Tuesday, August 29, 2023

திருக்குறள் - ஒப்புரவறிதல் - உயிர் வாழ்வான்

 திருக்குறள் - ஒப்புரவறிதல் - உயிர் வாழ்வான் 


ஒருவனை பணம் இல்லாதவன், ஏழை என்று திட்டலாம். பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டான். 


அறிவில்லாதவன் என்றால் கொஞ்சம் கோபம் வரும். இருந்தாலும், அறிவு என்பது கடல் போன்றது என்பதால், ரொம்ப பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டான். 


உயிரில்லாத பிணமே என்று திட்டினால் யாருக்கும் பெரும் கோபம் வரத்தான் செய்யும். 


வள்ளுவர், அப்படி திட்டுகிறார். 


யாரைத் தெரியுமா?


ஒப்புரவு அறியாத மக்களை, உயிரற்ற பிணம் என்று சாடுகிறார். 


பாடல் 


ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்

செத்தாருள் வைக்கப் படும்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/08/blog-post_29.html


(Please click the above link to continue reading)


ஒத்தது = உலகுக்கு ஏற்றது எது என்பதை  


அறிவான் = அறிந்து செய்பவன்


உயிர்வாழ்வான் = உயிரோடு வாழ்பவன் என்று ஏற்றுக் கொள்ளப்படுவான் 


மற்றையான் = மற்றவர்கள் எல்லாரும் 



செத்தாருள் வைக்கப் படும் = இறந்தவர்கள் வரிசையில் வைத்து எண்ணத் தக்கவர்கள். 


அது எப்படி, ஒத்தது அறியாவிட்டால் பிணம் என்று எப்படிச் சொல்ல முடியும்?


உயிர் என்பது என்ன?


உயிர் மூன்று வகையான செயல்களை செய்விக்கும். 


ஆசையைத் தூண்டும். 


அறிவைத் தூண்டும். 


செயலைத் தூண்டும். 


இந்த மூன்றும் இல்லாவிட்டால், உயிரில்லை என்று பொருள். 


எறும்பில் இருந்து, புல் , பூண்டு, மரம், செடி, கொடி என்று உயிர் உள்ள அனைத்தும் இந்த மூன்றையும் வெளிப்படுத்தும். 


இதை நம் சமயத்தில் இச்சா சக்தி (ஆசை), கிரியா சக்தி (செயல்), ஞானா சக்தி என்று கூறுவார்கள். 


நமக்கு ஆசை இருக்கிறது. அதை அடைய அறிவு இருக்கிறது. அதை செயல்படுத்த உடல் இருக்கிறது. 


எங்கோ இருக்கும் நீரைத் தேடி ஆசை ஆசையாக மரம் தன் வேரை அனுப்புகிறது. வெளிச்சம் தேடி மேலும் மேலும் வளர்கிறது. 


இங்கே ஒப்புரவு இல்லாதவன் அறிவும், செயலும் இல்லாமல் இருப்பதால் அவனை உயிரற்ற பிணம் என்றார் என்று பரிமேலழகர் உரை செய்கிறார். 


"உயிரின் அறிவும் செயலும் காணாமையின், 'செத்தாருள் வைக்கப்படும்' என்றார்"


ஒப்புரவு செய்யாதவன் வெறும் ஆசை மட்டும் உள்ளவன். எல்லாம் எனக்கு என்ற ஆசை உள்ளவன். 




Monday, August 28, 2023

நாலடியார் - நட்பிற் பிழை பொறுத்தல் - நோதக்க என்னுண்டாம் ?

 நாலடியார் - நட்பிற் பிழை பொறுத்தல் - நோதக்க என்னுண்டாம் ?


நமக்கு முன்ன பின்ன பழக்கம் இல்லாதவர்கள் நமக்கு தீங்கு செய்வது இல்லையா? 


நாம் அவர்களை பார்த்து பழகி இருக்க மாட்டோம். அவர்களால் நமக்கு சில சமயம் தீமை வந்து சேரலாம். 


உதாரணமாக, தெருவில் நாம் சென்று கொண்டிருக்கும் போது, வேற வண்டியில் வரும் ஒருவர் நம் மீதோ, அல்லது நமக்கு வேண்டியவர்கள் மேலோ மோதி பெரும் பொருட் செலவும், மன வலியும் உண்டாக்கி விடலாம். நாம் அவர்களுக்கு என்ன தீமை செய்தோம். ஒன்றும் இல்லை. இருந்தும் அவர்களால் பெரும் தீமை நமக்கு வந்து சேர்ந்து விடுகிறது. 


யாருக்கோ, யார் மேலோ கோபம். தெருவை அடைத்து போக்குவரத்தை நிறுத்தி விடுவார்கள் நமக்கு அவசரமாக போக வேண்டி இருக்கும். சங்கடம்தான். 


இதுக்கெல்லாம் என்ன காரணம் ?


ஊழ். விதி. வேறு என்ன சொல்லுவது. 


சம்பந்தம் இல்லாதவர்கள் மூலம் நமக்கு தீமை வந்தால் என்ன செய்ய முடியும். விதி என்று ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டி இருக்கிறது. 


அப்படி இருக்க, நண்பர்கள் தீமை செய்தால், அதை ஏன் பெரிது படுத்த வேண்டும். அதுவும் விதி என்று ஏற்றுக் கொள்ளக் கூடாதா? என்கிறது நாலடியார். 


பாடல் 




ஏதிலார் செய்த திறப்பவே தீதெனினும்

நோதக்க தென்னுண்டாம் நோக்குங்கால்! - காதல்

கழுமியார் செய்த கறங்கருவி நாட!

விழுமிதாம் நெஞ்சத்துள் நின்று.



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/08/blog-post_28.html


(please click the above link to continue reading)


ஏதிலார் = அறிமுகம் இல்லாதவர்கள் 


செய்த = செய்தது 


திறப்பவே தீதெனினும் = மிகப் பெரிய தீமை என்றாலும் 


நோதக்க = அதில் நொந்து கொள்ள 


 தென்னுண்டாம் = என்ன இருக்கிறது ?


 நோக்குங்கால்! = ஆராய்ந்து பார்த்தால் 


காதல் = அன்பு 


கழுமியார் = உடையவர்கள் (நண்பர்கள்) 


செய்த = செய்த 


கறங்கருவி = கறங்கு + அருவி = ஒலி எழுப்பும் அருவிகளை கொண்ட 


நாட! = நாட்டின் தலைவனே 


விழுமிதாம் = சிறப்பு உள்ளது 


நெஞ்சத்துள் நின்று = மனதில் வைத்துப் பார்க்கும் போது 


ஏதோ விதியினால் அவர்கள் நமக்கு தீங்கு செய்யும்படி நேர்ந்து விட்டது என்று எடுத்துக் கொண்டு போனால், அந்த அன்பின், நட்பின் பலம் மேலும் பெருகும். சிறப்பு உடையதாக இருக்கும். 



இந்த ஏதிலார் என்ற சொல்லை நம் வள்ளுவ ஆசான் காமத்துப் பாலில் கையாண்டு இருக்கிறார். (அறத்துப் பாலிலும் உண்டு. ஏதிலார் குற்றம் போல்) 


ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள.


அவர்கள் இருவரும் காதலர்கள். அது பிறருக்குத் தெரியாது. ஏதோ ஒரு பொது நண்பரின் வீட்டில் ஒரு நிகழ்வுக்குப் போய் இருக்கிறார்கள். 


அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அவ்வப்போது பார்த்துக் கொள்கிறார்கள். அவர்கள் பார்வையின் அர்த்தம் அவர்களுக்குப் புரியும். ஆனால், மற்றவர்கள் பார்த்கும் போது, ஏதோ முன்ன பின்ன தெரியாத இருவர் பார்த்துக் கொள்வது போல இருக்குமாம். 


ஏதிலார் போல பொது நோக்கு நூகுதல் காதலார் கண்ணே உள என்கிறார் வள்ளுவர். 


அவர்களால்தான் அது முடியும் என்கிறார். 


அவர்கள் பார்த்து இரசிப்பதை இவர் பார்த்து இரசித்து எழுதியதை நாம் இரசிக்கிறோம். 


தமிழ் இலக்கியம். 


 

Saturday, August 26, 2023

திருவாசகம் - அச்சோ - எங்கே போக வேண்டும்

 திருவாசகம் - அச்சோ - எங்கே போக வேண்டும் 


நமக்கு உடல் நிலை சரி இல்லை என்றால் யாரைப் போய் பார்ப்போம்? மருத்துவரை அணுகுவோம்.


படிக்க வேண்டும் என்றால்? ஆசிரியரை அணுகுவோம். 


இப்படி ஒவ்வொன்றுக்கும் அந்தத் துறையில் திறமை உள்ளவர்களை அணுகுவோம் அல்லவா?


முக்தி அடைய?


முக்தி அடைய யாரை அணுக வேண்டும்?


யாரை அணுக வேண்டும் என்பது கூட இரண்டாவது பட்சம். யாரை அணுகக் கூடாது என்று தெரிய வேண்டும் அல்லவா?  


பல் வலிக்கு கண் மருத்துவரை பார்த்தால் என்ன ஆகும்?


மணிவாசகர் சொல்கிறார் 


"எனக்கு முக்தி அடைய ஆசை. ஆனால், முக்தி அடையும் வழி எது என்றே தெரியாத முட்டாள்களோடு நான் சேர்ந்து திரிந்து கொண்டிருந்தேன். நான் எந்தக் காலத்தில் முக்தி அடைவது? நல்ல வேளை நீ (சிவ பெருமான்) வந்து எனக்கு பக்தி நெறியை காட்டி, என் பழைய வினைகளை அறுத்து, என் புத்தியில் உள்ள குற்றங்களை எல்லாம் போக்கி, என்னையும் உன் போல் ஆக்கினாயே , உன்னைப் போல கருணை செய்யக் கூடியவர்கள் யார் இருக்கிறார்கள் " 


என்று ஆச்சரியப் படுகிறார். 


நாம என்ன செய்து விட்டோம், இந்த சிவன் நமக்கு இவ்வளவு உதவி செய்கிறானே என்று ஒரு ஆச்சரியம். 


பாடல் 



முத்தி நெறி அறியாத மூர்க்கரொடும் முயல்வேனை,

பத்தி நெறி அறிவித்து, பழ வினைகள் பாறும்வண்ணம்,

சித்த மலம் அறுவித்து, சிவம் ஆக்கி, எனை ஆண்ட

அத்தன் எனக்கு அருளிய ஆறு, ஆர் பெறுவார்? அச்சோவே!


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/08/blog-post_26.html


(please click the above link to continue reading)


முத்தி = முக்தி 

நெறி = வழி. முக்தி அடையும் வழி 


அறியாத = எது என்று அறியாத 


மூர்க்கரொடும் = முரடர்களோடு 


முயல்வேனை = முயற்சி செய்யும் என்னை 


பத்தி நெறி = பக்தி என்ற நெறியைக் 


அறிவித்து = அறியத் தந்து 


பழ வினைகள் = என்னுடைய பழைய வினைகள் யாவும் 


பாறும்வண்ணம் = பாறுதல் என்றால் அழித்தல், சிதற அடித்தல் 


சித்த மலம் அறுவித்து = என் சித்தத்தில் உள்ள மலங்களை (குற்றங்களை) நீக்கி 


சிவம் ஆக்கி =சிவத் தன்மையை தந்து 


எனை ஆண்ட - என்னை ஆட்கொண்ட 


அத்தன் = அத்தன் 


எனக்கு = எனக்கு 


அருளிய ஆறு = அருள் செய்த மாதிரி 


ஆர் பெறுவார்? அச்சோவே! = வேறு யாரு செய்வார்கள், அச்சச்சோ ...


முதலில், முக்தி அடைய வேண்டும் என்றால் அது அடையும் வழி தெரிந்தோரை அணுக வேண்டும். அல்லாமல், அது தெரியாத ஆட்கள் பின்னால் போகக் கூடாது. 


அடுத்து, பக்தி நெறியில் போனால் முக்தி கிடைக்கும். இறைவன் மணிவாசகருக்கு பக்தி நெறியை காட்டினான். சைவ சமயத்தில் மணிவாசகரை ஞான மார்கத்தின் தலைவர் என்று கொண்டாடுவார்கள். ஞானத்தில் பக்தி. 


அடுத்து, பக்தி நெறியில் சென்றால், பழைய வினைகள் அறுபடும். தொடராது. 


அடுத்து, மிக முக்கியமானது, சித்தத்தில் உள்ள குற்றங்கள் (மலம்) தெளிந்தால், சீவன் சிவமாகி விடும். தெளிவித்து என்றார். நீக்கி என்று சொல்லவில்லை. சித்தம் சலனப்பட்டு கிடக்கிறது. அது சலனம் இல்லாமல் இருந்தால், தெளிவு பிறக்கும். அந்தத் தெளிவு வந்துவிட்டால், சீவன், சிவமாம் தன்மை பெறும் என்கிறார். 


அடுத்து, அத்தன் எனக்கு அருளியவாறு என்கிறார். நானே படித்துத் தெரிந்து கொண்டேன் என்று சொல்லவில்லை. அவன் அருளாலே கிடைத்தது என்கிறார். 


அதாவது, மூடர்கள் தொடர்பை விட்டு, நல்லோர் தொடர்பைப் பற்றி, இறைவனை நாடினால், அவன் பக்தி நெறியில் நம்மை செலுத்தி, நம் பழைய வினைகளை மாற்றி, சித்தத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி, சிவமாம் தன்மை தருவான் என்பது தெளிவு. 






Wednesday, August 23, 2023

திருக்குறள் - ஒப்புரவறிதல் - பெறல் அரிதே

 திருக்குறள் - ஒப்புரவறிதல் - பெறல் அரிதே 


கொல்லாமை, பொய் சொல்லாமை என்று பல அறங்கள் இருக்கின்றன. இதில் எது சிறந்தது? இந்த ஒப்புரவு என்பது கொஞ்சம் கடினமான விடயம் போல இருக்கிறதே. கஷ்டப்பட்டு சம்பாதித்ததை எல்லாம் மற்றவர்களுக்கு கொடு என்றால் எளிதான காரியமாகத் தெரியவில்லை. 


பெற்ற பிள்ளைகளுக்கு, உடன் பிறந்தவர்களுக்கு கொடுப்பதே கடினமாக இருக்கிறது. இதில் எங்கிருந்து சமுதாயத்துக்கு கொடுப்பது? 


நன்றாக உடற் பயிற்சி செய்பவர்களை கேளுங்கள். ஒரு நாள் உடற் பயிற்சி செய்ய முடியவில்லை என்றால் அவர்களுக்கு ஏதோ ஒரு குறை போல இருக்கும். உடற் பயிற்சி என்பது கடினம்தான். இருந்தும், அதை செய்யாவிட்டால் ஏதோ இழந்த மாதிரி இருக்கும் அவர்களுக்கு. 


நன்றாக உணவு கட்டுப்பாடு உள்ளவர்களை பாருங்கள். ஒரு நாள் ஏதோ ஒரு இனிப்பு அல்லது ஐஸ் கிரீம் சாப்பிட்டு விட்டால், மிகப் பெரிய தவறு போல சொல்லிக் கொண்டு இருப்பார்கள். 


அவர்களைப் பொறுத்தவரை அந்த பயிற்சியும், உணவு கட்டுப்பாடும் அவ்வளவு நல்லது. அது இல்லாமல் இருக்க முடியாது. 


காரணம், அவர்கள் அதன் நன்மையை உணர்ந்து இருக்கிறார்கள். மேலும், அதை செய்து செய்து பழகி இருக்கிறார்கள். முதலில் அவர்களும் சங்கடப்பட்டுத்தான் இருப்பார்கள். 


பழகிய பின் அதன் சுகம் தெரிய ஆரம்பித்து விடுகிறது. 


அது போல, ஒப்புரவும், முதலில் சங்கடமாக இருக்கும். பழகினால் அதன் சுகம் தெரிய ஆரம்பிக்கும். 


வள்ளுவர் சொல்கிறார், "ஒப்புரவுக்கு இணையான ஒன்றை தேவர் உலகிலும், இந்த பூமியிலும் காண முடியாது" என்று. அவ்வளவு உயர்ந்தது என்று கூறுகிறார். 


பாடல் 


புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல்அரிதே

ஒப்புரவின் நல்ல பிற


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/08/blog-post_23.html


(Please click the above link to continue reading)



புத்தேள் = சொர்கம், தேவர் உலகம்  


உலகத்தும் = உலகிலும் 


ஈண்டும் = இங்கும், அதாவது இந்த பூமியிலும் 


பெறல்அரிதே = பெற முடியாதே 


ஒப்புரவின் = ஒப்புரவைப் போல 


நல்ல பிற = பிற நல்ல ஒன்றை 


தேவர் உலகில் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் என்பதால் அங்கே போய் ஒப்புரவு செய்ய முடியாது. யாருக்கும் ஒன்றும் வேண்டாம். 


இந்த உலகில், மக்கள் ஒப்புரவின் நன்மைகளை புரிந்து கொள்வதில்லை. அதனால் செய்வது இல்லை. எனவே இங்கும் ஒப்புரவை செய்வது அரிது. 


அங்கே செய்வது அரிது. இங்கே காண்பது அரிது. 


அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு என்பார் வள்ளுவ ஆசான். 


எலும்பைக் கூட கொடுத்து விடுவார்களாம். 


சமுதாயத்துக்கு கொடுப்பது என்றால் என்ன என்று சிந்தித்துப் பார்த்தேன். பொருள் சொன்ன பெரியவர்கள் எல்லோரும் பொருள் உதவி என்றுதான் உரை செய்து இருக்கிறார்கள். 


சற்று வித்தியாசமாக சிந்தித்தால் என்ன?


பொருள் உதவி மட்டும்தானா உதவி?


நம்மிடம் அறிவு இருக்கிறது. அதை சமுதாயத்துக்கு என்று செலவழித்தால் என்ன?  புத்தகம் எழுதலாம், ப்ளாக் எழுதலாம், நாலு பிள்ளைகளுக்கு பாடம் சொல்லித் தரலாம் (பணம் வாங்காமல்)...


நம்மிடம் அன்பு இருக்கிறது, அந்த அன்பை சமுதாயத்துக்குத் தரலாம். எப்படி?  இலவச சேவை, பொது நல சேவை,  தொண்டு நிறுவனங்களுக்கு சென்று நம்மால் முடிந்த உதவி. மாதத்தில் ஒரு நாள் சென்று பலன் எதுவும் எதிர்பார்க்காமல் சேவை செய்து விட்டு வருவது, இரத்த தானம் செய்வது, அன்ன தானம் செய்வது...செய்யலாம் தானே. 


தெருவில் நடந்து போகிற போது, பாதையில் கல் கிடந்தால் அதை ஓரமாக தள்ளிவிட்டுப் போவது கூட ஒரு ஒப்புரவுதான். 


இன்றைய சூழ்நிலையில், முடிந்த வரை நடந்து போவது, காரில் போனால் புகை, சுற்றுச் சூழல் மாசுபடும். அது மாசுபடாமல் காப்பது கூட சமுதாயத்துக்கு நாம் செய்யும் உதவிதான். 


ஒரு மணி நேரம் குறைவாக Air Condition ஐ உபயோகம் செய்தால், அதுவும் ஒப்புரவுதான். 


வாரத்தில் ஒரு நாள் ஒரு பொழுது விரதம் இருந்தால் எவ்வளவு பெரிய நன்மை இந்த சமுதாயத்துக்கு. 




வீட்டில் ஒரு விசேடம் என்றால் அருகில் உள்ள அனாதை இல்லம், முதியோர் இல்லம் போன்ற இடங்களுக்கு ஒரு வேளை இலவச உணவு கொடுங்கள். 


எவ்வளவோ செய்யலாம். மனம்தான் வேண்டும். 


சிறிதாக ஒன்றில் ஆரம்பியுங்கள்.  பழக பழக பிடித்துப் போய் விடும். 

Monday, August 21, 2023

நாலடியார் - நட்பிற் பிழைபொறுத்தல் - அவரின் கடை

 நாலடியார் - நட்பிற் பிழைபொறுத்தல் - அவரின் கடை 


நட்பு கொண்ட ஒருவர் ஏதோ தவறு செய்து விட்டார் என்ற காரணத்துக்காக அவரை விட்டு விலக நினைக்கலாம். 


அப்படி நண்பரை விட்டு விலகுவதும் ஒரு தவறு தானே? அவர் தவறு செய்தார் என்று நாம் விலக நினைப்பது, நாம் தவறு செய்வதாக முடியும் அல்லவா?


அவர் செய்தது ஒரு தவறு. 


நாம் செய்ய இருப்பதோ பல தவறுகள். 


ஒன்று, பழகிய நண்பரை விட்டு விலக நினைப்பது. 


இரண்டாவது, பொறுமை இல்லாமை. தவறு செய்தவரை பொறுக்கும் தன்மை இல்லாதது ஒரு சிறுமைதான். 


மூன்றாவது, நாம் தவறு செய்கிறோம் என்று அறியாமல் அது சரி என்று நினைப்பது. 


அவர் செய்தது ஒன்று. நாம் செய்ய இருப்பது மூன்று. 


எனவே, அவரைவிட நாம் அதிகம் குறை பட்டாவர்கள் அல்லவா?


பாடல் 




இலங்கு நீர்த் தண் சேர்ப்ப! இன்னா செயினும்,

கலந்து பழி காணார், சான்றோர்; கலந்தபின்,

தீமை எடுத்து உரைக்கும் திண் அறிவு இல்லாதார்-

தாமும், அவரின் கடை.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/08/blog-post_21.html



(pl click the above link to continue reading)



இலங்கு = விளங்கும், இருக்கும், 


நீர்த் = நீர் 


தண் = குளிர்ந்த 


சேர்ப்ப! = கரையை உடையவனே. குளிர்ந்த நீர் இருக்கும் கடற்கரைக்கு தலைவனே. 


இன்னா செயினும் = தவறானவற்றை செய்தாலும் 


கலந்து = நண்பரிடம் 


பழி காணார் = பழி காண மாட்டார்கள் 


சான்றோர் = பெரியோர் 


கலந்தபின் = நட்பு ஆன பின் 


தீமை = அவர் செய்த தீமைகளை 


எடுத்து உரைக்கும் = பிறரிடம் எடுத்து சொல்லும் 


திண் அறிவு இல்லாதார் = திடமான அறிவு இல்லாதவர்கள் 


தாமும் = அவர்களும் (தவறு கண்டு பிடிப்பவர்களும்)  


அவரின் கடை. = தவறு செய்தவர்களை விட குறை நிறைந்தவர்கள். கீழானவர்கள் 


நட்பு, உறவு என்றால் அப்படித்தான் இருக்கும். அதற்காக ஊரெல்லாம் போய் "அவன் எனக்கு இப்படி செய்து விட்டான்" என்று சொல்லிக் கொண்டு திரிவது அழகா? 




Sunday, August 20, 2023

திருக்குறள் - ஒப்புரவறிதல் - வேளாண்மை

 திருக்குறள் - ஒப்புரவறிதல் - வேளாண்மை 


ஊருக்கு நல்லது செய்வது என்பதுதான் ஒப்புரவு. 


எவ்வளவு செய்வது? யாருக்குச் செய்வது என்றெல்லாம் கேள்வி வரும். ஊருக்கு செய்வது என்றால் செய்து கொண்டே இருக்கலாம். எவ்வளவு செய்தாலும், மேலும், மேலும் வேண்டும் என்று தோன்றும். நம்மிடம் அவ்வளவு செல்வம் இருக்க வேண்டுமே. 


அது முதல் சிக்கல். 


இரண்டாவது, ஊருக்குள் பல பேர் வேலை வெட்டி இல்லாமல், சோம்பேறியாக திரிந்து கொண்டிருப்பான். நல்லது செய்கிறேன் என்று அவர்களை எல்லாம் கூட்டி வந்து சாப்பாடு போட்டு பராமரிக்க முடியுமா?


மூன்றாவது, ஒருவனிடம் உள்ள செல்வம் அவன் மூதாதையர் தந்த செல்வமாக இருக்கலாம். பரம்பரை சொத்து என்று சொல்வார்கள். அதை தானம் செய்ய அவனுக்கு அதிகாரம் கிடையாது. பிள்ளைகளும், பேரப் பிள்ளைகளும் அதற்கு வாரிசு. பணம் இருக்கும், ஆனால், கொடுக்க முடியாது. 


நான்காவது, தவறான முறையில் சேர்த்த பணத்தில் அன்ன தானம் செய்கிறேன், தண்ணீர் பந்தல் வைக்கிறேன் என்று ஊருக்கு நல்லது செய்தால் அது சரியா? ஊரை ஏமாற்றி, பொய் சொல்லி, திருடி, இலஞ்சம் வாங்கி சேர்த்த பணத்தில் ஊருக்கு நல்லது செய்யலாமா?


இப்படி பல நடைமுறை சிக்கல்களை எடுத்துக் கொண்டு, ஒரே குறளில் அனைத்திற்கும் பதில் தருகிறார் வள்ளுவ ஆசான். 


பாடல் 


தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு

வேளாண்மை செய்தற் பொருட்டு


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/08/blog-post_20.html


(please click the above link to continue reading)



தாளாற்றித் = முயற்சி செய்து 


தந்த = பெற்ற 


பொருளெல்லாந் = பொருள் எல்லாம், செல்வம் எல்லாம் 


தக்கார்க்கு = தகுதியானவர்களுக்கு 


வேளாண்மை = உதவி 


செய்தற் பொருட்டு = செய்வதற்காக 


முயற்சியால் பெற்ற செல்வம் , மற்றவர்களுக்கு உதவி செய்வதற்காக. 


இதில் எங்கே மேலே சொன்ன கேள்விகளுக்கு விடை இருக்கிறது?  


தாளாற்றி = முயற்சியால். 


அதாவது ஒருவனின் சொந்த சம்பாத்தியம். பரம்பரை சொத்து இல்லை.  

மேலும், திருடி, கொள்ளை அடித்து அல்ல. வேலை செய்து, முயற்சியால் ஈட்டிய செல்வத்தைப் பற்றி இங்கே கூறுகிறார். 


தக்கார்க்கு = தகுதி உள்ளவர்களுக்கு. அரசியல்வாதிகளுக்கு நன்கொடை கொடுப்பதைப் பற்றி இங்கே கூறவில்லை. நாம் உதவி செய்ய, அதை பெற்றுக் கொள்ளும் தகுதி அவனுக்கு இருக்கிறதா என்று அறிந்து செய்ய வேண்டும். பாத்திரம் அறிந்து பிச்சை இடு என்று சொல்லுவார்கள். 


வேளாண்மை செய்தல் = வேளாண்மை என்றால் உதவி. உதவி செய்யச் சொல்கிறார். இந்த அதிகாரம் ஒப்புரவு. எனவே, இது தனி மனித உதவி அல்ல. சமுதாய உதவி. சமுதாயத்தில் எந்தப் பிரிவினருக்கு உதவி தேவையோ அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். 


பொருள் எல்லாம் = இது ஒரு சிக்கலான இடம். தன்னிடம் உள்ள பொருள் எல்லாவற்றையும் கொடுக்க வேண்டும் சொல்கிறார். அது நடைமுறை சாத்தியம் இல்லாத ஒன்று. எல்லாவற்றையும் எப்படி கொடுக்க முடியும். இதற்கு சரியான பொருள் எனக்குத் தெரியவில்லை. எப்படி வலிந்து பொருள் சொன்னாலும், அது மனதுக்கு சரி என்று படவில்லை. சிந்திக்க வேண்டிய இடம். அறிவும், அனுபவமும் வளர்ந்தால், ஒரு வேளை இதற்கு என்ன அர்த்தம் என்று தெரிய வரலாம். பொறுத்து இருக்க வேண்டும். 


இந்தப் குறளில் பரிமேலழகர் ஒரு பெரிய நுணுக்கம் செய்கிறார். உங்களால் அதை ஏற்றுக் கொள்ள முடிகிறதா என்று பாருங்கள். 


இந்த குறளை இரண்டு விதமாக பிரிக்கலாம். 


தாளாற்றி தந்த பொருள் எல்லாம்

தக்கார்க்கு 

வேளாண்மை செய்தல் பொருட்டு 


என்று பிரித்தால், நாம் மேலே சொன்ன பொருள் வரும். 


மாறாக, பரிமேலழகர் இதை,


தாளாற்றி தந்த பொருள் எல்லாம் தக்கார்க்கு 

வேளாண்மை செய்தற் பொருட்டு 


என்று பிரிக்கிறார். 


அதாவது, முயற்சியால் வரும் பொருள் எல்லாம் நல்லவர்கள் கையில் போய் சேர்ந்தால், அது பிறருக்கு உதவியாகப் பயன்படும் என்று பொருள் கொள்கிறார். 


தாளாற்றி வந்த செல்வம் எல்லாம் தக்கார்க்கு ஆயின், அவர்களுக்கு கிடைக்கும் என்றால், அது வேளாண்மை செய்தல் பொருட்டு, அது ஊருக்கு உதவி செய்ய கிடைத்த மாதிரி என்று பொருள் கொள்கிறார். 


நல்லவன் கையில் கிடைத்த பொருளால் ஊருக்கு நன்மை உண்டு; கெட்டவன் கையில் கிடைத்த பொருளால் ஊருக்கு ஒரு நன்மையையும் இல்லை. தனக்கும் தன் குடும்பத்துக்கும் என்று வைத்துக் கொள்வான் என்று பொருள் சொல்கிறார். 


கொஞ்சம் நீட்டித்து பொருள் சொல்வதாகப் படுகிறது. 


உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ, அதை ஏற்றுக் கொள்ளுங்கள். 


 



Tuesday, August 15, 2023

கந்தரனுபூதி - பாழ் வாழ்வு

 கந்தரனுபூதி - பாழ் வாழ்வு 


நமக்கு கிடைத்த இந்த வாழ்வு எவ்வளவு உயர்ந்தது என்று ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்ப்போம்.


ஆரோக்கியமான உடல், படிப்பு, செல்வம், குழந்தைகள், அமைதியான நாடு, ஒரு சில துன்பங்கள், சிக்கல்கள் இருந்தாலும், பெரும்பாலும் வாழ்க்கை அமைதியாக சென்று கொண்டு இருக்கிறது. 


எத்தனையோ குறைகள், துன்பங்கள் வந்து இருக்கலாம். உடல் ஊனத்தோடு பிறந்து இருக்கலாம். சண்டை சச்சரவு நிறைந்த ஒரு நாட்டில் பிறந்து அகதியாக ஓட வேண்டி இருந்திருக்கலாம். செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவிக்கும் ஒரு கொடுங்கோல் ஆட்சியில் அகப்பட்டு இருக்கலாம், வாழ தகுதியில்லாத தட்ப வெப்பம் உள்ள நாட்டில் பிறந்து அவதிப் பட்டு இருக்கலாம். 


இதெல்லாம் இல்லாத ஒரு வாழ்வு நமக்கு கிடைத்து இருக்கிறது. 


நாம் அவ்வளவு நல்லவர்களா?  இதற்கு முன்னால் நாம் நல்லவர்களாக இருந்து இருப்போமா? வாய்ப்பு குறைவு. 


இருந்தும் நமக்கு இவ்வளவு நல்லது கிடைத்து இருக்கிறது. 


இப்போது என்ன செய்ய வேண்டும். இந்தப் பிறவியை பயன்படுத்தி, நல்லது செய்து இனி வரும் பிறவிகளில் துன்பம் வராமல் நம்மை பாதுகாத்து கொள்ள வேண்டும் அல்லவா?


இவ்வளவு இருந்தும், இந்த மாயை என்பது பிடிபட மாட்டேன் என்கிறது. எது சரி, எது தவறு, எது நிரந்தரம், எது அநித்தியம் என்று புரிவதில்லை.


இந்த அருமையான வாழ்வை சரி தவறு தெரியாமல் வீணடித்துக் கொண்டு இருக்கிறோம். காரணம் - அறியாமை. 


அதற்கு காரணம் முன் வினை. விதி. 


நாம் முன்பு செய்த பாவங்கள். 


அருணகிரி புலம்புகிறார் 


"இந்த பாழான வாழ்வை உண்மை என்று நம்பி மாயையில் கிடந்து உழலும் படி என்னை செய்து விட்டாயே. காரணம், நான் முன் செய்த வினைகளோ ? மாயையில் கிடந்து உழலும்படி செய்தாலும், இந்த அறிவைக் கொடுத்தாயே, நீ வாழ்க"  என்று. 


பாடல் 


பாழ் வாழ்வெனு மிப்படு மாயையிலே 

வீழ் வாயென என்னை விதித்தனையே 

தாழ் வானவை செய்தன தாமுளவோ 

வாழ் வாயினி நீ மயில் வாகனனே . 


சீர் பிரித்த பின் 


பாழ் வாழ்வு எனும் இப் படு மாயையிலே 

வீழ்வாய் என  என்னை விதித்தனையே 

தாழ்வானவை செய்தன தாம் உளவோ 

வாழ்வாய் இனி  நீ மயில் வாகனனே


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/08/blog-post_15.html


(pl click the above link to continue reading)


பாழ் வாழ்வு = பாழான வாழக்கை 


எனும் = என்று சொல்லப்படும் 


இப் = இந்த 


படு மாயையிலே = பெரிய மாயையில் 


வீழ்வாய் என = நீ விழுந்து கிடப்பாய் என்று 


என்னை = என்னை 


விதித்தனையே  = விதியின் பலனாய் விட்டாய் 

 

தாழ்வானவை = தவறானவற்றை 


செய்தன தாம் = நான் செய்தது 


 உளவோ = இருக்குமோ 

 

வாழ்வாய் = வாழ்வாயாக 


இனி  நீ மயில் வாகனனே = இனி மயில் மேல் வருபவனே 


நான் பல வினைகள் செய்து இருக்கலாம். அதனால் இந்த பாழான வாழ்வை இனிமையானது என்று நம்பி அதில் விழுந்து கிடக்கிறேன். இருந்தும், இது பாழானது என்று அறியும் அறிவை நீ கொடுத்தாய். எனவே, இதில் இருந்து வெளிவர நான் முயற்சி செய்வேன். அந்த ஞானத்தை கொடுத்த முருகா, மயில் வாகனனே, நீ வாழ்க என்கிறார். 


அநுபூதி பெற்ற பின் பாடிய பாடல். அவருக்கு அந்த ஞானம் கிட்டியது. 


நமக்கும் கிட்டட்டும்.




 


Monday, August 14, 2023

திருக்குறள் - ஒப்புரவறிதல் - மழை

திருக்குறள் - ஒப்புரவறிதல் - மழை 


அன்புப் பெருக்கமே இல்லறம் என்று சிந்தித்தோம். தன் வீடு, சுற்றம், நட்பு தாண்டி, தான் வாழும் சமுதாயத்துக்கு ஒருவன் செய்யும் உதவிகள் ஒப்புரவறிதல் எனப்படும். 


ஒருவன் சிறப்பாக இல்லறம் நடத்துகிறான் என்றால், அவன் அன்பு நாளும் விரிந்து சமுதயாத்தின் மேலும் அவன் அன்பு செலுத்த நினைப்பான்.


அதில் முதல் குறள் 


உலகுக்கு மழை தந்து உதவும் அந்த மேகங்களுக்கு இந்த உலகம் என்ன கைம்மாறு செய்ய முடியும்?


பாடல் 


 கைம்மாறு வேண்டாக் கடப்பாடு மாரிமாட்டு

என்ஆற்றும் கொல்லோ வுலகு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/08/blog-post_14.html


(pl click the above link to continue reading)


கைம்மாறு = பிரதிபலன், 


வேண்டாக் = வேண்டாத, விரும்பாத, எதிர்பார்க்காத 


கடப்பாடு = கடமையாக 


மாரிமாட்டு = மழைக்கு 


என்ஆற்றும் = என்ன செய்யும் 


கொல்லோ = கொல் என்பது அசைச் சொல். அதாவது பொருள் இல்லாத, இலக்கணத்தை சரி செய்யும் ஒரு சொல். 


 வுலகு = இந்த உலகம் 


மழை இல்லாமல் உயிர்கள் இல்லை. அந்த மழையைத் தரும் மேகத்துக்கு இந்த உயிர்கள் என்ன நன்றியைச் திருப்பிச் செய்கின்றன?


யாராவது அவர்கள் வீட்டில், ஒரு மேகத்தின் படத்தை வைத்து பூஜை செய்கிறார்களா? மேகத்துக்கு ஒரு திருவிழா உண்டா?  பொங்கல், தீபாவளி போல் ஒரு சிறப்பு நாள் உண்டா? 


மேகம் ஏதோ ஒரு இடத்தில் இருந்து பெய்வது கிடையாது. அங்கும் இங்கும் அலைகிறது. அங்கு போய் பெய்கிறது. பின் ஓடிச் சென்று இன்னொரு இடத்தில் பெய்கிறது. உலகம் அனைத்தையும் உயிர் வாழச் செய்கிறது. 


அது மட்டும் அல்ல, மேகம், அது ஏதோ அதன் கடமை போலச் செய்கிறது. 


அது போல, ஒப்புரவு செய்பவன், யாராவது வந்து என்னிடம் கேட்டால் செய்வேன் என்று இருக்கக் கூடாது. இந்த சமூகத்துக்கு என்ன தேவை என்று அங்கும் அலைந்து சென்று, அறிந்து செய்ய வேண்டும். 


அது அவன் கடமை. 


அவன் கடமை என்றால் ஏதோ அவன் ஒரு ஆள் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. 


அது நம் கடமை. 


இல்லறம் நல்ல படியாக நடந்தால், அன்பு தானே பெருகும். 


எங்கே பெருகுகிறது?


கணவன் மனைவிக்கு நடுவில், யார் பெரியவர், எந்த வேலையை யார் செய்வது என்று சண்டை. உனக்கு ஒன்றும் தெரியாது என்று ஆணவம் கொள்ளும் பிள்ளைகள், முதியோர் இல்லங்களும், குழந்தை காப்பகங்களும் (Creche) நிறைந்து வரும் இந்நாளில் ஒப்புரவு பற்றி பேசுவது கூட கடினம். 


அண்ணன் தம்பிக்குள் சண்டை, கணவன் மனைவிக்குள் சிக்கல், பெற்றோர் பிள்ளைகளுக்குள் கருத்து, மன வேறுபாடு...இல்லத்திலேயே அன்பு இல்லை. பின் எப்படி அது சமுதாய தோட்டத்துக்குப் பாயும். 


சம உரிமை, முழு உரிமை, முக்கால் உரிமை என்று குடும்பம் என்பது ஒரு போராட்ட களமாக மாறிவிட்டது. 


இருந்தாலும், அன்பின் நீட்சி பற்றி வள்ளுவர் சொல்லி இருப்பதை அறிந்து கொள்வோம். அதை விட்டு நாம் எவ்வளவு தூரம் வந்து விட்டோம் என்று தெரியும். 


மீண்டும் அந்த அன்புப் பாதைக்கு செல்ல முயற்சி செய்யலாம். 





Friday, August 11, 2023

நாலடியார் - நட்பிற் பிழை பொறுத்தல் - கண் குத்திய கை

நாலடியார் - நட்பிற் பிழை பொறுத்தல் - கண் குத்திய கை 


நண்பர்களாக இருக்கும் சிலர், சில சமயம், நமக்கு துன்பம் தரும் ஒன்றைச் சொல்லியோ அல்லது செய்தோ விடலாம். 


என்ன செய்வது அப்போது?


அவர்கள் நட்பே வேண்டாம் என்று துண்டித்து விடலாமா? 


அல்லது 


நமக்கு எவ்வளவோ நன்மை செய்து இருக்கிறார்கள், இது ஒன்று சரி இல்லைதான் இருந்தாலும், அவர்களால் பின்னும் நன்மை வரக் கூடும் என்று நினைத்து பொறுத்துப் போவதா?


நாலடியார் சொல்கிறது, 


சில சமயம் நம் கை விரல் தெரியாமல் நம் கண்ணை குத்தி விடும். வலி உயிர் போகும். அதற்காக விரல் மேல் கோபித்து அதை வெட்டி எறிந்து விட முடியுமா? அப்படிச் செய்தால் அது புத்திசாலித்தனமா?  


என்று. 


பாடல்  


இன்னா செயினும், விடுதற்கு அரியாரைத்

துன்னாத் துறத்தல் தகுவதோ? துன்னு அருஞ்சீர்

விண் குத்தும் நீள் வரை வெற்ப!- களைபவோ,

கண் குத்திற்று என்று தம் கை?


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/08/blog-post_11.html


(pl click the above link to continue reading)


இன்னா செயினும் = (நமக்கு) துன்பம் தருவன செய்யினும் 


விடுதற்கு அரியாரைத் = விட முடியாதவரை, விடுவதற்கு கடினமானவரை 


துன்னாத் = கூடாமல், சேர்ந்து இருக்காமல் 


துறத்தல் = துறந்து விடுவது, விட்டு விடுவது 


 தகுவதோ? = சரியானதா?  (இல்லை) 


துன்னு  = நெருங்கிய, அடர்ந்த 


அருஞ்சீர் = அருமையான, அழகான, சிறப்பான 

விண் குத்தும் = வானத்தை குத்துவதைப் போல


நீள் = நீண்ட (மூங்கில் மரங்கள் நிறைந்த) 


வரை = மலை 


வெற்ப!- = தலைவனே 


களைபவோ = வெட்டி எடுத்து தூர எறிந்து விடுவோமா? 

,

கண் குத்திற்று = கண்ணை குத்திற்று 


என்று தம் கை? = என்று நம் கையை? 


சில சமயம் பல் நாக்கைக் கடித்து விடும். அதற்காக எல்லா பல்லையும் பிடுங்கி எறிந்து விட முடியுமா? 


நட்பு, உறவு என்றால் சில பல சிக்கல்கள் இருக்கத்தான் செய்யும். பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். அந்த பொறுமையில் பல நன்மைகள் உண்டு. 


கண்ணைக் குத்தியது என்று விரலை எடுத்து விடாமல் இருந்தால், அந்த விரலால் மேலும் பல பயன்கள் கிடைக்கும். நீக்கி விட்டால் நட்டம் நமக்குத்தான். 




Wednesday, August 9, 2023

திருக்குறள் - ஒப்புரவறிதல் - ஒரு முன்னோட்டம்

 திருக்குறள் - ஒப்புரவறிதல் - ஒரு முன்னோட்டம் 


திருக்குறள் மூன்று பகுதியாக பிரிக்கப்பட்டுள்ளது என்று நமக்குத் தெரியும். 


அறம், பொருள், இன்பம் என்று பிரிக்கப்பட்டுள்ளது. 


அதில் அறம் என்ற பகுதி - இல்லறம், துறவறம் என இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. 


நாம் இப்போது இல்லறத்தின் இறுதிப் பகுதிக்கு வந்து விட்டோம். 


இல்லறம் என்பது என்ன?


https://interestingtamilpoems.blogspot.com/2023/08/blog-post_9.html

(please click the above link to continue reading)


சுருக்கமாகச் சொன்னால் அன்பின் விரிவு. 


தனி மனிதனாக இருந்த ஒருவன் மனைவி, மக்கள், சுற்றம், நட்பு, சமுதாயம் என்று அவன் அன்பு விரிந்து கொண்டே போவதுதான் இல்லறம். 


துறவறமும் அதுதான். அது பற்றி பின் சிந்திப்போம். 


இல்லறத்தின் மூலம் விரியும் அன்பானது இல்லத்தைத் தாண்டி சமுதாயத்துக்குளும் பரவும். பரவ வேண்டும். 


அப்படி, தான் சார்ந்த ஒரு சமுதாயத்தின் மேல் அக்கறை உள்ள ஒருவன், அதன் மேல் அன்பு கொண்டு அந்த சமுதாயத்துக்கு செய்யும் நன்மைகள்தான் "ஒப்புரவு அறிதல்" என்று சொல்லப்படும். 


திருவள்ளுவர் ஒவ்வொரு அதிகாரத்துக்கும் தரும் தலைப்பே ஆயிரம் அர்த்தம் சொல்லும். 


முந்தைய அதிகாரம் "தீவினை அச்சம்". தீவினை செய்யாமை என்று வைத்து இருக்கலாம். அச்சம் என்று வைத்தார். 


இங்கே, ஒப்புரவு செய்தல் என்று வைத்து இருக்கலாம். ஆனால், ஒப்புரவு அறிதல் என்று வைத்து இருக்கிறார். 


காரணம் என்ன என்று நாம் எவ்வளவு சிந்தித்தாலும் புரியாது. 


பரிமேலழகர் விளக்குகிறார். 


"அஃதாவது உலக நடையினை அறிந்து செய்தல்.உலகநடை வேதநடை போல அறநூல்களுட் கூறப்படுவதன்றித் தாமே அறிந்து செய்யுந் தன்மைத்தாகலின் , ஒப்புரவு அறிதலென்றார்."


ஏதாவது புரிகிறதா?


என்ன சொல்ல வருகிறார் என்றால், உலகத்துக்கு இன்ன இன்னது தேவை என்று பட்டியல் போட்டு சொல்ல முடியாது. 


தெருவில் போகிறோம்.  இரவு நேரம். இருண்டு கிடக்கிறது. விபத்து நேரலாம். அல்லது சில கயவர்கள் ஏதேனும் செய்யலாம். அங்கு ஒரு விளக்கு போட உதவி செய்வது ஒப்புரவு அறிதல். இது ஏதேனும் நூலில் சொல்லி இருக்கிறதா என்றால் இல்லை. நீயே அறிந்து செய் என்கிறார். 


வேத நடை என்றால் வேதம் முதலிய அற நூல்களில் கூறி உள்ளது போல என்று அர்த்தம். அப்படி எல்லாவற்றையும் கூறிக் கொண்டு இருக்க முடியாது. நீயே அறிந்து செய். புத்தகத்தில் இல்லை, எனவே செய்ய மாட்டேன் என்று சொல்லாதே என்கிறார். 


இந்த ஒப்புரவு ஏன் செய்ய வேண்டும் என்றால், தான் வாழும் சமுதாயம் சிறக்க வேண்டும் என்று நினைத்து செய்வது.


எப்படி தன் குடும்பம் சிறக்க வேண்டும் என்று ஒருவன் நினைப்பானோ, அப்படியே தான் சார்ந்த சமுதாயத்தையும் தன் குடும்பமாக பாவித்து அதற்கும் உதவி செய்ய வேண்டும். 


இப்படி யோசித்துப் பாருங்கள்...ஒரு சமுதாயத்தில் உள்ள அனைவரும், அவர்களுடைய சமுதாயம் மேம்பட வேண்டும் என்று நினைத்து செயல்பட ஆரம்பித்தால் அந்த சமுதாயம் எப்படி இருக்கும். 


ஒரு மருத்துவர், நான் ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவம் செய்கிறேன் என்று ஆரம்பிக்கிறார். 


ஒரு ஆசிரியர், நான் ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக படிப்பு சொல்லித் தரப் போகிறேன் என்கிறார். 


ஒரு செல்வந்தர், இங்குள்ள எல்லோருக்கும், நான் இலவச உணவு அளிக்கப் போகிறேன் என்கிறார். 


இப்படி ஒவ்வொருவரும், சமுதாயம் சிறக்க பாடுபட்டால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். 


இல்லறம் என்பது நாலு சுவருக்குள் இருப்பது அல்ல. 


இனி, அதிகாரத்துக்குள் செல்வோமா....







Monday, August 7, 2023

நாலடியார் - நட்பிற் பிழை பொறுத்தல் - தீ

 நாலடியார் - நட்பிற் பிழை பொறுத்தல் - தீ 


தவறு செய்யாதவர் யார்? 


குறை இல்லாதவர் யார்?  


குறை இருக்கிறது, தவறு செய்து விட்டார்கள் என்று ஒருவரை நம் நட்பில் இருந்து விலக்கி விட்டால், அதனால் நட்டம் அடையப் போவது நாம் தான் என்கிறது நாலடியார். 


தீ சில சமயம் வீட்டையே எரித்து விடுகிறது. அதற்காக தீ வேண்டாம் என்று வைத்தால், எப்படி உணவு சமைப்பது? உண்பது? உயிர் வாழ்வது?


என்ன செய்வது, சில சமயம் வரம்பு மீறிப் போய் துன்பம் தந்து விடுகிறது. அதற்காக அது வேண்டாம் என்று ஒதுக்க முடியாது. 


அது போல, நண்பர்கள் சில சமயம் நமக்கு இன்னல் விளைவித்து விடலாம். பொறுத்துக் கொள்வது நமக்கு நன்மையே பயக்கும். 



பாடல் 


இன்னா செயினும், விடற்பாலர் அல்லாரைப்

பொன்னாகப் போற்றிக் கொளல் வேண்டும்-பொன்னொடு

நல் இல் சிதைத்த தீ நாள்தொறும் நாடித் தம்

இல்லத்தில் ஆக்குதலால்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/08/blog-post_7.html


(please click the above link to continue reading)


இன்னா செயினும் = துன்பம் செய்தாலும், இன்பம் அல்லாதவற்றைச் செய்தாலும் 


விடற்பாலர் = விட்டு விடுதற்கு உகந்தவர் 


அல்லாரைப் = அல்லாதவரை. அதாவது, விடக் கூடாதவர்களை 


பொன்னாகப் = தங்கத்தைப் போல் 


போற்றிக் = சிறப்பாக 


கொளல் வேண்டும் = கொள்ள வேண்டும். நட்புக் கொள்ள வேண்டும் 


பொன்னொடு = தங்கத்தோடு, மதிப்புள்ள பொருள்களோடு உள்ள 


நல் இல் = நல்ல வீட்டை 


சிதைத்த = நாசம் செய்த 


தீ = தீயானது 


நாள்தொறும் = ஒவ்வொரு நாளும் 


 நாடித் = விரும்பி 


தம் = நமது 


இல்லத்தில் = இல்லத்தில் 


ஆக்குதலால் = சோறு ஆக்குதலால் 


என்றோ ஒரு நாள், ஒரு விபத்து மூலமாக, ஒரு அசாதரண சூழ்நிலையில் தீ நமக்கு துன்பம் விளைவித்து விடலாம். அதனால் வரும் துன்பம் பெரியதுதான். இல்லை என்று சொல்வதற்கு இல்லை. ஆனால், அப்படி ஒரு துன்பம் தந்த தீ இனிமேல் என் வீட்டில் இருக்கக் கூடாது என்று யாராவது சொல்லுவார்களா?  தீ இல்லாமல் உணவு சமைக்க முடியாது. 


அது போல நண்பர்களும், சில சமயம் நமக்கு பெரிய தீங்கு செய்துவிட்டாலும், அதை ஒரு விபத்து என்றே எடுத்துக் கொண்டு, அவர்களை விட்டு விடக் கூடாது. 


அதற்காக எல்லா நண்பர்களையும், எல்லா சமயத்திலும் என்று சொல்லவில்லை. 


சில நண்பர்கள் இருப்பார்கள். அவர்கள் நமக்கு பல உதவிகள் செய்து இருப்பார்கள். நம் மேலும், நம் குடும்பத்தின் மேலும் மிகுந்த அக்கறை உள்ளாவர்களாக இருப்பார்கள். ஏதோ ஒரு தவிர்க்க முடியாத காரணத்தால், அவர்களின் ஒரு செயல் நமக்கு துன்பம் தந்து இருக்கலாம். அதற்காக அவர்களை விட்டு விடக் கூடாது. 


"விடற்பாலர் அல்லாரைப்"


விடற்பாலர் என்றால் விட்டு விட கூடியவர்கள் 


அல்லாரை என்றால் அப்படி விட முடியாதவர்களை.


நல்ல நண்பர்களை இழந்துவிடக் கூடாது, அவர்களால் ஏதேனும் சில சங்கடங்கள் வந்தாலும். 




Friday, August 4, 2023

திருக்குறள் - தீவினையச்சம் - தொகுப்புரை

திருக்குறள் - தீவினையச்சம் - தொகுப்புரை 


திருக்குறளும் அதன் உரையும் மிக கட்டுக் கோப்பாக எழுதப்பட்டுள்ளது. எப்படி இப்படி ஆராய்ந்து, ஒரு ஆற்றோட்டமான ஒரு ஒழுங்கில் எழுதி இருக்கிறார்கள். 


வாழ்க்கையை அறம், பொருள், இன்பம், வீடு என்று பிரித்துக் கொள்கிறார்கள். நாம் வாழ்வில் செய்யும் எந்த ஒரு காரியமும் இந்த நான்கில் ஒன்றில்தான் இருக்க முடியும். இதற்கு வெளியே எதுவும் கிடையாது. 


இதில் வீடு என்பது அறிவால் அறிய முடியாது, என்பதால் அதை விட்டு விட்டு மற்ற மூன்றையும் மூன்று பாலாக பிரித்துக் கொண்டு நூல் செய்தார். 


அதில்  அறம் என்பதை இல்லறம், துறவறம் என்று பிரித்துக் கொள்கிறார். 


முதலில் இல்லறத்தை பற்றி சொல்லத் தொடங்கி, ஒவ்வொரு அதிகாரமாக,ஒவ்வொரு அதிகாரமும் அது எப்படி அங்கு வந்தது, அதற்கு முன் உள்ள அதிகாரம் என்ன, அடுத்து வரும் அதிகாரம் என்ன என்று ஒரு ஒழுங்கில் எழுதினார். 


இதில், பரிமேலழகர் செய்த நுண்ணிய வேலை என்ன என்றால், ஒரு அதிகாரத்துக்குள் உள்ள பத்து குறள்களும் எப்படி அந்த வரிசையில் வந்தன, அதில் உள்ள உட்பிரிவுகள் என்னென்ன என்று விளக்கியது. 


நாம் தீவினையச்சம் என்ற அதிகாரம் பார்த்தோம். அதில் உள்ள குறள்கள் எப்படி தொகுக்கப்ட்டு இருக்கின்றன என்று நம்மால் புரிந்து கொள்ள முடியாது. பரிமேல் அழகர் அதை நமக்கு எடுத்துக் காட்டுகிறார். 


https://interestingtamilpoems.blogspot.com/2023/08/blog-post_4.html


(please click the above link to continue reading)


முதல் மூன்று குறள்கள் நாம் ஏன் தீவினைக்கு அஞ்ச வேண்டும் என்று கூறுகிறது என்கிறார். 


1. தீவினையார் அஞ்சார் விழுமியர் அஞ்சுவர்

தீவினை என்னும் செருக்கு.


2. தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படும்.


3. அறிவினுள் எல்லாம் தலைஎன்ப தீய

செறுவார்க்கும் செய்யா விடல்.


அடுத்து வரும் ஆறு பாடல்களில், தீவினை செய்தார்க்கு தீமை வந்து சேரும் என்று கூறுகிறார். 



4. மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்

அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு


5. இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்

இலன்ஆகும் மற்றும் பெயர்த்து.


6. தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால

தன்னை அடல்வேண்டா தான்


7. எனைப்பகை உற்றாரும் உய்வர் வினைப்பகை

வீயாது பின்சென்று அடும்.


8. தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை

வீயாது அடிஉறைந் தற்று.


9. தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்தொன்றும்

துன்னற்க தீவினைப் பால்


கடைசி ஒரு பாட்டில், தீவினை செய்யாமல் இருப்பவர்களுக்கு தீமை ஒன்றும் வராது என்றும் கூறினார் என்கிறார். 



10. அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்

தீவினை செய்யான் எனின்.


இதுவரை மன, மொழி, மெய்யால் தவிர்க்க வேண்டியவற்றை கூறினார். 


அடுத்து என்ன கூற வேண்டும் ?


செய்ய வேண்டாதவற்றை பற்றி கூறினார். 


இனி செய்யவேண்டியவற்றைப் பற்றி கூற உள்ளார். 


ஒப்புரவு அறிதல் பற்றி கூற இருக்கிறார். 


ஒப்புரவு அறிதல் என்றால் என்ன?


 



Page view 24 Lacs

 

My blog's page view crossed 24 Lacs.


Thank you all.



Thursday, August 3, 2023

கந்தரனுபூதி - எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே

  

கந்தரனுபூதி -   எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே 


(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 


உண்மை, மெய் ஞானம் என்று சொல்கிறீர்களே அது  என்ன?  அது என்ன என்று தெளிவாகச் சொன்னால் நாங்களும் அறிந்து கொள்ள முடியுமே? அதை சரி பார்க்க முடியுமே என்று பகுத்தறிவாளர்கள் கேட்கலாம். சொல்ல முடியாது என்றால் அது என்ன ஞானம் என்று கேலி செய்யலாம். 


பல விடயங்களை நம்மால் விவரித்துச் சொல்ல முடியாது. 


ரொம்ப தூரம் போவானேன். 


கற்கண்டின் சுவை எப்படி இருக்கும் ? எனக்கு விளக்கிச் சொல் என்றால் எப்படி சொல்லுவது?  கற்கண்டு இருக்கிறது. வாயில் போட்டால் இனிக்கிறது. அது உண்மைதான். சரி, சுவைத்தாய் அல்லவா, அது என்ன சுவை என்று சொல் என்றால் எப்படி சொல்லுவது. 


மல்லிகையின் மணம் எப்படி இருக்கும் சொல். அது ரோஜாவின் வாசனையில் இருந்து எவ்வாறு வேறுபட்டது சொல் என்றால் எப்படிச் சொல்லுவது?


கற்கண்டு எப்படி இருக்கும் என்றால் ஒரு துண்டு வாயில் போட்டால் தெரிந்து விடும். அனுபவம் இருந்தால் புரியும். சொல்லி விளங்க வைக்க முடியாது. 


அது போல இறை அனுபவமும், மெய் ஞானமும் அனுபவ பூர்வமாக அறிய முடியுமே அல்லாமல் படித்து அறிய முடியாது. 


அருணகிரிநாதர் சொல்கிறார்....


"இந்த உலக வாழ்க்கையில் அகப்பட்டு நான் செய்கின்ற செயல்கள் எல்லாம் ஆன்ம முன்னேற்றத்திற்கு உகந்தது அல்ல என்று முருகா நீ என்னை தடுதாட்கொண்டாய். அது மட்டும் அல்ல எனக்கு மெய்பொருளை உணர்வித்தாய். அப்படி குருவின் மூலம் அறிய வேண்டிய ஒன்றை மற்றவர்களுக்கு எப்படி விளங்கிச் சொல்ல முடியும்?" என்று


பாடல் 


செவ்வான்  உருவிற் றிகழ் வேலவன் அன் ( று ) 

ஒவ்வாததென உணர்வித்ததுதான் 

அவ்வாறு அறிவார் அறிகின்றதலால் 

எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே . 


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/08/blog-post_3.html


(pl click the above link to continue reading)



செவ்வான் = சிவந்த வானம், மாலை நேர வான போல்


உருவிற் = சிவந்த உருவம் 


றிகழ் = கொண்டு திகழ்கின்ற 


வேலவன் = வேலை உடைய முருகப் பெருமான் 


அன் ( று ) = அன்று ஒரு நாள் 

 

ஒவ்வாததென = ஒவ்வாது, சரி வராது என்று 


 உணர்வித்ததுதான் = உணர்வித்தான் 

 

அவ்வாறு = அவ்வாறு குருவால் உணர்விக்கப்பட்டால் 


அறிவார் = அறிந்து கொள்வார் 


 அறிகின்றதலால் = அறிய முடியுமே அல்லாது 

 

எவ்வாறு = வேறு எப்படி 


ஒருவர்க்கு = வேறு ஒருவருக்கு 


இசைவிப்பதுவே = விளங்க வைப்பது ?


இறைவன் அருணகிரிநாதற்கு "உணர்வித்தான்". சொல்லிக் கொடுக்கவில்லை.  உணரும் படி செய்தான். 


எனவேதான் ஆன்ம தேடல் என்பது தனி மனித அனுபவமாகவே இருக்கிறது. ஒருவர் போன வழியில் இன்னொருவர் போக முடியாது. 


திருநாவுக்கரசர் போன வழியில் மணிவாசகர் போகவில்லை.  அவரவர் அனுபவம் தனி. 


அருணகிரிநாதர் மலைக்கிறார். 


தனக்கு முருகன் உணர்வித்தான். அதை மற்றவர்களுக்கு எப்படி சொல்லுவது என்று தெரியாமல் திகைக்கிறார். 


கணிதத்தில் முனைவர் (Dr ) பட்டம் பெற்ற பெரிய அறிஞர் ஒருவர் இருக்கிறார். இரண்டாம் வகுப்பு பிள்ளைக்கு அவர் அறிந்த கணிதத்தை சொல்லிக் கொடுக்க முடியுமா?  அவருக்குத் தெரியும். அந்தக் குழந்தையால் புரிந்து கொள்ள முடியாது. 


அது வளர்ந்து, பக்குவப் பட வேண்டும். 


அதற்கு முன்னால் அது எவ்வளவு விருமினாலும், அதற்கு எவ்வளவு சொன்னாலும் ஒன்றும் புரியாது. 


ஆன்மா பக்குவப் படவேண்டும். இறைவன் அருள் வேண்டும். இரண்டும் நிகழ்ந்தால்தான் அந்த அனுபவம் கிட்டும். 


திருமூலர் அதை வேறு விதமாக சொல்லிக் காட்டுவார். 


தாய், தன் கணவனோடு அனுபவித்த சுகத்தை தன் சிறுவயது மகளுக்கு எப்படி சொல்லி விளங்கப் பண்ண முடியும்? அந்த சிறுபெண் வயதுக்கு வந்து, மனமும், உடலும் பக்குவப்பட்டால் அவளுக்கே அது என்ன என்று புரியும். 


முகத்தில் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்!

அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்!

மகட்குத் தாய்தன் மணாளனோடு ஆடிய

சுகத்தைச் சொல்என்றால் சொல்லுமாறு எங்ஙனே? (திருமந்திரம் 2944)




 [


மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html

மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html

மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html

மெய்யியல் - பகுதி 4

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html

மெய்யியல் - பகுதி 5 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html

மெய்யியல் - பகுதி 6 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html

மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html

நின்று தயங்குவதே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html

வள்ளி பதம் பணியும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html

விடுவாய் வினையா வையுமே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html

மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post.html

 பரிசென் றொழிவேன் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_7.html

எதிரப் படுவாய்

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_26.html

மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_11.html

அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_8.html

முருகன் கழல் பெற்று உய்வாய்

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_14.html

என்று அருள்வாய் ? 

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/1.html

பேராசை எனும் பிணியில் பிணிபட்டு

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_24.html

யாமோதிய கல்வியும் பாகம் 1 

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_29.html

 யாமோதிய கல்வியும் பாகம் 2

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_29.html

உதியா மரியா

https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post.html

மிடியென் றொரு பாவி

https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_12.html

உபதேசம் உணர்தியவா 

https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_18.html

கருதா மறவா

https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_23.html

வள்ளிபதம் பணியும்

https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_4.html

அடியைக் குறியா

https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_21.html

அருள் சேரவும் எண்ணுமதோ 

https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_26.html

அலையத் தகுமோ

https://interestingtamilpoems.blogspot.com/2023/04/blog-post.html

நினைந்திலையோ  

https://interestingtamilpoems.blogspot.com/2023/04/blog-post_29.html

மின்னே நிகர்வாழ்வை

https://interestingtamilpoems.blogspot.com/2023/05/blog-post_16.html

யானாகிய என்னை விழுங்கி 

]

Wednesday, August 2, 2023

திருக்குறள் - தீவினையச்சம் - அருங்கேடன் என்பது அறிக

 திருக்குறள் - தீவினையச்சம் -  அருங்கேடன் என்பது அறிக


ஒருவனுக்கு துன்பம் வருமா இல்லையா என்று துல்ல்லியமாக கூற முடியும். யாருக்குத் துன்பம் வரும், யாருக்கு துன்பம் வராது என்று கணிக்க முடியும். உங்களுக்கு எதிர்காலத்தில் துன்பம் வருமா என்று அறிய வேண்டுமா? மேலும், அந்தத் துன்பங்கள் வராமல் தடுக்க வேண்டுமா?


வள்ளுவர் வழி சொல்கிறார். 


"தீய வழிகளில் சென்று மற்றவர்களுக்கு ஒருவன் துன்பம் செய்யாமல் இருப்பான் என்றால் அவனுக்கு ஒருபோதும் துன்பம் வராது"


பாடல் 


அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்

தீவினை செய்யான் எனின்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/08/blog-post_2.html


(please click the above link to continue reading)



அருங்கேடன் = அருமை + கேட்டினை உடையவன் 


என்பது = என்று 


அறிக = அறிந்து கொள்க 


 மருங்கோடித் = தவறான வழியில் சென்று 


தீவினை = தீய வினைகளை 


செய்யான் = செய்யாதவன் 


எனின் = என்றால் 


அருங்கேடன்  என்றால் என்ன?  ஒரு பொருள் அருமையானது என்றாது கிடைப்பதற்கு அரிதானது என்று பொருள். ஒருவன் அருங்கேடன் என்றால் அவனுக்கு கெடுதல் அரிதாக வரும். அதாவது வராது என்று பொருள். 


எப்போது வராது என்றால் 


மருங்கோடி தீயன செய்யான் எனில். 


மருங்கு என்றால் பக்கம். ஒரு பக்கமாகச் சென்று. அதாவது, அற வழி என்ற நேர் வழியை விட்டு, வேறு பக்கம் சென்று, மற்றவர்களுக்கு தீமை செய்யாமல் இருப்பான் என்றால், அவனுக்கு ஒருக் காலும் தீமை வராது என்கிறார். 


இந்த மருங்கு என்ற சொல் பல இடங்களில் பல விட அர்த்தங்களில் சொல்லப் பட்டு இருக்கிறது. 


பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்

மருங்குடையார் மாநிலத்து இல்


என்ற திருக்குறளில் மருங்கு என்பது சுற்றத்தார் என்ற பொருளில் வந்துள்ளது. 


செல்வர்யாம் என்று செல்வுழி எண்ணாத

புல்லறி வாளர் பெருஞ்செல்வம் - எல்லில்

கருங்கொண்மூ வாய்திறந்த மின்னுப்போல் தோன்றி

மருங்கறக் கெட்டு விடும்


என்ற நாலடியாரில், மருங்கு என்ற சொல் அடையாளம் என்ற பொருளில் வந்துள்ளது. மின்னல் போல் செல்வம் அடையாளம் இல்லாமல் சென்று விடும் என்ற அர்த்தத்தில். 


சின்னஞ்சிறிய மருங்கினில் சாத்திய செய்யப்படும்.

பென்னம் பெரிய முலையும் முத்தாரமும் பிச்சிமொய்த்த

கன்னங்கரிய குழலும் கண்மூன்றும் கருத்தில் வைத்துத்

தன்னந்தனியிருப்பாக்கு இதுபோலும் தவம் இல்லையே


என்ற அபிராமி அந்தாதியில் மருங்கு என்பது வயிறு, அல்லது இடை என்ற பொருளில் வந்துள்ளது. 


அது ஒரு சுவாரசியமான வார்த்தை. 


எப்படி ஒரு சொல் சம்பந்தமே இல்லாத வெவேறு பொருள் கொள்கிறது?


சிந்தித்துப் பார்த்தால் அடிநாதமாக உள்ள பொருள் விளங்கும்.


மருங்கு என்றால் பக்கம் என்று பார்த்தோம். 


உடம்பின் இரண்டு பக்கமும் இருப்பது இடுப்பு. எனவே மருங்கு, இடுப்பு என்ற பொருள் கொண்டது. 


அக்கம் பக்கம் இருப்பவர் சுற்றத்தார். எப்போதும் நமக்கு பக்கத்தில் இருப்பவர்கள் சுற்றத்தார். நம்மை விட்டுப் போய் விட மாட்டார்கள். எனவே, மருங்குடையார் என்று அவர்கள் அழைக்கபடுகிரார்கள். 


செல்வம் எப்போதும் நம் பக்கம் இருக்காது. இன்று நம் பக்கம் இருக்கும், நாளை வேறொருவர் பக்கம் போய் விடும். எப்ப எந்தப் பக்கம் இருக்கும் என்று தெரியாததால் அதை மருங்கற கெட்டு விடும் என்கிறது நாலடியார். 





Tuesday, August 1, 2023

நாலடியார் - நட்பிற் பிழைபொறுத்தல் - தாம் வேண்டிக் கொண்டார் நட்பு

 நாலடியார் - நட்பிற் பிழைபொறுத்தல் - தாம் வேண்டிக் கொண்டார் நட்பு


வயக்காட்டில் நீர் பாய்ச்சுவார்கள். ஓடை வழி வரும் அந்த நீர் சில சமயம் அந்த ஓடையின் கரையை உடைத்துக் கொண்டு வெளியே செல்லும்.  சில சமயம் வயலுக்கு பாய்ச்சிய நீர், வரப்பில் எங்கேனும் விரிசல் இருந்தால் அந்த வழியாக வெளியே ஓடிவிடும். 


நீர் இப்படி வெளியே போகிறதே என்று கோபித்துக் கொண்டு, யாரும் மீண்டும் கரையையோ, வரப்பையோ எடுத்துக் கட்டாமல் இருக்க மாட்டார்கள். அது எத்தனை தரம் உடைந்தாலும், அத்தனை தரமும் சரி செய்வார்கள். 


அது போல, ஆராய்ந்து நட்பு கொண்டவர்கள், நண்பர்கள் எத்தனை முறை பிழை செய்தாலும், அவர்களை மீண்டும் மீண்டும் சேர்த்துக் கொள்வார்கள். 


பாடல் 


செறுத்தோறு உடைப்பினும், செம் புனலோடு ஊடார்,

மறுத்தும் சிறைசெய்வர், நீர் நசைஇ வாழ்நர்;-

வெறுப்ப வெறுப்பச் செயினும், பொறுப்பரே,

தாம் வேண்டிக் கொண்டார் தொடர்பு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/08/blog-post.html


(please click the above link to continue reading)



செறுத்தோறு = செறுத்தல் என்றால் அடக்குதல், தடுத்தல் என்று பொருள். இங்கே, ஒவ்வொரு முறையும் கரையை  


 உடைப்பினும் = உடைத்துக் கொண்டு வெளியே சென்றாலும் 


செம் புனலோடு = செம்மையான நீரோடு (சிறந்த நீரோடு) 


ஊடார் = யாரும் கோபம் கொள்ள மாட்டார்கள் 


மறுத்தும் = மீண்டும் 


 சிறைசெய்வர் = அணை கட்டுவார்கள் வரப்பை எடுத்துக் கட்டுவார்கள். 


நீர் = தண்ணீரை 


நசைஇ வாழ்நர் = விரும்பி, அண்டி வாழ்பவர்கள் 


வெறுப்ப வெறுப்பச் = மீண்டும் மீண்டும் வெறுக்கத் தக்க செயல்களை 


 செயினும் = செய்தாலும் 


பொறுப்பரே = பொறுத்துக் கொள்வார்களே 


தாம் = அவர்களே 


வேண்டிக்  = விரும்பி 


கொண்டார் தொடர்பு = கொண்டவர்களின் தொடர்பை 


நண்பர்கள் தவறு செய்வார்கள். நாம் விரும்பாத காரியங்களை செய்வார்கள்.  அதற்காக அவர்களை விட்டு விட முடியாது. 


இது உறவுக்கும் பொருந்தும். 


புதிதாக வரும் உறவுகள் சில சிக்கலாக இருக்கும். சகித்துக் கொள்ளத்தான் வேண்டும். வெட்டி விட முடியாது. 


நட்பு, உறவு என்றால் சில சமயம் அப்படித்தான் இருக்கும். சேர்த்து அணைத்துக் கொண்டு போக வேண்டும்.