Wednesday, November 17, 2021

கம்ப இராமாயணம் - பெண்களால் வரும் அழிவு

 கம்ப இராமாயணம் - பெண்களால் வரும் அழிவு 


சுக்ரீவனுக்கு முடி சூட்டிய பின், அவனுக்கு சில அறிவுரைகளை வழங்குகிறான் இராமன். 


"பெண்களால் ஆண்களுக்கு மரணம் வரும் என்பதை சந்தேகம் இல்லாமல் அறிந்து கொள். அதற்கு வாலி மட்டும் அல்ல, நாங்களும் சாட்சி. பெண்களால் ஆண்களுக்கு துன்பமும், பழியும் வந்து சேரும்"


என்கிறான். 


பாடல் 


''மங்கையர் பொருட்டால் எய்தும்

      மாந்தர்க்கு மரணம்'' என்றல்,

சங்கை இன்று உணர்தி; வாலி

      செய்கையால் சாலும்; இன்னும்,

அங்கு அவர் திறத்தினானே,

      அல்லலும் பழியும் ஆதல்

எங்களின் காண்டி அன்றே;

      இதற்கு வேறு உவமை உண்டோ?


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/11/blog-post_93.html


(please click the above link to continue reading)




''மங்கையர் பொருட்டால் = பெண்களால் 


எய்தும் = அடைவர் 


மாந்தர்க்கு மரணம்'' என்றல் = ஆண்களுக்கு மரணம் என்பதை 


சங்கை இன்று உணர்தி = சந்தேகம் இல்லாமல் உணர்ந்து கொள் 


வாலி செய்கையால் சாலும் = வாலியின் செய்கையால் அதை உணரலாம் 


இன்னும், = மேலும் 


அங்கு அவர் திறத்தினானே = அந்தப் பெண்களாலே 


அல்லலும் பழியும் ஆதல் = துன்பமும், பழியும் வரும் என்பதை 


எங்களின் காண்டி அன்றே = எங்களைப் பார்த்து புரிந்து கொள் 


இதற்கு வேறு உவமை உண்டோ? = இதற்கு மேலும் வேறு உதாரணங்கள் தேவையா ? 


சுக்ரீவன் மனைவியை கவர்ந்து கொண்டதால், வாலி இறந்தான். 


கைகேயி பேச்சை கேட்டதால் தசரதன் மாண்டு போனான்.  இராம இலக்குவனர்கள் கானகம் போனார்கள். 


சீதையின் பேச்சைக் கேட்டதால் (பொன் மான் பின்னே போனதால், இலக்குவனை அனுப்பியதால்)  இராமனும் இலக்குவனும் சீதையைத் தேடி படாத பாடு பட்டார்கள். 


சீதையின் பேச்சைக் கேட்டதால் வந்த வினை என்று இராமன் பல இடத்தில்  புலம்புகிறான். 


ஆனானப் பட்ட இராமனுக்கே அந்தக் கதி. 


பாடம் படிக்க வேண்டும். 






1 comment:

  1. அதே அளவு - இல்லை, அதைவிட அதிக அளவு - ஆண்களால் பெண்களுக்கு அழிவும், துன்பமும் வந்து இருக்கிறது!

    ReplyDelete