Tuesday, May 16, 2023

கந்தரனுபூதி - மின்னே நிகர்வாழ்வை

                            

 கந்தரனுபூதி -   மின்னே நிகர்வாழ்வை


(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 


வாழ்க்கை நிரந்தரமானது அல்ல, செல்வம், இளமை என்பனவும் நிரந்தரம் அல்ல. 


இதெல்லாம் நமக்குத் தெரியும். 


இருந்தும் ஏதோ கற்ப கோடி ஆண்டுகள் வாழப் போவது போல சொத்து சேர்க்கிறோம், சண்டை பிடிக்கிறோம், நான் , எனது என்று இறுமாக்கிறோம்.  



மரணம் எப்பவும் வரலாம் என்று தெரிந்தும் ஏன் இவ்வளவு சிக்கல்? 


அருணகிரிநாதர் சொல்கிறார், 


"எல்லாம் விதியின் பயன்". 


அறிவு இருந்தாலும், வேலை செய்யாது. 


எத்தனை ஆயிரம் புத்தகம் படித்தாலும், எத்தனை ஆயிரம் சொற்பொழிவுகள் கேட்டாலும், எவ்வளவு ப்ளாகுகள் வாசித்தாலும்,  புரிந்தாலும் நடை முறை படுத்த முடியாது. 


காரணம், கொண்டுவந்த விதி. 



"காதற்ற ஊசியும் வாராது காண் நும் கடை வழிக்கே" 


என்ற ஒரு வாக்கியத்தைப் படித்தவுடன் ஞானம் வந்து துறவி ஆனார் பட்டினத்தார். 


நாமும்தான் வாசிக்கிறோம். விட முடிகிறதா? 


காரணம் அவர் விதி வேறு, நம் விதி வேறு. 


அது ஒரு புறம் இருக்கட்டும். 


சிறு வயதில் பல board game கள் விளையாடி இருப்போம். 


பலவற்றில் இராஜா, இராணி, குதிரை, பணம், வீடு என்றெல்லாம் பொம்மைகள், காகிதங்கள் இருக்கும். பிள்ளைப் பருவத்தில்  அவற்றை நிஜம் என்று எடுத்துக் கொண்டு தீவிரமாக விளையாடுவோம். 


அந்த விளையாட்டில் இருக்கும் பணம் உண்மையான பணம் அல்ல. 


அது போல, 


பெரியவர்கள் ஆன பின், பல உலோகங்களை வாங்கி வைத்துக் கொண்டு இது தங்கம், இது வெள்ளி என்றும் சில பல கற்களை  எடுத்து வைத்துக் கொண்டு இது வைரம், அது வைடூரியம் என்று கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம். 


எது உண்மையான தங்கம், வைரம், பொருள் எல்லாம்?


அருணகிரிநாதர் சொல்கிறார். 



பாடல் 



மின்னே நிகர்வாழ்வை விரும்பியயா 

னென்னே விதியின் பயனிங்கிதுவோ 

பொன்னே மணியே பொருளே அருளே 

மன்னே மயிலேறிய வானவனே 


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/05/blog-post_16.html


(pl click the above link to continue reading)



மின்னே = மின்னலுக்கு 


நிகர் = நிகரான 


வாழ்வை = வாழ்க்கையை 


விரும்பிய = விருப்பப்பட்ட 


யான் = நான் 


என்னே = என்ன ஆச்சரியம் 


விதியின் பயனிங்கிதுவோ = விதியின் பயன் இதுதானா ?

 


பொன்னே  = பொன்னே 


மணியே = மணியே 


பொருளே = பொருளே 


அருளே = அருள் வடிவானவனே 

 


மன்னே = என்றும் நிலைத்து இருப்பவனே 


மயிலேறிய வானவனே = மயில் மேல் ஏறிய உயர்ந்தவனே  


பொன்னும், மணியும், பொருளும், அருளும் இறைவன் தானே அன்றி நாம் நினைக்கும் இந்த உலோகங்கள் அல்ல.


அது ஏன் தெரிய மாட்டேன் என்கிறது. 


அஞ்ஞானம். 


அதற்குக் காரணம், விதி. 


விதி மதியை மறைக்கும். 


இருக்கின்ற கொஞ்ச வாழ் நாளை  இந்த நிலையில்லா வாழ்வை நிலைப் படுத்தவும், அர்த்தமில்லா செல்வங்களை சேர்க்கவும் நாம்   வீணடிக்கக் காரணம் நம் விதி 


 [

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


மெய்யியல் - பகுதி 4


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


மெய்யியல் - பகுதி 5 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html


மெய்யியல் - பகுதி 6 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html


மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html


நின்று தயங்குவதே 


https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html


வள்ளி பதம் பணியும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html


விடுவாய் வினையா வையுமே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post.html


 பரிசென் றொழிவேன் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_7.html



எதிரப் படுவாய்


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா


https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_11.html


அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ



https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_8.html


முருகன் கழல் பெற்று உய்வாய்

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_14.html


என்று அருள்வாய் ? 



பேராசை எனும் பிணியில் பிணிபட்டு






யாமோதிய கல்வியும் பாகம் 1 

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_29.html


 யாமோதிய கல்வியும் பாகம் 2


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_29.html


உதியா மரியா


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post.html


மிடியென் றொரு பாவி

https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_12.html


உபதேசம் உணர்தியவா 


]




No comments:

Post a Comment