Friday, November 26, 2021

திருவாசகம் - யாத்திரைப் பத்து

 திருவாசகம் - யாத்திரைப் பத்து 


எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்? 


ஏதாவது இலக்கு இருக்கிறதா? இந்த நேரத்தில், இந்த இடத்துக்குப் போக வேண்டும் என்று ஏதேனும் குறிக்கோள் இருக்கிறதா? 


ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திசையில் பயணிக்கிறோம். 


எங்கு போவது என்றும் தெரியாது. எப்படி போவது என்றும் தெரியாது. 


சரி, போகலாம், போகிற வழியில் யாரையாவது விசாரித்துக் கொள்ளலாம் என்றால் கிளம்ப வேண்டுமே. 


எல்லாம் போட்டது போட்டபடி இருக்கிறது. எல்லாவற்றையும் ஒரு ஒழுங்கு பண்ணி வைத்துவிட்டு தானே கிளம்ப முடியும். 


இருக்கிற வீட்டை விட்டு கிளம்புவது என்றாலே gas ஐ மூடினோமா, மின்சாரத்தை ஆப் செய்தோமா, குழாய் எல்லாம் சரியாக அடைத்தோமா, ஜன்னல் எல்லாம் சரியாக சாத்தினோமா என்று ஆயிரம் யோசனை இருக்கிறது. 


இந்த உலகை விட்டு இறைவனை நோக்கிய பயணம் என்றால் எவ்வளவு செய்ய வேண்டும். 


மனைவி/கணவன், பெற்றோர், பிள்ளைகள், பேரப் பிள்ளைகள், மகன்/மகள், மருமகன், மருமகள், இன்னும் பார்க்க வேண்டிய இடங்கள், அனுபவிக்க வேண்டிய விஷயங்கள் என்று எவ்வளவு இருக்கிறது. 


இதை எல்லாம் முடித்துவிட்டு கிளம்புவது என்றால், எப்போது கிளம்புவது? 


அலை எப்ப ஓய , தலை எப்ப முழுக?


மணிவாசகர் சொல்கிறார், "இப்ப...இப்பவே கிளம்புங்கள்" என்று. 


ஆன்ம தேடல் வந்து விட்டால், சித்தார்த்தன் மாதிரி, பட்டினத்தார் மாதிரி துண்டை உதறி தோளில் போட்டுகொண்டு கிளம்பி விடவேண்டும். 


எல்லாம் முடித்துவிட்டு கிளம்புகிறேன் என்றால் அது ஒரு காலத்திலும் நடக்காது. 


பாடல் 


பூ ஆர் சென்னி மன்னன், எம் புயங்கப் பெருமான், சிறியோமை

ஓவாது உள்ளம் கலந்து, உணர்வு ஆய் உருக்கும் வெள்ளக் கருணையினால்,

`ஆ! ஆ!' என்னப் பட்டு, அன்பு ஆய் ஆட்பட்டீர், வந்து ஒருப்படுமின்;

போவோம்; காலம் வந்தது காண்; பொய் விட்டு, உடையான் கழல் புகவே.



பொருள் 



(Please click the above link to continue reading)


பூ ஆர் சென்னி  = பூக்கள் நிறைந்த தலை 


மன்னன் =எங்கள் மன்னன் 


எம் புயங்கப் பெருமான் = பாம்பை அணிந்த எங்கள் பெருமான் 


சிறியோமை = சிறியவர்களான எங்களை 


ஓவாது உள்ளம் கலந்து  = ஓவுதல் என்றால் நீக்குதல். ஓவாது என்றால் நீங்காமல் எம் உள்ளத்தில் கலந்து 


உணர்வு ஆய் = உணர்வாகி 


உருக்கும் வெள்ளக் கருணையினால், = வெள்ளம் போல் வரும் கருணையினால் நம்மை உருக்கி 


`ஆ! ஆ!' என்னப் பட்டு = அடா என்று ஆச்சரியப் பட்டு 


அன்பு ஆய் ஆட்பட்டீர் = அன்பு உருவமாய் ஆட் கொள்ளப் பட்டீர் 


வந்து ஒருப்படுமின்; = வந்து ஒன்றாகக் கூடுங்கள் 


போவோம் = போகலாம் 


காலம் வந்தது காண் = போக இதுதான் சரியான காலம் 


பொய் விட்டு = பொய்யான இந்த உலகை விட்டு 


உடையான் கழல் புகவே. = அனைத்தும் உடையவன் திருவடிகளை அடைய 


Travel Agent மாதிரி மணிவாசகர் எல்லோரையும் அழைக்கிறார். 


வண்டி எடுக்கப் போறோம். சீக்கிரம் வாங்க என்று அறை கூவி அழைக்கிறார். 


"போவோம், காலம் வந்தது காண்" என்கிறார். 


இதுதான் காலம். 


இந்த உலகில் எதையும் நாம் சரி செய்து வைத்துவிட்டுப் போக முடியாது. 


நமக்கு முன் இந்த உலகம் இருந்தது. 


நமக்கு பின்னும் இருக்கும். 


நாம் ஒழுங்கு படுத்தாவிட்டால் ஒன்றும் கெட்டுப் போய் விடாது. 


யாத்திரைக்கு அழைக்கிறார் மணிவாசகர். 




Thursday, November 25, 2021

திருவிளையாடற் புராணம் - பண்டை பழவினை மாற்றுவார் யார் ?

 திருவிளையாடற் புராணம் - பண்டை பழவினை மாற்றுவார் யார் ?


பாண்டிய மன்னன் குதிரை வாங்கி வரும்படி சொல்லி மாணிக்கவாசகரிடம் பொன் கொடுத்து அனுப்பினான். மணிவாசகரோ, குதிரை வாங்காமல் அந்தப் பணத்தில் சிவனுக்கு கோவில் கட்டினார்.


என்னதான் பக்திமானாக இருந்தாலும், மற்றவர் பணத்தை எடுத்து இறை காரியம் செய்யலாமா? நாளை மற்றவர்களும் அப்படிச் செய்யலாம் அல்லவா? மாணிக்கவாசகரே செய்தார், நான் செய்தால் தப்பா என்று ஆளாளுக்கு ஆரம்பித்து விட்டால்? 


அப்படி செய்ததற்கு மணிவாசகர் தண்டனை பெற்றார். அது வேறு விடயம்.


அது ஒரு புறம் இருக்கட்டும். 


மணிவாசகரின் நண்பர்கள் அவரிடம் "இப்படி மன்னன் கொடுத்த பணத்தில்திருப்பணி செய்து விட்டீரே, மன்னன் குதிரை எங்கே கேட்டு, உண்மை அறிந்து உம்மை தண்டித்தால் என்ன செய்யப் போகிறீர்" என்று கேட்டார்கள். 


அதற்கு அவர் 


"இன்றே இறந்தாலும், சரி. அல்லது நீண்ட நாள் இருக்க வேண்டி இருந்தாலும் சரி. அரசன் கோபித்தாலும் சரி. அல்லது பாராட்டினாலும் சரி. சுவர்க்கம் போனாலும் சரி. அல்லது நரகமே ஆனாலும் சரி. என்ன ஆனாலும் சரி, சிவனை மறக்க மாட்டேன். நடப்பது எல்லாம் விதிப் பயன். அதை யாராலும் மாற்ற முடியாது"


என்று கூறினார். 


பாடல் 


இறக்கினு மின்றே யிறக்குக வென்று மிருக்கினு மிருக்குக வேந்தன்

ஒறுக்கினு மொறுக்க வுவகையு முடனே யூட்டினு மூட்டுக வானிற்

சிறக்கினுஞ் சிறக்க கொடியதீ நரகிற் சேரினுஞ் சேருக சிவனை

மறக்கிலம் பண்டைப் பழவினை விளைந்தான் மாற்றுவார் யாரென

                                            மறுத்தார்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/11/blog-post_25.html



(pl click the above link to continue reading)



இறக்கினு மின்றே யிறக்குக = இறக்கினும் இன்றே இறக்குக 


வென்று மிருக்கினு மிருக்குக = என்றும் இருக்க வேண்டும் என்றாலும் இருப்போம் 


 வேந்தன் = அரசன் 


ஒறுக்கினு மொறுக்க = கோபித்தால் கோபித்து கொள்ளட்டும் 


வுவகையு முடனே யூட்டினு மூட்டுக = அல்லது உவகையுடன் உபசரித்தாலும் உபசரிகட்டும் 


வானிற் = மேலுலகில் 


சிறக்கினுஞ் சிறக்க = சிறப்பாக சொர்க்கத்தில் இருந்தால் சந்தோஷமாக இருப்போம் 


கொடியதீ நரகிற் சேரினுஞ் சேருக = அல்லது கொடிய தீ நரகத்தில் கிடந்து துன்பப் பட வேண்டி இருந்தால் துன்பப் படுவோம் 


 சிவனை மறக்கிலம் = என்ன ஆனாலும் சரி, சிவனை மறக்க மாட்டோம் 


 பண்டைப்  = முந்தைய 


பழவினை = பழுத்த வினைகள் 


விளைந்தான் = வந்து விளைந்தால் 


 மாற்றுவார் யாரென மறுத்தார். = அதை மறுத்து யாரால் மாற்ற முடியும் 


அதெல்லாம் சரி, மாணிக்கவாசகர் அப்படி இருந்தார். அதுக்கு என்ன இப்ப? நாம அவர் போல இருக்க முடியுமா? அப்படி இருந்தால் நாமும் மணிவாசகராகி விடமாட்டோமா? இதெல்லாம் நடக்கிற காரியமா?


அப்படி அல்ல.


வாழ்வில், நாம் நினைக்கிறோம் எல்லாம் நம் சாமர்த்தியத்தில், நம் அறிவுத் திறனில், நம் உழைப்பில் நிகழ்கிறது என்று. நம்மால் எதையும் செய்ய முடியும் என்று நினைக்கிறோம். 


அப்படி நடந்தால் "பார்த்தாயா என் சமத்தை" என்று மார் தட்டுகிறோம். 


அப்படி நடக்கவில்லை என்றால்  மனமொடிந்து போகிறோம். 


இது போன்ற இலக்கியங்கள் நமக்கு ஒரு சமநிலையைத் தருகின்றன.


வெற்றியில் ஆடாதே. தோல்வியில் துவண்டு விடாதே.


எல்லாம் முன் செய்த வினை என்று இரு. இனி வரும் நாட்கள் நல்லவையாக இருக்க வேண்டும் என்றால்,இப்போது நல்லது செய்து கொண்டிரு என்று சொல்கின்றன. 


வாழ்க்கை என்றால் இன்ப துன்பம் இரண்டும் இருக்கும். 


ரொம்ப அல்லாட வேண்டாம். நிதானமாக இருப்போம் என்று நமக்கு அறிவுறுத்துகின்றன. 





Wednesday, November 24, 2021

திருக்குறள் - அன்புடைமைக்குப் பின்

 திருக்குறள் - அன்புடைமைக்குப் பின் 


திருக்குறளின் அதிகார முறைமையே நம்மை பிரமிக்க வைக்கும். 


முதலில் இந்த உலகைப் படைத்த கடவுளுக்கு கடவுள் வாழ்த்துச் சொன்னார். 


அடுத்தது, 


படைத்த உலகத்தை காக்க வேண்டி இறைவன் அளிக்கும் கொடையான மழையைப் போற்றி வான் சிறப்பு பற்றி கூறினார். 


உலகம் வந்தாகி விட்டது, மழையால் அது நிலை பெற்று விட்டது, இந்த உலகில், அதில் உள்ள இயற்கையின் இரகசியங்களை அறிந்து சொல்லும் நீத்தார் பெருமை பற்றி கூறினார். 


அடுத்தது, 


அவர் சொல்லும் அறங்களின் பெருமை பற்றி அறன் வலியுறுத்தல் என்ற அதிகாரத்தை வைத்தார்.


அடுத்தது, அறம் என்பது இல்லறம், துறவறம் என்று இரண்டாகப் பிரியும். எனவே இல்லறம் பற்றி சொல்ல மேற்கொண்டு இல்வாழ்க்கை என்ற அதிகாரம் செய்தார். 


அடுத்தது, அந்த இல்லறம் சிறக்க வேண்டும் என்றால், ஒரு பெண்ணின் துணை வேண்டும். எனவே, "வாழ்க்கை துணை நலம்" பற்றி கூறினார். 


அடுத்தது, திருமணம் செய்து கொண்டு, மனைவியோடு இல்லறம் நடத்தும் போது அன்பின் விரிவாக்கம் நிகழும். அதன் அடுத்த கட்டமாக "புதல்வர்களைப் பெறுதல்" பற்றி கூறினார். 


அடுத்தது, மனைவி, பிள்ளைகள் என்று ஆகி விட்டது. அந்த இல்லறம் சிறக்க வேண்டும் என்றால் அங்கு அன்பு பெருக வேண்டும். எனவே, "அன்புடைமை" பற்றி கூறினார். 


அடுத்து என்னவாக இருக்கும் ?


கணவன், மனைவி, பிள்ளைகள், அன்பு செய்யும் இல்லறம் என்று ஆகி விட்டது. 


அடுத்து என்ன? 


இல்லறம் விரிய வேண்டும். தன் வீட்டை கடந்தும் அன்பு பெருக வேண்டும், அதற்காக 


https://interestingtamilpoems.blogspot.com/2021/11/blog-post_24.html


Please click the above link to continue reading



"விருந்தோம்பல்" 


பற்றி கூறப் போகிறார். 


வீடு என்று ஒன்று இருந்தால்,  நாலு பேர் வந்து போக வேண்டும். 


நான், என் மனைவி, என் பிள்ளை என்று இருக்க முடியுமா?  சுற்றம் சூழ இருக்க வேண்டாமா?


எப்படி விருந்தை போற்றுவது என்று கூற இருக்கிறார். 


விருந்தை போற்றுவதை ஒரு அறமாகச் சொன்னது நம் மொழியாகத்தான் மட்டும் இருக்கும். 


விருந்தை எல்லோரும் உபசரிப்பார்கள்.  ஆனால், அதை தர்மமாக, அறமாகச் சொன்னது நம் நாட்டுக்கே உரிய பண்பாடு, கலாசாரம். 


விருந்தினர்களை தெய்வத்துக்கு இணையாக வைத்து போற்றியது நம் நாடு. 


அதிதி தேவோ பவா 


என்று போற்றியது நம் நாடு. 


விருந்தோம்பலில் உச்சம் தொட்டு காட்டுவார் வள்ளுவர். 


விருந்தோம்பல் பற்றி இனி வரும் நாட்களில் சிந்திப்போம். 




Tuesday, November 23, 2021

அபிராமி அந்தாதி - எங்கோன் சடைமேல்வைத்த தாமரையே

 அபிராமி அந்தாதி - எங்கோன் சடைமேல்வைத்த தாமரையே


பயமாக இருந்தால் இன்னொருத்தர் கையை பிடித்துக் கொண்டால் பயம் போய்விடுகிறது, அல்லது குறைந்து விடுகிறது. அக்கம் பக்கம் யாரும் இல்லாவிட்டாலும், இருக்கும் இருக்கையின் கைப் பிடியை இறுகப் பற்றிக் கொள்கிறோம் அல்லவா? 


அன்பை வெளிப்படுத்த கை குலுக்குகிறோம்.


மனைவி/கணவன் மேல் அன்பு மேலீட்டால் அவர்கள் கையைப் பற்றிக் கொள்கிறோம். 


சில சமயம், காலையும் பற்றிக் கொள்ளலாம். பாதத்தை பற்றிக் கொல்வதும் ஒரு சுகம் தான். 


சிவனுக்கு குறை வந்தால், அபிராமியின் பாதங்களைப் பற்றி தன் தலை மேல் வைத்துக் கொள்வாராம். 


இதில் யார் பெரியவர், சிறியவர் என்பதல்ல கேள்வி. 


அளவு கடந்த பாசம். காதல். 


தலை மேல் வைத்துக் கொல்வதற்கு முன், அந்த சிவந்த பாதங்களை தொட்டு தன் மடி மேல் வைத்து இருப்பார். அதை மென்மையாக வருடி கொடுத்து இருப்பார். (பாகு கனி மொழி, மாது குற மகள் பாதம் வருடிய மணவாளா என்று முருகனைப் பற்றிச் சொல்வார் அருணகிரி), அந்தப் பாதங்களுக்கு முத்தம் தந்திருப்பார். இன்னும் இன்னும் காதல் ஏற, அந்தப் பாதங்களை தன் தலை மேல் வைத்து இருப்பார். 


இதை என்னவென்று சொல்லுவது? 


பக்தியை கடந்த, அன்யோன்யம். நெருக்கம். உருக்கம். 


அவள் பாதத்தை தூக்கி தலை மேல் வைத்தவுடன் அவருக்கு அவருடைய குறை எல்லாம் தீர்ந்த மாதிரி இருந்ததாம். 


பாடல் 


என்குறை தீரநின்று ஏத்துகின்றேன்; இனி யான் பிறக்கின்

நின்குறையே அன்றி யார் குறை காண்; இரு நீள்விசும்பின்

மின்குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியலாய்?

தன்குறை தீர எங்கோன் சடைமேல்வைத்த தாமரையே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/11/blog-post_23.html


Please click the above link to continue reading




என்குறை தீர = என்னுடைய குறைகள் தீர வேண்டி 


நின்று =உன் முன் நின்று 


ஏத்துகின்றேன் = உன்னைப் போற்றுகின்றேன் 


இனி யான் பிறக்கின் = இனிமேல் நான் பிறவி எடுத்தால் 


நின்குறையே அன்றி = அது உன் குறை.  உன் பக்தனுக்கு நீ முக்தி தராவிட்டால் அது உன் தப்புத்தான் 


யார் குறை காண் = வேற யாருடைய குறை? 


இரு நீள்விசும்பின் = இருண்ட நீண்ட வானத்தில் 


மின்குறை காட்டி = பளிச்சென்று குறைந்த நேரம் காட்டி மறைந்து விடும் மின்னலைப் போல 


மெலிகின்ற நேரிடை = மெலிந்த நேர்த்தியான இடையை உடையவளே 


மெல்லியலாய் = மென்மையானவளே 


தன்குறை தீர = தன்னுடைய குறைகள் தீர 


எங்கோன் = எங்கள் தலைவர் சிவ பெருமான் 


சடைமேல்வைத்த = தன்னுடைய தலைமேல் வைத்துக்கொண்ட 


தாமரையே.  = தாமரை போன்ற சிவந்த பாதங்களை உடையவளே 


அனுபவம் இருந்தால் அன்றிப்  புரியாது. 


"நின் பாதம் எனும் வாசக் கமலம் தலை மேல் வலிய வைத்து ஆட்கொண்ட நேசத்தை என் சொல்வேன்" 


என்பார் பட்டர்.


அபிராமி அந்தாதி படித்தால் பாட்டை விட்டுவிடவேண்டும்.  அவர் காட்டும் அந்த நிகழ்வுக்குப் போய் விட வேண்டும். அந்த மன நிலையைப் பற்றிக் கொள்ள வேண்டும். 


மற்ற பாடல்கள் போல் சொல்லுக்கு பொருள் சொல்லி புரிந்து கொள்ளும் பாடல்கள் அல்ல அவை. 


கற்கண்டு எப்படி இருக்கும் என்று எப்படி சொல்லி விளங்க வைப்பது. 


ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டுக் கொள்ள வேண்டும். எல்லாம் புரிந்து விடும். 


அபிராமி அந்தாதி கற்கண்டு போல. சொன்னால் புரியாது. மனதுக்குள் போட்டுக் கொண்டால் தித்திக்கும். 


வேறு என்ன சொல்ல?






Monday, November 22, 2021

திருக்குறள் - உயிர் நிலை

 திருக்குறள் - உயிர் நிலை 


பாடல் 


அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/11/blog-post_22.html


(please click the above link to continue)




அன்பின் வழியது உயிர்நிலை  = அன்பின் வழி செல்லும் உடம்பே உயிர் உயிர் உள்ள உடம்பு 


அஃதிலார்க்கு = அந்த அன்பு இல்லாதவர்களுக்கு 


என்புதோல் போர்த்த உடம்பு. = உள்ள உடம்பு என்பது எலும்பை தோல் போர்த்திய ஒன்று 


அதாவது, அன்பு இல்லாதவனை பிணம் என்கிறார் வள்ளுவர். எலும்பு இருக்கிறது, தோல் இருக்கிறது. உயிர் இல்லை என்றால் அது பிணம்தானே. 


இப்படித்தான் உரை எழுதிய பெரியவர்கள் அனைவரும் கூறி இருக்கிறார்கள். 


இருந்தும் ஏதோ ஒன்று நிறைவு பெறாத மாதிரி இருக்கிறது. 


அன்பில்லாதவன் பிணத்துக்கு சமம், உயிர் இல்லாதவன் மாதிரி என்று சொல்வதற்கு வள்ளுவர் வேண்டுமா? அல்லது அதை சொல்ல "அன்பின் வழியது உயிர் நிலை" என்று சொல்ல வேண்டுமா?


இதில் மேலும் ஆழமான கருத்து ஏதேனும் இருக்குமோ என்று சிந்தனை செய்து பார்த்தேன். 


எனக்குத் தோன்றியதை பகிர்ந்து கொள்கிறேன். அது தவறாகவும் இருக்கலாம். சரி என்று பட்டால், ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லையேல் தள்ளி விடுங்கள். 


நிலை அல்லது நிலைப்பாடு என்று நாம் எதைச் சொல்கிறோம்? 


ஒருவரின் நோக்கம், விருப்பம், செயல் இவற்றை நாம் அவரின் நிலைப்பாடு என்கிறோம். 


வருமான வரியைக் குறைக்க வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு என்று ஒரு அரசியல் கட்சி கூறலாம். அது அவர்கள் நிலை. அவர்கள் அந்த நிலையில் இருக்கிறார்கள்.


உயிரின் நிலை என்ன என்று கேட்டால் அன்பு வழியில் செல்வது தான் உயிரின் நிலை. அதன் நிலைப்பாடு. எப்போது உயிர் அன்பு செய்வதை நிறுத்தி விடுகிறதோ, அப்போது, அது இருந்தும் பயன் இல்லை. 


பள்ளிக் கூடம் செல்வேன், படிக்க மாட்டேன் என்று ஒருவன் கூறினால், அவன் மாணவனாக இருக்கவே தகுதி இல்லாதவன் தானே? 


அவனை மாணவன் என்றே சொல்ல முடியாது. 



இப்போதெல்லாம் ஆசிரியர்கள் பல தகாத காரியங்களை செய்கிறார்கள் என்று செய்திகள் வருகின்றன. தன்னிடம் படிக்கும் மாணவிகளுக்கு பாலியில் தொல்லை தந்ததாக ஆசிரியர்கள் மேல் குற்றச் சாட்டுகள் வருகின்றன . அது உண்மையாக இருந்தால், அவர்கள் ஆசிரியர்கள் என்ற தகுதியில் இருந்து தவறி விட்டவர்கள் என்று தானே ஆகும். அவர்களை ஆசிரியர்கள் என்று கூற முடியுமா?


அது போல, அன்பு செய்யாத உயிரை, உயிர் என்ற கணக்கில் கொள்ள முடியாது. அது ஒரு உடம்பில் இருந்தாலும், அந்த உடம்பு உயிரற்ற உடம்பாகத்தான் கருதப் படும். என்பு தோல் போர்த்திய உடம்பு தான். உயிர் என்று பேருக்கு இருக்கிறதே தவிர அது செய்ய வேண்டிய கடமைகளை செய்யவில்லை. 


குறளை சற்று மாற்றிப் போடுவோம்.


அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு.


என்பதை 


உயிர்நிலை(யாவது) அன்பின் வழி


 அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு.


என்று கொண்டால் நான் சிந்திக்கும் பொருள் வர வாய்ப்பு இருக்கிறது. 


மூச்சு விடுவது, சாப்பிடுவது, நடப்பது, தூங்குவது எல்லாம் உயிரின் வேலை முக்கிய வேலை அல்ல. அன்பு செய்வதுதான் உயிரின் முக்கிய வேலை. அன்பின் வழியில் செல்வதுதான் உயிரின் நிலை. 


மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். 


இந்த உரை சரி என்று சொல்லவில்லை. இப்படி சிந்தித்தேன் என்று சொல்கிறேன். 


சரி என்று பட்டால் கொள்ளவும். இல்லையெனில் தள்ளவும். 






பிணம் யார் மேலாவது அன்பு செய்யுமா? அதற்கு தாய் யார், தகப்பன் யார், உற்றார் யார்,நட்பு யார் என்று ஒன்றும் தெரியாது. அது பாட்டுக்கு கிடக்கும். தோல் இருக்கும், உள்ளே எலும்பு இருக்கும். என்ன பயன்? அன்பு செலுத்த முடியாது. 


வள்ளுவர் சொல்கிறார், சில பேர் உயிரோடு இருந்தாலும், அன்பு செய்யாமல் இருப்பார்கள். அவர்களை வள்ளுவர் உயிர் உள்ளவர்கள் பட்டியலில் இருந்து எடுத்து விடுகிறார். அவர்களிடம் இருப்பது எலும்பை தோல் போர்த்திய உடம்பு அவ்வளவுதான் என்கிறார். அதில் உயிர் இருக்கிற மாதிரி தெரியவில்லை. இருந்தால் அது அன்பு செய்யுமே?



Thursday, November 18, 2021

நாலாயிர திவ்ய பிரபந்தம் - மனக்கவலை தீர்ப்பார் வரவு

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - மனக்கவலை தீர்ப்பார் வரவு 


உடம்புக்கு ஒரு வலி என்றால் மருத்துவரைப் போய் பார்க்கிறோம். மருந்து தருகிறார். குணமாகிறது. 


மனதில் வரும் வலியை, கவலையை எப்படி போக்குவது? மனோ தத்துவ நிபுணர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் கண்டு பிடிப்பதற்கே பல காலம் ஆகும். கண்டு பிடித்தாலும் எல்லா மனக் கவலைக்கும் மருந்து இருக்கிறதா? 


ஏதோ ஒரு பெரிய தோல்வி, நெருங்கியவர் இறந்து போனார், இப்படி பல கவலைகள் இருக்கின்றன. அவற்றுக்கு எல்லாம் எங்கே மருந்து இருக்கிறது. 


நம்மாழ்வார் சொல்கிறார்...இறைவன் ஒருவன் தான் எல்லா மன கவலைக்கும் மருந்து. 


இறைவன் திருவடியை சேராதவர்களுக்கு மனக் கவலையை மாற்ற முடியாது என்கிறார் வள்ளுவர். 


தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்

மனக்கவலை மாற்றல் அரிது.


சரி, இறைவனை எப்படி அடைவது? அவன் எப்படி இருப்பான், எங்கே இருப்பான், ஒன்றும் தெரியாது. விலாசம் இருந்தால் தேடிக் கண்டு பிடிக்கலாம். விலாசமே இல்லாவிட்டால் எப்படி கண்டு பிடிப்பது? 


சரி, விலாசம் இருக்கிறது என்றே வைத்துக் கொள்வோம். வழி தெரியுமா? தெரியாது. 


சரி, விலாசமும் இருக்கிறது. வழியும் தெரியும். இறைவன் இருக்கும் இடத்துக்கு போயும் சேர்ந்தாகி விட்டது. இறைவனை நம் அறிவால் புரிந்து கொள்ள முடியுமா? அவன் அறிவுக்கு எட்டிய உயரம், நிறம், கனம், ஆண்/பெண் பாகுபாடு என்ற எல்லைக்குள் இருப்பானா? நம் சிற்றறிவுக்குள் அவனை எப்படி அடக்குவது? 


நம்மாழ்வார் சொல்கிறார், நம்மால் தேடி கண்டு பிடிக்க முடியாது. ஆனால், அவன் நினைத்தால் நம் உள்ளத்துக்குள் வர முடியும். 


தேடுபவர்களுக்கு கிடைக்க மாட்டான். தேடாதார் நெஞ்சில் தானே வந்து அமர்ந்து கொள்வான் என்கிறார். 


அப்படி அவன் வந்து விட்டால், மனதில் கவலையே இருக்காது என்கிறார். 


பாடல் 



மருங்கோத மோதும் மணிநா கணையார்,


மருங்கே வரவரிய ரேலும்,-ஒருங் கே


எமக்கவரைக் காணலா மெப்போது முள்ளால்,


மனக்கவலை தீர்ப்பார் வரவு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/11/blog-post_62.html


(click the above link to continue reading)



மருங்கோத மோதும்  = மருங்கு + ஓதம் + மோதும் = கரையில் அலை வந்து மோதும். பாற்கடலில் அலை வந்து மோதும் 


மணிநா கணையார், = மாணிக்கத்தை உடைய படத்தைக் கொண்ட ஆதி சேஷன் மேல் பள்ளி கொள்ளும் 


மருங்கே வரவரிய ரேலும் = மருங்கே வர அரியர் எலும் = அருகில் யாராலும் வர முடியாத 


ஒருங் கே = சிறந்த தனித் தன்மையுடன் 


எமக்கவரைக் = எமக்கு அவரை 


காணலா மெப்போது = காணலாம் எப்போதும் 


முள்ளால், = உள்ளதால் 


மனக்கவலை தீர்ப்பார் வரவு. = மனக் கவலை தீர்ப்பார் வரவு 


வீடு கட்டும் போது, இரண்டு செங்கலை ஒட்ட வைக்க நடுவில் சிமென்ட் கலவையை வைப்போம் அல்லவா? 


அது போல செய்யுளை செய்யும் போது இரண்டு சீர்களை (சொற்களை) ஒட்டி வைக்க வேற்றுமை உருபுகள் என்று உண்டு. 


மூன்றாம் வேற்றுமை உருபு "ஆல்" என்ற சொல். 


இந்த வேற்றுமை உருபுகள் சில சமயம் வெளிப்பட்டு நிற்கும். சில சமயம் மறைந்து நிற்கும். அப்படி மறைந்து நிற்பதற்கு "தொக்கி நிற்றல்" என்று பெயர். 


இங்கே, 


"மனக்கவலை தீர்ப்பார் வரவு"


என்று இருக்கிறது. 


ஒருவாறு அர்த்தம் புரிந்தாலும், எங்கோ இடிக்கிறது அல்லவா?


இங்கே, "ஆல்" என்ற மூன்றாம் வேற்றுமை உருபு தொக்கி நிற்கிறது. 


எப்படி?


"வரவால் மனக் கவலை தீர்ப்பார்"


என்று இருக்க வேண்டும். 


வரவால் என்பதில் உள்ள "ஆல்" தொக்கி நிற்கிறது. 


அதை வெளிப்படுத்தினால் அர்த்தம் சரியாக விளங்கும். 


அவர் வந்தால் மனக் கவலை எல்லாம் தீர்ந்து விடும். 


இலக்கணம் தெரிந்து கொண்டால் இலக்கியம் இன்னும் சுவைக்கும். 


முழு இலக்கணத்தையும் படிப்பது என்பது வாழ் நாள் வேலை. வேண்டிய அளவு அங்கங்கே தெரிந்து கொண்டு போவோம். 






திருக்குறள் - அக மற்றும் புற உறுப்புகள்

 திருக்குறள் - அக மற்றும்  புற உறுப்புகள் 


பாடல் 


புறத்துறுப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை

அகத்துறுப்பு அன்பில் அவர்க்கு


பொருள் 


புறத்துறுப்பு = புறத்தில் உள்ள உறுப்புகள் 


எல்லாம் = அனைத்தும் 


எவன்செய்யும் = என்ன செய்யும்? என்ன பலனைத் தரும் 


யாக்கை = உடம்பில் 


அகத்துறுப்பு = அகத்தில் உள்ள உறுப்பில் 


அன்பில் அவர்க்கு = அன்பு இல்லாதவர்களுக்கு 


இதை பொதுவாக பொருள் சொல்வது என்றால், புற உறுப்புகளான கால், கை முதலியவை என்ன பயன் தரும், உடம்பில் அன்பு இல்லாத போது என்று சொல்லி விடலாம். 


பரிமேலழகர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. 


https://interestingtamilpoems.blogspot.com/2021/11/blog-post_18.html

(please click the above link to continue reading)



அப்படி பொருள் கொண்டால், அந்தக் குறளுக்கும், இல்லறத்துக்கும் ஒரு தொடர்பும் இருக்காது. 


சரி, பின் பரிமேலழகர் என்ன உரை சொல்கிறார்?


அதற்கு  அப்புறம் வருவோம். 


இல்லறம் நன்றாக நடக்க என்ன வேண்டும்?


உற்றார், உறவினர், நட்பு, சுற்றம், அக்கம் பக்கம் உள்ளோர், என்று எல்லோரின் தயவும், அவர்களோடு சுமுகமான உறவும் முக்கியம் அல்லவா?


எல்லோரிடமும் சண்டை போட்டுக் கொண்டு, குற்றம் குறை கூறிக் கொண்டு திரிந்தால் அந்த இல்லறம் எப்படி இருக்கும்?


விருந்து வேண்டும், நட்பு வேண்டும், நாலு பேர் நம்மை நாடி வர வேண்டும். நாம் போக நாலு இடம் வேண்டும். 


ஒன்றும் வேண்டாம் என்றால் பின் இல்லறம் எதற்கு? துறவியாகப் போய் விடலாமே?


எவ்வளவுக்கு எவ்வளவு மற்றவர்களோடு நாம் பின்னி பிணைந்து செல்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு இல்லறம் சிறக்கும். 


சரி தானே?


அந்த நட்பு, உறவு, நெருக்கமானவர்களைத் தான் பரிமேலழகர் "புறத்து உறுப்பு" என்கிறார். 


எத்தனை நட்பு, சுற்றம், உறவுகள் இருந்தாலும், மனதில் அன்பு இல்லாவிட்டால் அவற்றால் ஒரு பயனும் இல்லை. 


நாளடைவில் அவர்கள் நம்மை விட்டு விலகிப் போய் விடுவார்கள் அல்லது நாம் விலகி வந்து விடுவோம். 


அகத்தில் அன்பு இல்லாவிட்டால், புறத்தில் எத்தனை உறவுகள் இருந்தாலும் ஒரு பயனும் இல்லை. 


அது பரிமேலழகர் சொல்லும் உரை. 


நம் உடல் உறுப்புகள் மேல் நமக்கு வெறுப்பு இருக்குமா? என் கையை எனக்கு பிடிக்கவில்லை. எப்படியாவது அதை வெட்டி எறிந்து விட வேண்டும் என்று நினைப்போமா? என் கண் அழகாக இல்லை. அதைத் தோண்டி எடுத்து தூர எறிந்து விட வேண்டும் என்று நினைப்போமா? 


நாம் என்பதே இந்த உடல் உறுப்புகளின் தொகுப்புதானே. 


அது போல் இந்த இல்லறத்துக்கு உறவுகள் உறுப்பு போன்றவை. 


நம் விரல் நம் கண்ணை குத்தி விட்டது என்பதற்காக விரலை வேட்டுவோமா? சிலசமயம் பல் தெரியாமல் நாக்கை கடித்து விடும். அதற்காக பல்லை பிடுங்கி விட முடியுமா? 


உறுப்புகள் தவறு செய்யலாம். விட்டு விடக் கூடாது. 


மேலும் சிந்தித்துப் பார்க்க பொருள் விரியும். 


அன்பு இருந்தால் உறவுகள் பலப்படும். இல்லறம் சிறக்கும் என்பது நுண்ணிய கருத்து. 




Wednesday, November 17, 2021

கம்ப இராமாயணம் - பெண்களால் வரும் அழிவு

 கம்ப இராமாயணம் - பெண்களால் வரும் அழிவு 


சுக்ரீவனுக்கு முடி சூட்டிய பின், அவனுக்கு சில அறிவுரைகளை வழங்குகிறான் இராமன். 


"பெண்களால் ஆண்களுக்கு மரணம் வரும் என்பதை சந்தேகம் இல்லாமல் அறிந்து கொள். அதற்கு வாலி மட்டும் அல்ல, நாங்களும் சாட்சி. பெண்களால் ஆண்களுக்கு துன்பமும், பழியும் வந்து சேரும்"


என்கிறான். 


பாடல் 


''மங்கையர் பொருட்டால் எய்தும்

      மாந்தர்க்கு மரணம்'' என்றல்,

சங்கை இன்று உணர்தி; வாலி

      செய்கையால் சாலும்; இன்னும்,

அங்கு அவர் திறத்தினானே,

      அல்லலும் பழியும் ஆதல்

எங்களின் காண்டி அன்றே;

      இதற்கு வேறு உவமை உண்டோ?


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/11/blog-post_93.html


(please click the above link to continue reading)




''மங்கையர் பொருட்டால் = பெண்களால் 


எய்தும் = அடைவர் 


மாந்தர்க்கு மரணம்'' என்றல் = ஆண்களுக்கு மரணம் என்பதை 


சங்கை இன்று உணர்தி = சந்தேகம் இல்லாமல் உணர்ந்து கொள் 


வாலி செய்கையால் சாலும் = வாலியின் செய்கையால் அதை உணரலாம் 


இன்னும், = மேலும் 


அங்கு அவர் திறத்தினானே = அந்தப் பெண்களாலே 


அல்லலும் பழியும் ஆதல் = துன்பமும், பழியும் வரும் என்பதை 


எங்களின் காண்டி அன்றே = எங்களைப் பார்த்து புரிந்து கொள் 


இதற்கு வேறு உவமை உண்டோ? = இதற்கு மேலும் வேறு உதாரணங்கள் தேவையா ? 


சுக்ரீவன் மனைவியை கவர்ந்து கொண்டதால், வாலி இறந்தான். 


கைகேயி பேச்சை கேட்டதால் தசரதன் மாண்டு போனான்.  இராம இலக்குவனர்கள் கானகம் போனார்கள். 


சீதையின் பேச்சைக் கேட்டதால் (பொன் மான் பின்னே போனதால், இலக்குவனை அனுப்பியதால்)  இராமனும் இலக்குவனும் சீதையைத் தேடி படாத பாடு பட்டார்கள். 


சீதையின் பேச்சைக் கேட்டதால் வந்த வினை என்று இராமன் பல இடத்தில்  புலம்புகிறான். 


ஆனானப் பட்ட இராமனுக்கே அந்தக் கதி. 


பாடம் படிக்க வேண்டும். 






Monday, November 15, 2021

திருக்குறள் - பாலையில் மரம் துளிர்த்த மாதிரி

 திருக்குறள் - பாலையில் மரம் துளிர்த்த மாதிரி 


அன்பு.


அன்பு செலுத்தவும், அன்பை பெற்றுக் கொள்ளவும் யாருக்குத்தான் விருப்பம் இல்லாமல் இருக்கும். 


எல்லோரும் அன்புக்கு வேண்டி இருக்கிறது. தரவும், பெறவும். 


இருந்தும், பெரும்பாலான குடும்பங்களில் அன்பு என்பது அரிதான ஒன்றாக இருக்கிறது. 


என்ன செய்தாலும், யாருக்கும் என் மேல் அன்பே இல்லை என்று எல்லோரும் சொல்கிறார்கள். 


நான் என்ன குறை வைத்தேன், ஏன் என்னை யாருக்கும் பிடிப்பது இல்லை என்ற குறை எல்லோருக்கும் இருக்கிறது. 


ஏன்?


வீட்டிலே ஒரு செடி இருக்கிறது. அதை அன்றாடம் பார்த்து, அதற்கு நீர் வார்த்துக் கொண்டே இருந்தால் அது நின்று வளரும், பூ பூக்கும், அழகாக இருக்கும். 


நமக்கு நேரம் கிடைக்கும் போது நீர் வார்ப்போம் என்றால், சில சமயம் அது பட்டுப் போய் விடும். பின் எவ்வளவு நீர் வார்த்தாலும் அது துளிர்க்காது. 


நான் எவ்வளவு உரம் போட்டேன், நீர் வார்த்தேன் என்று சொல்லி பலன் இல்லை. அதற்கு வேண்டிய போது தர வேண்டும். 


வீடுகளில் பெரும்பாலும் அது தான் நிகழ்கிறது. 


பிள்ளைக்கு, கணவனுக்கு, மனைவிக்கு அன்பு தேவைப் படுகிறது. நாம் அப்போது வேறு எதிலோ மும்முராக இருப்போம். 


வேலை, வியாபாரம், பயணம், தொழில் சம்பந்தமாக ஆட்களை பார்ப்பது, அது சம்பந்தமாக படிப்பது, என்று அலைந்து கொண்டு இருப்போம். 


எல்லாம் குடும்பத்துக்காகத் தான். 


ஆனால், குடும்பம் என்ற செடி அங்கே அன்பு என்ற நீர் இல்லாமல் வாடிக் கொண்டு இருக்கும். 


ஒரு நாள் முற்றுமாக வாடி விடும். 


அந்த சமயம் நம் வேலை எல்லாம் முடிந்து இருக்கும். சரி, இப்போது பார் எவ்வளவு தண்ணீர் விடுகிறேன் என்று அண்டா அண்டாவாக கொட்டினால் என்ன பயன்? 


பிள்ளைகள் படித்து வெளியே போய் விடுவார்கள். கணவனுக்கோ, மனைவிக்கோ வயது ஏறி இருக்கும். வாழ்வை அனுபவிக்கும் இளமையும், துடிப்பும், வேகமும் போய் இருக்கும். 


இப்போது வந்து உரம் போடுகிறேன், நீர் ஊற்றுகிறேன் என்றால் என்ன செய்வது. 


காலம் கடந்த ஞானோதயம். 


இல்லறம் என்ற பயிர் வளர அன்பு என்ற நீர் அவசியம். 


நீரை, பயிர் வேண்டும் போதெல்லாம் வார்க்க வேண்டும். நம்மால் முடிந்த போதெல்லாம் அல்ல. 


காலம் தப்பிப் போனால், பயிர் வாடி விடும். பின் என்ன செய்தும் பயன் இருக்காது. 


பாடல் 


அன்புஅகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்

வற்றல் மரந்தளிர்த் தற்று


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/11/blog-post_69.html

(Please click the above link to continue reading)



அன்புஅகத்து இல்லா = அகத்தில், இல்லறத்தில், அன்பு இல்லாத 


உயிர்வாழ்க்கை = உயிர் வாழ்க்கை 


வன்பாற்கண் = வன்மையான பாலை நிலத்தில் அல்லது பாறையில் 


வற்றல் = வாடிப் போன 


மரந்தளிர்த் தற்று = மரம் தளிர்த்த மாதிரி 


உரை எழுதிய பெரியவர்கள் எல்லோரும், "எப்படி பாலை நிலத்தில் வாடிய மரம் தளிர்காதோ அது போல அன்பு இல்லாத இல்லறம்" என்று தான் சொல்லி இருர்க்கிரார்கள். 


அதாவது, பாலை நிலத்தில் மரம் தளிர்ப்பது என்பது நடவாத ஒன்று. அது போல அன்பு இல்லாமல் இல்லறம் செய்ய முடியாது என்று தான் உரை எழுதி இருக்கிறார்கள். 


நான் அதை சற்று வேறு விதமாக சிந்தித்துப் பார்த்தேன். 


பாலை நிலம் எப்படி வந்தது?


மழை, நீர் இல்லாததால். 


அது போல அன்பு இல்லாததால் இல்லறம் பாலைவனமாகி விடும். 


அந்த பாலை நிலத்தில், ஒரு காலத்தில் செழித்து நின்ற மரம் இப்போது வாடி விட்டது. 


அது போல இல்லறத்தில் இருந்தவர்கள் ஒரு காலத்தில் மகிழ்ச்சியாக இருந்தாலும், இப்போது இல்லை. 


பின் மழை பொழிந்தாலும், மரம் தளிர்காதது போல், பின் எவ்வளவுதான் அன்பு செய்தாலும், இல்லறம் தளிர்காது. 


அதை வாட விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 


அதற்குதேவையான சமயத்தில் நீர் வார்க்க வேண்டும்.


அன்பு செலுத்தும் வாய்ப்புகளை தள்ளிப் போடக் கூடாது. 


எப்போதேலாம் தேவை ஏற்படுகிறதோ, அப்போதே செய்து விட வேண்டும். 


அர்த்தம் பொருந்தி வருகிறதா? 




திருக்குறள் - ஒரு இடைச் செருகல்

 திருக்குறள் - ஒரு இடைச் செருகல் 


திருக்குறளை படிக்க படிக்க ஒரு பிரமிப்பு வருகிறது. எவ்வளவு ஆழமான, அர்த்தம் செறிந்த, வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் கொண்ட நூல் என்று. சிந்திக்க சிந்திக்க அதன் எல்லைகள் விரிந்து கொண்டே போகின்றது. 


ஒரு வாழ்நாளில் படித்து முடிக்க முடியும் என்று தோன்றவில்லை. 


நான் படித்ததை, கேட்டதை, என் அறிவுக்கு எட்டியவரை எளிமைப் படுத்தி எழுதிக் கொண்டு இருக்கிறேன். 


இன்னும் எத்தனை நாள் ஆகுமோ முழுவதும் எழுதி முடிக்க. 


இடையே இடையே ஒரு சலிப்பும், சோர்வும் வந்து விடுகிறது. 


யார் படிக்கிறார்கள், யாருக்கேனும் இது ஒரு அணுவளவேனும் உதவுகிறதா அல்லது கடலில் பெய்த மழை போல், காட்டில் காய்ந்த நிலவு போல் பயனற்றுப் போகிறாதா என்ற ஆயாசம் இடை இடையே வருகிறது. அதனால் கொஞ்சம் இடைவெளியும், கால தாமதமும் வந்து விடுகிறது. 



https://interestingtamilpoems.blogspot.com/2021/11/blog-post_15.html


(please click the above link to continue reading)


திருக்குறள் ஒரு மிகப் பெரிய பொக்கிஷம். யாருக்காகவும் காத்து இருக்காமால், நீங்களே அதை நேராக படித்து விடுவது உங்களுக்கு நலம் தரும். 


நான் என்று எழுதி முடிக்க? அப்படியே எழுதி முடித்தாலும், அது ஒரு முழுமையான ஒன்றாக இருக்காது. 


அத்தனை நாள் ஏன் காத்து இருக்க வேண்டும். உலகில் உள்ள அத்தனை உரைகளும் வலை தளத்தில் உள்ளது. காலணா செலவு செய்யாமல் அத்தனை உரைகளையும் படித்து விடலாம். 


எவ்வளவுக்கு எவ்வளவு வேகமாக படித்து முடிகிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு உங்களுக்கு நிறைந்த பலன் தரும். 



Friday, November 12, 2021

திருக்குறள் - அன்பிலதனை அறம்

திருக்குறள் - அன்பிலதனை அறம் 


அன்பு செய்ய வேண்டும் என்பது கட்டாயமா? அன்பு செய்யாவிட்டால் என்ன?  எவ்வளவு அன்பு செய்தாலும் யாரும் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள். இவர்கள் மேல் அன்பு செய்து என்ன பலன்? பேசாமல் நம்ம வேலையை பார்த்துக் கொண்டு போகலாம். 


திருப்பி அன்பு செய்யாவிட்டாலும் பரவாயில்லை. நாம் செய்யும் அன்புக்கு களங்கம் கற்பிக்கும் ஆட்களும் இருக்கிறார்கள். உலகில் அன்பு என்பதே இல்லாமல் போய் விட்டது. எல்லாமே ஏதோ ஒன்றை எதிர்பார்த்துத் தான் நடக்கிறது. எல்லாம் வியாபாரம். பண்டமாற்றாக இருக்கிறது....


என்று நமக்கு ஒரு அலுப்பு தோன்றலாம். 


என்னத்துக்கு அன்பு செய்வானேன்...பின் வருந்துவானேன்...சும்மா இருந்துவிட்டுப் போகலாம் என்று தோன்றும். 


ஆனால், வள்ளுவர் சொல்கிறார், அன்பு செய்ய வேண்டியது கட்டாயம் என்று. அன்பு செய்யாவிட்டால் அதற்கு தண்டனை உண்டு என்கிறார். ஆங்கிலத்தில் fine / penalty என்று கூறுவார்களே அது போல அன்பு செய்யாவிட்டால் தண்டனை உண்டு.


யார் தண்டிப்பார்கள்?  குறளை வாசிப்போம். 


பாடல் 


என்பி லதனை வெயில்போலக் காயுமே

அன்பி லதனை அறம்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/11/blog-post_12.html


(Please click the above link to continue reading)



என்பி லதனை  = என்பு + இல் + அதனை = எலும்பு இல்லாத அதை 


வெயில்போலக் காயுமே =வெயில் எவ்வாறு வருத்துமோ 


அன்பி லதனை அறம் = அன்பு + இல் +அதனை = அன்பு இல்லாத அதை அறம் 


பரிமேலழகர் துணை இல்லாமல் புரிந்து கொள்வது கடினம். 


உடம்பு, உயிர் என்று இரண்டு இருக்கிறது அல்லவா? 


இதில் எதற்கு எலும்பு இருக்கும்? உடம்புக்கா? உயிருக்கா? 


உடம்புக்கு எலும்பு இருக்கும். உயிருக்கு எலும்பு இல்லை. 


எலும்பு இல்லாத உடலை வெயில் எப்படி காயுமோ, அது போல அன்பு இல்லாத உயிரை அறக் கடவுள் தண்டிப்பார் என்கிறார் பரிமேலழகர். 


அன்பு செய்வது எது ? உடலா? உயிரா? 


உயிர்தானே அன்பு செய்யும். உயிர் போய் விட்டால் உடம்பு அன்பு செய்யுமா? அல்லது நம்மால்தான் உயிரில்லாத உடல் மேல் அன்பு செய்ய முடியுமா? 


உயிரின் வேலை அன்பு செய்வது. அதன் கடமை. அந்தக் கடமையில் இருந்து அது தவறினால், அறக் கடவுள் அந்த உயிரை தண்டிப்பார். 


உயிரின் இயற்கைக் குணம் அன்பு செய்வது. நாம் முயற்சி செய்து அந்த அன்பை கட்டுப்படுத்துகிறோம். 


வெயில் எதற்கு வருகிறது? உலகில் உள்ள மக்களை சுட்டு எரிக்க வேண்டும் என்றா வருகிறது? இல்லை. அது பாட்டுக்கு வருகிறது.  நாம் வெயிலில் போய் அலைந்து திரிந்து விட்டு, "சீ, இந்த வெயில் என்னமா சுடுது...வறுத்து எடுக்கிறது, மண்டையைப் பிளக்கிறது" என்று வெயிலை குறை கூறுகிறோம். நம்மை வெளியில் வா என்று வெயில் அழைத்ததா? இல்லையே? நாமே வெளியில் போய் சூடு வாங்கிக் கொண்டு வருகிறோம். 


அது போல, அறக் கடவுள் நம்மை தண்டிக்க கிளம்பி வர மாட்டார். நாமே போய் தண்டனை அடைவோம். அன்பு செய்யாவிட்டால், தண்டனை தானே நிகழும். 


"ஐயோ, நான் யாருக்கும் ஒரு தீங்கும் செய்யவில்லையே, எனக்கு ஏன் இந்தத் துன்பம்" என்று நினைத்தால், எங்கோ அன்பு செய்யாத குற்றத்திற்கு கிடைத்த தண்டனை அது என்று எண்ணிக் கொள்ள வேண்டும். 


துன்பத்தை நாமே வலிய சென்று வாங்கி வருவோம். வெயிலில் அலைந்து துன்பப் படுவது போல. 


துன்பத்தில் இருந்து தப்ப வேண்டுமா? 


அன்பு செய்வது ஒன்றுதான் வழி. 


என்ன ஒரு சிந்தனை ! 




Thursday, November 11, 2021

பட்டினத்தார் பாடல் - முன்பு செய்த புண்ணியம்

 பட்டினத்தார் பாடல் - முன்பு செய்த புண்ணியம் 


நாம் முயற்சி செய்கிறோம். நம் தகுதி, உழைப்பு, நேர்மை இவற்றிற்கு ஏற்ப ஏதோ ஒரு ஊதியம் கிடைக்கிறது. 


நம்மைவிட குறைந்த தகுதி, குறைவான உழைப்பு, குறைவான திறமை உள்ளவன் நம்மை விட பல மடங்கு அதிகம் பொருள் ஈட்டுகிறான். 


நம்மை விட தகுதியில், திறமையில், உழைப்பில் உயர்ந்தவன் நம்மை விட குறைவாக பொருள் ஈட்டுகிறான். 


இது நடக்கிறதா இல்லையா இந்த உலகில்?


காரணம் என்ன?


ஊழ் வினைப் ப் பயன் என்று நம் இலக்கியம் மிக ஆழமாக நம்பியது. 


ஏதோ எல்லாம் என்னால் என்று நினைக்காதே. முன் வினைப் பயன் இருந்தால் கிடைக்கும். இல்லை என்றால் என்ன முயன்றாலும் நட்டம்தான் வந்து சேரும். 


மூத்த மைந்தனுக்குத்த் தானே பட்டம் கிடைக்க வேண்டும். அதை விட்டு அவன் கானகம் போனனான். காரணம் என்ன?


"விதியின் பிழை" என்றான் இராமன். 


இங்கே பட்டினத்தார் சொல்லுகிறார்....


"முற்பிறவியில் செய்த புண்ணியத்தால் இவ்வளவு செல்வம் வந்தது என்று அறியாமல், ஏதோ இப்போது செய்த முயற்சியால் கிடைத்தது என்று எண்ணாதே என் மனமே. அப்படிப் பட்ட புண்ணியத்தால் வந்த பணத்ததை நல்ல வழியில் செலவழிக்காமல் அதாவது ஏழைக்களுக்கு கொடுக்காமல், இறைப் பணியில் செலவிடாமல், படித்தவர்களுக்கு ஒன்று கொடுக்காமல் இருந்து ஒரு நாள் இறந்து போய்விட்டால் என்ன செய்வாய்? அடுத்த பிறவியில் ஏழையாகப் பிறக்கப் போகிறாயா?"


என்று கேட்கறார். 


பாடல் 



முன் தொடர்பில் செய்த முறைமையால் வந்த செல்வம்

இற்றைநாள் பெற்றோம் என்று எண்ணாது பாழ்மனமே!

அற்றவர்க்கும் ஈயாமல் அரன் பூசை ஓராமல்

கற்றவர்க்கும் ஈயாமல் கண் மறைந்து விட்டனையே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/11/blog-post_17.html


(pl click the above link to continue reading)



முன் தொடர்பில் = முற் பிறவியில் 


செய்த முறைமையால் = செய்த புண்ணியத்தால் 


வந்த செல்வம் = வந்த செல்வத்தை 


இற்றைநாள் = இன்று, இப்போது 


பெற்றோம் என்று எண்ணாது பாழ்மனமே! = பெற்றோம் என்று எண்ணாதே பாழ் மனமே 


அற்றவர்க்கும் ஈயாமல் = பொருள் இல்லாதவர்களுக்கு உதவாமல் 


அரன் பூசை ஓராமல் = சிவ பூசை செய்யாமல் 


கற்றவர்க்கும் ஈயாமல் = கற்றவர்களுக்கும் கொடுக்காமல் 


கண் மறைந்து விட்டனையே. = இறந்து போனாயே 


நீ பெற்ற செல்வதால் உனக்கும் பயன் இல்லை, மற்றவர்களுக்கும் பயன் இல்லை. 


என்னே அறிவீனம்!




கம்ப இராமாயணம் - தாய் என இனிது தாங்குதி

 கம்ப இராமாயணம் - தாய் என இனிது தாங்குதி 


சுக்ரீவனுக்கு முடி சூட்டியபின், அவனுக்கு இராமன் சில தர்மங்களை போதிக்கிறான். 


ஒரு தலைவன் தன் குடிகளை எப்படி நடத்த வேண்டும் என்று இராமன் கூறுகிறான். .


"உன் குடிகள் உன்னை தங்கள் தலைவன் என்று நினைக்கக் கூடாது. தங்களின் தாய் என்று நினைக்கும் படி நீ அரசு நடத்த வேண்டும். அப்படி இருக்கும் போது அவர்களுக்கு யார் மூலமாகவாவது தீங்கு வந்தால், அப்படி தீமை செய்வோரை அற நெறி மீறாமல் தண்டிப்பாயாக" என்றான். 


பாடல் 


நாயகன் அல்லன்; நம்மை

        நனி பயந்து எடுத்து நல்கும்

தாய் என இனிது பேணத்

        தாங்குதி தாங்குவாரை

ஆயது தன்மையேனும்

        அறவரம்பு இகவா வண்ணம்

தீயன வந்தபோது

        சுடுதியால் தீமையோரை


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/11/blog-post_11.html


(Please click the above link to continue reading)



நாயகன் அல்லன் = தலைவன் அல்ல 


நம்மை = நம்மை (குடி மக்களை) 


நனி = மிகவும் 


பயந்து எடுத்து நல்கும் = போற்றி எடுத்து கொடுக்கும் 


தாய் என = தாய் என்று சொல்லும்படி 


இனிது பேணத்  தாங்குதி = இனிதாகச் சொல்லும்படி அவர்களை பாதுகாப்பாய் 


 தாங்குவாரை = அப்படி தாங்கும் 


ஆயது தன்மையேனும் = தன்மை இருந்தாலும் 


அறவரம்பு இகவா வண்ணம் = அறத்தின் எல்லைகளுக்கு உட்பட்டு 


தீயன வந்தபோது = தீமைகள் வந்த போது 


சுடுதியால் தீமையோரை = தீயவர்களை தண்டிப்பாய் 


தலைவன் என்று வந்துவிட்டால் ஒரு பெருமை, அகங்காரம், மமதை வந்து விடும். அப்படி இல்லாமல், ஒரு தாய் குழந்தைகளை காப்பது போல காக்க வேண்டும் என்கிறான். 


மேலும், தீமை செய்பவர்களை தண்டிக்க வேண்டும், அதுவும் அறத்திற்கு உட்பட்டு.


உன்னத இலட்சியங்கள். முழுவதுமாக முடியாவிட்டாலும், அதை நோக்கி நாம் தினம் நகர வேண்டும். 


அரசனுக்கு மட்டும் அல்ல. நமக்கும்தான்.





Wednesday, November 10, 2021

திருக்குறள் - அன்பும் மறமும்

திருக்குறள் - அன்பும் மறமும் 


அறம், மறம் என்று இரண்டு இருக்கிறது. 


அறம் நமக்குப் புரிகிறது. மறம் என்ற சொல்லை நாம் அதிகம் பயன்படுத்துவது இல்லை. 


மறம் என்றால் வீரம், தீரம், வெற்றி, சண்டை, சீற்றம், சினம் என்று பொருள்கள் இருக்கின்றன. 


அறத்திற்கு மட்டுமே அன்பு துணை போகும் என்று சில அறியாதவர்கள் கூறுவார்கள். மறத்துக்கும் அந்த அன்பு தான் துணை என்கிறார் வள்ளுவர். 


தவறாக புரிந்து கொள்ளப்பட்ட குறள்களில் இதுவும் ஒன்று. 


அது எப்படி சண்டை பிடிக்க அன்பு துணையாக முடியும் ? ஒருவன் மேல் கோபம் கொள்ள அன்பு துணை செய்யுமா? அன்பு இருந்தால் சண்டை பிடிக்க முடியுமா? 


பின் ஏன் வள்ளுவர் அப்படிச் சொல்லி இருக்கிறார். 


பாடல்  


அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்

மறத்திற்கும் அஃதே துணை.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/11/blog-post_10.html


(Please click the above link to continue reading)


அறத்திற்கே = அறத்திற்கு மட்டுமே 


அன்புசார்பு = அன்பு துணை செய்யும் 


என்ப  அறியார் = என்று கூறுவார் அறியாதவர்கள் 


மறத்திற்கும் = மறத்திற்கும் 


அஃதே துணை. = அந்த அன்பே துணை 


பரிமேலழகர் இல்லாவிட்டால் இந்த குறளுக்கு சரியான அர்த்தம் காண்பது கடினம். 


அவர் உரை சொல்கிறார் "ஒருவன் மேல் கோபம் வந்து விட்டதா, அவன் கூட சண்டை போட வேண்டும் என்று தோன்றுகிறதா? அந்த பகைமையை மாற்றுவதும் அன்புதான்" என்கிறார். .


பகை வந்து விட்டது. பகை நல்லதா என்றால் இல்லை. கோபம் நல்லதா என்றால் இல்லை. 


பின் பகையை எப்படி மாற்றுவது?


அவன் கூட சண்டை போட்டு, அவனை தோற்கடித்தால் பகை முடிந்து விடுமா? வென்றாலும் தோற்றாலும் பகை நிற்கும். இன்னும் சொல்லபோனால் சண்டைக்குப் பின் பகை மேலும் வலுப்படும். 


பகையை மாற்ற ஒரே வழி அன்புதான். 


சின்ன உதாரணம் பார்க்கலாம். 


கணவன் மனைவிக்குள் ஏதோ கருத்து வேறுபாடு. சண்டை வந்து விட்டது. அந்த சண்டை, பகை, கோபம் எப்படிப் போகும்? மேலும் மேலும் சண்டை பிடிக்கலாம். ஒருவருக்கு ஒருவர் பேசாமல் இருக்கலாம். என்ன செய்தாலும் பகை போகாது. சரி விடு என்று யாரோ ஒருவர் விட்டுக் கொடுத்து அன்பு செலுத்தினால்தான் உறவு நிலைக்கும். விட்டுக் கொடுத்தவர்களை பலவீனமானவர்கள் என்று நினைக்கக் கூடாது. எனக்காக அவர்/அவள் விட்டுக் கொடுத்தாள்/ர் என்று அன்பு செய்ய வேண்டும். 


அன்பு எந்தப் பகையையும் மாற்றி விடும். 


அன்பு மட்டும் தான் பகையை மாற்றும். 


சரி, இப்படி பொருள் கொள்ளலாம் என்று பரிமேலழகருக்கு யார் உரிமை தந்தது? இது சரியான விளக்கம் தானா? 


அதற்கும் ஒரு மேற்கோள் காட்டுகிறார் பரிமேலழகர். 


துன்பத்திற்கு யாரே துணையாவார் தாம்உடைய

நெஞ்சம் துணையல் வழி.


என்ற குறளில், "துன்பத்திற்கு யாரே துணையாவார்" என்பதில் யாரும் துன்பத்துக்கு துணை போக மாட்டார்கள் என்று தெரிகிறது அல்லவா. 


அது போல, மறத்துக்கு அன்பு துணை போகாது. ஆனால் மறத்தை மாற்றி அதை அறமாக்க அன்பு துணை செய்யும் என்று பொருள் கொள்ள வேண்டும் என்கிறார். 


பகையும், கோபமும், சீற்றமும், சினமும் அன்பினால் மறையும். 


பாசம், அன்பு, கருணை,காதல் இதற்கு மட்டும் துணை செய்வது அல்ல அன்பும். 


பகைமையை மாற்றி நேசத்தை வளர்க்கவும் அன்பு துணை செய்யும் என்கிறார். .


எங்கெல்லாம் கோபம் இருக்கிறதோ, பகை இருக்கிறதோ, அங்கே அன்பு செலுத்துங்கள். 


பகையே இல்லாத வாழ்வு வாய்க்கும். 




Monday, November 8, 2021

கம்ப இராமாயணம் - சிறியர் என்று இகழேல்

 கம்ப இராமாயணம் - சிறியர் என்று இகழேல் 


வாழ்க்கை யாரை எங்கே எப்படி கொண்டு சேர்க்கும் என்று யாருக்கும் தெரியாது. சில சமயம் குப்பை காகிதம் கோபுர உச்சிக்கும் போய் விடும். 


நம்மை விட குறைந்தவர்களை, அவர்கள் சாதரணமானவர்கள் என்று நினைத்து நாம் அவர்களுக்கு ஏதோ தீமை செய்தால், அதை அவர்கள் மனதில் வைத்து இருந்து சரியான நேரத்தில் நமக்கு மிகப் பெரிய தீமையை செய்து விடுவார்கள். நம்மால் தாங்க முடியாது. 


சுக்ரீவனுக்கு முடி சூட்டியபின் அவனுக்கு இராமன் சில அறிவுரைகள் வழங்கினான். 

அப்போது இராமன் சொல்கிறான் 


"சிறியர் என்று எண்ணி மற்றவர்களுக்கு துன்பம் செய்து விடாதே. அப்படி செய்ததால், கூனி என்ற ஒரு கிழவி எனக்கு செய்த தீமையால் நான் துயரம் என்ற கடலில் வீழ்ந்தேன்"


என்றான். 


பாடல் 


'சிறியர் என்று இகழ்ந்து நோவு

      செய்வன செய்யல்; மற்று, இந்

நெறி இகழ்ந்து, யான் ஓர் தீமை

      இழைத்தலால், உணர்ச்சி நீண்டு,

குறியது ஆம் மேனி ஆய

      கூனியால், குவவுத் தோளாய்!

வெறியன எய்தி, நொய்தின் வெந்

      துயர்க் கடலின் வீழ்ந்தேன்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/11/blog-post_8.html


(please click the above link to continue reading)



'சிறியர் என்று = நம்மை விட அறிவில், பணத்தில், அதிகாரத்தில், சிறியவர்கள் என்று எண்ணி 


இகழ்ந்து = அவர்களை இகழ்வாகப் பேசி 


நோவு செய்வன செய்யல் = துன்பம் தருவனவற்றை செய்யாதே 


மற்று, = மேலும் 


இந்நெறி இகழ்ந்து = இந்த வழியை மறந்து 


யான் = நான் (இராமன்) 


ஓர் தீமை இழைத்தலால் = தீமை செய்ததால் 


உணர்ச்சி நீண்டு = அந்த பகைமை உணர்ச்சியை நீண்ட நாள் மனதில் வைத்து இருந்து 


குறியது ஆம் மேனி ஆய = குறுகிய வடிவை உடைய 


கூனியால் = கூனியால் 


குவவுத் தோளாய்! = திரண்ட தோள்களை உடையவனே (சுக்ரீவனே) 


வெறியன எய்தி = துன்பத்தினை அடைந்து 


நொய்தின்  = வருந்தி 


வெந் துயர்க் கடலின் வீழ்ந்தேன். = துன்பம் என்ற கடலில் வீழ்ந்தேன் 


யோசித்துப் பார்த்து இருப்பானா இராமன். 


சக்ரவர்த்தி திருமகன் அவன். 


அவளோ அரண்மனையில் வேலை பார்க்கும் ஒரு கூன் விழுந்த கிழவி. 


அவளால் என்ன செய்ய முடியும்?


ஆனால், அவள் சாம்ராஜ்யங்களை புரட்டிப் போட்டாள். 


தசரத சக்ரவர்த்தி இறந்தான். இராமன் கானகம் போனான். சீதையும், இலக்குவனும் காடு போனார்கள். இராமன் அரசை இழந்தான். இருக்க இடம் இன்றி, உடுத்த துணி இன்றி காட்டில் பதினாலு வருடம் அலைந்தான். 


பரதன் அரசை ஏற்கவில்லை. இராமன் பாதுகையை வைத்து, அயோத்திக்கு வெளியே இருந்து ஆட்சி செய்தான். 


வாலி இறந்தான். 


இராவணன் இறந்தான். கும்பகர்ணன், இந்திரசித்து போன்றோர் இறந்தனர். 


எல்லாம் யாரால்? அந்தக் கூனியால். 


பெரிய பிழை ஒன்றும் இல்லை. மண் உருண்டை வைத்து அவள் கூன் முதுகில் இராமன் அம்பு விட்டான், சிறு வயதில். 


அது பொறுக்காமல் அந்தக் கூனி இவ்வளவு செய்தாள்.


பெரிய பெரிய படைகள் சாதிக்க முடியாதவற்றை அந்த பெண் தனி ஒரு ஆளாக நின்று செய்தாள். 


வீட்டு வேலை செய்பவர்களை, வண்டி ஓட்டுபவர்களை, காவல்காரர்களை, கீழே வேலை செய்பவர்களை, யாராக இருந்தாலும், அவர்களுக்கு தீமை செய்யக் கூடாது. 


அதிலும் பெரிய பொறுப்பில் இருப்பவர்களுக்கு கீழே பலர் இருப்பார்கள். என்றோ ஒரு மறதியில், அசதியில் தவறு இழைத்து விட்டால் பின் ஆயுள் முழுவதும் வருந்த வேண்டி இருக்கும்.  இராமன் வருந்தியதைப் போல. 


சில சமயம் அவர்கள் நமக்கு தீமை செய்தார்கள் என்று கூடத் தெரியாது. இல்லாததும் பொல்லாததும் சொல்லக் கூடாத இடத்தில் போய் சொல்லி விடுவார்கள். நாம் செய்யாததை, சொல்லாததை செய்ததாகவும், சொன்னதாகவும் திரித்துச் சொல்லி நம்மை சிக்கலில் மாட்டி வைத்து விடுவார்கள். 


சிறியாரை இகழேல் என்று தன் அனுபவத்தை பாடமாக்கிச் சொல்கிறான் இராமன். 


படிப்போம். 



Sunday, November 7, 2021

ஔவையார் தனிப்பாடல் - சொல்லின்பம்

 ஔவையார் தனிப்பாடல் - சொல்லின்பம் 


கவிதை என்பது ஒரு அனுபவம். அதை அனுபவித்துத் தான் அறிய முடியும். சொல்லி விளங்க வைக்க முடியாது. 


ஒரு கவிதையில் உள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் உரை சொல்லி விடலாம். எல்லா சொல்லுக்கும் அர்த்தம் தெரிந்து விட்டால், கவிதை புரிந்துவிட்டது என்று அர்த்தம் அல்ல. 


ரோஜா மலரின் அழகு எங்கே இருக்கிறது என்று ஒவ்வொரு இதழாக பியித்து பியித்து பார்த்தால் இறுதியில் காம்புதான் மிஞ்சும். 


ஒரு குழந்தையின் அழகு எங்கே இருக்கிறது? அதன் கண்ணிலா? மூக்கிலா? என்று தேடக் கூடாது. 


சொல்லின் அர்த்தம் தெரியாமல் அழகு புரியுமா என்றால் புரியாதுதான். ஆனால், சொல்லின் அர்த்தம் மட்டும் அல்ல கவிதையின் அழகு. 


பலபேர் சொல்லின் அர்த்தத்தோடு நின்று விடுகிறார்கள். 


எந்தச் சொல்லுக்கு என்ன அர்த்தம்? இதுவா அர்த்தம்? அது கூட சரியாக வரும் போல் இருக்கிறதே? அப்படிச் சொன்னால் என்ன? என்று சொல்லுக்குள் நின்று விடுகிறார்கள். 


பாடல் 


இலக்கணக் கவிஞர் சொல்லின்பம் தேடுவர்

மலக்கும்சொல் தேடுவர் வன்க ணாளர்கள்

நிலத்துறும் கமலத்தை நீளும் வண்டதீ

தலைக்குறை கமலத்தைச் சாரும் தன்மைபோல்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/11/blog-post_7.html


(Please click the above link to continue reading)



இலக்கணக் கவிஞர் = நெறிமுறை அறிந்த கவிஞர்கள் 


 சொல்லின்பம் தேடுவர் = சொல்லின் இன்பத்தைத் தேடுவார்கள் 


மலக்கும் சொல் = மயக்கும் சொற்களை 


தேடுவர் வன்க ணாளர்கள் = தேடுவார்கள் கீழானவர்கள் 


நிலத்துறும்  கமலத்தை நீளும் வண்டத் = நிலத்தில் உள்ள வண்டு நீரில் உள்ள கமலத்தை (தாமரையை) நாடி அதில் உள்ள தேனை அனுபவிக்கும் 


ஈ = வண்டு 


தலைக்குறை = முதல் குறைந்த 


கமலத்தைச் = கமலத்தை 


சாரும் தன்மைபோல் = தேடுவதைப் போல 


ஔவையார் குசும்பு.


தலைக்குறை என்றால் தலை இல்லாத. அல்லது தொடக்கம் இல்லாத. 


கமலம் - இதில் முதல் எழுத்து இல்லை என்றால்? 


மலத்தை தேடும் ஈ போல என்று அர்த்தம். 


வார்த்தைகளை விட்டுவிட வேண்டும். அர்த்தத்தைப் பிடித்துக் கொள்ள வேண்டும். 


என்னைக் கேட்டால், கவிதையின் அர்த்தத்தையும் விட்டுவிடலாம். கவிஞனின் மனதை, அவன் உணர்சிகளை பிடிக்க வேண்டும். 


அபிராமி பட்டர் சொல்லுவார் 


"என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே" என்று அபிராமியை. 


மூப்பு இல்லாத முகுந்தனுக்கு இளையவள் என்றால் என்ன அர்த்தம் என்று மண்டையை போட்டு கசக்கக் கூடாது. 


அவருக்கு, அவள் எப்போதும் இளமையானவள். அவளுக்கு வயதே ஆகாது. அதை எப்படியோ சொல்கிறார். வார்த்தைகளை தாண்டி உணர்சிகளைப் பிடித்துக் கொள்ள வேண்டும். 


அது தான் சொல்லின் இன்பம். 


மனைவி செய்த சமையலின் சுவை அவள் தரும் உணவில் இல்லை. அதை நமக்காக நேரம் செலவழித்து, பொறுமையாக, ஒவ்வொரு பொருளும் சரியாக இருக்கிறதா என்று பார்த்து பார்த்து செய்யும் கனிவில் இருக்கிறது. அந்த அன்பு மனம் புரிந்தால் சமையல் சுவைக்கும். இதில் உப்பு இல்லை, அதில் காரம் கூட இருக்கிறது என்று சொல்லுவது அந்த ஈயை போன்ற செயல். 


அப்பா அல்லது அம்மா, பிள்ளையைத் திட்டுகிறார்கள். சொல்லின் அர்த்தத்தைக் கொண்டா அதைக் கணிப்பது. நாம் நன்றாக வேண்டும் என்ற காதலில் அல்லவா திட்டுகிறார்கள் என்ற அந்த உணர்வைப் புரிந்து கொள்ள வேண்டும். 


கவிதையை புரிந்து கொள்ள முயல்வதெல்லாம் ஒரு வாழ்க்கைப் பயிற்சி. 




Saturday, November 6, 2021

திருக்குறள் - இன்புற்றார் எய்தும் சிறப்பு

 திருக்குறள் -  இன்புற்றார் எய்தும் சிறப்பு


குடும்ப வாழக்கை வாழும் போதே எல்லாவற்றையும் விட்டு விட்டு, சுவர்க்கம் போகணும், வைகுண்டம் போகணும், கைலாசம் போகணும் என்று நினைக்கிறோம். 


ஒரு நிமிடம் யோசித்துப் பார்ப்போம். நம்மை போல் எத்தனை பேர் எத்தனை யுகமாக இப்படி வேண்டி அங்கு போய் இருப்பார்கள். எவ்வளவு பெரிய கூட்டமாக இருக்கும்? அதில் போய் என்ன செய்வது?


சுவர்க்கம் என்றால் ஒரே ஒரு ஊர்வசி, ஒரே ஒரு இரம்பை...முப்பது முக்கோடி தேவர்கள்.  அவர்கள் ஆட்டத்தை எத்தனை நாள் தான் இரசிப்பது? 


சலிப்பு வராதா? அலுத்துப் போகாதா? அப்புறம் என்ன செய்வது? அதற்கு மேல் எங்கே போவது? பெரிய பிரச்னை அல்லவா அது. 


வள்ளுவர் சொல்கிறார், அதையெல்லாம் விடுங்கள். 


இந்த உலகில் அன்பு செய்யுங்கள். அதை விட பெரிய சுவர்க்கம் இல்லை. 


கட்டிய கணவன், மனைவி மேல் அன்பு செய்யத் தெரியாதவர்கள் எப்படி காணாத கடவுள் மேல் அன்பு செய்யப் போகிறார்கள். 


அண்ணன், தம்பி, அக்காள், தங்கை, நட்பு, உறவு, சுற்றம், பேரன், பேத்தி, அத்தை, மாமா என்று ஆயிரம் பேர் இருக்கிறார்கள் அன்பை அள்ளிக் கொட்ட, திகட்ட திகட்ட முகர்ந்து கொள்ள. 


அதை விடவா சுவர்க்கம் சுகமாக இருக்கப் போகிறது. 


உடன் பிறப்பிடமும், நட்பிலும் அன்பு பரிமாறத் தெரியாதவன் முன்ன பின்ன தெரியாத தேவர்கள் மத்தியில் போய் என்ன செய்வான்? 


அன்பு பரிமாறும் வித்தை தெரிந்து விட்டால் இந்த வாழ்க்கை தான் சுவர்க்கம். 


பாடல் 


அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து

இன்புற்றார் எய்தும் சிறப்பு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/11/blog-post_6.html


(Please click the above link to continue reading)


அன்புற்று  = அன்பு கொண்டு 


அமர்ந்த = இல்லறத்தோடு 


வழக்கு  = கூடிய வாழ்வின் நெறி என்று


கென்ப  = என்ப, என்று சொல்லுவார்கள் 


வையகத்து = உலகில் 


இன்புற்றார் = இன்பம் அடைந்தவர்கள் 


எய்தும் சிறப்பு  = அடையும் சிறப்பு. 


இந்தப் குறளின் அர்த்தத்தை பரிமேலழகர் கண்டு சொல்கிறார். நாம் தலையால் தண்ணி குடித்தாலும் அந்த உரையின் பக்கம் கூட போக முடியாது. அவ்வளவு ஆழமான சிந்தனை.


அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து

இன்புற்றார் எய்தும் சிறப்பு.


என்ற குறளில், "அன்புற்று அமர்ந்த" என்பதில் அன்புற்று என்றால் என்ன என்று புரிகிறது. அது என்ன "அமர்ந்த" ?


இந்தக் குறள் இல்லறவியலில் இருக்கிறது. எனவே, அமர்ந்த என்றால் "இல்லறத்தில் ஈடுபட்டு" என்று பொருள் கொள்கிறார். 


சரி. "வழக்கு" என்றால் என்ன? 


வழக்கு என்றால் "இல்லறத்தோடு பொருந்திய நெறியின் பயன்" என்று பொருள் சொல்கிறார். 


அன்புற்று அமர்ந்த வழக்கு என்றால் அன்பு கொண்டு இல்லறத்தோடு கூடிய நெறியின் பயன் என்று வந்து விட்டது. 


அடுத்து வருவதுதான் பரிமேலழகர் உச்சம் தொடும் இடம்.


"இன்புற்றார் எய்தும் சிறப்பு".  இன்புற்றவர்கள் யார் என்ற கேள்விக்கு, துன்பமே இல்லாமல், எப்போதும் இன்பத்தில் இருப்பவர்கள், அதாவது தேவர்கள். அவர்கள் நம்மை விட இன்பமாக இருப்பவர்கள் அல்லவா? 


அது எப்படி இன்புற்றார் என்றால் தேவர்கள் என்று கொள்ள முடியும்? என் பக்கத்து வீட்டுக்காரன்  கூட எப்போதும் இன்பமாகத்தான் இருக்கிறான். ஏன் அவனைச் சொல்லக் கூடாது என்று கேள்வி எழும் அல்லவா?


"சிறப்பு" என்றால் என்ன? சிறந்தது, சிறப்பு எனப்படும் அல்லவா. ஐந்து உருபாயையை விட பத்து உருபாய் சிறந்தது. மிதி வண்டியை விட ஆகாய விமானம் சிறந்தது. இப்படி ஒன்றுக்கு மேல் ஒன்று சிறந்தது என்று சொல்லிக் கொண்டே போனால், எல்லாவற்றையும் விட சிறந்தது எது?


அதைத்தான் பேரின்பம் என்கிறோம். நீண்ட இன்பம், முடிவில்லா இன்பம். துன்பம் கலக்காத இன்பம். 


அந்த பேரின்பத்தை அடைந்தவர் யார்?  


தேவர்கள். 


எனவே "இன்புற்றார் அடையும் சிறப்பு" என்றால் தேவர்கள் அடையும் சிறப்பு என்று பொருள் கொள்கிறார். 


எனவே அன்போடு இல்லற நெறியின் கண் வாழ்வதின் பயன் தேவர்கள் அடையும் பேரின்பம் என்று பொருள். 


அப்படின்னு யார் சொல்கிறார்கள்? அப்படி யாரும் சொன்ன மாதிரி தெரியவில்லையே?


என்னைக் கேட்டால் மூன்று வேளையும் நல்லா சுவையான உணவை சாப்பிடுவதுதான் சிறப்பு என்பேன்.


பரிமேலழகர் சொல்கிறார் "என்ப" என்றால் அறிவுடையோர் சொல்லுவர் என்று அர்த்தம் என்று. 


இப்படி வாழ்ந்தால் அப்படிபட்ட இன்பம் அடையலாம் என்று அறிவுடையோர் கூறுவார். 


அப்படி கூறாதவர்கள் யார் என்று நாம் முடிவு செய்து கொள்ளலாம். 



அன்பு செய்யுங்கள். மேலும் மேலும் அன்பு செய்து கொண்டே போங்கள். இல்லறம் என்பது அன்பு செய்ய கிடைத்த பெரிய வாய்ப்பு. 


நேற்றை விட இன்று கொஞ்சம் அதிகம் அன்பு செய்ய வேண்டும். இன்றை விட நாளை. 







Friday, November 5, 2021

கம்ப இராமாயணம் - உயர்வன உவந்து செய்வாய்

கம்ப இராமாயணம் - உயர்வன உவந்து செய்வாய் 


சுக்ரீவனுக்கு முடி சூட்டியபின் அவனுக்கு இராமன் சில அறிவுரைகள் கூறுகிறான். 


இது அரசனுக்கு கூறியது தானே, நமக்கு எதற்கு என்று நினைக்க வேண்டியது இல்லை. இது எந்தப் பொறுப்பில் உள்ளவர்க்கும் பொருந்தும். 


எவ்வளவு பெரிய அறங்களை எவ்வளவு அழகாக சொல்கிறார்கள். 


யோசித்துப் பார்ப்போம். ஒரு நிறுவனத்தின் தலைவருக்கு சொல்வதென்றால் என்ன சொல்லுவோம்? 


எவ்வளவோ சொல்லலாம். எதைச் சொல்வது, எதை விடுவது என்ற குழப்பம் வரும். 


கடுமையான உழைப்பு, நீதி, நேர்மை, என்று சொல்லிக் கொண்டே போகலாம். 


கம்பன் எப்படிச் சொல்கிறான் என்று பாருங்கள். 



பாடல் 


 செய்வன செய்தல், யாண்டும்

      தீயன சிந்தியாமை,

வைவன வந்தபோதும் வசை

      இல இனிய கூறல்,

மெய்யன வழங்கல், யாவும்

      மேவின வெஃகல் இன்மை,

உய்வன ஆக்கித் தம்மோடு

      உயர்வன:  உவந்து செய்வாய்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/11/blog-post_5.html


(Pl click the above link to continue reading)



செய்வன செய்தல் = செய்ய வேண்டியதை செய்து விட வேண்டும். ஒரு பொறுப்பு என்று வந்து விட்டால் அதை முடிக்க வேண்டும். வினை முடித்தல். யார் யாருக்கு என்னென்ன செய்ய வேண்டுமோ, அவற்றை செய்து விட வேண்டும். 


யாண்டும் = எப்போதும் 

தீயன சிந்தியாமை = தீயவற்றை சிந்திக்கக் கூட கூடாது. 


வைவன வந்தபோதும் = ஒரு பொறுப்பில் இருந்தால், நாலு பேர் நாலு விதமாகப் பேசுவார்கள். ஒருவன் நல்லது என்பான். அதையே ஒருவன் கெடுதல் என்று வைவான். பொது வாழ்வில் இதெல்லாம் இயற்கை.  


வசை  இல இனிய கூறல், = அப்படியே ஒருவன் வைத்தாலும், பதிலுக்கு திட்டாமல், இனியவற்றை கூற வேண்டும். அரசாங்கம் என்றால் மாற்றுக் கருத்துக்கள் இருக்கத்தான் செய்யும். எவ்வளவு கடுமையான விமரிசனம் என்றாலும் பொறுத்துக் கொண்டு இனிய பேச வேண்டும். 


மெய்யன வழங்கல்  = எது சரியோ அதைச் செய்ய வேண்டும். பிடித்தவன், பிடிக்காதவன் என்று பாராபட்சம் பார்க்காமல், உண்மை எதுவோ, எது சரியோ, அதைச் செய்ய வேண்டும். 



யாவும் மேவின வெஃகல் இன்மை = வெஃகல் என்றால் பிறர் பொருள் மேல் ஆசை கொள்ளுதல். அரசனிடம் ஏராளமான அதிகாரம் இருக்கும். யாரிடம் இருந்தும் எதையும் தன் அதிகாரத்தால் பறிக்க முடியும். அப்படி செய்யக் கூடாது என்கிறார். பணக்காரர்கள், தொழில் அதிபர்கள், சொத்து வைத்து இருப்பவர்களை மிரட்டி அவர்கள் பொருள்களை பறிக்கக் கூடாது. பறிக்க நினைக்கவே கூடாது என்கிறார். 

 

உய்வன ஆக்கித்  = உய்தல் காப்பாற்றுதல். 


தம்மோடு உயர்வன = இந்த நல்ல குணங்கள் இருக்கின்றனவே, அவை என்ன செய்யும் என்றால் யார் அவற்றை கடைப் பிடிகிறார்களோ அவர்களை காக்கும். அது மட்டும் அல்ல அவர்களை தங்கள் உயரத்துக்கு உயர்த்தும். அவை கை பிடித்து மேலே தூக்கி விடும். தாமும் உயர்ந்து, தங்களை கடைப் பிடிப்பவர்களையும் உயர்த்தும். 


 உவந்து செய்வாய். = இவற்றை மன மகிழ்ச்சியோடு செய்வாய். அது தான் சிக்கல். நாமாக இருந்தால் என்ன செய்வோம்...."இதெல்லாம் கேக்க நல்லா இருக்கு...நடை முறை சாத்தியம் இல்லை " என்று தள்ளி வைத்து விடுவோம். அல்லது, செய்ய வேண்டுமே என்று கடனே என்று செய்வோம். 


நல்ல காரியங்களை மன மகிழ்ச்சியோடு, விருப்பத்தோடு செய். 


விரதம் இருப்பது நல்லது என்றால், அதை மகிழ்ச்சியோடு செய்ய வேண்டும். 


உடற் பயிற்சி நல்லது என்றால் அதை செய்வதில் ஒரு உற்சாகம் வேண்டும். மூக்கால் அழுது கொண்டே செய்யக் கூடாது. 


தானம் செய்வது என்றால் விருப்பத்தோடு செய்ய வேண்டும். 


செய்வதில் மகிழ்ச்சி இல்லை என்றால் செய்ய மாட்டோம். கொஞ்ச நாள் செய்வோம் அப்புறம் விட்டு விடுவோம். விருப்பம் இருந்தால் மேலும் மேலும் செய்வோம். 


அறம் செய்ய விரும்பு என்றாள் ஔவை. விரும்பிச் செய்ய வேண்டும். 



நல்லவற்றை செய்வதில் விருப்பம் இருக்க வேண்டும். 


"உவந்து செய்வாய்" என்கிறான் இராமன். 



Wednesday, November 3, 2021

கம்ப இராமாயணம் - மூவகை மக்கள்

கம்ப இராமாயணம் - மூவகை மக்கள் 


நம்மிடடையே முன்பு ஒரு வழக்கம் இருந்து. அதாவது, எந்த நல்ல காரியம் நடந்தாலும், நடக்க இருந்தாலும், அதற்கு சம்பந்தப் பட்டவர்களுக்கு பெரியவர்கள் அறிவுரை, அறவுரை வழங்குவார்கள். திருமணம், முடி சூட்டுதல் போன்ற நிகழ்வுகளில் பெரியவர்கள் நல்லவற்றை எடுத்துச் சொல்லும் வழக்கம் இருந்தது. 


சொல்வது ஒரு புறம் இருக்கட்டும். கேட்கணுமே? இப்போதெல்லாம் யார் கேட்கிறார்கள்? சொல்லும் பெரியவர்களும் இல்லை, கேட்கும் ஆட்களும் இல்லை. 


சுக்ரீவனுக்கு முடி சூட்டியாகி விட்டது. 


அவனுக்கு இராமன் சில நல் உரைகளை வழங்குகின்றான். 


வசிட்டரிடமும், கௌசிகனிடமும் படித்த இராமன் சொல்கின்றான் என்றால் அது எவ்வளவு உயர்வாக இருக்கும். சுக்ரீவனுக்கு சொல்வது போல கம்பர் நமக்கும் சொல்கிறார். 


அரசாங்கத்தில் பணம் வந்து குவியும். இன்றெல்லாம் இத்தனை இலடசம் கோடி என்று சொல்கிறார்கள். அவ்வளவு பணம் வரும் போது அதன் அருமை தெரியாது. இந்தா உனக்கு கொஞ்சம் இலவசம், இந்தா உனக்கு கொஞ்சம் இலவசம், என்று மனம் போன வழியில் செலவழிக்கத் தோன்றும். அதுதான் ஆற்று வெள்ளம் போல வந்து கொண்டே இருக்கிறதே என்ற அலட்சியம் வரும். அப்படி இருக்காதே. பொதுப் பணத்தை மிக மிக கவனமாக கையாள வேண்டும். 


இரண்டாவது, இந்த உலகில் மூன்று விதமான மக்கள் இருக்கிறார்கள். நட்பு, பகை இதுதானே நமக்குத் தெரியும். மூன்றாவது ஒன்று இருக்கிறது. நட்பும் இல்லாமல், பகையும் இல்லாமல். அதற்கு நொதுமல் என்று பெயர். தெருவில் ஒருவர் போகிறார். அவருடன் எனக்கு நட்பும் இல்லை, பகையும் இல்லை. எல்லாம் துறந்த முனிவர்களுக்கே இந்த மூன்று பேரும் உண்டு என்றால் அரசனுக்கு சொல்லவா வேண்டும்? எனவே, மக்களை சரியாக இனம் பிரித்து நடந்து கொள்.இல்லை என்றால் பெரும் துன்பம் வரும்.


பாடல் 



 தேவரும் வெஃகற்கு ஒத்த செயிர்

      அறு செல்வம்அஃது உன்

காவலுக்கு உரியதுஎன்றால், அன்னது

      கருதிக் காண்டி;

ஏவரும் இனிய நண்பர்,

      அயலவர், விரவார், என்று இம்

மூவகை இயலோர் ஆவர்,

      முனைவர்க்கும் உலக முன்னே.



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/11/blog-post_3.html


(Pl click the above link to continue reading)



தேவரும் = தேவர்களும் 


வெஃகற்கு ஒத்த = விருப்பப்படும் 


செயிர் அறு செல்வம்  = குறம் அற்ற செல்வம் 


அஃது உன் = அது உன் 


காவலுக்கு உரியது என்றால் = காவலில் உள்ளது என்றால் 


அன்னது = அதை 


கருதிக் காண்டி; = கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள் 


ஏவரும்  = எல்லோருக்கும் 


இனிய நண்பர் =  நட்பு 


அயலவர் = நட்பு அல்லாதவர் 


விரவார் = நொதுமல் உடையார் 


என்று = என்று 


இம் மூவகை இயலோர் ஆவர் = இந்த மூன்று வகையான மக்கள் 


முனைவர்க்கும் = முனிவர்களுக்கும் 


உலக முன்னே = இந்த உலகத்தில் உண்டு 



மக்கள் வரிப் பணத்தை கண்ணும் கருத்துமாக காவல் செய்.  இந்த ஒரு வரியை எல்லா அரசியல் தலைவர்களும், அரசு அதிகாரிகளும் கடை பிடித்தால் நாடு எப்படி இருக்கும்? ஒரு வரி. 


மக்களை தெரிந்து எடுத்து உறவு கொள். 


நல்ல அறிவுரைத்தானே?


நமக்கும் பொருந்தும் தானே?



Tuesday, November 2, 2021

திருப்பள்ளி எழுச்சி - இந்த உலகம் மிக இனிமையானது

 திருப்பள்ளி எழுச்சி - இந்த உலகம் மிக  இனிமையானது 


இந்த உலகம் மிக இனிமையானது என்று சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா? 


என்ன இனிமை? எப்பப் பாரு ஏதாவது ஒரு சங்கடம், சிக்கல், துக்கம் இருந்து கொண்டே தான் இருக்கிறது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை போன்ற செயல்கள். சுற்றுப் புற சூழ்நிலை மாசு. அரசாங்கங்கள் செய்யும் அராஜாகங்கள். 


வேலை செய்யும் இடத்தில் சிக்கல், போட்டி, பொறாமை, சூது. 


வீட்டில் உறவுகளில் சிக்கல்.


இப்படி எங்கு பார்த்தாலும் பிரச்சனைகள் நிறைந்து கிடக்கிறது. இடையிடையே சில சந்தோஷங்கள் வந்தாலும், பெரும்பாலும்  துன்பமே மண்டிக் கிடக்கிறது. 


எது எப்படி இருந்தாலும், முதுமை வந்து விட்டால் பலப்பல துன்பங்கள். 


இருந்தும், மணிவாசகர் சொல்கிறார்....


மேலுலகத்தில் உள்ள தேவர்கள் எல்லாம் "ஐயோ, நாம் பூமியில் போய் பிறக்கவில்லையே" என்று வருந்துகிரார்களாம். இப்படி அனாவசியாம இந்த மேலுலகத்தில் நேரத்தை வீணே கழித்துக் கொண்டு இருக்கிறோமே என்று வருந்துகிரார்களாம். 


திருமாலுக்கும், பிரமனுக்கும், சிவனுக்கும் இங்கு வருவதில் அவ்வளவு விருப்பமாம். அவர்களே அங்கு போகும் போது, நாமும் அங்கு போனால் என்ன மறைய தேவர்களும் விரும்புவார்களாம். 


பாடல் 


புவனியிற் போய்ப்பிற வாமையின் நாள்நாம்

போக்குகின் றோம்அவ மேயிந்தப் பூமி

சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்

திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம்

அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்

படவும்நின் அலர்ந்தமெய்க் கருணையும் நீயும்

அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்

ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/11/blog-post_2.html


(pl click the above link to continue reading)



புவனியிற் = இந்த பூ உலகில் 


போய்ப்பிற வாமையின் = போய் பிறக்காமல் 


நாள்நாம் = நாட்களை நாம் 

போக்குகின் றோம் = போக்கிக் கொண்டு இருக்கிறோம் 


அவ மே = அனாவசியமாக 


யிந்தப் பூமி = இந்த பூமி 


சிவனுய்யக் = சிவன் நம்மை காக்க 


கொள்கின்ற வாறென்று = ஏதுவான இடம் என்று 


 நோக்கித் = நோக்கி 


திருப்பெருந் துறையுறை வாய் = திருப்பெரும்துறை என்ற தலத்தில் உறைபவனே 


திரு மாலாம் = திருமால் 


அவன்விருப் பெய்தவும்  = அவருக்கும் விருப்பம் இங்கே வர 


மலரவன் = தாமரை மலரில் வீற்று இருக்கும் பிரமன் 


ஆசைப் படவும்  = இங்கு வர ஆசைப் படவும்


நின்  = உன் 


அலர்ந்த = மலர்ந்த 


மெய்க் கருணையும் = உயர்ந்த கருணையும் 


 நீயும் = நீயும் 


அவனியிற் புகுந் = இந்த உலகில் புகுந்து 


தெமை ஆட்கொள்ள வல்லாய் = எங்களை ஆட்கொள்ள வல்லவன் 


ஆரமு தே = அருமையான அமுதமே 


பள்ளி எழுந்தரு ளாயே. = பள்ளி எழுந்து அருளாயே 


மூவரும் இங்கு வந்து நம்மை ஆட்கொள்ள மிக விருப்பம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். 


அவர்களுக்கே பிடித்து இருக்கிறது என்றால், இது ஒரு நல்ல இடமாகத்தானே இருக்கும்?


நமக்கு அருமை தெரியவில்லை. 


இரசிப்போம். அவ்வளவு இனிமையானது இந்த பூமி. 




Monday, November 1, 2021

திருக்குறள் - நாடாச் சிறப்பு

 திருக்குறள் - நாடாச் சிறப்பு 


"அவனுக்கு படிப்பில் அவ்வளவா ஆர்வம் இல்லை. ஆனால் விளையாட்டில் நல்ல ஆர்வம் இருக்கு" என்று சொல்லக் கேட்டு இருக்கிறோம் அல்லவா?


அது ஒரு புறம் இருக்கட்டும். 


ஒருவர் மேல் அன்பு செலுத்துகிறோம். அப்புறம் என்ன ஆகும்? அந்த அன்பு எப்படி மேலும் வளரும்? அந்த அன்பு என்ன செய்யும்? அன்பு எங்கு போய் முடியும்? அன்புக்கு வளர்ச்சி உண்டா அல்லது அது எப்போதும் ஒரே மாதிரி இருக்குமா?


இது போன்ற ஆராய்சிகளை எடுத்து வைத்துக் கொண்டு, வள்ளுவர் பதில் தருகிறார். 


நாம் சிந்திதாவது இருப்போமா? அன்பு செய்கிறோம்....அவ்வளவுதான் தெரியும். அதுக்கு மேல என்ன என்று சிந்தித்து இருக்க மாட்டோம். மிஞ்சி மிஞ்சி போனால் பதிலுக்கு அன்பை எதிர்பார்ப்போம். அவ்வளவுதான். 


வள்ளுவர் அன்பின் பரிணாமத்தை மிக பெரிதாக விவரிக்கிறார். 


என்ன என்று பார்ப்போம். 


பாடல் 


அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்

நண்பென்னும் நாடாச் சிறப்பு


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/11/blog-post.html


(please click the above link to continue reading)



அன்புஈனும் ஆர்வம் உடைமை  = அன்பு ஆர்வம் உடைமையைத் தரும் 

 

அதுஈனும் = அந்த ஆர்வம் உடைமை 


நண்பென்னும் = நண்பு என்று சொல்லப்படும் 


நாடாச் சிறப்பு = தேடாத சிறப்பைத் தரும் 


அன்பு ஆர்வத்தைத் தரும். ஆர்வம் நண்பைத் தரும் என்கிறார். இதில் என்ன இருக்கிறது ?


அன்பு என்பது நமக்கு தொடர்பு உடையவர் மேல் நாம் கொள்ளும் பரிவு, பாசம், நேசம். 


ஆர்வம் என்பது அந்தத் தொடர்பு உடையவர்களுடன் தொடர்பு உடையவர்கள் மேல் செலுத்தும் பரிவு, பாசம், நேசம் எல்லாம்.


அது என்ன தொடர்பு உடையவர்களுடன் தொடர்பு உடையவர்கள்? 


நமக்கு நம் பிள்ளைகள் மேல் அன்பு இருக்கும். பிள்ளைகள் வளர்கிறார்கள். அக்கம் பக்கம் இருக்கும் இருக்கும் மற்ற பிள்ளைகளோடு விளையாடுகிறார்கள். இவர்கள் அவர்கள் வீட்டுக்குப் போகிறார்கள். அவர்கள் நம் வீட்டுக்கு வருகிறார்கள். 


சில வருடங்கள் கழித்து, அந்த நட்பு வட்டாரத்தில் உள்ள ஒரு பெண் பிள்ளையை, நம் பையன் மணந்து கொள்கிறான். இப்போது அந்த பெண் மேல் தனி பாசம் வருகிறது அல்லவா? நேற்று இல்லாத பாசம் இன்று. காரணம், மகனின் மனைவி என்பதால். 


அதே போல் மருமகனுக்கும். 


யாரோ ஒரு பெண். அவள் மேல் அன்பு வருகிறது அல்லவா?


அந்தப் பெண்ணின் தாயார், தந்தை மேல் நமக்கு ஒரு ஈடுபாடு வருகிறது. அவர்களுக்கு ஒன்று என்றால் முன்னே போய் நிற்கிறோம். அந்தப் பெண்ணின் உடன் பிறப்பு மேலும் நமக்கு அக்கறை வருகிறது. ஒரு நாள் அந்தப் பெண், "என் கல்லூரியில் என்னோடு படித்தவர்கள்" என்று சில நண்பர்களை அழைத்து வருகிறாள். நாம் அவர்கள் மேலும் ஆர்வம் கொள்கிறோம் அல்லவா?


ஒருவர் மேல் வைத்த அன்பு, அந்த ஒருவர் தொடர்புள்ள மற்றவர் மேலும் படர்கிறது அல்லவா? அது தான் அன்பின் பரிணாம வளர்ச்சி. அதைத்தான் வள்ளுவர் "ஆர்வம்" என்கிறார். 


இப்படி அது விரிந்து கொண்டே போகும். அந்தப் பெண்ணுக்கு ஒருகுழந்தை பிறக்கும். பேரப் பிள்ளை மேல் அன்பு. 


இப்படி விரித்துக் கொண்டே போனால், எல்லோர் மேலும் அன்பு வரும். 


அப்படி எல்லோர் மேலும் அன்பு பிறந்தால், எல்லோரும் நம் மேல் பதிலுக்கு அன்பு செலுத்துவார்கள் தானே ? நாம் போய் கேட்கவில்லை. நாம் விரும்பவில்லை. தானே வரும். "நாடாமல் வரும்". நாம் எல்லோரிடமும் அன்பாக இருந்தால் அவர்கள் தானே நம் மீது அன்பாக இருப்பார்கள். நாம் கேட்காமலேயே அந்த சிறந்த நண்பு கிடைக்கும். 


இப்படி ஒவ்வொருவரும் இருந்துவிட்டால்? இந்த உலகமே ஒரு அன்பு கூடமாகி விடும் அல்லவா? யாருமே யாருக்கும் எதிரியாக இருக்க மாட்டார்கள் அல்லவா?


எப்படி ஒரு உயர்ந்த சிந்தனை கொண்ட ஒரு பாரம்பரியத்தில் வந்த நாம், எப்படி ஆகி விட்டோம். 


உடன் பிறப்புகளுக்குள் அன்பு இல்லை. 


மாமியார் மருமகள் சண்டை என்பது இல்லாவிட்டால்தான் அதிசயம்.


மீட்டு எடுக்க வேண்டாமா?


கணவன் மேல் அன்பு என்றால், அவன் சார்ந்த அனைவர் மேலும் அன்பு இருக்க வேண்டும். 


அதே போல் மனைவி மேல் அன்பு என்றால் அவள் சார்ந்த அனைவர் மேலும் அன்பு இருக்க வேண்டும். 


மகன் ஆகும், மருமகள் ஆகாது என்பது எல்லாம் குறுகிய சிந்தனை. 


இல்லறம் என்பது அன்பின் விரிவு. ஒவ்வொரு நாளும் அன்பு விரிய வேண்டும். நேற்றை விட இன்று. இன்றை விட நாளை என்று அன்பு மேலும் மேலும் விரிய வேண்டும். 


குறள் படிப்பது அதை வாழ்க்கை நெறியாக்க. 


முயன்று பார்ப்போமே. 


இன்றே மனைவியின்/கணவனின் சுற்றத்தாரை கூப்பிட்டு நலம் விசார்திதால் என்ன தீபாவளி நல் வாழ்த்துச் சொன்னால் என்ன? 


இன்றிலிருந்து ஆரம்பிப்போம். 


அன்பு பெருகட்டும்.