யார் இருக்கிறார்கள் என்று பெருமிதம் கொள்வார். நான் இல்லாவிட்டால் இந்த நிறுவனம் என்ன ஆகுமோ என்று கவலை கொள்வார். 


ஒரு நாள் அவர்  ஓய்வு அடையும் வயதை அடைவார். அவரை பாராட்டி வீட்டுக்கு அனுப்பி வைப்பார்கள். அந்த நிறுவனம் அவர் இல்லாமல் எப்போதும் போல இயங்கிக் கொண்டிருக்கும். 


அவருக்குத் தான் தாங்க முடியாது. நான் அவ்வளவு செய்தேனே...என்னைத் தவிர யாருருக்குத் தெரியும்..நான் இல்லாமல் எப்படி நடக்கிறது, அப்படி என்றால் நான் ஒன்றும் அப்படி ஒரு பெரிய ஆள் இல்லையா, நான் இல்லாவிட்டால் இன்னொருவன் என்றால் நான் சாதரணமானவன் தானா என்று மறுகுவார்.  சில பேர் அந்த வெறுமையை தாங்க முடியாமல் மாரடைப்பு வந்து இறந்தும் இருக்கிறார்கள். 


நமக்கு அதை நினைத்தால் சிரிப்பாக இருக்கும். 


சிரிப்பதற்கு முன் சற்று யோசிப்போம். 


நம் வீட்டில் என்ன நடக்கிறது என்று. 


நான் இல்லாவிட்டால் என் பிள்ளைகள் என்ன ஆகும், என் மனைவிக்கு ஒன்றுமே தெரியாது, நான் இல்லாவிட்டால் என் கணவருக்கு ஒரு காப்பி கூட தெரியாது, அவரை அல்லது அவளை யார் பார்த்துக் கொள்வார்கள், என்று நமக்கு நாமே பெரிய ஆளாக நினைத்துக் கொள்வோம். நம்மை விட்டால் இந்த குடும்பமே சீரழிந்து விடும் என்று நினைப்போம். நாம் தான் இந்த குடும்பத்தை தாங்கி நிற்கிறோம் என்று நினைப்போம். 


அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. சந்தேகம் இருந்தால் உங்களை சுற்றி உள்ளவர்களை கேட்டுப் பாருங்கள். உபசாரத்துக்கு வேண்டும் என்ன்றால்"ஐயோ, நீ இல்லாத வாழ்கையை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை" என்பார்கள். அத்தனையும் பொய். யார் இல்லாவிட்டாலும், உலகம் இயங்கிக் கொண்டே இருக்கும். 


நாமே நினைத்துக் கொள்வதுதான்...நாம் பெரிய ஆள், இந்த குடும்ப பாரத்தை நாம் தான் கொண்டு செல்கிறோம் என்று. அப்படி சொல்லிக் கொண்டு நம் பந்த பாசங்களை மேலும் மேலும் இறுக்கமாக்கி கொள்கிறோம். விட்டால் ஒன்றும் ஆகாது. இருந்தாலும், விடவே முடியாது என்று நாமே கற்பனை செய்து கொண்டு "என் குடும்பம், என் பிள்ளைகள், என் கணவன், என் மனைவி, ,என் பொறுப்பு"  ஆணவத்தை வளர்த்துக் கொள்கிறோம். 


அதை விட முடிவது இல்லை. 


விட்டு விட்டு என்ன செய்வது என்ற பெரிய கேள்வி எழும். அதற்கு விடை காண முடியாது. அதற்கு பயந்து, நாம் இதற்கு பின்னால் ஒளிந்து கொள்கிறோம். 


இந்தப் பற்றுகள் விட வேண்டும் என்றால் அவன் அருள் வேண்டும். 


நான் இல்லாவிட்டால் ஒன்றும் ஆகி விடாது என்று சொல்ல எத்தனை பேரால் முடியும்? 


"நான் ஒன்றும் பெரிசாக செய்து விடவில்லை. நான் இல்லாவிட்டாலும் எல்லோரும் சந்தோஷமாகத் தான் இருப்பார்கள். இருக்கும் வரை என்னால் முடிந்ததைச் செய்கிறேன்" என்று இருந்தால் மனம் லேசாகும். நான் நான் என்று பறக்காது. என்னை விட்டால் யாரும் இல்லை என்று இறுமாப்பு கொள்ளாது, என்னை கேட்காமல் எப்படிச் செய்யலாம் என்று மனம் கொக்கரிகாது.


"அவரவர்கள் அவர்கள் வேலையை பார்த்துக் கொள்வார்கள்" என்று விட்டு விட்டால் நம் வேலை என்ன என்ற சிந்தனை பிறக்கும். அந்தக் கேள்வியில் இருந்து எல்லையில்லா ஆனந்தம் பிறக்கும் என்கிறார் மணிவாசகர். 





பாடல் 


இந்திரனும், மால், அயனும், ஏனோரும், வானோரும்,

அந்தரமே நிற்க, சிவன் அவனி வந்தருளி,

எம் தரமும் ஆட்கொண்டு, தோள் கொண்ட நீற்றன் ஆய்;

சிந்தனையை வந்து உருக்கும் சீர் ஆர் பெருந்துறையான்,

பந்தம் பறிய, பரி மேல்கொண்டான், தந்த

அந்தம் இலா ஆனந்தம் பாடுதும் காண்; அம்மானாய்!


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_19.html


(pl click the above link to continue reading)


இந்திரனும், = இந்திரனும் 


மால் = திருமாலும் 


அயனும் = பிரமாவும் 


ஏனோரும் = மற்றையவர்களும் 


வானோரும், = வானில் உள்ளவர்களும் 


அந்தரமே நிற்க = அந்தரத்தில் நிற்க 


சிவன் = சிவ பெருமான் 


அவனி = இந்த உலகிற்கு (பூமிக்கு) 


வந்தருளி = வந்து அருளி 


எம் தரமும் = எம்முடைய தரத்துக்கு எங்களையும் 


ஆட்கொண்டு = ஆட் கொண்டு 


தோள் கொண்ட நீற்றன் ஆய்; = தோள்களிலே திருநீற்றை அணிந்து 


சிந்தனையை = மனதை 


வந்து உருக்கும் = வந்து உருக்கும் 


சீர் ஆர் பெருந்துறையான், = சீரிய சிறந்த திருப் பெருந்துறையில் உறைபவன் 


பந்தம் பறிய = நம்முடைய பந்தங்களை எல்லாம் நீக்கி 


பரி மேல்கொண்டான் = குதிரை மேல் வந்தான் 


தந்த = அருள் தந்த 


அந்தம் இலா ஆனந்தம் = முடிவு இல்லாத ஆனந்தம் 


பாடுதும் காண்; அம்மானாய்! = அதைப் பாடுவோம் அம்மானை ஆடும் பெண்ணே 



பந்தங்களை நீக்கியவுடன், அந்தம் இல்லாத ஆனந்தம் தோன்றியது என்கிறார் 


மணிவாசகர் பாண்டிய மன்னன் அவையில் முதல் அமைச்சராக இருந்தார். பாண்டிய மன்னன் நிறைய பொருள் கொடுத்து குதிரைகள் வாங்கி வர அனுப்பினான். அவரும் கிளம்பி விட்டார். 


பார்த்தார் சிவ பெருமான். தன் பக்தன் இப்படி குதிரை வாங்கவும், நாட்டை ஆள்வதில் உதவி செய்வதிலும் பிறவியை வீணே கழிக்கிறானே என்று அவர் மேல் அருள் கொண்டு அவரை தடுத்து ஆட்கொண்டார். 


சிந்திப்போம், மூன்று வேளை சமையல் செய்வதும், துணி துவைத்து உலர்துவதும், வேலை ஆட்களை மேற் பார்வை செய்வதும், நாள் ஒன்றுக்கு பத்து மணி நேரம் ஏதோ ஒரு அலுவலகத்தில் செய்த வேலையையே வருடக் கணக்கில் செய்து கொண்டு இருப்பதுவா வாழ்வின் நோக்கம்?  


இதையே ஏதோ பெரிய இமாலய சாதனை என்று நினைத்துக் கொள்வதும், இதைச் செய்ய என்னை விட்டால் ஆள் இல்லை என்று இறுமாப்பதும் விட்டு விட்டு,கரை சேரும் வழியை நினைப்போம். 


திருச்சிற்றம்பலம் 


Wednesday, August 17, 2022

கந்தரனுபூதி - எனை ஆண்ட இடம் தானோ? பாகம் 2

    

 கந்தரனுபூதி -  எனை ஆண்ட இடம் தானோ? பாகம் 2


(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம்: 


முன்னுரை: 

https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_30.html


1. பணியாய் அருள்வாய் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_5.html


2. எல்லாமற என்னை இழந்த நலம் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_10.html


3. எனை ஆண்ட இடம் தானோ? பாகம் 1


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/1_14.html




)


எது நிரந்தரமானது, எது அடிப்படையானது எதில் இருந்து இந்த உலகம் தோன்றியது என்ற கேள்விகளுக்கு இங்கு விடை சொல்கிறார் அருணகிரிநாதர். 


இது தான் என்று விடை சொல்லிவிடலாம். இதைத் தவிர வேறு விடைகளும் இருக்கிறதா? இது பற்றி மற்றவர்கள் சிந்தித்து இருக்கிறார்களா? அவர்கள் சொன்ன முடிவு என்ன? என்பதையும் இங்கே கூறுகிறார்.


சமயவாதிகள் பலரைக் ஏதாவது கேட்டால் "அது எல்லாம் ஒரு நம்பிக்கைதான்...அதை எல்லாம் கேள்வி கேட்கக் கூடாது...அதெல்லாம் உனக்குப் புரியாது" என்று சொல்லிவிடுவார்கள். 


ஆனால், இந்து சமயத்தை உற்று நோக்கினால் புரியும். இந்த சமயம் முழுவதுமே கேள்வி கேட்பதுதான். தேடல்தான். 


கீதையை கண்ணனே சொல்கிறான். இருந்தும் விடாமல் அர்ஜுனன் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கிறான். ஒரு இடத்தில் கூட கண்ணன் "நான் சொல்கிறேன்...வாயைக் மூடிக் கொண்டு கேள்" என்று சொல்லவில்லை. கடைசி அத்யாயம் வரை கேள்வி தொடர்கிறது. 


உபநிடதங்களும் அப்படியே. குருவின் அருகில் இருந்து கேள்வி கேட்டு தெளிவு பெறுவது. கேள்வி கேட்காமல், கண் மூடித்தனமாக நம்ப வேண்டும் என்று இந்து சமயம் ஒரு இடத்திலும் கூறவில்லை.


இந்தப் பாடலில் எத்தனை கேள்விகள் என்று பார்ப்போம். 


பாடல் 


வானோ? புனல் பார் கனல் மாருதமோ?

ஞானோ தயமோ? நவில் நான் மறையோ?

யானோ? மனமோ? எனை ஆண்ட இடம்

தானோ? பொருளாவது சண்முகனே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/2_17.html


(Pl click the above link to continue reading) 


ஏழு கேள்விகள் கேட்கிறார் அருணகிரியார். 


நாலு வரிக்குள் ஏழு கேள்விகள். கேள்வி கேட்காமல் "நம்பிக்கை நம்பிக்கை" என்று சொல்பவர்கள் கேள்வி கேட்கப் பழக வேண்டும். கேள்விகளுக்கு பதில் சொல்லிப் பழக வேண்டும். 


எது பொருள் அதாவது நிரந்தரமான பொருள் எது என்ற கேள்வியை எழுப்புகிறார் அவர்.


இதுவா, அதுவா என்று அவரே சந்தேகத்தை எழுப்புகிறார். 


வானோ?  = வானமா? இந்த ஆகயமா? 


புனல் = நீரா ?


பார் = நிலமா? 


கனல் = நெருப்பா? 


மாருதமோ? = காற்றா? 


ஞானோ தயமோ? = ஞானம் உதயம் ஆன இடமா? 


நவில் நான் மறையோ? = பேசப்படும் நான்கு வேதங்களா? 


யானோ? = நானா? 


மனமோ? = என் மனமா ?


எனை ஆண்ட இடம் தானோ?  = எனை ஆண்ட இடம் தானோ? 


பொருளாவது சண்முகனே = ((நிரந்தர) பொருளாவது சண்முகனே. 


முருகா, நீயே சொல்.


இந்த பஞ்ச பூதங்களா?  வேதங்களா? ஞானமா? நானா? என் மனமா? என்னை ஆட்கொண்ட இடமா? எது பொருள் ? சொல் முருகா என்று முருகனை கேள்வி கேட்கிறார். 


சரி, அவர் கேள்வி கேட்டார். முருகன் பதில் சொன்னானா? என்ன பதில் என்று கேட்டால், இந்தப் பாட்டிலேயே அதையும் சொல்லி விட்டார் அருணகிரியார். 


இதில் எத்தனை தத்துவங்கள் இருக்கின்றன என்று பார்ப்போம். 


"வானோ" - வானமா? என்று கேட்கிறார்.  சூனியத்துவம் என்று ஒரு தத்துவம் உண்டு. அந்தத் தத்துவத்தின் படி இந்த உலகிற்கு ஆதாரம் இந்த வெளிதான். எல்லாம் அதில் தோன்றி அதிலே முடிவடைத்து விடும் என்பது இந்த தத்துவத்தின் கொள்கை. இந்த பிரபஞ்சம் முழுவதும், எண்ணில் அடங்கா சூரியன்கள், சந்திரன்கள், கோள்கள், விண்மீன்கள், பால்வெளி, எல்லாம் இந்த சூன்யத்தில் இருந்து தோன்றி, அதில் ஒடுங்கும், எனவே அதுதான் நிரந்தரமானது என்று கூறும் தத்துவம். அப்படியானால் அதுதான் உண்மையா?   அல்லது...


"புனல் பார் கனல் மாருதமோ?


ஏனைய பஞ்ச பூதங்கள்தான் அடிப்படையா? சில சமய தத்துவங்கள் இந்த பிரபஞ்சம் நீரில் தொடங்கி நீரில் முடியும் என்று கூறும். ஊழிக் காலத்தில் இந்த உலகம் முழுவதும் நீரால் சூழப்படும், எங்கள் இறைவன் ஆல் இலை மேல் மிதந்து வருவான் என்று சில சமய பிரிவுகள் கூறும். 


வேறு சில பிரிவுகள், இந்த உலகம் நெருப்பில் தோன்றி , நெருப்பில் மறையும். ஊழிப் பெரு நெருப்பு இந்த உலகம் அனைத்தையும் எரித்து சாம்பலாக்கி விடும். அந்த சாம்பலை எங்கள் இறைவர் உடல் முழுவதும் பூசிக் கொள்வார். அந்த நெருப்பு வடிவானவர் எங்கள் கடவுள் என்று சில பிரிவுகள் கூறும். ஜோதி வடிவானவன் என்று பேசும். 


இப்படி ஐம்பெரும் பூதங்களும்தான் உலகின் தொடக்கம், நடு, முடிவு என்று வெவ்வேறு தத்துவங்கள் கூறுகின்றன. 


இதில் எது உண்மை? 


அருணகிரியார் மேலும் தொடர்கிறார் 



ஞானோ தயமோ?  =  இந்த உலகமே ஒரு மாயை. இது உண்மை அல்ல. ஆணவம், கன்மம், மதம், மாச்சரியம் போன்ற மலங்கள் நம்மை உண்மையான உலகை அறிய விடாமல் தடுக்கின்றன. மாயை விலகி ஞானம் பிறந்தால் உண்மை விளங்கும். எனவே, இந்த ஞானமா நிரந்தரமான பொருள்? 


நவில் நான் மறையோ? = அதெல்லாம் இல்லை. என்றும் நிரந்தரமானது உண்மை ஒன்றுதான். அந்த உண்மை வேதங்களில் பொதிந்து கிடக்கிறது. வேதம் என்று தோன்றியது என்று தெரியாது. உண்மையை உள்ளடக்கிய அந்த வேதமா நிரந்தரமான பொருள்?



யானோ?  = பொருள் என்று ஒன்று தனியே கிடையாது. பார்பவரின் புலன்களைப் பொறுத்துத் தான் உலகம். கண் பார்வை இல்லாதவருக்கு நிறம் என்ற ஒன்று இல்லை. அவரைப் பொறுத்தவரை இந்த உலகம் நிறம் என்ற ஒன்று இல்லாதது. அவருக்கு வேண்டுமானால் அப்படி இருக்கலாம். எனக்கு நிறம் தெரிகிறதே என்று நாம் கூறலாம். நமக்கு ஐந்து புலன்கள் இருக்கின்றன. அவருக்கு நான்கு புலன்கள் மட்டும்தான் இருக்கிறது. ஒரு வேளை ஆறாவது அல்லது ஏழாவது புலன் என்று ஒன்று இருந்தால்? நம்மிடம் இல்லை. நமக்கு அது புரியவே புரியாது. கண் இல்லாதவர்க்கு நிறம் புரியாதது போல ஐந்துக்கு மேல் உள்ள புலன்களை நம்மால் புரிந்து கொள்ள முடியாது. அதற்காக அவை இல்லை என்று நாம் எப்படி கூற முடியும் ? அப்படி என்றால் இங்கே நிரந்தரமான ஒன்று என்பது "நான்" என்று சொல்லப் படும் பொருளா?


மனமோ?  = நான் இருந்தால் மட்டும் போதாது. என் மனம் வேலை செய்ய வேண்டும். சிந்தனை ஓட வேண்டும். ஞாபகம் வேண்டும். புலன்கள் சொல்லும் செய்தியை நாம் அறிய வேண்டும். எனவே, இந்த மனமா நிரந்தரமானது? 


 எனை ஆண்ட இடம் தானோ?  = இதெல்லாம் இல்லை. நீ என்னை ஆட்கொண்டாய் அல்லவா அந்த நிகழ்வுதான் நிரந்தரமான ஒன்று என்கிறார். 


நம் நண்பர் நம்மிடம் கேட்கிறார் "நான் நேற்று ஒரு விழாவுக்குப் போயிருந்தேன். அங்க யாரைப் பார்த்தேன் சொல்லு பார்க்கலாம்" என்று நம்மைக் கேட்கிறார். 


நாமும் 


"இராமனா?"  என்கிறோம். 


"இல்லை" என்கிறான். 


"கிருஷ்ணனா" என்று கேட்கிறோம்.


"ம்ஹும்ம்" என்று தலையாட்டி மறுக்கிறான். 


இப்படி ஒவ்வொரு பேராக சொல்லிக் கொண்டே போகிறோம். இல்லை, இல்லை என்று சொல்லிக் கொண்டே இருக்கிறான். 


கடைசியில் 


"கண்டு பிடிச்சுட்டேன்...நம்ம பழைய நண்பன் முருகன் தான " என்கிறோம். 


ஆம் என்று தலை அசைக்கிறான். 


அதற்குப் பிறகு நாம் மேலும் பேர் சொல்லிக் கொண்டே இருப்போமா? எப்போது சரியான விடை வந்து விட்டதோ, அதற்குப் பிறகு பேச்சு இல்லை. 


வானோ, புனலோ என்று கேட்டுக் கொண்டே வந்த அருணகிரியார் 


"எனை ஆண்ட இடம் தானோ/" என்று இறுதியாக கேட்டு நிறுத்துகிறார். 


அதற்கு பின்  ஒன்றும் கேட்கவில்லை. அப்படி என்றால் என்ன அர்த்தம்? அதுதான் விடை என்று அர்த்தம். 


இந்த உயிர் இறைவனோடு கலப்பது ஒன்றுதான் நிரந்தரமான ஒன்று. 


பசு, பாசம் என்ற கயிறை அறுத்துக் கொண்டுபதியோடு இணைவதுதான் இறுதியான ஒன்று. 


இந்த ஆன்மா உலகில் பிறந்து, பல அனுபவங்களைப் பெற்று, மீண்டும் இறைவனோடு இணைவது ...இதுதான் எப்போதும் விடாமல் நிகழ்ந்து கொண்டிருப்பது. 


அலை, கடலோடு சேர்வது போல. 


மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள். பாடலின் ஆழம் விளங்கும். 


இப்படி ஐம்பது பாடல்கள் இருக்கின்றன.  என்று அனைத்தையும் படித்து தெளிவது? 


பொருளாவது சண்முகனே.


Tuesday, August 16, 2022

திருக்குறள் - அழுக்காறாமை - அறனாக்கம்

    

 திருக்குறள் - அழுக்காறாமை - அறனாக்கம் 


(இந்த அதிகாரத்தின் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


முன்னுரை:  அழுக்காறாமை என்றால் பொறாமை கொள்ளாமை. பிறர் ஆக்கம் கண்டு பொறுத்துக் கொள்ளும் தன்மை இல்லாமை.  பிறர் ஆக்கம் கண்டு பொறாமை என்பார் பரிமேலழகர். 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_31.html


குறள்  எண் 161:

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து

அழுக்காறு இலாத இயல்பு

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post.html


குறள்  எண் 162:  (பாகம் 1)


விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்

அழுக்காற்றின் அன்மை பெறின்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/1.html


குறள்  எண் 162:  (பாகம் 2)

விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்

அழுக்காற்றின் அன்மை பெறின்




)


பொறாமை படாதே, பொறாமை படாதே என்று சொன்னால் அது என்ன நம்மைக் கேட்டுக் கொண்டா வருகிறது?  "நான் வரவா" என்று கேட்டால், "வராதே" என்று சொல்லி விடலாம். ஆனால், உண்மையில் அது எங்கே நம்மைக் கேட்கிறது. அது பாட்டுக்கு வந்து மனதில் உட்கார்ந்து கொள்கிறது. 

நாம் என்ன செய்ய முடியும்? 


வள்ளுவர் அதற்கு ஒரு வழி சொல்கிறார். 


எந்த ஒரு வேலையை முதலில் செய்யும் போது கடினமாக இருக்கும். கடினமாக இருக்கிறதே என்று விட்டுவிட்டால் அந்த வேலை செய்யவே வராது. கடினமாக இருந்தாலும் மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும். அது மட்டும் அல்ல, அதிகமாகவும் செய்ய வேண்டும். 


உதாரணமாக, 


உடல் பயிற்சி செய்யத் தொடங்குகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். முதல் நாள் ஒரு கிலோ எடையை தூக்கினாலே கை வலிக்கும். விட்டு விடக் கூடாது. இரண்டு மூணு நாள் செய்ய வேண்டும். கை பழகி விடும். அப்புறம் கொஞ்சம் எடையை கூட்ட வேண்டும். புது எடை கை வலிக்கும். பின் சில நாளில்அது பழகி விடும். இப்போது முதல் நாள் செய்த ஒரு கிலோ எடையை தூக்கினால் மிக எளிதாக இருக்கும். 


கடினமான ஒன்று எப்படி எளிதானாது? அதை விட அதிகமான ஒன்றைச் செய்ததால் அது எளிமையானது. 


பொறாமை வருகிறதா? மற்றவன் ஆக்கம் கண்டு பொறாமை வருகிறதா? அப்போது என்ன செய்ய வேண்டும் என்றால், அவன் ஆக்கத்தை போற்று, அதை மேலும் பெரிதாக்க என்ன செய்ய வேண்டும் என்று சிந்தி, பொறாமை போய் விடும் என்கிறார். 


அதை அவர் சொல்லும் விதம் இருக்கிறதே, நம்மால் சிந்தித்தும் பார்க்க முடியாது. அப்படி ஒரு அழகு. 


பாடல் 


அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்

பேணாது அழுக்கறுப் பான்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_16.html


(Pl click the above link to continue reading)


அறனாக்கம் = அறனும், ஆக்கமும் 


வேண்டாதான் = வேண்டாம் என்று 


என்பான் = சொல்லுபவன் 


பிறனாக்கம் = பிறருடைய ஆக்கத்தை 


பேணாது = போற்றாமல் 


அழுக்கறுப் பான் = பொறாமை கொள்பவன் 


மிக ஆழமான குறள். 


அறனாக்கம் - இதற்கு பரிமேலழகர் செய்திருக்கும் உரை பிரமிக்க வைக்கக் கூடியது.  அதை அறன் + ஆக்கம் என்று இரண்டாகப் பிரித்துக் கொள்கிறார். ஆக்கம் என்றால் செல்வம். செல்வம் இந்த இப்பிறவிக்கு பலன் தரக் கூடியது. அறம் என்பது இம்மைக்கும் மறுமைக்கும் பலன் தரக் கூடியது. எனவே அறனாக்கம் என்பது இம்மைக்கும் மறுமைக்கும் பலன் தரக் கூடியவை. 


இப்படி இம்மைக்கும் பலன் வேண்டாம், மறுமைக்கும் பலன் வேண்டாம் என்று யாராவது சொல்வார்களா? 


சொல்கிறவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் யார் என்றால் 


பிறன் ஆக்கம் பேணாது அழுக்காறு கொள்பவர்கள். 


இங்கே இரண்டு விடையத்தைக் கூறுகிறார். 


முதலில் மற்றவர்கள் ஆக்கத்தைப் பேண வேண்டும். பேணுதல் என்றால் பாதுகாத்தல், போற்றுதல் என்று பொருள்.  பக்கத்து வீட்டுக் காரனுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்து இருக்கிறதா? அதை எப்படி நல்லபடியாக முதலீடு செய்து அதை அவன் மேலும் பெருக்க முடியும் என்று சிந்தித்து அதை அவனுக்கு சொல்ல வேண்டும். 


இரண்டாவது, அப்படிச் செய்யாமல் அதைக் கண்டு பொறாமை கொள்ளக் கூடாது. 


போற்றாமலும், பொறாமை கொண்டாலும் அவனுக்கு இம்மைக்கும் மறுமைக்கும் ஒரு பலனும் கிடைக்காது என்கிறார்.


யாருக்கு என்ன நன்மை கிடைத்தாலும் அதைக் கண்டு மகிழ வேண்டும். 


மற்றவர்கள் மகிழ்ச்சியில் பங்கு கொள்ள வேண்டும்.அந்த மகிழ்ச்சியை மேலும் பெருக்க உதவ வேண்டும். அது கண்டு நாமும் மகிழ வேண்டும். மனம் விரிய வேண்டும். 


அப்படிச் செய்தால் என்ன கிடைக்கும் - இம்மைக்கும் மறுமைக்கும் நன்மை கிடைக்கும். 


ஒரு குறளுக்குள் எவ்வளவு அர்த்தம்!


அறன், ஆக்கம் 

பிறன் ஆக்கம் 

பேணுதல் 

அழுக்காறு செய்பவன் 





Monday, August 15, 2022

திருவாசகம் - திரு அம்மானை - வாரா வழியருளி

  

 திருவாசகம் - திரு அம்மானை  -   வாரா வழியருளி


(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


முன்னுரை:

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_8.html


அறைகூவி, வீடு அருளும்




)


வீட்டில் அப்பா(வோ அல்லது அம்மாவோ) ஒரு பெரிய நிறுவனத்தில் பெரிய பதவியில் இருக்கலாம். அல்லது அரசியலில் ஒரு பெரிய தலைவராக இருக்காலம். அவரைப் பார்க்க பலர் , பல நாள் காத்துக் கிடப்பார்கள். ஒரு இரண்டு நிமிடம் கிடைத்தால் போதும் என்று தவம் கிடப்பார்கள். 


ஆனால், வீட்டில் மனைவிக்கு, பிள்ளைகளுக்கு அவர் சாதாரண கணவன் அல்லது தந்தைதான். நான் நாட்டுக்கு முதல் மந்திரி என்று பிள்ளையிடம் இருக்க முடியுமா? அலுவலகத்தில் இருந்து வரும் போதே "பிள்ளை எங்கே" என்று தேடிக் கொண்டு வருவார். 


"உங்களுக்காக இவ்வளவு நேரம் காத்திருந்துவிட்டு இப்பத்தான் தூங்கப் போனான்" என்று மனைவி சொல்லுவாள்.


சரி, இரு போய் பார்த்துட்டு வந்துர்றேன் என்று தூங்கும் பிள்ளையை பார்க்க இவர் ஓடுவார். 


ஊரெல்லாம் இவரைக் காண தவம் கிடக்கிறது. இவர் பிள்ளையை காண ஓடுகிறார். 


இதை காதலன், காதலி மேல் வைத்துப் பாருங்கள். காதலன் பெரிய வேலையில் இருக்கிறான். வருகிறேன் என்று நேரத்துக்கு வரவில்லை. காதலி கோபித்துக் கொள்கிறாள். எவ்வளவு இறங்கி வருவான். எத்தனை முறை 'சாரி' சொல்லுவான். அது அன்புப் பரிமாற்றம். 


மணிவாசகர் சொல்கிறார் 


"விண்ணுலகம், பாதாள உலகம் போன்ற உலகில் உள்ளவர்கள் எல்லாம் சிவனே உன்னைக் காண முடியாமல் தவிக்கிறார்கள். ஆனால், நீ எங்களுக்கு எளிமையானாவன்.  எங்களுக்கு உன் மேல் ஒரு பைத்தியம் பிடிக்க வைத்து விட்டாய். அது மட்டும் அல்ல, நாங்கள் இந்த உலகில் மீண்டும் வாராத வழியை அருளினாய். எங்கள் உள்ளத்தில் புகுந்து விட்டாய். கடலில் மீன் பிடிப்பவனைப் போல எம் போன்ற பக்தர்களை நீ வலை வீசிப் பிடிக்கிறாய்" என்கிறார். 


பாடல் 


பாரார் விசும்புள்ளார் பாதாளத் தார்புறத்தார்

ஆராலும் காண்டற் கரியான் எமக்கெளிய

பேராளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றி

வாரா வழியருளி வந்தென் உளம்புகுந்த

ஆரா அமுதாய் அலைகடல்வாய் மீன்விசிறும்

பேராசை வாரியனைப் பாடுதுங்காண் அம்மானாய் 


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_15.html


(pl click the above link to continue reading)



பாரார் = பாரில், இந்த உலகில், உள்ளவர்கள்


விசும்புள்ளார் = விசும்பு என்றால் வானம். வானுலகில் உள்ளவர்கள்


பாதாளத் தார் = பாதாள உலகில் உள்ளவர்கள்


புறத்தார் = இதற்குப் புறத்தும் உள்ள உலகில் உள்ளவர்கள்


ஆராலுங் = யாராலும்


காண்டற் கரியான் = காண்பதற்கு அரியவன்


எமக்கெளிய = எமக்கு எளிய


பேராளன் = பெரிய அன்பு உள்ளவன்


தென்னன் = தென்னாடுடையவன்


பெருந்துறையான் = திருப் பெருந்துறையில் உள்ளவன்


பிச்சேற்றி = நமக்கு அவன் மேல் பித்தை ஏற்றி


வாரா = திரும்பி இந்த உலகத்திருக்கு வந்து பிறக்காமல் இருக்கும் (திரும்பி வரமால்)


வழியருளி = வழியை தந்து அருளி


வந்தென் = அவனே வந்து


உளம்புகுந்த = என் உள்ளம் புகுந்து


ஆரா அமுதாய் = தீராத அமுதமாய்


அலைகடல்வாய் = அலை கடலில்


மீன்விசிறும் = மீன் பிடிக்கும் மீனவன் போல


பேராசை வாரியனைப் = பேராசைக் காரனை (பக்தர்களை வல போட்டு பிடிக்கும்)


பாடுதுங்காண் அம்மானாய். = அம்மானை  பாடி ஆடுவோம்


.பிச்சு என்றால் பைத்தியம். பித்து. "உன்ன இரண்டு நாளா பாக்காம பைத்தியமே பிடிச்சுரும் போல இருக்குடி" என்று காதல்/காதலி சொல்லுவது போல. 


இறைவன் மேல் அவ்வளவு காதல். அவரை பார்க்காமல் பைத்தியமே பிடிச்சுரும் போல இருக்காம். 


"வாரா வழி அருளி"....திரும்பி வர முடியாத வழியைச் சொல்வாராம். அந்த வழியில் போனால், மீண்டும் இந்த பிறவி என்ற ஊருக்கு வர முடியாது. ஒரு வழிப் பாதை. நேரே வீடு பேறுதான். 


மணிவாசகரைத் தவிர யார் இதை இவ்வளவு அழகாகச் சொல்ல முடியும்!


முன்பு கூறியது போல, திருவாசகம் என்பது உணர வேண்டிய ஒன்று. அறிய வேண்டிய ஒன்று அல்ல. 


ஒன்றுக்கு பல முறை வாசித்துப் பாருங்கள். 



Sunday, August 14, 2022

கந்தரனுபூதி - எனை ஆண்ட இடம் தானோ? பாகம் 1

   

 கந்தரனுபூதி -  எனை ஆண்ட இடம் தானோ? பாகம் 1 


(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம்: 


முன்னுரை: 

https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_30.html


1. பணியாய் அருள்வாய் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_5.html


2. எல்லாமற என்னை இழந்த நலம் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_10.html

)


இந்த உலகம் ஒரு கலவை. 


எதை எடுத்துக் கொண்டாலும் சில அடிப்படையான விடயங்களைக் கொண்டுதான் அவை படைக்கப் படுகின்றன. 


எப்படி என்று சில உதாரணங்கள் மூலம் காண்போம். 


எத்தனையோ விதமான உணவுகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒரு சுவை. அத்தனை சுவைகள் இருக்கின்றனவா என்றால் இல்லை. மொத்தமே ஆறு சுவைதான் உண்டு. இனிப்பு, புளிப்பு, உரைப்பு, கார்ப்பு, கசப்பு, துவர்ப்பு. மொத்தம் அவ்வளவுதான். இவற்றை எந்த விகிதத்தில் கலக்கிறோமோ அதற்குத் தகுந்தாற்போல் சுவை இருக்கும். இந்த ஆறு சுவையைத் தாண்டி இன்னொரு சுவை கிடையாது.


எத்தனையோ விதமான இசை இருக்கிறது. எவ்வளவு பாடல்கள், எத்தனை மொழிகளில். அத்தனைக்கும் அடி நாதம் ஏழு ஸ்வரங்கள்தான். அதை மாற்றி மாற்றிப் போட்டு புதுப் புது இராகங்கள் உண்டாகின்றன. உலகில் உள்ள அத்தனை இசைக்கும் அடிப்படை ஏழு ஸ்வரங்கள்தான். 


எத்தனை விதமான மனிதர்கள். எல்லோருக்கும் அடிப்படை செல் தான். செல்களின் தொகுப்பு திசுக்கள் (tissues ), திசுக்களின் தொகுப்பு உறுப்புகள் (organs ), உறுப்புகளின் தொகுப்பு, உருவம். 


உலகில் உள்ள அத்தனை பொருள்களுக்கும் அடிப்படை அணுக்கள். அதற்கு உள்ளேயும் போகலாம். பொதுவாக அணுக்கள் என்று கொள்வோம். 


வெளித் தோற்றம் உண்மை அல்ல. அடிப்படையில் ஏதோ ஒன்று இருக்கிறது. அது புரிந்து விட்டால் அத்தனை தோற்றமும் புரிந்து விடும். ஒவ்வொன்றாக படிக்க வேண்டும் என்று அல்ல. 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/1_14.html


(Pl click the above link to continue reading) 



எனவே, நாம் எப்போதும் எது அடிப்படையானது என்று தேடிக் கொண்டிருக்கிறோம். அதை தத்துவவாதிகள் நிரந்தர வஸ்து என்பார்கள். சாஸ்வதமானது. அடி நாதமானது எது என்று தேடத் துவங்கினார்கள். 


உலகத் தோற்றம், அதில் உள்ள பொருள்கள், மனிதர்கள், உயிர்கள் எல்லாம் அடிப்படையானது அல்ல என்று புரிந்து கொண்டார்கள். 


இவை எல்லாமே பஞ்ச பூதங்களின் ஒரு விதமான தொகுப்பு என்று புரிந்து கொண்டார்கள். 


பஞ்ச பூதங்கள் அடிப்படையானவையா? அவற்றிற்கு உள்ளே வேறு எதுவும் இருக்கிறதா என்று ஆராயத் தலைப்பட்டார்கள். 


தோற்றம் என்பது என்ன? 


பொருள்களுக்கு என்று தனிக் குணம் இருக்கிறதா? அல்லது அது பார்பவரை பொறுத்து அமைகிறதா?


ஒருவன் ஒரு உணவை உண்டுவிட்டு ஐயோ, அம்மா என்ன காரம் என்று கண்ணீர் விட்டுக் கொண்டு நீரைத்தேடி ஓடுகிறான். அதே உணவை இன்னொருவன் உண்டுவிட்டு "என்ன இது ஒரு உப்பு உரைப்பு இல்லாமல் சப் என்று இருக்கிறது" என்கிறான். எது உண்மை? உணவு காரமாக இருக்கிறதா, இல்லையா? 


காரம் என்பது உணவில் இருக்கிறதா அல்லது உண்பவனின் நாக்கில் இருக்கிறதா? 


இப்படி ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டு போகலாம். 


பொருள் என்பது குணங்களின் தொகுதி என்றால், குணம் என்பது அதை உணர்பவனை பொறுத்து மாறும் அல்லவா? அப்படி என்றால் பொருளுக்கு என்று ஒரு தன்மை கிடையாதா? 


ஆராய்ச்சி தொடர்கிறது. 


அடுத்த பாடலில் அந்த ஆராய்ச்சிகளையும், அதில் யார் யார் என்னென்ன சொன்னார்கள் என்பதையும், தான் கண்டது என்ன என்பதையும் அருணகிரிநாதர் கூறுகிறார்.


அது என்ன என்று நாளை சிந்திப்போம். 



Friday, August 12, 2022

திருக்குறள் - அழுக்காறாமை - அஃதொப்பது இல்லை - பாகம் 2

   

 திருக்குறள் - அழுக்காறாமை -  அஃதொப்பது இல்லை - பாகம் 2


(இந்த அதிகாரத்தின் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


முன்னுரை:  அழுக்காறாமை என்றால் பொறாமை கொள்ளாமை. பிறர் ஆக்கம் கண்டு பொறுத்துக் கொள்ளும் தன்மை இல்லாமை.  பிறர் ஆக்கம் கண்டு பொறாமை என்பார் பரிமேலழகர். 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_31.html


குறள்  எண் 161:

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து

அழுக்காறு இலாத இயல்பு

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post.html


குறள்  எண் 162:  (பாகம் 1)


விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்

அழுக்காற்றின் அன்மை பெறின்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/1.html


)


பாடல் 


விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்

அழுக்காற்றின் அன்மை பெறின்


யாரிடத்தும் பொறாமை கொள்ளாமல் இருப்பது போன்ற உயர்ந்த செல்வம் இல்லை என்று முன் சிந்தித்தோம்.


இனி தொடர்வோம். 


பொறாமை யார் மேல் வரும்?


நம்மை விட ஏதோ ஒரு விதத்தில் உயர்ந்தவர்கள் மேல் தானே பொறாமை வரும். 


நம்மை விட கீழே இருப்பவர்கள் மேல் ஏன் பொறாமை வரப் போகிறது?


அந்த உயர்ந்தவர்கள் யார் ?


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/2.html


(Pl click the above link to continue reading)


அவர்கள் நமக்கு நெருங்கியவர்களாக இருக்கலாம்.  அல்லது, நமக்கு வேண்டாதவர்களாக இருக்கல்லாம். எதிரியோ, பகைவனோ, வேறு யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். 


நமக்கு வேண்டியவர்கள், உறவினர்கள், நண்பர்கள், உடன் பிறப்புகள் அவர்கள் நன்றாக இருந்தாலே பலருக்கு அவர்கள் மேல் பொறாமை வருகிறது. 


உடன் பிறந்த சகோதரன்தான். நன்றாக படித்து, பெரிய வேலை, பெரிய வீடு என்று இருந்தால் மற்ற சகோதரனுக்கு பொறாமை வருமா இல்லையா?


வெளியில் சொல்ல மாட்டான். உள்ளுக்குள் இருக்கும். 


எத்தனை அண்ணன் தம்பி சண்டைகள் நீதிமன்றக் கதவை தட்டுகின்றன. 


தன்னைவிட அதிகம் சம்பாதிக்கும் மனைவி மேல் பொறாமை சிலருக்கு வருகிறது தானே.


தன்னைவிட அழகாக இருக்கும் மகள் மேல் சில தாய்மார்களுக்கு பொறாமை இருக்கத்தான் செய்கிறது. மகளுக்குச் சமமாக ஆடை உடுத்துகிறார்கள், நகை அணிகிறார்கள், அழகு நிலையத்தில் சென்று அழகு படுத்திக் கொள்ள முயல்கிறார்கள். உண்டா இல்லையா? 


தன்னை விட படித்து பெரிய ஆள் ஆன மகன் மேல், தன்னை விட அழகாக இருக்கும் மகள் மேல் எல்லாம் பொறாமை வருகிறது. 


அண்ணன் மனைவி, தம்பி மனைவி என் மனைவியை விட அழகாக இருக்கிறாள் என்றெல்லாம் பொறாமை கொள்கிறார்கள். 


சரி இதாவது எப்படியோ சாக்கு போக்கு சொல்லி மனதை திருத்தி விடலாம். நம் தம்பிதானே, நம் அண்ணன்தானே போனால் போகுது என்று ஒரு சமாதானம் அடைய முடியும். 


நம் எதிரி உயர்ந்தால் பொறாமை வருமே. அதை எப்படி மாற்றுவது? நமக்கு வேண்டாதவன் உயர்ந்து கொண்டே போகிறான். நம்மால் சகிக்க முடியுமா? பெரிய வீடு வாங்குகிறான், பெரிய கார் வாங்குகிறான், பத்திரிகைகளில் அவன் பேர் வருகிறது, எல்லோரும் அவனைப் புகழ்கிறார்கள். எப்படி பொறாமை கொள்ளாமல் இருப்பது?


யார்மேலும் பொறாமை கொள்ளக் கூடாது என்பதற்காக 


"யார் மாட்டும்" என்று கூறுகிறார். 


அந்த யார் மாட்டும் என்ற சொல்லுக்குள் எவ்வளவு இருக்கிறது பாருங்கள். 


நமக்கு வேண்டாதவன் உயர்ந்தால் கூட பொறாமை கொள்ளாமல் இருக்க வேண்டும் என்கிறார். 


அது எப்படி என்று பின்னால் சொல்ல இருக்கிறார். 


இப்போதைக்கு சிந்தியுங்கள். யார் மேல் எல்லாம் உங்களுக்கு பொறாமை இருக்கிறது என்று. 


கொஞ்சம் கொஞ்சமாக அவற்றை விலக்க முயலுங்கள். கடினம்தான். ஆனால் முடியும். பொறாமை குறைய குறைய மன பாரம் குறையும். மன அழுத்தம் குறையும். நிம்மதி பிறக்கும். அமைதி தோன்றும். 


யார் எப்படி போனால் நமக்கு என்ன.


"வட கோடு உயர்ந்தென்ன தென் கோடு தாழ்ந்தென்ன" என்று இருக்க முயல்வோம்.





Thursday, August 11, 2022

திருவாசகம் - திரு அம்மானை - அறைகூவி, வீடு அருளும்

 

 திருவாசகம் - திரு அம்மானை  -   அறைகூவி, வீடு அருளும்


(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


முன்னுரை:


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_8.html



)


மற்ற பாடல்களுக்கு விளக்கம் சொல்லுவது போல திருவாசகத்துக்கு சொல்லிக் கொண்டு போக முடியாது. சொல்லவே முடியாது என்பது தான் உண்மை. அது ஒரு உணர்வு சார்ந்த விடயம். இருந்தும், என் சிற்றறிவுக்கு எட்டிய வரை, படித்ததும், கேட்டதும், சிந்தித்ததும் என்று பகிர்ந்து கொள்ளும் ஒரு சிறு முயற்சி. அவ்வளவுதான். 


நம் வீதிகளில் வண்டியில் காய்கறி விற்பவர்கள், பழங்கள் விற்பவர்கள், கீரை விற்பவர்கள் கூவி கூவி விற்பதை கேட்டு இருகிறீர்களா? 


இராகம் போட்டு விற்பார்கள். "கீரேரேரேரேய்ய்ய்ய்" என்று நீட்டி முழக்கி கீரையை விற்பார்கள். அந்த சத்தத்தில் நமக்குத் தெரியும் கீரை வண்டிக்காரர் வந்து இருக்கிறார் என்று. கீரை வேண்டும் என்றால் போய் வாங்கி வரலாம். நாம் கடைக்குப் போக வேண்டியது இல்லை. சாமான்கள் நம் வீடு தேடி வரும். அதை விற்பவரும் ஒரு இடத்தில் அமர்ந்து விற்றால் அவ்வளவாக விற்காது. நாலு தெரு சுற்றி திரிந்து, கூவி விற்றால் நிறைய விற்கும். 


சரி தானே?


மணிவாசகர் சொல்கிறார்.....


ஆண்டவனிடம் வீடு பேறு என்ற சரக்கு இருக்கிறது. அதை வைத்துக் கொண்டு அவன் என்ன செய்யப் போகிறான்?  "எல்லோரும் வாங்க, வந்து வீடு பேறு வாங்கிட்டுப் போங்க" என்று கூவி கூவி அழைத்து கொடுப்பானாம். 


"அப்படியா மணிவாசகர் சொல்லி இருக்கிறார்? இருக்காது. நீங்கள் ஏதோ இட்டு கட்டிச் சொல்கிறீர்கள்" என்று நீங்கள் நினைக்கலாம். 


 "அறைகூவி, வீடு அருளும்"


என்கிறார் பாடலில். சத்தம் போட்டு கூப்பிட்டு கொடுப்பானாம். நீங்கள் எங்கும் போக வேண்டாம். அவனே வந்து, உங்களை கூப்பிட்டு கொடுப்பானாம். 


பரவாயில்லையே. இது கொஞ்சம் புதுமையான விடயம்தான். இருந்தாலும் நல்லா இருக்கு. சரி, அவர் அறை கூவி வீடு பேறு தருவார் சரி. அவர் எப்படி வருவார். நமக்குத் தெரிய வேண்டாமா?


மணிவாசகர் அடையாளம் சொல்கிறார். 


அவருக்கு அழகிய கண்கள் இருக்கும். அந்தணன் வடிவில் வருவார். என்கிறார். 


"அம் கணன், அந்தணன் ஆய்,"


"நல்லது. வீடு பேறு தருவார். வாங்கிக் கொள்ளலாம். பதிலுக்கு நாம் என்ன செய்ய வேண்டும்? விரதம், பூஜை, தானம், தவம், வழிபாடு இதெல்லாம் ஏதாவது செய்ய வேண்டுமா? நமக்கு அதுக்கெல்லாம் நேரம் இல்லையே.  நமக்குத் தருவாரா அல்லது அவருடைய சிறந்த பக்தர்களுக்கு மட்டும் தான் தருவாரா? " என்று கேட்டால் 


மணிவாசகர் சொல்கிறார் 


"ஆண்டவனுக்கு நம்மிடம் இருந்து பெற வேண்டியது ஒன்றும் இல்லை. அவனிடம் இல்லாதது நம்மிடம் என்ன இருக்கப் போகிறது. மேலும், நாம் என்ன தான் முயன்றாலும், வீடு பேறு பெறும் அளவுக்கு நம்மில் எத்தனை பேர் முயற்சி செய்ய முடியும். ஒரு கவலையும் படாதீர்கள். அவன் நம் தகுதி எல்லாம் பார்ப்பது இல்லை. வருகிறவர்களுக்கு எல்லாம் வீடு பேறுதான்"


"எம் தரமும் ஆட்கொண்டு"


நம்முடைய தரத்துக்கும், நம்மை ஆட்கொண்டு வீடு பேறு தருவான். 


"அது எப்படி முடியும்? நாம் செய்த வினை இருக்கிறதே? அதற்கு இன்னும் எத்தனை பிறவி எடுக்க வேண்டுமோ?"


அந்தக் கவலையே உங்களுக்கு வேண்டாம். உங்கள் பிறவித் தொடரை அறுத்து, உங்களுக்கு வீடு பேறு தருவான் என்கிறார். 


"எங்கள் பிறப்பு அறுத்திட்டு"


ஒண்ணும் செய்ய வேண்டாம்னு சொல்றீங்க. அவனே வந்து கூப்பிட்டு கொடுப்பான்னு சொல்றீங்க. பிறவித் தொடரை அறுப்பான்னு சொல்றீங்க. அப்ப நாம என்னதான் செய்யணும். ஒண்ணுமே செய்ய வேண்டாமா என்று கேட்டால்


"இவ்வளவையும் நமக்கு இலவசமாகக் கொடுத்த அவன் கருணையை நினைத்து நன்றியோடு பாடுவோம்" அவ்வளவுதான் நாம் செய்யக் கூடியது என்கிறார். 


மனதை அப்படியே உருக்கும் பாடல். 


அம்மானை என்பது இளம் பெண்கள் சிறு சிறு கற்களை மேலே தூக்கிப் போட்டு பிடித்து விளையாடும் விளையாட்டு என்று பார்த்தோம். அதை விளையாட்டும் பெண்களை "அம்மானாய்" என்று சொல்லுவார்கள். 


குழந்தையை "என் இராசா" என்று சொல்லலாம். "என் ராசால்ல , என் செல்லம்ல..." என்றும் கொஞ்சலாம். 


"அம்மானாஆஆய் " என்று செல்லமாக, ,அன்போடு கூப்பிடுவதாக கற்பனை பண்ணிக் கொள்ளுங்கள். 


பாடல் 




செம் கண் நெடுமாலும் சென்று இடந்தும், காண்பு அரிய

பொங்கு மலர்ப் பாதம் பூதலத்தே போந்தருளி,

எங்கள் பிறப்பு அறுத்திட்டு, எம் தரமும் ஆட்கொண்டு,

தெங்கு திரள் சோலை, தென்னன் பெருந்துறையான்,

அம் கணன், அந்தணன் ஆய், அறைகூவி, வீடு அருளும்

அம் கருணை வார் கழலே பாடுதும் காண்; அம்மானாய்!


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_11.html


(pl click the above link to continue reading)



செம் கண் = சிவந்த கண்களை உடைய 


நெடுமாலும் = உயர்ந்த திருமாலும் 


சென்று = போய் 


இடந்தும் = பூமியை தோண்டியும் 


காண்பு அரிய = காண முடியாத 


பொங்கு = பொலிவுடன் விளங்கும் 


மலர்ப் பாதம் = மலர் போன்ற திருவடிகள் 


பூதலத்தே  = இந்த பூமியிலே 


போந்தருளி, = சென்று அருளி 


எங்கள் பிறப்பு அறுத்திட்டு = எங்களது பிறவித் தொடரை அறுத்து 


எம் தரமும் = எங்களுடைய தரத்தைப் பார்க்காமல், எங்களுக்கு கூட 


ஆட்கொண்டு, = ஆட் செய்து 


தெங்கு திரள் சோலை, = தென்னை மரங்கள் சூழ்ந்த சோலைகள் உள்ள 


தென்னன் = தென்னாட்டவன் 


பெருந்துறையான், = திருபெருந்துறையில் உறைபவன் 


அம் கணன் = அழகிய கண்களை உடைய அவன் 


அந்தணன் ஆய் = அந்தண வடிவில் வந்து 


அறைகூவி,  = கூவி கூவி 


வீடு அருளும் = வீடு பேற்றை அருளும் 


அம் கருணை =அந்தக் கருணை நிறைந்த 


வார் கழலே = கழல் அணிந்த வீரத் திருவடிகளை 


பாடுதும் காண்; அம்மானாய்! = பாடுவதைப் பார் அம்மானாய் 


இந்தப் பாடலுக்கு பல நுணுக்கமான விளக்கங்கள் சொல்வார்கள். 


திருமால் பன்றி உருவம்  கொண்டு திருவடியை காணச் சென்றார். காண முடியவில்லை. அவ்வளவு பாதளத்தில் இருக்கும் திருவடி எவ்வளவு கரடு முரடாக, கருப்பாக,  உறுதியானதாக இருக்கும்?


அதுதான் இல்லை, "விளங்கும் பொங்கு மலர் பாதம்"  என்கிறார். 


பாதாளத்தில் இருந்தாலும், அது ஒளி பொருந்திய, மலர் போன்ற மென்மையான பாதங்கள். 


ஆனானப்பட்ட திருமாலாலே காண முடியவில்லை என்றால் நாம் எல்லாம் எம்மாதிரம் . நாம் எப்படி காண முடியும் என்ற ஆயாசம் வரும் அல்லவா?


நாம் போக வேண்டாம். அந்த பாதங்களே நம்மை நாடி வரும். 


"பூதலத்தே போயருளி" 


அவரே இங்கு வருவார். 


வந்தவர் "என் பிறப்பை அறுத்து எனக்கு வீடு பேறு தந்தார்" என்று சொல்லவில்லை. 


"எங்கள் பிறப்பு அறுத்திட்டு, எம் தரமும் ஆட்கொண்டு"


எங்கள் என்று பன்மையில் குறிக்கிறார்.  நம் எல்லோருக்கும். 


ஐயோ, ,எனக்கு ஒரு தகுதியும் இல்லையே. எனக்கு எங்கே கிடைக்கப் போகிறது என்று நினைத்தால் 


"எம் தரமும் ஆட்கொண்டு"


உங்கள் தரத்தை எல்லாம் அவன் பார்ப்பது இல்லை. அவனுக்கு அந்த பாகுபாடெல்லாம் கிடையாது. 


கண்ணப்பன் என்ற வேடனுக்கு முக்தி கொடுக்கவில்லையா ?


திருநீலகண்டர் என்ற குயவருக்கு முக்தி கொடுக்கவில்லையா?


அவன் தரம் பார்ப்பது இல்லை. 


என்ன, இப்படி ஒரு கடவுளா? அளவு கடந்த கருணை உடையவனாக இருக்கிறானே...அவனுக்கு நாம் என்னதான் செய்வது?



"அம் கருணை வார் கழலே பாடுதும் காண்; அம்மானாய்!"


அவ்வளவுதான். 


மீண்டும் ஒரு முறை பாடலைப் படித்துப் பாருங்கள். 


(பதிவு சற்று நீண்டு விட்டது. பொறுத்தருள்க)