Showing posts with label கைநிலை. Show all posts
Showing posts with label கைநிலை. Show all posts

Thursday, November 29, 2012

கைநிலை - ஆசையில் தேம்பும் நெஞ்சு


கைநிலை - ஆசையில் தேம்பும் நெஞ்சு 


ஒரு பெரிய மலை. அந்த   மலையையை சுற்றி உள்ள சிறு சிறு பள்ளங்களில் நீர் நிறைந்து இருக்கிறது. அந்த மலையின் அடிவாரத்தில் அடர்ந்த காடு. காட்டில் நிறைய பழ மரங்கள். பழ மரங்களில் பழங்களை பறித்து தின்று தாவி விளையாடும் குரங்குகள்.   அந்த மலையில் இருந்து விழும் அருவி. விழுந்த அருவியில் இருந்து வரும் புது நீர், அங்குள்ள பள்ளங்களில், சுனைகளில் தேங்கி இருக்கும் பழைய நீரோடு கலந்து வெளியேறும். அருவியில் இருந்து நீர் விழும் போது அதோடு சில கனிகளும் சேர்ந்து விழும். இந்த குரங்குகள் அந்த கனிகளை உண்ண ஒன்றோடு ஒன்று சண்டையிட்டு கொள்ளும். பின் சினம் ஆறி அந்த கனிகளை உண்ணும். அருவி வரும் அந்த ஊரைச் சேர்ந்தவன் என் காதலன். அவனைக் காண என் மனம் ஆசையில் தேம்புகிறது. 

பாடல்